தலைப்பு

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

சிறு குழந்தையின் முனகல் குரலைக் கேட்டு சிருஷ்டி கல்கண்டு கொடுத்த தெய்வத்தாய் சாய்!

பெரியோர் முதல் குழந்தைகள் முதல் பறவைகள் முதல் எறும்புகள் வரை பாபா காட்டும் பரிவு சரிசமமானது...‌ அதற்கான உதாரணங்களோடும் ஊடாடும் அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ...

திங்கள், 27 பிப்ரவரி, 2023

பாபாவின் முடி நிஜமா? என சோதிக்க சென்றவர் அடியும் நிஜமே என சரண் அடைகிறார்!

எவ்வாறு ஒரு நாத்திகவாதியை ஆன்மீகவாதியாக இறைவன் பாபா உருமாற்றி இமயமலை அழைத்துச் செல்கிறார் எனும் பரவச சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...

சனி, 25 பிப்ரவரி, 2023

வியாழன், 23 பிப்ரவரி, 2023

பாபா கனவில் வருவதற்கான காரணம் என்ன? கனவு அருளும் சாயி கனிவு!

ஒரு பக்தரின் கனவில் அடிக்கடி தோன்றி... ஒருமுறை ஏன்? தான் அவருக்கு சாயி கனவுகளை வழங்குகிறேன் என்பதன் காரணத்தை விளக்குகிறார் இறைவன் பாபா... அந்த சுவாரஸ்ய அனுபவம் இதோ...

சுவாமி! உங்கள் ஆசீர்வாதத்தினால் உங்கள் சந்நதி அடைந்திருக்கும் நாங்கள் பூர்வ ஜென்ம வாசனைகள் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டுமா?


இப்போது உங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாக்கியங்கள், முற்பிறவிகளில் நீங்கள் செய்த நல்ல காரியங்கள் இரண்டும் தேவையானவையே!

ஒன்றுக்கு மற்றது சம்பந்தப்பட்டவையே! 

செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

மாதாஜி  கிருஷ்ணாபாய் | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

மகான் யோகி ராம்சுரத்குமாருக்கு நாம தீட்சை குருவாகவும் , தனது ஸ்ரீராம பக்தியால் மகானாகவும் உயர்ந்த காஞ்சன்காட் ஸ்ரீ பப்பா ராம்தாஸ் அவர்களுக்கு ஒரு திருமகளாக திகழ்ந்து குருசேவை புரிந்த அவரது சிஷ்யை ஸ்ரீ மாதாஜி கிருஷ்ணா பாய் பாபாவை பற்றி உரைத்தவை என்ன? சுவாரஸ்யமாக இதோ...

இவ்வளவு பெரிய உடலில் உயிர் (பிராணன்) எங்கே இருக்கிறது?

நீங்கள் இதயத்தில் இருப்பதாக நினைக்கிறீர்கள்! அது தவறு! தற்காலத்தில் இதய மாற்று சிகிச்சை நடைபெறுகிறது... இதயத்தை எடுத்துவிட்டால் உடனே மரணம் ஏற்படுவதில்லை! அதில் உயிர் எங்கே இருக்க முடியும்? 

திங்கள், 20 பிப்ரவரி, 2023

மனதை அடக்க நம் சுவாமி கூறும் நல் உபதேசம்! Divine Discourse Jan.08, 1983

மனதின் ஓட்டமே மனிதனின் ஆட்டம். மனம் மயங்கி மதி கெட்டவர்களை, மக்களே போல்வர் கயவர் என்கிறார் திருவள்ளுவர். மனதை அடக்க மலை, காடுகளை நாடினர் பலர். ஆயின் மனமும் அவருடன்தானே சென்றது. நம்முடன் எப்போதும் ஒட்டி உறவாடும் மனதை  எளிதில் அடக்க இயலாது. ஆயின் பகவான் பாபா காட்டும் இந்த எளிய வழியை பின்பற்றினால் மனம் அடங்கி, மனிதன் யோகி ஆகலாம்.

