தலைப்பு

வியாழன், 27 ஏப்ரல், 2023

ஸ்ரீ கிருஷ்ணர் படத்திலிருந்து வெளியே வந்து தன் பக்தருக்கு போர்வையை போர்த்தி விட்ட பங்காரு பாபா!

திகைக்க வைக்கும் லீலைகள் , ஆச்சர்யப்பட வைக்கும் அனுபவங்கள், வசதியே இல்லாத இரு தம்பதி பக்தருக்கு அசதியே தராத பக்திக்கு பாபா செய்த அற்புதங்கள், கம்பி எண்ண வேண்டியவர்களை பாபா கைப்பிடித்து அழைத்துச் சென்ற வியப்புகள் மிக சுவாரஸ்யமாக இதோ...

புதன், 26 ஏப்ரல், 2023

டிக்கட் இல்லாமல் பயணித்தவர்களிடம் டிக்கட் பரிசோதிக்க வந்த டி.டி.ஆர்!!

எவ்வாறு இரு நாடோடி பக்தரும் பாபா உத்தரவிட்டார் என்ற காரணத்திற்காகவே பாபாவை பிரிய மனம் இல்லாமலும் , கையில் பணம் இல்லாமலும் பயணித்து.. வழிவழியே எவ்வகையான சாயி அற்புதங்களை அனுபவித்தார்கள் என்பதும் விறு விறு வென இதோ...

செவ்வாய், 25 ஏப்ரல், 2023

நள்ளிரவில் பயங்கர வெடிச் சத்தம் - வெடித்தவரை மடக்க வந்த கஸ்தூரி!

பல்வேறு வகையான சுவாரஸ்ய அனுபவங்கள்- இதுவரை வாசிக்காத ஆச்சர்ய நிகழ்வுகள்- கேள்வியேபடாத அந்த காலத்து ஆனந்த அதிர்வலைகள் - நினைத்தாலும் திகட்டாத சம்பவங்கள் மிக விறுவிறுப்பாக இதோ...

உண்மையான மகிழ்ச்சி என்பது யாது? அது எப்படி கிடைக்கும்?

சந்தோஷம் என்ற சொல்லிலேயே அதன் பொருள் (சம் - Some) சிறிதே என்று இருக்கிறது! எனவே நீங்கள் தேட வேண்டியது அதுவல்ல... உண்மையில் நீங்கள் தேட வேண்டிய ஆனந்தமே! (Bliss)

மகிழ்ச்சி இருவகைப்படும்! 

திங்கள், 24 ஏப்ரல், 2023

ஸ்ரீ சத்ய சாயி பக்தர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

பாபாவை எவ்வாறு உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவுற ஆன்மாவில் ஆழப் பதியும் வண்ணம் விளக்கப்படுகிறது இதோ...

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

இரண்டு நாடோடி பக்தர்களின் செருப்புகளை கையில் ஏந்தியபடி வாசலில் காத்திருந்த பாபா!

இப்படி எல்லாம் நடந்திருக்குமா? என்று வியக்கும் அளவிற்கு தனது பக்தர்களுக்கு தானே சேவகம் புரிந்த பாபாவின் கருணை ஆதாரப்பூர்வமாக விளக்கப்படுகிறது சுவாரஸ்யமாக இதோ...

நான், எனது என்கிற தன்முனைப்பை, ஆணவ உணர்வை எப்படி விட்டொழிப்பது?

இதற்கு ஒரு சிறு சிறு உதாரணத்தை கவனியுங்கள்! 

ஒருவர் ஒரு மாளிகையில் இருக்கிறார்... அவர் காவலுக்கு ஒரு நாயை வளர்க்கிறார்! நீங்கள் அந்த மாளிகையில் நுழைய வேண்டும் என்றால் இரண்டே இரண்டு வழிகள் தான் உள்ளன...

வியாழன், 20 ஏப்ரல், 2023

பாபா செய்து வைத்த திடீர் திருமணம் -பரவச நேர்காணல் அனுபவம்!

இறைவன் பாபா உடனான தங்குதல் எவ்வாறு ஒரு பக்தி குடும்பத்திற்கு வரமானது! அவர்களின் வழி அனுப்புதலை பாபா எவ்வகையில் செய்கிறார் எனும் நெகிழ்வான சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...

