தலைப்பு

வியாழன், 29 டிசம்பர், 2022

பாபாவின் சுடர் மிகு ஞான மொழி பற்றி ஸ்ரீமான் கஸ்தூரி!

இப்படி ஒரு விளக்கத்தை இதுவரை யாரும் வழங்கியதில்லை... அப்படி வழங்கிய அவர் ஒரு உன்னதர்... இறைவன் பாபாவின் பேராற்றலை துல்லியமாக உணர்ந்தவர்... தொண்டு செய்து பழுத்தப் பழம் எனும் சொற்றொடர் அவருக்கே பொருந்தும்! இல்லை எனில் ஸ்ரீ பிரேம சாயி அவதாரத்திற்கான அன்னையாக அவரால் எப்படி பிறந்திருக்க முடியும்? அவர் பெயரே சாயி சேவைக்கான உத்வேக சக்தி.. அவரே சேவைத் திலகம் ஸ்ரீமான் கஸ்தூரி...‌அவர் அளித்த மெய்சிலிர்க்கும் விளக்கம் இதோ...

இயற்கை நடத்தும் பாடம் என்ன?

மானுடர் தர்மப்படிக் கர்மங்களைப் புரிந்து பழைய கர்மாவைத் தீர்த்துக் கொள்ள ஆன்ம சாதனா லயமாக இருப்பது உலகமே! எனவே இறுதியில் உலகை விட்டு இறைவனிடம் செல்ல வேண்டியவர்களாக இருந்தாலும் அதற்கான திறத்தை இந்த உலகிலிருந்து கொண்டு, உலகப் பொருட்களைக் கொண்டு வாழும்போதேதான் பெற வேண்டும்; உலகத்துடனேயே பந்தமுறுத்தும் மாயையில் சிக்காமல் இந்த உலகத்தில் வாழ்ந்தே பரத்துக்கு (வேற்றுலகத்திற்கு) பக்குவமாக வேண்டும்! 

செவ்வாய், 27 டிசம்பர், 2022

தெய்வப் பெயர்கள் உள்ளிருக்கும் ஆழமான ஆன்மீக உண்மை? மற்றும் ஏன் இந்திய தேசத்தை பாரத தேசம் என அழைக்கிறோம்?

நாராயணன் என்றால் நார-நயன்! நீர் நிறைந்த கண்ணே நார நயனம்! அதாவது பிரேம பக்தியின் உள்ளுருக்கம் கண்ணீராகப் பெருகும் போது எந்த திவ்ய அனுபவத்தை நீங்கள் பெறுகிறீர்களோ அதுவே நாராயணன்! 

திங்கள், 26 டிசம்பர், 2022

குஜராத் நவாநகர் ராஜமாதா திருமதி.குன்வெர்பா சாஹிபா | புண்ணியாத்மாக்கள்

பூர்ணாவதாரம் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஒரு பெண்மணியிடம், "நீ எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. நான் உன் மகன்." என்று வாக்குறுதி அளித்தார் எனில் அந்தப் பெண்மணி எத்தகைய பாக்கியசாலியாக இருந்திருக்க வேண்டும். தற்போதைய குஜராத்தின் நவாநகர் சமஸ்த்தானத்தின் ராஜமாதா திருமதி.குன்வெர்பா சாஹிபா தான் அவர். ஶ்ரீ சத்யசாயி மத்திய அறக்கட்டளை, பல்கலைக்கழக அறக்கட்டளை மற்றும் சத்யசாயி அமைப்பின் உலக கவுன்சிலிலும் முக்கிய உறுப்பினராக… சுவாமியால் பரிந்துரைக்கப்பட்ட புனிதவதி இந்த நவாநகர் ராஜமாதா. புண்ணியாத்மாக்கள் வரிசையில் அந்த அம்மையாரின் வாழ்க்கைக் குறிப்பு இதோ…

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

மேரி மாதாவாக சென்று Dr. லேலியாவின் கருவை காத்த சாயி மாதா!

இயேசுவைத் தவிர நான் வேறு யாரையும் வணங்க மாட்டேன் என்று சொன்ன ஒரு வெளிநாட்டு குடும்பத்திற்கு ஏற்பட்ட ஒரு சுவாரசிய சுவாமி அனுபவம்.... 

இயேசுவின் முக்கிய அறிவிப்பை அறிவித்த அவரின் பரமபிதா ஸ்ரீ சத்ய சாயி!

தனது புனித மகன் ஏசுபிரான் குறித்த பரவச சம்பங்களை பரலோக பரமபிதாவான பாபா நம்மிடையே பகிர்ந்து.. ஏசுநாதரின் இறைவழியில் நம்மை நடத்த சங்கல்ப மொழியை ஒளிமயமாய் பேசுகிறார் இதோ...

வியாழன், 22 டிசம்பர், 2022

தனது பிரேம சாயி அவதாரத்தை 1970'களிலேயே உரைத்த பாபா!

