தலைப்பு

திங்கள், 29 நவம்பர், 2021

யூடியூப் தளத்தையே மிரள வைத்த சத்ய சாயி பஜன் வீடியோ!!


எவ்வாறு சுவாமியின் ஒரே ஒரு பஜன் பாடல் இப்போது அகில உலகத்தையே ஆண்டு வருகிறது எனும்  சுவாரஸ்ய அனுபவம் குறித்தும்.. அதன் ஆச்சர்யப் பின்னணி குறித்தும்... திகட்டாத தெள்ளமுதத்தை சுவைக்கப் போகிறோம் இதோ‌...

சனி, 27 நவம்பர், 2021

இந்தப் பிரபஞ்சம் முழுமைக்கும் காரணமான ஆதார சக்தி நானே!


சுவாமி ஆகாயம் போன்றவர்... ஆகாயத்தை வேர்களால் எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும்? ஆகவே தான் ஆதார ஆகாயமான சுவாமி மழையாய் அவதரிக்கிறார்.. அப்போதே கருணை ஈரத்தை... ஞான நீரூற்றை அருந்தி மனித வேர்களால் சுயதிருப்தி அடைய முடியும் எனும் பேருண்மை ஞான விசும்பு நிழலாய் இதோ...

வெள்ளி, 26 நவம்பர், 2021

90 ஆண்டை நிறைவு செய்கிறது சுவாமியின் பூர்வ அவதார சரித புத்தகம்!

 

திரு. ஸ்ரீ.ஹேமத் பந்த் எழுதிய

 “ஸ்ரீ சாய் சத்சரித்ரா” வின் முதல் பதிப்பை திரு.ஸ்ரீ.ராமச்சந்திர ஆத்மாராம் தர்காட் அவர்கள் 1930 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி வெளியிட்டார்கள். சாயியின் புனித சத் சரிதம் வெளிவந்து இன்றுடன்(26.11.2021) 90 ஆண்டுகள் நிறைவடைகிறது.

புதன், 24 நவம்பர், 2021

ஒரு பல் டாக்டருக்கு தொண்டையில் ஏற்பட்ட வறட்டு இருமலை கேன்சராவதற்கு முன் தடுத்த கருணாமூர்த்தி சுவாமி!

சுவாமி மேல் பெரிதாக ஈடுபாடில்லாத ஒரு பல் மருத்துவருக்கு தொண்டையில் கேன்சர் அறிகுறி தென்படுவதற்கு முன் தனது பக்தராக்கி தடுத்தாட் கொண்ட மகத்துவ சுவாமியின் மருத்துவ சிகிச்சை சுவாரஸ்யமாய் இதோ...

செவ்வாய், 23 நவம்பர், 2021

🎂 நவம்பர் 23 - 1926 றும்... நவம்பர் 23 - 2021 றும்.. ஒன்றே!!

மிகப் பெரிய விசேஷ நாள் இது... அப்படி ஒரு நிகழ்வு சுவாமி அவதரித்த போது ஏற்பட்ட அதே ஒருங்கிணைந்த புனிதங்கள் இந்த அவதாரத் திருநாளிலும் அரங்கேறி இருக்கின்றன... இது அதிசயம்.. இது அபூர்வம்... நினைத்துப் பார்க்க முடியாத மெய் சிலிர்ப்பு... அது என்ன ஒற்றுமை என்பதையும்... இந்த அவதாரத் திருநாள் பக்தர்களை எவ்வாறு பேரன்பிற்கு தயார்படுத்துகிறது என்பதையும் வியப்புடன் விவரிக்கப்படுகிறது இதோ...

சனி, 20 நவம்பர், 2021

எம கண்டத்தில் துவக்கப்பட்ட செர்னோபில் அணுஉலை ஏற்படுத்திய பேரழிவு!

இறைவன் பாபா காலாதீதன். கால நேரங்களுக்கு அப்பாற்பட்டவர். ஆனால் அவர் ஆரம்பிக்கும் எந்த நற் செயல்களையும், இராகுகாலம்  எமகண்டம்,போன்ற நேரங்களில் ஆரம்பிக்க மாட்டார். இது நமக்கு அவர் தரும் நேரடிப் பாடம்(Practical Lesson).

வெள்ளி, 19 நவம்பர், 2021

ஒரு வீட்டின் குத்துவிளக்கை பாபா ஆசீர்வதிக்க அனைவர் வீட்டிலும் ஜெகஜோதியாய் எரிந்தன விளக்குகள்!

பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயி விளக்கேற்றவே வந்திருக்கிறார். மனித உள்ளத்தில் அறியாமை இருள் கவ்விக் கொண்டிருப்பதால் அதைப் போக்குவதற்கே அவர் இதய விளக்கேற்றுகிறார்.  சத்யசாயி இறைவனா ? என சந்தேகப்படுவது விளக்கில் எரிவது ஜோதியா? என சந்தேகப்படுவது போல் அபத்தமானது. அவர் ஏற்றிய பக்தி விளக்கில் எங்கிருந்து இருள் வெளிப்படும்? அவரின் எண்ணற்ற லீலா ஜோதியில் ஓர் உன்னத வெளிச்ச அனுபவப் பதிவு இதோ...

புதன், 17 நவம்பர், 2021

தாலி பாக்கியம் தந்த சாயி தெய்வம்!


திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயக்கப்படவில்லை... அது இறைவன் சத்ய சாயி பாதத்தில் மட்டுமே அனைவருக்கும் நிச்சயக்கப்படுகிறது என்பதற்கான அனுபவ பதிவு இதோ... 

செவ்வாய், 16 நவம்பர், 2021

நான் உங்கள் ஒவ்வொருவரின் வருகைக்காகவும் காத்திருக்கிறேன்! -ஸ்ரீ சத்யசாயி

சுவாமி பரப்பிரம்மம்... புகை எழா தூய அக்னி அவர்... அத்தகைய அருட்பெருஞ் ஜோதியான சுவாமி எத்தகையவர்... தன் பக்தர்க்காக எவ்வாறு காத்திருக்கிறார் என்பதை நெகிழ்வோடு எடுத்தியம்பும் சுவாரஸ்ய பதிவு இதோ... 

கல்வியுடன் ஞானமும் புகட்டும் கண்கண்ட தெய்வம் பாபா!

பர்த்திபுரியில் பயின்ற மாணவர்களாக இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் நம் அனைவரின் மனதிலும் நிழலாடுவது உண்டல்லவா. ஏனென்றால், பாபா.   மாணவர்களிடம் காட்டிய அன்பு, அன்யோன்யம், பரிவு, பாசம் மற்றும் அவர்களிடம் பேசும்போது வர்ணஜாலமாக மாறும் குதூகல முகபாவம்! அப்பப்பா! என்ன தவம் செய்தனர் என்று எண்ணத் தோன்றும்... 

ஞாயிறு, 14 நவம்பர், 2021

கடைசி வரிசை மாணவன் அளித்த சிறு புல்லின் பூவை ஏற்றுக் கொண்டு பூரித்த பரமதயாள சுவாமி!


சுவாமிக்கு எதை அளிக்கிறோம் என்பது முக்கியமே இல்லை... எப்படி அளிக்கிறோம் என்பதே முக்கியம்... பொன்னோ, வெள்ளியோ, பித்தளையோ, மண்ணோ எதில் ஏற்றினாலும் தீபம் ஒளிர்கிறது... அதைப் போல் பக்தி இதயம் எதை அளித்தாலும் சுவாமி பூரிக்கிறார் எனும் சத்தியம் சுவாரஸ்ய சம்பவமாய் இதோ...

சனி, 13 நவம்பர், 2021

பஜனின் முக்கியமான உள்ளார்ந்த அர்த்தம்!

  

பஜனின் முக்கியமான உள்ளார்ந்த அர்த்தத்தை  ஒரு முறை பகவான் பாபா எடுத்துக் கூறினார்.அதனை ஒரு எளிய உதாரணத்துடன் விளக்கினார். ஒரு மரத்தடியில் நீங்கள் எல்லாம் கூடி உரத்த குரலில் கத்தினால் ,மரக் கிளைகளில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு பறவையும் பறந்தோடிவிடும்.

வெள்ளி, 12 நவம்பர், 2021

அக்ஷயமாய் வளர்ந்த அகண்ட பஜன்!


முதன் முதலாக சத்ய சாயி அகண்ட பஜன் 1946ல் பெங்களூரில் உள்ள சில சாயி குடும்பத்தினரால் ஆரம்பிக்கப்பட்டது.

வியாழன், 11 நவம்பர், 2021

சுவாமியின் லீலைகளை பரிகாசம் செய்தபடி சவால் விட்டு தோற்று ஓடிய ஹட யோகி எல்.எஸ்.ராவ்!


சுவாமி புரிகின்ற திருலீலைகள் யாவும் பொய்.. அதை நிரூபிக்கிறேன்..‌என் எதிரில் அவரை வந்து லீலை புரிய சொல்லுங்கள் என்று சவால் விட்டு.. நான் அதை விட லீலைகள் செய்வேன் என இறுமாந்து பேசி... சாயம் வெளுத்து திசை தெரியாமல் தலை தெறிக்க ஓடிய ஒரு ஹடயோகியின் சம்பவங்கள் மிக சுவாரஸ்யமாய் இதோ...

புதன், 10 நவம்பர், 2021

அமெரிக்க பக்தருக்காக தனது மூன்றாவது கண்ணை திறந்து காட்டிய பரமசிவ சாயி!

ஆடம்பரமாக வாழ்ந்த ஒரு வெளிநாட்டு தம்பதியினர் எவ்வாறு சுவாமி பக்தராய் எளிமையாய் மாறி நற்சேவை ஆற்றும் அளவிற்கு மனப்பக்குவம் அடைந்தார்கள் என்பதையும் அதற்கு சுவாமி அவர்களுக்கு தந்த அற்புதமான பரிசு என்ன? என்பதையும் பேரனுபவமாக சுவாரஸ்யமாய் இதோ...

செவ்வாய், 9 நவம்பர், 2021

பக்தர் மனக் குறையை தீர்க்க பாபா ஆடிய நாடகம்!

தீயை நெருங்கினால் வெப்பம் அதிகரிக்கும். ஆனால் தீயின் வெப்பத்தால் தங்கம் உருக்கப்படும் போது, அதிலுள்ள அனைத்து மாசுகளும் அகன்று சொக்கத்  தங்கமாக மாறிவிடும். பகவானின் அணுக்கத் தொண்டர்கள் பலர் இது போல  அனுபவங்களைப் பெற்று,  பாபாவால்  ஆன்மீகப் பாதையில் வழி நடத்தப் பட்டுள்ளனர். அவர்களின் ஒருவரான சாய்ராம் அனில்குமார் பகவான் அற்புதப் பிரசங்கங்களை, ஸ்வாமி பேசும் போதே மொழிபெயர்ப்பு செய்தவர், பகவானின் நெருக்கத்தில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்கிற தமது அனுபவத்தை அறிவுரையாக நமக்கு கூறுகிறார். 

திங்கள், 8 நவம்பர், 2021

ஏன் சுவாமியின் 96 ஆவது அவதாரத் திருநாள் சிறப்பு வாய்ந்தது... அதை நாம் ஏன் கோலாகலமாக கொண்டாட வேண்டும்?


எங்கும் நிறைந்து எல்லாம் அறிந்து எதையும் இயக்கும் பரம்பொருள் மனிதன் தன்னை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்காக மனித உடல் எடுத்து அவதரிக்கிறது... ஆக தனக்காக அன்றி அவதாரம் மனித இனத்திற்காக என்பதால் ஒவ்வொருவரும் சுவாமியின் அவதாரத் திருநாளை கொண்டாட வேண்டும்..

வெள்ளி, 5 நவம்பர், 2021

அறுவை சிகிச்சைகள் செய்தும் பலனின்றி சுவாமி கொடுத்த விபூதியால் அடுத்த நொடியே குணமான கேன்சர்!

கடல்கடந்த ஒருவரின் கேன்சர் பல அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டும் எந்த ஒரு வித பலனும் அளிக்காமல் போக எவ்வாறு அதனை சுவாமி ஒரு நொடியில் குணமளித்தார்.. அதுவும் ஆரம்பித்தில் அவர் சுவாமி மேல் நம்பிக்கையே இல்லாமல் இருந்தவர்... எவ்வாறு மாறினார்.. உடல் தேறினார்... சுவாரஸ்யமாய் இதோ...! 

செவ்வாய், 2 நவம்பர், 2021

சாலை ஓர பெஞ்சில் அமர்ந்து பாபா தந்த திடீர் தரிசனம்!

அற்ற குளத்தில் அருநீர்ப் பறவைபோல் துன்பம் கண்டு விலகிவிடும் நட்போ, உறவோ அல்ல,பகவான் பாபாவின் பாசப் பிணைப்பு. இன்பத்தில, துன்பத்திலும் எந்த சூழ் நிலையிலும், எப்போதும்,எங்ஙான்றும் நம்மைச் சூழ்ந்து காப்பதே, அவரது கருணையின் தனித்துவம்... 

அங்கிருக்கிறார், இங்கில்லை என பாபாவைப் பற்றி கூற முடியுமா? 

எங்கோ இருந்த பாபா, தன் அருகில் பார்க் பெஞ்சில், ஒரு நண்பனைப் போல அமர்ந்து, உரையாடிய அந்த "திரில்"சம்பவத்தை விவரிக்கிறார் சாயி சகோதரர் வினய் குமார். வாருங்கள் என்னுடன், அவர் கூறுவதைக் கேட்போம்...