தலைப்பு

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

கன்னம் சிவந்த கண்ணன்!


(இளம் சாயி வாழ்விலிருந்து ஒரு சம்பவம்... சிறுவயதிலேயே கருணை, பொறுமை, குருபக்தி ஆகிய தெய்வீக குணங்கள் எவ்வாறு அவருடைய வாழ்வில் இயல்பாக வெளிப்பட்டன என்பதை உணர்த்தும் மறக்க முடியாத நிகழ்வு.)

பள்ளிக்கூடத்தில் சத்யா புத்திசாலி மாணவனாக இருந்ததால் ஆசிரியர் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னான். ஒருநாள், “இந்தியாவின் பெருமையை விவரி?’ என்ற கேள்வியைக் கேட்டார் ஆசிரியர். அதுவும் பதிலை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும்.
புக்கபட்டினம் மாணவர்களின் ஆங்கில அறிவு ரொம்ப குறைவு. அதுவும் இந்தியாவைப் பற்றிய அறிவோ மேலும் குறைவு.