காலம் மூன்று... அதைக் காணும் கண்கள் மூன்று... அவை தரிசிக்கும் சாயி அவதாரங்கள் மூன்று... என்கிற ஆழமான உணர்வில் பக்தர்கள் இப்போதிருக்க... அதனை 1970 களில் பிரசாந்தி நிலையத்திலேயே பாபா தனது பிரேம சாயி அவதாரத்தை பதிவு செய்திருக்கிறார் எனும் நெகிழ் நிகழ்வு சுவாரஸ்யமாக இதோ...

புதன், 21 டிசம்பர், 2022

மாயாவதார பாபாவை புரிந்து கொண்ட 4 வயது குழந்தை மாயா!!

இறைவன் பாபாவை புரிந்து கொள்வது அத்தனை எளிதல்ல..‌அதற்கு கள்ளம் கபடமற்ற உள்ளம் வேண்டும்! சரணாகத பக்தி வேண்டும்... மேதைகளாலும் புரிந்து கொள்ள முடியாத பாபாவை எவ்வாறு ஒரு சிறு குழந்தை புரிந்து கொண்டு என்ன பேசியது? சுவாரஸ்ய அனுபவம் இதோ...

இறைவனிடம் ஒரு பக்தர் எதைப் பிரார்த்தனை செய்ய வேண்டும்?

இறைவனை அன்றி வேறெதையும் அறவே நாடாமல் இருப்பதே உண்மை பக்தனின் தலையாய லட்சணம்! வேறு எது எதற்காகவோ இறைவனை நாடுவதே பக்தரென்று நினைத்துக் கொண்டிருப்போரில் மிகப் பெரும்பாலோரின் 'லட்சணமாக' இருக்கிறது!

செவ்வாய், 20 டிசம்பர், 2022

ஒரே ஒரு தரிசனத்தில் சாயி'யிசமாக மாறிய கம்யூனிசம்!

பாபா நிகழ்த்தும் அற்புதங்கள் மகிமைகள் எண்ணில் அடங்கா... எண்ணிக்கையில் மட்டுமல்ல எண்ணத்திலும் அடங்கா... விதவித அனுபவங்கள் விசித்திர நிகழ்வுகளின் வியன்மிகு வரிசைகளில் ஓரிரண்டு சுவாரஸ்யமாக இதோ...

திங்கள், 19 டிசம்பர், 2022

தஞ்சம் அடைந்ததில் இரு சாயி அவதாரமும் தீர்த்து வைத்த தண்ணீர்ப் பஞ்சம்!

இறைவன் ஸ்ரீ ஷிர்டி பாபாவே இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபா... மனிதனுக்கு உடம்பில் உடை...இறைவனுக்கோ உடம்பே உடை... ஆக மூன்று உடை அணிந்திருக்கும் சாயி அவதாரம் முதல் இரண்டு உடையில் செய்த சேவையும் ஒன்றே என நிரூபிக்கும் சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...

வெள்ளி, 16 டிசம்பர், 2022

சித்ராவதி மணலை ரவையாக்கி படுகையை அவையாக்கி பாபா அளித்த ரவாலாடு!

காணக்கிடைக்காத பாபாவின் இளமைக் கால மகிமைகள் கேட்டாலே இனிக்கும்.. வாசித்தாலே சிலிர்க்கும்.. கண்ணனே தான் என்பதை கணப்பொழுதும் வாழ்ந்த ஸ்ரீ சத்ய சாயி கண்ணனின் அதிசய லீலைகளின் ஒன்று இதோ...

வியாழன், 15 டிசம்பர், 2022

ஏற்கனவே பெயர் வைத்த குழந்தைக்கு பெயர் வைக்க சொன்ன பக்தையிடம் பாபா என்ன சொன்னார்?

பேரிறைவன் பாபா அறியாதது ஏதும் இல்லை... எந்த மறைத்தலுமின்றி மனித செயல்கள் யாவும் வெளிப்படையாக அறிகிறார்... மனித ரகசியம் அனைத்தும் அறியும் இறை அதிசயம் பாபா ஒரு குழந்தைக்குக் காட்டிய கருணை சுவாரஸ்யமாக இதோ...

ஏன் கடவுளை வந்தனை செய்பவர் ஏழ்மையாகவும்.. நிந்தனை செய்பவர் வசதியாகவும் வாழ்கிறார்கள்?

பக்தி உள்ளவர்களில் பலர் வசதியை கோரித்தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்! அப்படிப்பட்ட  அவர்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்றியும் கூட அதற்கும் மேற்பட்ட வைராக்கிய பக்தி நிலையில் அவர்கள் செல்கிறார்களா? என கடவுள் பார்க்கிறார்! ஆயினும் உண்மையான பக்தர் விஷயத்தில் அவர்களின் அனைத்து உடைமைகளையும் பறித்துக் கொண்டு அவர்களை வைராக்கியத்தில் மேலும் முதிர்ச்சி பெறச் செய்கிறான்! ஹரி- ஹரன் என்ற பெயர்களுக்கே அபகரிப்பவன் என்றே பொருள்! உங்கள் மனதை அபகரிப்பவன் மட்டுமல்ல உங்கள் உடைமைகளையும் அவனே அபகரிக்கிறான்!