புதன், 15 பிப்ரவரி, 2023

சாக்ஷாத் சங்கர ஸ்வரூபம்

பகவானின் இளம் வயதில், மந்திரில் தினசரி பூஜை செய்யும் புரோகிதர் திரு. சேஷகிரிராவ் மற்றும் அந்நாளைய பக்தர்கள் சிலர் இணைந்து நம் ஸ்வாமி மேல் 108 நாமங்களை தொகுத்து ஸ்ரீ சத்ய சாயி அஷ்டோத்திர சத நாமாவளியை உருவாக்கினர். 


ஸ்ரீ காமாவதானி | புண்ணியாத்மாக்கள்


வேத சாம்ராட் பிரம்மஸ்ரீ காமாவதனுலு (அ) செருக்குமில்லி ஸ்ரீ காமாவதானி சாஸ்திரி   (அ)  காமேஸ்வர கணபதி என்ற பெயர்களில் அறியப்படும் ஸ்ரீ காமாவதானி அவர்கள் அனைத்து வேதசாஸ்திரங்களையும் நன்கு அறிந்த பண்டிதர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள ராஜோல் தாலுக்காவில் உள்ள 'கதலி' கிராமத்தைச் சேர்ந்தவர். செல்வச்செழிப்பும் சமூக மதிப்பும் நிறைந்த பிரபலமான ஒருவராக வாழ்ந்து வந்தவர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் வேத சாஸ்திர பரிஷத்-தின் தேர்வாளராக இருந்தவர். ஆனால் சொந்தஊர், சொத்து, சௌகர்யம்,  பிள்ளை, பேரப்பிள்ளைகள் அனைத்தையும் விட்டுவிட்டு சுவாமியின் மீதான பக்தியினால்  பிரசாந்தி நிலையத்தில் குடியேறியவர். ஆரம்பகால தசரா கொண்டாட்டங்களுக்கு பொறுப்பாளராக இருந்தார். தசரா கொண்டாட்டங்களின் போது நூறு குரல்களுக்கு மத்தியிலும் ஸ்ரீ காமவதனியின் குரலை மற்றவர்கள்  எளிதாக கண்டுணர்ந்துவிட முடியும்; அத்தகைய தங்கக்குரலுக்கு சொந்தமானவர் அவர். ஸ்ரீ காமாவதானி தனது வாழ்க்கை முழுவதையுமே வேதங்களைப் பயில்வதிலும் பயிற்றுவித்தலிலுமே கழித்தார். 

தினமலர் செய்தி: சத்ய சாய் கோவிலில் காஞ்சி மடாதிபதி!


விசாகப்பட்டினம், பிப், 14-  ''அன்பு, அக்கறையுடன் ஏழைகளுக்கு சேவை செய்வது ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நோக்கம்,'' என, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தன் அருளாசியில் தெரிவித்தார்.

சனி, 11 பிப்ரவரி, 2023

ஆன்மீக ஆனந்தத்தை ஒருவர் எவ்வாறு அடைய முடியும்?

ஆன்மீகத்தில் கூட ஒருவர் அமைதியின்றி இருப்பது துரதிருஷ்டமே! ஆசிரமத்தில் வாழ்ந்து கொண்டே மனக்கஷ்டத்துடன் இருப்பது கேலிக்குரியது! 

வியாழன், 9 பிப்ரவரி, 2023

நீங்கள் அறியாத ஸ்ரீ சத்யசாயி யுக பன்முக சாயி பொக்கிஷங்கள்!


ஓம் ஸ்ரீ சாயிராம் 


பரப்பிரம்ம ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அடியவர்களான தங்களின் மேலான கவனத்திற்கு!

சுவாமி! கொடுப்பினைக்கு முக்கியமாக எங்களிடம் என்ன இருக்க வேண்டும்?

எல்லாவற்றுக்கும் interest (புண்ணிய கர்ம சேமிப்பு) இருத்தல் வேண்டும்! இதன் மூலம் வாழ்வில் எதை வேண்டுமானாலும் சாதிக்க இயலும்! விஷயங்களில் உங்களுக்கு In-Trust (நம்பிக்கை) இருக்க வேண்டும்! அதுவே interest (ஆர்வம்)!

புதன், 8 பிப்ரவரி, 2023

ஸ்ரீ ஆதிசங்கரர் மிகச் சிறிய வயதிலேயே உடலை துறந்துவிட்டார்! இதற்கு காரணம் என்ன சுவாமி?