புதன், 19 ஏப்ரல், 2023

பாபா வந்து கொண்டிருந்த காரை திட்டம் போட்டுக் காத்திருந்து வழிமறித்த இரண்டு பேர்!

நிர்கதியாகி அங்கேயே நிரந்தரமாகத் தங்கி இறைவன் பாபாவுக்கு சேவை செய்கிற போது பக்தருக்கு நேர்ந்த பல்வேறு வகையான ஆச்சர்ய அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ...

வெளி உலகில் நாங்கள் மக்களுடன் பழக வேண்டியிருப்பதால் எவ்வாறு நாங்கள் பிறரோடு பேச வேண்டும்? எது நன்மை அளிக்கும்?

லௌகீகம் - ஆன்மீகம் என்பவை வெவ்வேறானது அல்ல! நீங்கள் அவற்றை வெவ்வேறு என எண்ணுகிறீர்கள்! 

ஆன்மீகம் என்பது விழிப்புணர்வு (Awareness)! 

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

திங்கள், 17 ஏப்ரல், 2023

பசியோடு பந்தியில் அமரப் போன பக்தரை எழுப்பி பரிமாறச் சொன்ன பாபா! பகீர் அனுபவம்!

ஒரு நிகழ்வில் பசியோடு சேவை செய்த இரண்டு பக்தருக்கு எவ்வாறு உணவு பரிமாறப்பட்டது...? வட இந்திய சேவகர்க்கு தென் இந்திய உணவு இறங்காததை அறிந்து பாபா செய்த செயல் என்ன? நடுஇரவில் பாபாவை பற்றி பேசிக் கொண்டிருந்ததை பாபாவே பார்த்து அவர்களிடம் சொன்னதென்ன? சுவாரஸ்யமாக இதோ...

உணவுக்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?

குறைந்த பெட்ரொலில் நிறைய கிலோ மீட்டர் ஓடும் காரையே அனைவரும் வாங்குவர்... அது போல் குறைந்த உணவில் நிறைய வேலை செய்வதாக உடல் மாற வேண்டும்! தற்போது பெரும்பாலானோர் வழக்கத்திற்கு மாறாக குறைவாக உண்டாலே உடல் ஆரோக்கியத்தோடு இருக்க முடியும்! 

அதிகம் உண்டால் பலமா? இல்லை அது உடலே நான் என்கிற உணர்வை வளர்த்துவிடுகிறது! மிதமான உணவே உடல் நலன் மற்றும் ஆன்ம நலனுக்கும் உதவுவது!

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

சஞ்ஜெய்யை அம்பாரி தூக்கி அசைந்து அசைந்து பாபாவை நோக்கி வந்த சாயி கீதா!

எவ்வாறு பல கடனங்களையும் கடந்து, வறுமையையும் பொருட்படுத்தாமல் வைராக்கிய பக்தியில் பசியோடு சேவை செய்த பக்தருக்கு இறைவன் பாபா காட்டிய பரிவுத் தூக்கு சுவாரஸ்யமாக இதோ‌...

சனி, 15 ஏப்ரல், 2023

கண்ணில் கண்ட உடனே கண் கண்ட கடவுள் பாபா தன் பக்தரை கட்டி அணைத்தார்!

நிர்கதியாக தன்னையே நம்பி வந்து இறங்கிய தனது உண்மையான எளிய பக்தர்களை இறைவன் பாபா எவ்வாறு ஆரத்தழுவி அரவணைத்து அரணாக திகழ்கிறார் எனும் உண்மையான உருக்க சம்பவம் மிக சுவாரஸ்யமாக இதோ...

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

கைச் செலவுக்கு காசும் இன்றி பசியோடு பாதம் தேயத் தேய புட்டபர்த்திக்கு ஒரு வைராக்கிய யாத்திரை!

எவ்வாறு ஒரு பக்தித் தம்பதிகள் தங்களுக்கு நேர்ந்த பல இக்கட்டுகளை சமாளித்து கையில் காசுமின்றி புட்டபர்த்தி வந்து சேர்ந்தார்கள்? எவ்வாறு பாபா அவர்களின் வழிநெடுக உதவி புரிந்தார்? எனும் நெகிழ் சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...