செவ்வாய், 13 டிசம்பர், 2022

பாபாவுக்கான ஒரு கோப்பைத் தண்ணீரில் வளர்ந்த ஆளுயர மணி ப்ளான்ட்! 

இறைவன் பாபாவால் நிகழ்த்தப்படும் அனுபவங்கள் ஏராளம்... குறிப்பாக அதில் நூதன அனுபவங்கள் பரவசங்கள் மிகுந்தவை... அவ்வனுபவங்கள் நமக்கு வழிகாட்டிகளாகவும் அமைகின்றன... அதில் ஓரிரண்டு சுவாரஸ்யமாக இதோ...

திங்கள், 12 டிசம்பர், 2022

இராமலிங்க அடிகளார் உணர்த்திய அருட் பெருஞ்ஜோதியை பாபாவிடம் உணர்ந்த வள்ளலார் பக்தர்!

வெவ்வேறு மகான்கள் வெவ்வேறு வடிவிலான போதனைகள் ஆனால் அவர்கள் காட்டிய வழிமுறைகள் யாவும் ஒரே பரப்பிரம்மத்திடமே கொண்டு சேர்க்கிறது.. அத்தகைய பரப்பிரம்மமான பாபாவின் மகிமைகள் ஓரிரண்டு சுவாரஸ்யமாக இதோ...

வெள்ளி, 9 டிசம்பர், 2022

சீசனே இல்லாத போதும் பாபா விளைவித்த மாங்கனி!

பல்வேறு விதமான பக்தர்களுக்கு பாபா அளித்த பல்வேறுவிதமான கனவு அனுபவங்களும்...‌அது வெறும் கனவல்ல நிஜம் என்று உணரும்படியான நிகழ்வுகளும் சுவாரஸ்யமாக இதோ...

வியாழன், 8 டிசம்பர், 2022

இனிப்பு இறைவன் பாபாவின் திருப்படத்திலிருந்து பொழிந்து கொண்டே இருந்த திதிப்புச் சக்கரை!

பாபா எவ்வாறு தன் ஏழ்மையான ஒரு பக்தர் குடும்பத்தை திதிப்போடு அவர்களுக்கு இருந்த பக்தித் துடிப்போடு காப்பாற்றி கரை சேர்க்கிறார் என்பது மிகவும் சுவாரஸ்யமாக இதோ...

புதன், 7 டிசம்பர், 2022

அணுவிலும் சிறியவர் அண்டத்திலும் பெரியவர் ஸ்ரீ சத்யசாயீஷ்வரர்!


இறைவன் பாபா அன்றாடம் அவரவர் வாழ்வில் நிகழ்த்தி வரும் பேரற்புதம் ஒன்றல்ல இரண்டல்ல...‌பாபா வழங்கிடும் பிறந்தநாள் லட்டுவில் ஆங்காங்கே தோய்ந்த முந்திரியாய் குறிப்பிட்ட சில சுவாரஸ்ய அனுபவங்களில் ஓரிரண்டு இதோ...

"ஏன் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் துயில் எழுந்து தியானம் செய்ய வேண்டும்?"

ஆன்மீக சாதனை வாழ்வின் தொடக்கத்தில் இருப்பவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்... இரவு அதிக நேரம் டி.வி போன்றவற்றை பார்ப்பதை நிறுத்தி விரைவாக படுக்கைக்குச் சென்று உறங்க வேண்டும்... ஆரோக்கிய வாழ்க்கை முறை கடைபிடிப்பலர்களுக்கு 6 மணி நேர உறக்கமே போதுமானது! பின்னிரவு 3 மணியிலிருந்து 6 மணி வரையிலான காலகட்டமே ஆன்மீக சாதனை புரிவதற்கு ஏற்றது... மிகவும் சிறந்தது! எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து தியானத்தில் அமருங்கள்...ஆற்றங்கரை, மரத்தின் அடியில் தியானிப்பது இன்னமும் சிறந்தது! 


