தலைப்பு

சாயி அற்புதங்கள் (2011 பிறகு) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாயி அற்புதங்கள் (2011 பிறகு) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 ஜூன், 2023

சாயி பகவான் ஒவ்வொரு நொடியும் நம்மோடிருக்கிறார்!


ஏன் பாபா சமாதி அடையவில்லை என்று சொல்கிறோம்? காரணம்- பாபா நம் கூடவே இருக்கிறார்.. பேரிறைவன் எனும் சொல்லுக்குப் பொருள் என்ன? அந்தப் பொருளே ஸ்ரீ சத்ய சாயி எனும் பரம்பொருள்! அப்பொருள் ஒன்றே மெய்ப்பொருள்! அது நம் கூடவே இருக்கிற ஆன்மப் பொருள்! அதற்கான சாட்சியமாக ஓர் அற்புத சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 7 மார்ச், 2023

சனி, 28 ஆகஸ்ட், 2021

லக்ஷ்மணனுக்கு கீதை சொன்ன சாயி கிருஷ்ணர்!


இந்திய கிரிக்கெட் வானில்  V.V.S. லக்ஷ்மண் அவர்கள் ஒரு ஒளிவிடும் தாரகை. ஹைதராபாத் நகரத்தில் பிறந்த அவர் 1992ல்  கிரிக்கெட் விளையாட்டில் நுழைந்து 1996ல் டெஸ்ட் கிரிக்கெட்டராக பரிமளிக்கத் தொடங்கினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 281 ரன்கள் குவித்து பிரபலமானார். 2012ம் ஆண்டு கிரிக்கெட் ஆடுவதிலிருந்து ஓய்வு பெற்று, V.V.S.அறக்கட்டளையை நிறுவி  சமூக சேவை ஆற்றுகிறார். பாபாவின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமான இவர் பாபா எவ்வாறு தன் வாழ்வில் ஒளி விளக்காக வழி காட்டுகிறார் என்பதை பக்தியுடன் நினைவு கூறுகிறார்.

வியாழன், 22 அக்டோபர், 2020

ஒரு பக்தரின் தாயாரை குணமாக்க வேண்டிய அன்றே போஸ்ட்டில் வந்த சுவாமி விபூதி!


இறைவன் சத்ய சாயி பக்தர்கள் அநேகம். அதில் தன்னலமில்லா சேவாதளர் அநேகம் அநேகம். அதில் ஆத்மார்த்த பக்தரும்... தன்னலமில்லா சேவாதளருமான திருமதி கல்யாணி சாயிராம் அவரின் சாயி அனுபவம் இதோ...

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

சுவாமியை ஒருமுறை கூட தரிசிக்காத பக்தைக்கு ஏற்பட்ட அனுகிரகம்!


சுவாமியிடம் நாம் எதையும் வேண்டத் தேவையில்லை. அதற்கு ஒரே காரணம் நம் வேண்டுதல்கள் எண்ணமாகப் பிறக்கும் போதே அது சுவாமிக்கு தெரியும். ஆழமான பக்தியில் வெளிப்படும் இதயத்து வேண்டுதல்களை இமைப் பொழுதில் எப்படி நிறைவேற்றுகிறார் என்பதை உணர்த்தும் கடலான அனுபவங்களில் ஓர் துளி இதோ...

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

அவருக்கு அவரே உருவச் சிலை அமைத்த உண்மை சம்பவம்!


சிலை செய்யும் கல்லாகவும்.. அதை வடிக்கும் கையாகவும்.. வடித்தபின் அதன் கலையாகவும் திகழ்வது இறைவன் சத்ய சாயி ஒருவரே. இதோ ஓர் உன்னதமான சத்திய சம்பவம் எப்படி உயிரோட்டமான சிற்ப சரித்திரமானது என இதோ...

ஞாயிறு, 15 மார்ச், 2020

ஸ்ரீ சத்யசாயி செய்த மோட்டார் பைக் சவாரி | 2016 MIRACLE

மஹா சமாதிக்கு பிறகு பாபா நிகழ்த்தி வரும் அற்புதம் எனும் கடலிலிருந்து ஒரு துளி...

உதிக்கின்ற ஆதவன் மறையுமோ என்றும் அது...
விதிக்கின்ற பூமி சுழற்சியின் மாயமன்றோ...
மதிக்கொன்றை சூடும் சாயீசன்
மாள்வதுண்டோ மறைவதுண்டோ
 மனமே கூறு?

வியாழன், 16 ஜனவரி, 2020

பகவான் ஶ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் நமஸ்கார புகைப்படங்களின் பின்னணியில் உள்ளடங்கிய மாபெரும் திட்டம்!


ப்ரசாந்தி நிலையத்தில் ரேடியோ சாயி அலுவலகத்தில் பணிபுரியும் இளைஞர் திரு அரவிந்த் அவர்களது அருமையான குறிப்புகள். அவர் ப்ரசாந்தி நிலையத்தில் சுவாமி அவர்களின் புகைப்படங்கள் மற்றும் ஒளிப்படங்களை (வீடியோ) பதிவு செய்து வந்தவர். மேலும் அவர்தான் சுவாமி அவர்களின் நமஸ்காரம் செய்யும் திருக்கரங்களை, ஆம் நம் உள்ளங்களை உருக்கும் புகைப்படங்களை படம்பிடித்தவரும் ஆவார்.

இறைவனின் மாபெரும் திட்டம் ( Masterplan ):

2011-ம் வருடம் ஏப்ரல் மாதம்27-ம் தேதி கண்டுணர்ந்த உள்ளத்தை உருக்கும் புகைப்படங்கள் - அந்த நிகழ்வுகளை கண்டு ஆனந்தித்த உணர்வுகள் போன்று வேறெந்த நிகழ்வும் இந்த பூமியில் நிகழவில்லை.

வியாழன், 19 டிசம்பர், 2019

ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் சமாதிக்கு பின்னர் நடந்த அற்புதம்!

கொல்கத்தாவில் பிரபல நரம்பியல் டாக்டராக இருந்த Dr. D. P பானர்ஜி அவர்களின் அனுபவப் பக்கங்களிலிருந்து..

டாக்டர் D.P பானர்ஜியும் அவரது துணைவியாரும் பிராசாந்தியிலே வாழ வேண்டுமென, 2008ல் அக்டோபரில் வந்து சேர்ந்தனர். திருமதி.ஷோபா பானர்ஜி இறைவனின்(சாயியின்) அருளுக்குள், ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே வந்தவள். இதயபூர்வமான இந்த பந்தம், வளர்ச்சி அடைந்து, ஆண்டாண்டுகளாக உறுதிப்பட்டுள்ளது. அவளது கனவில் ஸ்வாமி அடிக்கடி வருவார்; ஆனால் மற்றவர்களுக்கான நலனுக்காகவே  அது  நடந்தது. ஸ்வாமியின் கருவியாக அவள் செயல்பட்டமைக்கு மிகுந்த ஆசி பெற்ற ஒருவள், அவள்!! மிகுந்த தெய்வீக மாகவும், மனித நேயத்தோடும் சேவையை செய்து வந்தாள்.

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

பகவான் முன்கூட்டியே காட்டிய அடையாளம்!


கூடலூர் சமிதியைச் சேர்ந்த திரு. ஜோகையா லிங்கராஜ் அவர்களின் அனுபவம்.

 2011ஆம் ஆண்டு ஒருநாள் பகவானின் திருஉருவப் படத்திற்கு சாத்தியுள்ள மாலை சத்தத்துடன் வெடித்து, சிறு துண்டுகளாக சிதறி, அந்த துண்டுகள் கீழே விழாமல் மேலே மேலே போய், கடைசியில் ஒரு விநாயகர் படத்திற்கு மாலை ஆகிவிட்டது. பயந்து அதிர்ச்சி அடைந்துவிட்டேன். அந்த அதிர்ச்சியில்

ஞாயிறு, 9 ஜூன், 2019

சமீபத்தில் பாபா சிங்கப்பூரில் ஒரு அன்பர் வீட்டில் நிகழ்த்திய அற்புதம்!


சாய்ராம் நான் ஓசூரிலிருந்து K. P. கிருஷ்ணமூர்த்தி(கிச்சு வாத்தியார்) எழுதுகின்றேன். சமீபத்தில் சுவாமி ஒரு அற்புதத்தை சிங்கப்பூரில் உள்ள ஒரு சாயி அன்பர் வீட்டில் நிகழ்த்தியுள்ளார். என் மகள் குடும்பம் கடந்த 13 வருடங்களாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார்கள் என்று உங்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் மூலமாக இந்த அற்புதம் என் காதுகளுக்கு எட்டியது. அதை நம் ஓசூர் சாயி அன்பர்களுக்கு பகிரலாம் என்று இதை எழுதுகின்றேன்.

புதன், 24 ஏப்ரல், 2019

ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திற்கு பிறப்பு இறப்பு என்பதே இல்லை! - திரு. கல்கி ராஜேந்திரன்


பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற அற்புதப் படைப்புகளை படைத்த காலம்சென்ற திரு. கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஒரே மகனான திரு. கல்கி ராஜேந்திரன் அவர்கள் முன்பு பகிர்ந்த சத்ய சாயி அனுபவங்கள்....

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

தூய மனதுடன் அழைத்தால் சாயி பகவான் எங்கும் வருவார்!


சாயிராம். பகவானின் தாமரைப் பாதங்களில் பணிவான வணக்கங்கள்!

இன்று (15.04.2019) எனது இல்லத்திற்கு பகவான் ஒரு பிச்சைக்காரர் (இப்பதத்தை பயன்படுத்துவதற்கு மன்னிக்கவும்) வடிவத்தில் நேரில் வருகை புரிந்தார். ஃபிரான்சின் உஸைன்ஸ் சென்டரில் வீட்டிற்குத்  தேவையான