வியாழன், 13 ஏப்ரல், 2023

கழுத்தில் கத்தி வைத்து 5 பேர் கொல்ல வந்தபோது கண்களை மூடி "சாயிராம்" என்று கத்தினார் சஞ்ஜெய்!

எவ்வாறு ஒரு பக்தி தம்பதிகளுக்கு நிலையாமை உணர்த்தி, உயிரையும் காப்பாற்றி புட்டபர்த்திக்கு வரவழைப்பதற்காக இறைவன் பாபா சூழ்நிலையையே மாற்றினார் எனும் எதிர்பாரா திருப்ப சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...

"பாபா எனது பரம குரு ~ இந்தியா ஒரு விஸ்வகுரு" - உக்ரைன் வெளியுறவு அமைச்சர் எமின் தபரோவா

அண்டார்ட்டிகாவோ, அலாஸ்காவோ, அண்டம் முழுதும், அனவரதமும் ஜெபிக்கப்படும் நாமம் நமது  பாபாவின் திருநாமமே. கடந்த ஞாயிறன்று(09-04-2023) 4 நாள் அரசு விஜயமாக  இந்தியா வந்துள்ள உக்ரைன் வெளியுறவு துணை அமைச்சர் எமின் தபரோவா அவர்களும் ஒரு அத்யந்த சத்ய சாயிபாபா பக்தரே என்ற வியப்பான செய்தி உங்களுக்குத் தெரியுமா....  

புதன், 12 ஏப்ரல், 2023

பசி, பட்டினி, வறுமை, புறக்கணிப்பு , அவமானம் கடந்து ஷிர்டி பாபா பக்தரின் முதல் சத்யசாயி தரிசனம்!

எவ்வகையில் ஒரு ஷிர்டி சாயி பக்தரை ஸ்ரீ சத்ய சாயி இறைவன் தடுத்தாட் கொண்டு தன்னகம் அரவணைத்து தேற்றி ஆன்மீகமாய் ஏற்றினார் எனும் மிக முக்கிய ஆன்மீகத் திருப்புமுனை சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

ஜைன தேவதை அம்பாஜி சொன்ன அந்த மோட்ச தாதா யார்?

ஒருவரை பக்தராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பே இறைவன் பாபா சங்கல்பப்படி நிகழ்ந்த ஒரு அமானுஷ்ய நிகழ்வும்... அதன்வழி ஒரு ஆழமான ஆன்மீகப் புரிதலும் மிக சுவாரஸ்யமாக இதோ...!

திங்கள், 10 ஏப்ரல், 2023

இக்காலத்தில் எல்லாத்துறைகளிலும் மாற்றம் தேவைப்படுகிறது! இந்த நிலை எப்போது மாறி தெளிவு ஏற்படும்?

கல்வியறிவே இல்லாத கிராமத்து மக்கள் அன்போடும், நெருக்கமாகவும் வாழ்கின்றனர்! ஆனால் நகரத்தில் உள்ள படித்தவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் , இப்படிப்பட்டவர்களிடத்தில் பேராசை, காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, ஆணவம் இவைதான் அதிகமாக உள்ளன...! மாற்றம் வேண்டுமெனில் கஷ்டப்பட வேண்டும்! வெண்ணெய் எவ்வளவு மென்மையாக இருப்பினும் அதனை உருக்குவதற்கு கொஞ்சம் முயற்சி (effort) தேவைப்படுகிறது! 

ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

ஒரு தாய், ஒரு மகன், பாபா


தன் மகனுக்காக வெளிதேசத்து ஒரு பாசத்தாயின் பிரார்த்தனையை இறைவன் பாபா எவ்வாறு நிறைவேற்றுகிறார் எனும் பரவச அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...

புதன், 5 ஏப்ரல், 2023

நரநாராயண குகைக்கு "போகாதே!" என்று தன் பக்தரை தடுத்த பாபா!