ஸ்ரீ B V ராஜா ரெட்டி | புண்ணியாத்மாக்கள்

அகத்திலும் புறத்திலும்… சுவாமியை நெருங்கி வாழவும், சேவைகள் புரியவும் மிக மிக அத்தியாவசியமான செயல்  நமது அகங்காரத்தை நாமே துடைத்தெறிவது ஆகும். பல ஜென்மங்களாகத் தொடரும் பயிற்சிகளாலன்றி, உண்மையான பணிவுடன்கூடிய நடத்தையினாலன்றி… அவ்வளவு சுலபமாக அகன்றுவிடாதது அகங்காரம்.  ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற அகங்காரம் அழிவதற்கான சிறந்த உபாயம், "தவ தாஸோஹம்" ( நான் உங்கள் அடிமை ) என்கின்ற பாவனையே! இந்த பாவனையில் தான் அரிஷ்டத்வர்கம் என்று சொல்லப்படுகின்ற காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம் மற்றும் மாச்சர்யம்  எளிதில் அழிந்து போகும். மேற்கண்ட உபாயத்தை சொன்னவர் ஸ்ரீ போரிகிலமண்ட வெங்கட ராஜா ரெட்டி அவர்கள். புத்தகங்களில் கற்றோ, பண்டிதர்கள் அல்லது குருக்களின் வார்த்தைகளைக் கடன் வாங்கியோ சொன்ன விஷயமல்ல அது. புண்ணியாத்மா திரு. B.V. ராஜா ரெட்டி அவர்கள், மற்ற பக்தர்களுக்கும் சேவகர்களுக்கும் தனது சொந்த அனுபவத்திலிருந்து எடுத்துச் சொல்லும் உயரிய சத்தியம் அது!

சனி, 3 டிசம்பர், 2022

பக்தர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

நடைமுறையில் தாங்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம்... அப்படி வாழ்ந்து கொண்டே பெரிதாக ஆடம்பர பூஜை செய்து, திருப்பதி உண்டியலில் பொன்னும் பொருளும் போட்டுவிட்டால் அதுவே பக்தி என்று நினைப்போர் நிறைய பேர் இருக்கிறார்கள்! ராச லீலா அனுபவம், தந்திர மார்க்கம் என்று சொல்லிக்கொண்டும் பக்தி என்ற பெயரில் தகாத காரியங்கள் செய்து கொண்டிருப்பவர்கள் இருக்கின்றனர்... இதெல்லாம் இறைவனுக்கு உகந்தவையே அல்ல! உண்மையில் ஏனைய மனிதர்களை விடவும் தன்னிடம் பக்தி கொண்டவர்கள் தான் தர்ம நெறிகளை அதிகக் கண்டிப்புடன் கடைபிடித்து வாழ வேண்டும் என இறைவன் விரும்புகிறான்! பக்தி இல்லாதோர் செய்யும் அதர்மங்களை கூடப்  பொறுத்துக் கொள்வான்... ஆனால் பக்தர்கள் அதர்மம் செய்தால் முளையிலேயே இறைவன் கிள்ளி எறிந்து விடுவான்! 

வியாழன், 1 டிசம்பர், 2022

பாபாவின் ஆசிகள் பெற்று அவர் பக்தரால் தயாரிக்கப்பட்ட உலகப்புகழ் "பர்னால்" ஆயின்மென்ட்!

என் வாழ்வே எனது செய்தி என்றார் பாபா. பின்னர், உங்கள் வாழ்வே எனது செய்தி எனக் கூறினார். அவரது பக்தர்கள் பாபாவின் நல் உபதேசங்களைக் கேட்டதுடன் நில்லாமல், அவர்களது வாழ்விலும் அவற்றைச் செயல் படுத்தவேண்டும் என்கிற நிதர்சனத்தை இது குறிக்கிறது.... 

ஓங்காரத்தில் அப்படி என்ன சிறப்பு? அதை ஏன் 21 முறை உச்சரிக்க வேண்டும்?

அசையாத ஒன்று அசையும் போது சப்தம் பிறக்கிறது! ஓம்கார சப்தத்தின் தனிப்பெருமை என்னவெனில்... அசையாத பிரம்மம் அதனுள்ளேயே தோன்றிய சங்கல்பத்தில் அசைந்தபோது ஏற்பட்ட முதல் சப்தம் அதுவே என்பது தான்! அதன் பின்பே , அதிலிருந்தே பிரபஞ்ச சிருஷ்டித்தான இதர இயக்கங்கள் தோன்றின... ஆகையால் பிரபஞ்சத்திலுள்ள ஜீவன் பிரம்மத்துக்குத் திரும்பவும் அதுவு நுழைவாயிலாக உள்ளது! அனைத்துப் படைப்புக்கும் அஸ்திவாரமான அதுவே ஜீவனின் விமோச்சனத்துக்கும் வழியாக உள்ளது!

புதன், 30 நவம்பர், 2022

பாபாவின் கால்பட்ட இடம் எல்லாம் பொங்கிப் பூத்த தேவலோக துளசிகள்!

இறைவன் பாபாவின் இளமைக்கால விளையாடல்கள் அவரின் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் போல் குதூகலம் தருபவை... அதில் ஒன்று மிக வியப்புடன் இதோ...