அத்வைத சித்தாந்தத்தை நிலைநாட்டிய ஸ்ரீ ஆதிசங்கரர் இளம் வயதிலேயே உடலை துறந்தவர் என்பது உண்மையே! 

பிரஸ்தானத்ரயத்திற்கு பாஷ்யம் (விரிவுரை) எழுதி... ஞான மார்க்கத்தை போதித்து... பக்தி மார்க்கத்தை நிலை நாட்டி... அநேக இறை துதிகளை உலகிற்கு அளித்து... இமயம் முதல் குமரி வரை பிரயாணம் செய்து... பீடங்களை ஏற்படுத்தி , சநாதன தர்மத்தின் இலட்சிய மூர்த்தியாக நிலை பெற்றவர் ஸ்ரீ ஆதிசங்கரர்! 

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதருக்கு பாபா அளித்த கண் பார்வை!


தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என கொடிகட்டிப் பறந்தவர் தியாகராஜ பாகவதர். எளிமையான குடு்ம்பத்தில் பிறந்து தனது கந்தர்வ கானக் குரலால் தமிழகத்தை 40 களில் கட்டிப்போட்டவர். தங்க நிற உடல் கந்தர்வ குரல் ஆழமான பார்வை இதுதான் எம்.கே.தியாகராஜபாகவதர் அவர்களின் மெய் சிலிர்க்கும் பாபா அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ‌...

கடவுளின் அருள் எங்களுக்கு ஏன் கிடைப்பதில்லை?


இந்த எண்ணம் தவறானது! கடவுளின் அருள் அனைவருக்கும் சமமாகவே உள்ளது! குறைபாடு உங்கள் மனதில் தான் இருக்கிறது! 

மழை பெய்து கொண்டிருக்கும் போது... பாத்திரத்தின் முகப்பை மேல்நோக்கி வைத்தால் தான் மழை நீர் அந்த பாத்திரத்தில் விழும்! அதை விடுத்து பாத்திரத்தை கவிழ்த்தி வைத்தால் , பாத்திரத்திற்குள் எப்படி மழை நீர் வரும்? 

சனி, 4 பிப்ரவரி, 2023

பாபாவை பின்தொடர்ந்த 5 வெளிநாட்டு பெண்மணிகளின் ஆச்சர்ய அனுபவங்கள்!!

ஐந்து வெளிநாட்டு பெண்மணிகளின் பாபா உடனான பயணமும் சாயி அனுபவங்களும் சுவாரஸ்யமாக இதோ...

சுவாமி! உலகில் பலத்தரப்பட்ட பல்வேறு துறைகளை சார்ந்த மனிதர்கள் உங்கள் பக்தராக இருந்து பல்வேறு கௌரவங்களைப் பெறுகிறார்கள்! இதற்கு உங்கள் கருத்து?

இது சகஜமே! நற்சேர்க்கையால் விளையும் பலன் இதுதான்! பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்!

ஸ்ரீவிநாயகருக்கு மூஞ்சூறு வாகனமாக அமைந்ததால் அதுவும் ஒரு வழிபாட்டுப் பொருளாக மாறிவிட்டது! 

எருது சிவனின் வாகனமாக இருப்பதால் அதையும் மக்கள் ஆராதிக்கிறார்கள்! 

வியாழன், 2 பிப்ரவரி, 2023

24 ரூபாய் தேவைப்படும் தையல்காரரனின் பயணச் செலவுக்கு 14 ரூபாய் மட்டுமே கொடுத்தார் பாபா! ஏன்?

பிரபலம் முதல் பராரி வரை முராரி பாபா அனைவரையும் சமமாக அரவணைப்பவர்... இதை உணர்த்தும் உன்னத அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...

சுவாமி! உங்கள் மீதுள்ள எங்களது நம்பிக்கை ஒரே அளவில் இருப்பதில்லை... ஆனால் உங்களுக்கோ எங்கள் மீது எதனால் அத்தனை நம்பிக்கை?

"ஏகோவசி சர்வ பூதாந்தராத்மா" 

இறைவன் சகல ஜீவராசிகளிடமும் , விதவிதமான உருவங்களில் , வேறுபட்ட பெயர்களில் வாழ்கிறார்!

புதன், 1 பிப்ரவரி, 2023