இமயப் பயணத்தில் தொடர்ச்சியாக ஸ்ரீ நரநாராயண குகைக்கு செல்ல பல தூரம் நடந்த தனது பக்தரை தடுத்து நிறுத்தி பாபா புரிந்த அதிசய செயல் சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 4 ஏப்ரல், 2023

சாக்ஸில் ஒளித்து வைத்திருந்த துப்பாக்கியை நீட்டிய அமெரிக்கர்!

பாபா சொல்வது தான் வேதவாக்கு.      ஏன், எதற்கு என்று கேட்காமல் கீழ்ப் படிந்த பக்தர். அந்நிய நாட்டில் முகம் தெரியாத ஒருவர், துப்பாக்கியை காட்டியபோதும், பாபா நாமத்தை ஸ்மரித்து, பகவான் கட்டளையை நிறைவேற்றிய பக்தர், இறுதியில் வெளிப்பட்ட பாபாவின் பரவச லீலை. ஒரு திகில் படப் பாணியில் , தன் கருணா சக்தியால், பாபா நிகழ்த்திய விநோத லீலை. வாருங்கள் சாய்ராம் V.சீனிவாசன் அவர்கள் கூறும் பாபாவின் விசித்திர லீலை ஒன்றை இங்கு காணலாம்... 

சனி, 1 ஏப்ரல், 2023

சாது சம்மேளனத்தில் ஸ்ரீ சத்ய சாயி பற்றிய சத்திய வாக்குமூலங்கள்!

எவ்வாறு இரு இல்லறத் துறவிகளுக்கு சாதுசம்மேளனத்தில் கலந்து கொண்ட ஞானிகள் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பற்றிய தங்கள் பேருணர்வை பகிர்ந்து கொண்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறார்கள் எனும் மிக முக்கிய சுவாரஸ்ய பதிவு இதோ...

வெள்ளி, 31 மார்ச், 2023

சுவாமி மனத்தூய்மை (சித்த சுத்தி) என்றால் என்ன?


இது தவறு! மனம் எப்போதும் தூய்மையாகவே இருக்கிறது! எனவே மனத்தூய்மை என்பது ஏது? 

மனம் என்கிற பாத்திரம் எப்போதுமே பரிசுத்தமானது தான்! 

செவ்வாய், 28 மார்ச், 2023

பனிமூடிய பத்ரிநாத் இரவு - பாபாவிடம் பிரார்த்தனை - வழிகாட்டிய மர்ம நபர்!

இமய யாத்திரை என்பது தியானம் எனும் இதய யாத்திரை போல் புனித விசேஷமானது! அந்த கடின குளிர்பனி யாத்திரையில் பிரார்த்தனை செய்த உடனேயே எவ்வாறு பாபா தன் பக்தருக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் எனும் அற்புத அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...

வெள்ளி, 24 மார்ச், 2023

அனைத்தையும் படைத்தவன் இறைவன் என்கிற போது.. சுகங்களை மட்டும் படைத்தால் போதாதா? ஏன் துக்கங்களை படைக்க வேண்டும்?

துக்கமில்லாமல் சுகம் இல்லை! 

"ந சுகாத் லப்யதே சுகம்"

சுகத்திலிருந்து சுகம் வராது! 

துக்கத்தை அனுபவித்தால் தான் சுகத்தை உணர முடியும்! 

சுகத்தின் மதிப்பை துக்கத்தை அனுபவித்தால் அன்றி அறிய மாட்டீர்கள்!

புதன், 22 மார்ச், 2023

இதய நோய் /நீரிழிவு தவிர்க்க பாபா கூறும் அற்புத வழிமுறைகள்!

இணை பிரியாத் தோழர்கள் கூட நம் இறுதிவரை உடன் இருப்பதில்லை. ஆனால் இணை நோய்களாய் உருவெடுக்கும் இருதய நோயும், நீரிழிவு நோயும்  வயதுவேறுபாடின்றி, அகில உலகத்திலும்  பல்கிப் பெருகி , நம் இறுதிவரை இணை பிரியாமல் இருக்கும் கால கட்டம் இது. இதற்கு மருத்துவ விஞ்ஞானம் கூறும் காரணங்களையும்   பகவான் பாபா அவர்களின்  அற்புத வழிகாட்டுதல் களையும்  இந்தப் பதிவில் கண்டு பயனடைவோம்...