வெள்ளி, 25 நவம்பர், 2022

இறைவனிடத்தில் எங்களுக்கு எப்படிப்பட்ட நம்பிக்கை இருக்க வேண்டும்?

பெரிதாக ஜபதவங்கள் செய்ய வேண்டியதே இல்லை! தாயாரை ஒரு குழந்தை நம்புவது போல் மிகவும் எளிமையாக , அதே சமயம் திடமாக தெய்வத்தின் மேல் நம்பிக்கையும் விசுவாசமும் வைத்துவிட்டாலே போதும்... அந்த சிரத்தையே தெய்வத்தை உங்களிடம் நேராக வரவழைத்து விடும்! தவ யோகியருக்கும் முனிவருக்கும் அவ்வளவு விரைவாக அடைய முடியாத கண்ணன் ஆயர்குல பாலகர்களுடனே ஆடிப்பாடிக் கொண்டிருந்தான்! 

வியாழன், 24 நவம்பர், 2022

ஸ்ரீ மகரிஷி பிருகு பாபா | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

சித்த புருஷர் ஒருவர் பாபாவை எவ்வாறு உணர்கிறார்... அவர் பாபாவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் யாது? ஏன் சித்த புருஷர்களை பாபா தன் அருகே வரவிடுவதில்லை? பாபாவிடம் நாம் எதனை பிரார்த்தனை செய்ய வேண்டும்? போன்ற பல்வேறுவிதமான கேள்விகளுக்கு விடை தரவிருக்கும் சுவாரஸ்யமான பதிவு இதோ...

பாபா வகுத்து தந்த வழியில் தான் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அரசும் செயல்படுகிறது - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

 G.Kishan Reddy - Union Minister For Culture, Tourism And Development Of North Eastern Region (DoNER), Government of India | MP - Secunderabad

தனிப்பெரும் பரம்பொருளான பாபாவின் இறையாண்மை பற்றியும்... கனிந்த பெரும் கருணைக்கடவுளான சாயியின் தீரா திவ்ய தெய்வீகத்துவம் பற்றியும்... எவ்வாறு பாபாவின் தொலைநோக்கு பேரருள் சேவையை இந்திய மோடி அரசு படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகிறது என்பதை பாபாவின் 97 ஆவது அவதார ஜெயந்தி அன்று பிரசாந்தி நிலையத்திலேயே மத்திய அமைச்சர் சிலிர்க்கப் பேசிய பரவச உரை திகட்டா தமிழில் இதோ...

புதன், 23 நவம்பர், 2022

பாபாவின் பிறந்தநாள் அறிக்கை!

1966 ஆம் ஆண்டு தீபாவளிக்குப் பின்னர் பாபாவின் பிறந்த நாள் விரைந்து வந்தது. அவருடைய பிறந்த நாள் அறிக்கையாக கீழ்க்கண்டவாறு எழுதி, அதை சனாதன சாரதியில் வெளியிடும் படிபணித்தார்.

திங்கள், 21 நவம்பர், 2022

பகவான் பாபாவின் 70, 75, 80 மற்றும் 85வது பிறந்தநாள் விழாக்கள்!


எண்ண எண்ண இனிக்கும்... நினைக்க நினைக்க விழிநீர் தித்திப்பாக நனைக்கும்... இதோ வாசிக்க வாசிக்க பரவசப்படுத்தும்... அவதார வைபவ நாள் என்பது நமக்குள்ளே தெய்வீகத்தை நினைவுப்படுத்தும்... தங்கத்தேர் மட்டுமல்ல நம் உடம்பே இறைவன் பாபா நகரும் அங்கத்தேர் என்பதை ஆழமாய் உணர்த்தும் பிறந்தநாள் வைபவக் கொண்டாட்டப் பதிவு இதோ...

சனி, 19 நவம்பர், 2022

மகளிர் தினத்தை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?

இறைவன் ஸ்ரீ சத்யசாய் பாபா, சமுதாயத்தில் பெண்களின் முக்கிய பங்கை முழு உலகிற்கும் வலியுறுத்தும் வகையில் மகளிர் தின கொண்டாட்டங்களை துவக்கினார்.  வீட்டில் மரியாதை மற்றும் சரியான நடவடிக்கையை மீட்டெடுக்க பெண்களுக்கு சிறப்பு கடமை உள்ளது என்று அவர் வலியுறுத்துகிறார்.  பிரசாந்தி நிலையத்தில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.  சுவாமி கூறுவது... 

வியாழன், 17 நவம்பர், 2022

கிரகங்களா? கர்மாவா? எது எங்களை பாதிக்கிறது?

ஜோதிட சாஸ்திரப்படி கிரகங்கள் ஒரு ஜீவனின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகத் தோன்றினாலும்... உண்மையில் அந்த ஜீவனின் கர்மாப்படியே தான் அவனது வாழ்க்கை நடக்கிறது!