செவ்வாய், 21 மார்ச், 2023

குகை மகான்கள் ஒரே சுதியில் தெரிவித்த ஒரே ஆச்சர்ய வார்த்தை...!

குகையில் தவம் இயற்றி வரும் வெவ்வேறு யோக சாதனை முறை மகான்களிடம் இறைவன் ஸ்ரீ சத்யசாயி பற்றி கருத்து கேட்டபோது அவர்கள் சொன்ன ஒரே பதில் மனித குலத்திற்கு ஆச்சர்யம் தரக்கூடிய... அந்த அற்புத சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...

சுவாமி! உங்கள் மேல் உள்ள பக்தியில் எங்களை விட வெளிநாட்டவர்களே அதிகமாக ஈடுபடுவதாக உணர்கிறோம்! காரணம் என்ன?

பக்தரகளின் அனுபவம் அவர்களது தீவிரத்தை பொறுத்தே அமைகிறது! அனைத்தும் உங்களது விஸ்வாசத்தின் மீதுதான் நிலை கொண்டுள்ளது! அருகாமையில் இருப்பதால் ஒன்றின் மதிப்பு உடனே தெரிவதில்லை! 

சனி, 18 மார்ச், 2023

ஜாதி பேதங்களை வென்ற ஒரு சாயி பக்தரின் பிராமண தந்தை!

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலேயே! அது நல்லவராவது தந்தையிடம் கற்கையிலே என்றவாறு எவ்வாறு ஒரு சாயி பக்தருக்கு அவரது தந்தை ஞானப்பாதை காட்டினார்... ? ஆச்சர்ய அனுபவங்கள் ஆரமாய் இதோ...! 

ஆன்மீகத்தில் கர்மநெறி, பக்தி நெறி, ஞான நெறி என மூன்று வழிகள் உள்ளன... இவற்றை எவ்வாறு புரிந்து கொள்வது?

உங்களிடம் Wrist Watch இருக்கும்! அதை கூர்ந்து கவனியுங்கள்! ஒன்று விநாடியையும், மற்றொன்று நிமிடத்தையும், மூன்றாவது மணியையும் குறிக்கும்! 

விநாடி முள்ளின் 60 முறை நகர்வே நிமிட முள்ளின் ஒரு நகர்வு! 

வெள்ளி, 17 மார்ச், 2023

பாபா யார் என்றே அறியாத ஒரு பாக்கிஸ்தானிய கிறிஸ்துவ சமையற்காரரை தேடி வந்த பாபா!!

தோற்றம் பார்த்து யாரையும் எடைபோடக் கூடாது என்பதற்கான உதாரண சம்பவம் இது... அதிலும் இறைவன் பாபா தோற்றம் வைத்தல்ல உள்ளம் வைத்தே மனிதரிடம் நெருங்கி வருகிறார் எனும் சத்தியம் உணர்த்தும் சுவாரஸ்யப் பதிவு இதோ....

வியாழன், 16 மார்ச், 2023

இமய யோகி ஸ்ரீ டாட் வாலே பாபா | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

எவ்வாறு தங்களது பக்தர் வழி இறைவன் பாபா தன்னை யார் என்று இமய யோகி வழி அகில உலகமே உணரும் வகையில் நிகழ்ந்த அற்புத சம்பவம் மெய்சிலிர்க்கும் வண்ணம் சுவாரஸ்யமாக இதோ...

சுவாமி! பக்தி வருவதற்கு நம்பிக்கை மிகவும் முக்கியமானதல்லவா...? அந்த நம்பிக்கை வருவதற்கு என்ன வழி?

நம்பிக்கை என்பது வருவதாவது!? இதென்ன கடையிலா கிடைக்கும்? யாரோ கொடுத்து நீங்கள் எடுத்துக் கொள்வது அல்ல...நம்பிக்கை உங்கள் அடிப்படை குணம்! "விசுவாசமே உங்கள் சுவாசம்"! தெய்வ நம்பிக்கையே உங்கள் உயிர்நாடி! அது இல்லை என்றால் உங்களுக்கு மூச்சே இல்லை என்று கூறலாம்! ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் ! 