செவ்வாய், 15 நவம்பர், 2022

சித்திரத்தில் விசித்திரம் காட்டிய ஸ்ரீ சத்ய சாயி சின்மயன்!

பேரிறைவன் பாபா வேறு அவரின் திருவுருவப் படம் வேறு அல்ல என்பதை உணர்த்தும் உன்னதப் பதிவில் எங்கும் பாபா நிறைந்திருக்கிறார் எனும் பரம சத்தியத்தையும் பாடம் எடுக்கிறது இதோ... 


ஞாயிறு, 13 நவம்பர், 2022

இல்லங்களில் நடந்த அகண்ட பஜன் அகிலத்தின் அகண்ட பஜனாக பரவிய வரலாறு!

எழுபத்தேழாம் வயதில் எடுத்தடி வைக்கும் இளைமை மாறாத இனிமை.. அகண்ட பஜன்.சிறுவர் முதல் சீனியர் வரை பக்திச் சீரிசையை இசைக்கும் ஆரோஹணம். அகில உலகும் மேற்கொள்ளும் சங்கீத சன்மார்க்க வேள்வி. இரவும் பகலும், சூரியனும் சந்திரனும் பக்தியுடன் கேட்டு பகவான் திருப்பாதம் பணியும் அற்புத ஒருநாள் திருவிழா. அல்லாவும் ஏசுவும் ராம கிருஷ்ண தேவரும் புத்த மகாவீரும் ஒன்றாகக் கலந்த, எல்லை இல்லாத சாயி பரம்பொருளின் கீர்த்திதனை உளம் உருகிப் பாடும், உலகம் கொண்டாடும் ஒற்றுமைப் பெருவிழா.

சனி, 12 நவம்பர், 2022

பஜன் செய்வதற்கு நேரமில்லை என்று கூறாதீர்கள்!


நேரமில்லை எனச் சொல்வது தமோ குணத்தையே வலியுறுத்துகிறது... சோம்பல் ஆம்பலாய் பூத்துவருகிற போது சொல்கிற வாசகம் நேரமில்லை... நேர மேலாண்மையை கடைபிடிப்பதும் ஆன்மீக வாழ்க்கையில் ஒரு முக்கிய பாங்கு... அதை உள்ளுணர்த்தும் வகையில் இறைவன் பாபாவே வழிகாட்ட உறுதியோடு முன்மொழிகிறார் இதோ..‌.

செவ்வாய், 8 நவம்பர், 2022

இடர் பொறுத்த ஸ்ரீ சத்யசாயி இறைவன்!

இறைவன் பேரவதாரமாக இறங்கி வருகையில் மனித தேகத்தையே உடுத்திக் கொள்கிறார்.. அந்த தேகத்திற்கான எல்லா அசௌகர்யங்களையும் மனிதனைப் போல் அன்றி பேரவதாரங்கள் புலம்புவதோ, அலுத்துக் கொள்வதே, கலங்குவதோ இல்லை என்பதற்கான மிகப் பெரிய உதாரணம் உன்னதப் பதிவாக இதோ...!

எங்கள் உடைமைகளைப் பற்றி நீங்கள் சொல்லும் போது "Less Luggage More Comfort" என்று சொல்கிறீர்கள்... விளக்க முடியுமா?

உடைமைகள் நம்மை உலகத்துடனேயே கட்டிப் போடுபவை. அவற்றின் கனம் நம்மை அழுத்திக் கொண்டிருந்தால் நாம் எப்படி விண்ணுலகத்திற்குப் பறக்க முடியும்? 

வியாழன், 3 நவம்பர், 2022

கண்ணில் விழுந்த கல்லால் இழந்த பார்வையை மீட்டுத் தந்த விபூதி சுந்தர சுவாமி!

புறக்கண்களே உலகத்தின் சாவி... புறப்பார்வையே உலகத்தின் ஜன்னல்... அது பறிபோனால் உலகமே இருண்டு விடுகிறது... நுண்ணிய புலனாகிய கண்ணின் பார்வையை சுவாமி எவ்வாறு மீட்டளிக்கிறார் என்பதற்கான ஒரு நூதன மகிமை சுவாரஸ்யமாய் இதோ...! 

புதன், 2 நவம்பர், 2022

மரணத்தை நினைத்து பயப்படுகிறதே மனம், பிறர் மரணமடைந்தால் அழுது புலம்புகிறதே... மரணம் அமங்களமா?

இயற்கையின் தவிர்க்க முடியாத விதிகளில் ஒன்று மரணம்! அது நமது கர்மாவை அனுசரித்தே உடல் தர்மமாக அமைக்கப்பட்ட ஒன்று! தாவரங்களும் பிறந்து அழிகின்றன... பிறக்கும் எதுவும் இறக்கவே செய்யும்! இந்த நிலையற்ற உலகமும் ஒருநாள் அழியவே செய்யும்! ஆக்கல் அளித்தல் அழித்தலே பரமாத்மாவின் லீலை! இறைவனே ஆக்குவதும் அழிப்பதும் எற்பதால் அவனுக்கே அழிக்கவும் உரிமை உண்டு!