புதன், 15 மார்ச், 2023

1000 அடி யமுனோத்ரி பள்ளத்தாக்கில் விழப்போன யோகி ஓம்குரு!

ஆன்மீக சாதகராக இமாலயத்தில் தெய்வீக யாத்திரை புரிந்த ஒருவரை இறைவன் பாபா எவ்வாறு காப்பாற்றினார் எனும் ஓர் ஆச்சர்ய மகிமா சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 14 மார்ச், 2023

விபூதி மறுத்த வைஷ்ணவ பெண்மணி - வீடு தேடிவந்து பூசிவிட்ட பாபா- பஹ்ரன் பரவச அனுபவம்!

தீரமாக இறைவன் பாபா மற்றும் அவரது பஜனை - விபூதி பிரசாதம் இவற்றை நம்ப மறுத்த ஒரு முதிர் பெண்மணிக்கு பாபாவே நேரடியாக அவர் வீட்டிற்கு சென்று செய்த அற்புதம் பரவசமாக இதோ‌...

திங்கள், 13 மார்ச், 2023

மகாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவ ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் பல குறுக்கு வழிகளை கையாள வேண்டும்?

இறைவனிடம் குறை என்பதே இல்லை! இறைவனிடம் குறைகளை காண விளைவது மகா பாவம்! இதை விட பெரிய குற்றம் எதுவும் இல்லை! 

தலைமுதல் கால் வரை இறைவன் எந்தவித சுயநலமும் இன்றி பரிசுத்தமான பேரன்புடன் , உலக நன்மையை மட்டுமே கருதி அனைத்தையும் நிர்வகிக்கிறான்! 

ஞாயிறு, 12 மார்ச், 2023

முன்பின் தெரியாத இருவரை தம்பதியாக்கிய தெய்வ சாயி!


சுவாமி தன் சந்நதியில் தன் தெய்வீக சாந்நியத்தில் அவரவர் திருமண முறைப்படி தன் கையால் சிருஷ்டி செய்து திருமாங்கல்யம் வரவழைத்து நிறைய திருமணங்களை நடத்தி வைத்து இருக்கிறார் என்ற மகிழ்வான விஷயம் அனைவரும் அறிந்த ஒன்றே.  ஆனால்  பெற்றோருக்கே தெரியாமல் முன்பின் தெரியாத  இருவரை தம்பதியாக இணைத்த விசித்திரமே வியக்கும் விசித்திர தெய்வீக நிகழ்வு இதோ...

புதன், 8 மார்ச், 2023

செவ்வாய், 7 மார்ச், 2023

திங்கள், 6 மார்ச், 2023

மொரிஷியஸ் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரின் புட்டபர்த்தி தரிசனம்!

மதிப்பிற்குரிய ஒரு வெளிநாட்டு முக்கிய மந்திரி பாபாவின் மேல் எத்தனை அளவுக்கு நன்றியுணர்வோடு இருக்கிறார் என்பதை நமக்கு ஒரு பாடமாக விவரிக்கும் சுவாரஸ்ய பதிவு இதோ...

சுவாமி! நீங்கள் சிருஷ்டித்த (படைத்த) அனைத்தும் நல்லவையே என்கிறபோது தீய செயல்கள் எதிலிருந்து உருவாகின்றன?

சிருஷ்டி அனைத்தும் நல்லவையே! சிருஷ்டியில் தீயவை என்பது கிடையவே கிடையாது! கால மாற்றத்தினால் உங்களுக்கு நல்லவை தீயவை எனத் தோன்றுகின்றன!

இன்று நன்றாக இருக்கும் பழம் நாளையே அது உங்களால் ஜீரணிக்கப்பட்டு மலமாக மாறுகிறது! 

சனி, 4 மார்ச், 2023

ஸ்ரீ பிரேம சாயி பாதமாய் உருமாறிய ஸ்ரீ சத்ய சாயி பாதம்!

எவ்வாறு ஒரு ஆத்மார்த்த பக்தருக்கு அரிதிலும் அரிதான விந்தையான ஒரு அற்புதத்தை இறைவன் பாபா வழங்குகிறார் என்பதைக் குறித்த சுவாரஸ்ய பதிவு இதோ‌...

சுவாமி! ஒருவர் Good'டாக (நல்லவராக) இருந்தால் போதாதா? ஏன் God'டை (கடவுளை) உணர்ந்து கொள்ள வேண்டும்?


Good'ல் ஒரு O'வை எடுத்துவிடுங்கள்.. அந்த Extra O'வே இயற்கை (பிரகிருதி). O போய்விட்டால் God ஆகிறது! 

உங்களுக்கு தெரிந்த எழுத்து W... அதாவது Double You...! 

அதுவே ஜீவாத்மா- பரமாத்மா (double you) (துவைதம்) ! அவை இரண்டின் ஒருமையை (ஏகத்துவத்தை) மறைப்பதே மாயை (அறியாமை) 

வியாழன், 2 மார்ச், 2023

முனைவர் V.K. கோகாக் | புண்ணியாத்மாக்கள்

"நமது பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வி.கே.கோகாக், ஆன்மீகப் பின்னணியுடன் மதச்சார்பற்ற கல்வியை வழங்கக்கூடிய ஒரு சிறந்த ஆசான் ஆவார். கோகாக்கின் இதயம் மிகவும் தூய்மையானது. அவர் எப்போதும் சுவாமியின் திருநாமத்தை உச்சரித்து வந்தார். அவர் எனது கட்டளையை எழுத்திலும் செயலிலும் கடைப்பிடித்தார். ஒரு சிறு சந்தேகத்தைக் கூட என்னை  அணுகித் தெளிவுபடுத்திக் கொள்வது அவர் வழக்கம். அவர் உன்னதமானவர் ஆகையால் நமது பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரானார். அவருடைய கடின உழைப்பின் பலனை இன்று மாணவர்கள் அனுபவித்து வருகின்றனர்."  என்று 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் நாள், தனது  தெய்வீகப் பேருரையில் சுவாமி குறிப்பிட்டார்.

எவ்வளவு பக்தியாக பல காலம் இருந்தும் சிலர் திடீரென ஆன்மீகப் பாதையிலிருந்து விலகிப் போகிறார்களே? காரணம் என்ன?

இப்படிப்பட்ட எண்ணமே மிகவும் தவறானது! நீங்கள் சொல்கின்ற சிரத்தை, பக்தி இவை உண்மையானதும் சிரத்தையானதும் அல்ல... அவை யாவும் செயற்கையானவையே! பிளாஸ்டிக் பூக்கள் போன்றவையே! அவற்றுக்கு நறுமணம் கிடையாது! அவற்றால் தேனீக்களை கவர இயலாது! எல்லாம் Show (வெறும் வெளிக் காட்டல்) தான்! 

புதன், 1 மார்ச், 2023

கேதார்நாத் கௌரி குண்டத்தில் பாபா யார்? எனும் ரகசியம் பகிர்ந்த ஒரு இமய யோகி!

இமய மகான்களுக்கு இறைவன் பாபா எவ்வாறு தனது அருள்மயமான மகிமையை இன்றளவும் பொழிந்து கொண்டே வருகிறார் என்பதற்கான அரியதொரு உன்னத சம்பவம் சுவாரஸ்யமாக இதோ... 

தற்கால அரசுகளின் நடப்பு நிலை எவ்வாறு இருக்கிறது?

"சத்யம் வத; தர்மம் சர" என்பது வேதத்தின் பிரகடனம்! "சத்தியம் பேச வேண்டும்.. அறத்தை கடைபிடிக்க வேண்டும்!" என்பதே இதன் பொருள்! தற்காலத்தில் என்ன நடக்கிறது? அனைவரும் ஆச்சர்யகரமான வகையில் அறத்தை அள்ளி அள்ளிப் பேசுகிறார்கள்! அதாவது 'தர்மம் வத' என்று ஆக்கிக் கொண்டுள்ளனர்...அதை வாழ்க்கையில் நடத்திக் காட்டுவது பற்றிக் கவலையே காட்டுவதில்லை! 'சத்யம் வத:' என்பதையும் சத்யம் வத(வதை)' என்றாக்கி சத்தியத்தையும் வதைத்து வருகிறார்கள்!