திங்கள், 31 அக்டோபர், 2022

பாபாவே நினைவுப்படுத்தி எழுத்தாளர் அனுராதா ரமணன் தொடர்ந்த ஸ்ரீ சத்யசாயி அந்தாதி!

நாடறிந்த நல்ல எழுத்தாளர் திருமதி அனுராதா ரமணனின் பாபா அனுபவங்களும்... அவர் பாபாவுக்காக பார்த்து பார்த்து எழுதிய ஆன்மீகப் படைப்பின் பின்னணியும் சுவாரஸ்யமாய் இதோ...!

வியாழன், 27 அக்டோபர், 2022

ஸ்ரீ ரத்னாகரம் கொண்டமராஜு | புண்ணியாத்மாக்கள்

பூர்ணாவதார ஸ்ரீ சத்யசாயி பாபாவாக, கடவுள்  இப்பூமியில் வந்திறங்கியபோது பல பவித்திரமான ஆத்மாக்களை தன்னோடு கொணர்ந்து தனது தெய்வீக நாடகத்தை அரங்கேற்றினார். அப்படிப்பட்ட பவித்ராத்மாக்களில் தனக்கென ஒரு விசேஷமான பாத்திரத்தைப் பெற்றவர் ஸ்ரீ ரத்னாகரம் கொண்டமராஜு அவர்கள். இறைவன் ஒரு அவதாரமாக பூமியில் இறங்கிவந்து வாழுகின்ற அதே காலகட்டத்தில், அவருக்கு சமகாலத்தவராக பிறப்பதென்பதே பல மனிதர்களுக்குக் கிடைக்காத பேரதிர்ஷ்டம். அதிலும் அவரது அவதாரப் பணியில் ஒரு கருவியாக செயல்பட்டு, இறுதியாக அவரது தெய்வீகத் தாமரைப் பாதங்களில் இணைவதை விட  மனிதப் பிறவிக்கு பெரிய பாக்கியம் வேறெதுவும் இருக்க முடியாது.

சாதாரணமாகவே எந்தவொரு பாட்டனாருக்கும் தனது  பேரனைக் கொஞ்சுவதென்பது மகிழ்ச்சியின் உச்ச அனுபவமாக இருக்கும். அதிலும் பரபிரம்மமே பால்மாறாக் குழந்தையாக தன் மடிமீது தவழ்வதென்பது தேவர்களுக்கும் கிட்டாத தெய்வீக அனுபவமல்லவா? அந்த வகையில் ஸ்ரீ கொண்டமராஜு எந்தவொரு சந்தேகத்திற்கும் இடமின்றி ஒரு மாபெரும் புண்ணியாத்மா ஆவார். 

கர்மாவினால் ஆன்மாவுக்குப் பிறவி ஏற்படுகிறது எனில் சிலருக்கு குறைந்த ஆயுள் எதற்காக?

ஒரு ஜீவனின் கர்மாவில் நல்லவை கெட்டவைகளைப் பல விதத்தில் கலந்து , ஒவ்வொரு விதமும் குறிப்பிட்ட ஒரு ஜென்மத்திலோ , பல ஜென்மத்திலோ கழியும் படியாக இறைவன் பிறவிகளைக் கொடுக்கிறான்! இப்படிக் கர்மா கழிய வேண்டுமானால் ஜீவன் புதிதாக பாவ கர்மாவை சேர்க்காமலும், புதுப் பிறவியில் செய்யும் புண்ணிய கர்மாவின் பலனை இறைவனுக்கு அர்ப்பணமாக தியாகம் செய்தும் வாழ வேண்டும்! இல்லாவிடில் பழைய பாக்கி தீரும்போதே புதுக் கர்மக்கடன் சேர ஆரம்பிக்கிறது!

புதன், 26 அக்டோபர், 2022

ஸ்ரீ மாதவானந்த சுவாமிஜி & ஸ்ரீ கோதாவரி மாதா | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

எவ்வாறு ஒரு மகான் பாபாவின் வழிகாட்டுதல்களைப் பெறுகிறார்... எவ்வாறு ஒரு மாதாஜி இரு பாபாவும் ஒருவரே என்பதனை உணர்கிறார்.. சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 25 அக்டோபர், 2022

இந்திய இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லலாமா?


நம் இளைஞரின் போக்கு மிகவும் விபரீதமாக இருக்கிறது. இறைவன், குரு, பெற்றோர், பெரியோர் ஆகியவர்களுக்கு
பணிந்து வாழ்ந்தால் அவமானம் எனக் கருதுகிறார்கள்! ஆனால் இவர்களே பிச்சைக்காரர்கள் ஆவதில் பெருமைப்படுகிறார்கள்! எப்படி என்று கேட்கிறீர்களா? 
பிச்சை எடுப்பவர்களை நாம் என்ன சொல்கிறோம்? ஆண்டிப் பரதேசிகள் என்கிறோம்! 
பரதேசி என்றால் என்ன?
வெளி நாட்டைச் சேர்ந்தவன் என்றே அர்த்தம்! தன் நாட்டிலேயே பிழைக்க கையால் ஆகாமல் வெளிநாட்டுக்கு சென்று யாசகம் வாங்கிப் பிழைப்பவனைப் பரதேசி என்றும் பிச்சைக்காரன் என்றும் அழைத்தார்கள்! அவன் படிக்காதவன், பணமில்லாதவன், ஏதோ பிடி அரிசி, ரொட்டித் துண்டு, பத்து ரூபாய் கேட்பவன்... அவ்வளவு தான்! 

புதன், 19 அக்டோபர், 2022

திருமாங்கல்யம் திருட வந்தவனை திடீரென ஓட்டம் எடுக்க வைத்த காவல் பாபா!

நீசர்கள் நிறைந்த சபையில், தனது மானம் காக்க ஆடையை இறுகப் பற்றியபடி, கிருஷ்ணா, மதுசூதனா, ஜனார்த்தனா எனக் கதறி அழுதாள் துரோபதி. உதவிக்கு வரவில்லை அந்த மாயக்கண்ணன். நிலைமை முற்றிவிட, தனது இரு கரத்தையும் மேலே கூப்பி இதயவாசி என அழைக்க, அந்த விநாடியே இளகிய கோவிந்தன்,  அவள் மானம் காத்து வஸ்த்திரத்தை வளரச் செய்தான். இறை வழிபாடு என்பது, நாமாவளியோ, தோத்திர உச்சரிப்போ அல்ல. அது பரிபூரண சரணாகதியின் வெளிப்பாடு.இதயத்திலிருந்து  தாங்க இயலாமல்  வெடித்துவரும் ஓலக்குரல்.

நாங்கள் செய்த நல்லதும் கெட்டதும் எவ்வாறு எங்களுக்கே திரும்புகின்றன?

விதையை ஊன்றிவிட்டு முளை வரக்கூடாதென்றால் எப்படி? நீங்கள் செய்த கர்மாவின் பலனுக்குத் தப்பிக்க இயலாது! 

செவ்வாய், 18 அக்டோபர், 2022

பக்தரின் கண்பார்வையை மீட்க பாபா செய்த விநோத சிகிச்சை!!


உலகில் பிணி தீர்க்க பல சிகிச்சை முறைகள் உண்டு. அலோபதி, யுனானி, ஆயுர்வேதா, ஹோமியோபதி, வர்மா, சித்தா, இன்னும் பலப்பல. ஆனால் நம் வைத்தியநாத பாபாவின் வழிமுறைகள் விசித்ரமானவை. அவரது அருட் பார்வைபட்டே ' கேன்சர்" கேன்சல் ஆனதையும், கரமசைவில் தோற்றுவிக்கும் விபூதி சர்வரோக நிவாரணியானதையும் அறியாதார் யார்?! இதைத் தவிர, சில சமயங்களில் அவர் வேறு பல விநோத வழி முறைகளை மேற்கொண்டு பலரது பிணிகளைத் தீர்த்ததும் உண்டு. அவற்றில் ஒன்றை நாம் இங்கு காண்போம்.

திங்கள், 17 அக்டோபர், 2022

ஸ்ரீ சிவப்பிரகாச ஆனந்தகிரி சுவாமிகள் | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

கலியுக பூர்ணாவதாரமான பாபாவை பற்றி ஞானிகளும் மகான்களும் சொன்னவை அநேகம்... அந்த வகையில் தஞ்சாவூர் சுவாமிகள் என அழைக்கப்பட்ட ஸ்ரீசிவபிரகாச ஆனந்தகிரி சுவாமிகள் பாபாவை பற்றி பகிர்ந்த சத்திய ஞான மொழிகள் பரவசமாய் இதோ...

சனி, 15 அக்டோபர், 2022

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் சாயி அனுபவங்கள்!

A.P.J. Abdul Kalam, (born Oct. 15, 1931, Rameswaram, India—died July 27, 2015, Shillong), Indian president (2002–07). After graduating from the Madras Institute of Technology, Kalam played a leading role in the development of India’s missile and nuclear weapons programs. 

சகிப்புத்தன்மையில் அவர் ஏசுபிரான் வழியைப் பின்பற்றினார், எளிமையில் புத்தர் வழியையும், அணுகுமுறையில் நபியையும், புத்தி கூர்மையில் ஆதிசங்கரரையும் பின்பற்றிய பாரத தேசத்தின் உயரிய அடையாளம் டாக்டர் APJ. அப்துல் கலாம் அவர்களின் பாபா அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ...