தலைப்பு

புதன், 30 அக்டோபர், 2019

கடவுள் எல்லா எல்லைகளுக்கும் அப்பாற்பட்டவர் -நிஷாந்த் வர்மா

நாம் ஒவ்வொரு நாளையும், அன்பினால் தொடங்குவோம், 
அன்பினால் நிரப்புவோம், 
அன்பினால் செலவிடுவோம், 
அன்பினால் முடிப்போம்,
இதுவே, இறைவனை அடையும் வழி. -பாபா

அதாவது வாழ்வின் ஒவ்வொரு தருணமும் அன்பால் நிரப்பப்பட வேண்டும்.  இறைவனை அடைய அது ஒன்றே வழியாகும். சுவாமி கூறுகிறார், "என் வாழ்க்கையே எனது செய்தி" சுவாமியின் செய்தி அன்புதான்! சுவாமி தனது மாணவர்கள் அன்பால் நிரப்பப்பட வேண்டும் என விரும்புகிறார்.

செவ்வாய், 29 அக்டோபர், 2019

வெனிசுலா நாட்டு துணை அதிபரின் புட்டப்பர்த்தி வருகை!


வெனிசுலா நாட்டின் துணை ஜனாதிபதி- திருமதி. டெல்சி ரோட்ரிக்ஸ் பிரசாந்திக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். புட்டபர்த்தி விமான நிலையத்திற்கு, ஒரு சிறப்பு விமானத்தில் இன்று(29-10-2019) வந்து இறங்கினார்.  ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் அறங்காவலர் ஸ்ரீ ரத்னக்கர் அவருக்கு பெரும் வரவேற்பு அளித்தார். தன்னுடைய நாட்டிற்கு பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா பரிபூரண ஆசிர்வாதம் வழங்க வேண்டி பிரார்த்தனை செய்ய துணை அதிபர் - திருமதி. டெல்சி ரோட்ரிக்ஸ் புட்டபர்த்திக்கு வருகை புரிந்துள்ளார்.

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

கர்ம வினை என்றால் என்ன?


 உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு.

       ஆனால் எதோ ஒரு குறிப்பிட்ட நபர் நமக்கு துணைவராக அல்லது துணைவியாக
அமைவது ஏன் ?

    நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும்
ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்.

சனி, 26 அக்டோபர், 2019

கோவையை சேர்ந்த லாரி டிரைவர் சண்முகத்தின் அனுபவங்கள்


கோவையின் ஒரு பகுதியான குனியமுத்தூருக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தார் சண்முகம். அவர் ஒரு லாரி டிரைவர், ஒரு நாள் அவருக்கு நெஞ்சு வலித்தது. அதற்கு முன்னாலேயே சிறுது தூரம் நடந்தால் மூச்சு திணறியது. இதெல்லாம் பார்த்து ராமகிருஷ்ண மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பரிசோதனைகள் செய்து விட்டு ரத்த குழாய்களில் அடைப்பு இருக்கிறது என்றும், அவை சரி செய்யா விட்டால் உயிருக்கே

செவ்வாய், 22 அக்டோபர், 2019

காஞ்சிபுரம் S.M சில்க்ஸ் நிறுவனர் திரு. மனோகரன் அவர்களின் அனுபவங்கள்.


சுவாமியின் நீண்டநாள் பக்தரும் புகழ்பெற்ற S. M. சில்க்ஸ் நிறுவனருமான சாய் சகோதரர் திரு மனோகரன் அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்! 

திங்கள், 21 அக்டோபர், 2019

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 1 | உயிர் தந்த உத்தமன் (பாகம் - 2)


அன்று... 1990 நவம்பர் 19ஆம் தேதி, சுவாமியின் பிறந்தநாள் நெருக்கத்திலிருந்தது. எப்போதும் பிள்ளைகளை விட்டுவிட்டுப் பஜனுக்கு போகிறோமே இந்த முறை சுவாமி பிறந்தநாளுக்கு பஜன் சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் இருப்பதால் பிள்ளைகளையும் அழைத்து போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் கண்வலி வந்திருந்ததால் கண்கள் திறக்க முடியாமல் வீங்கிப் போயிருந்தன. அது அந்திநேரம். வலியிலும் அசதியிலும் படுத்து தூங்கவேண்டும் போலிருந்தது.

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 1 | உயிர் தந்த உத்தமன் (பாகம் - 1)


ஆஸ்திரேலியாவில் வாழும் திருமதி. வசந்திசிவநாதன் அவர்களின் அனுபவங்கள்:

காவலுக்கு வந்தவன் நான்
கருணையே எந்தன் பண்பு
சேவகம் செய்யத்தானே
ஜெகமீதில் வந்தேன் நானே
மேவிடும் புண்ணியத்தால்
மேதினியில் வாழும்
உங்கள்
பூவுலக வாழ்வோ
டென்வாழ்வு பொன்னாகச்
சேர்ந்ததிங்கே !

ஆஸ்திரேலியாவிற்கு வந்த பிறகு சத்யசாயி மையங்களிலும் பஜனைகளிலும் எனக்கு அறிமுகமான ஒரு சில சாயி குடும்பத்தினரில் வசந்தி சிவநாதன் தம்பதி முக்கியமானவர்கள். ஏறக்குறைய 15 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வரும் சாயி குடும்பத்தினர், தமிழ் குடும்பத்தினர்; பிரிஸ்பேனில் ' ட்யூரக்' பகுதியில் இருக்கும்

அக் 20 - அவதார பிரகடன தினம்


1940-ம் ஆண்டு அக்டோபர் இருபதாம் தேதி.. சத்யா தனது அண்ணன் வீட்டில் புத்தகப் பையை வீசி எறிந்துவிட்டு, "என் பக்தர்கள் என்னை அழைக்கின்றனர். நான் செய்ய வேண்டிய பணிகள் காத்திருக்கின்றன" என்றார். இந்த வார்த்தைகளை அவர் கூறுகையில், அவரது தலையை சுற்றி கண்களை குருடாக்கும் ஓர் ஒளி வட்டம் தோன்றியது.நேராக அவரது பக்தர் ஒருவரின் வீட்டுத் தோட்டத்திற்கு சென்றார். மரங்களின் கீழே இருந்த ஒரு பாறைமீது அமர்ந்து கொண்டார். எல்லா திசைகளிலிருந்தும் பக்தர்கள் மலர்களும், பழங்களும் கொண்டுவந்து குவித்தனர். பாபாவின் முதல் உபதேசம் அங்குதான் ஆரம்பித்தது.

வெள்ளி, 18 அக்டோபர், 2019

பக்தர் கேட்டவை பாபா அருளியவை -5


ஹிஸ்லாப்: சுவாமியின் உபதேசங்களில், எது அவற்றின் சூட்சுமமான சூத்திரமாக கருதப்படலாம்? அந்த சூட்சுமமான சூத்திரத்தைப் சுற்றி அதை அடைவதற்கான வழிகளில் என்ன சாதனா செய்ய வேண்டும்?

பாபா: சுவாமியின் உபதேசங்களில் சூஷ்ம சூத்திரம் அன்பே ஆகும். இந்த குறிக்கோளை சுற்றிய வட்டமாக, அதை அடைவதற்கான வழிமுறைகளாக, ஆன்மீக சாதனைகளான, தியானம், இறைவனின் நாம ஜபம்,

வியாழன், 17 அக்டோபர், 2019

சுவாமி காட்டும் சாதனா மார்க்கம் - ரா. கணபதி


பரமஹம்ச ராமகிருஷ்ணர், ஷிர்டி பாபா, ஸ்ரீ காஞ்சி பெரியவர் போலவே நம் ஸ்வாமியும் குறிப்பிட்ட ஒரு சாதனையை மட்டும் மோக்ஷ மார்க்கமாக விதிக்காமல், அவரவர் பக்குவமறிந்து, அதற்கேற்றதொரு வழியைக் கூறுபவர்தான். (தம்மையே பின்பற்றுபவரைப் பொறுத்தமட்டில் ஆத்ம விசாரம் ஒன்றையே வலியுறுத்திய ரமண மஹரிஷிகளும், மற்ற மார்க்கங்களில் உள்ளவர்களை அவரவரது சாதனையில்தான் ஊக்கினார்.)

புதன், 16 அக்டோபர், 2019

கர்மா என்றால் என்ன? - சுவாமி கூறிய அற்புதமான கதை


ஒரு அரசன் தனது ராஜ்யத்தை, யானை மீது அமர்ந்த வண்ணம் சுற்றி வந்தான். சந்தையில் வந்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு கடையின் முன்பு நின்று தனது மந்திரியிடம், "ஏனோ தெரியவில்லை, இந்த கடையின் சொந்தக்காரனை தூக்கிலிட வேண்டுமென தோன்றுகிறது" என்றான். 'ஏன்' என்று மந்திரி  கேட்பதற்கு முன்பாக அரசன் கடையை விட்டு நகர்ந்து செல்ல ஆரம்பித்துவிட்டான்.

செவ்வாய், 15 அக்டோபர், 2019

நானும் உன் குருவாயூர் கிருஷ்ணனும் ஒன்றே!

திரு கவலம் ஶ்ரீ குமாா் அவர்களின் அனுபவங்கள் 

திரு கவலம் ஶ்ரீ குமாா் ஒரு பாடகா். இவா் கேரள நாட்டினில் புகழ்படைத்த பாடகா் ஆவாா்.ஒயிட் பீல்டு பிருந்தாவனில் ஸ்வாமியின் முன்னா்"ஜகதோதாரண" என்னும் பாடலை இவா் பாடினாா்.

திங்கள், 14 அக்டோபர், 2019

நன்றி மறப்பது நன்றன்று - திரு. ரிச்சர்ட் மோஹன்


தமிழ்நாடு மாநில, ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்களுக்கு வருடத்தில் மூன்று முறை பிரசாந்தி சேவை வாய்ப்பு வழங்கப்படுகிறது. மார்ச் மாதம் 15 நாட்கள், மே மாதம் 15 நாட்கள் மற்றும் அக்-நவ மாதம் 30 நாட்கள். மார்ச், மே மாதங்களில் குறைந்தது 7 நாட்களும், அக்-நவ மாதங்களில் குறைந்து 10 நாட்களும் சேவையில் கலந்து கொள்ளலாம். பிரசாந்தி நிலைய

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

திரு. ஹரிஹர கிருஷ்ணன் அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்!


திரு. ஹரிஹர கிருஷ்ணன் அவர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்... ஏன் ஒவ்வொரு சிக்கலான கட்டத்திலும்.. பகவான் கூடவே இருந்து அவர்களுக்கு அருள்பாலித்த தோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு நல்ல பாடங்களையும் கற்பித்திருக்கிறார். இவரின் ஒவ்வொரு அனுபவமும் கேட்பதற்கு மிகவும் ஆச்சரியமாகவும்.. ஆனந்தமாகவும் இருக்கும். 

சனி, 12 அக்டோபர், 2019

பணத்தின் அளவு vs பணத்தின் தரம் - ஸ்ரீ சத்ய சாயுடன் பேராசிரியர். சுதிர் பாஸ்கரின் அனுபவங்கள்


ஒருநாள் சுவாமி பேராசிரியர் சுதிர் பாஸ்கரிடம் "நீ எவ்வளவு சம்பளம் வாங்குகிறாய்?" என்று கேட்டார். என்ன பதில் சொல்வதென்று குழப்பமடைந்து ஐயா அமைதியாக இருந்தார். சுவாமி மீண்டும் அவரை பார்த்து "உன்னுடைய வேலை நீ வாங்கும் சம்பளத்திற்கு ஈடானதா?" என்று கேட்டார். திரும்பவும் ஐயா மௌனமானார். சுவாமி அதை அங்கேயே விட்டு விட்டு நகர்ந்தார்.

வெள்ளி, 11 அக்டோபர், 2019

பேதம் நீங்கி போதம் பெற்ற அபேதானந்தர்!


திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமண மகரிஷியின் நெடுநாளைய பக்தரான சுவாமி அபேதானந்தர் அவர்களின் சத்ய சாயி அனுபவங்கள்... 

சீடன் தயார் நிலைக்கு வந்தவுடன் அவனுக்கு ஒரு குரு தோன்றி விடுகிறார் என்று சொல்லப்படுகிறது. பகவான் ரமண மகரிஷியின் நெடுநாளைய பக்தர், சுவாமி அபேதானந்தர் அவர்கள், ஆன்மீகத்தில் சிக்கிக்கொண்டு விடுவித்துக் கொள்ள முடியாமல் குழப்பத்தில் தவித்து, பகவானை பிரார்த்தித்து, பேராசிரியர் கஸ்தூரி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

வியாழன், 10 அக்டோபர், 2019

பகவானை பிரார்த்தனை செய்து வேண்டுவதை பெறுங்கள்! - ஒரு அழகான சிறப்பான சம்பவம்


மும்பையில் சாயி நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு தீவிர பக்தர் தன் மகன்,  மற்றும் பேரனுடன் ஆஷாட ஏகாதசி அன்று புட்டபா்த்திக்கு வந்திருந்தாா். தரிசனத்திற்காக, அவர்கள் சாயி குல்வந்த் ஹாலில் காத்துக் கொண்டிருந்தனர். அவருக்குப் பின்னால் எட்டு வயதான அவரது பேரன் உட்கார்ந்திருந்தான். தரிசனம் அளித்த பிறகு, சுவாமி தனது இருக்கையில் அமர்ந்து மகராஷ்டிரா பாலவிகாஸ் குழந்தைகளின் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த விழா முடிந்த பின் சுவாமி ஒரு பக்தரை அழைத்துக்கொண்டு நேர்காணல் அறைக்குச் சென்றார். அதற்குள்,  இந்த

செவ்வாய், 8 அக்டோபர், 2019

திரு. சிதம்பர கிருஷ்ணன் அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்


திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பழம்பெரும் சாயி பக்தர் திரு. சிதம்பர கிருஷ்ணன் அவர்களின் மெய்சிலிர்க்கும் சாயி அனுபவங்கள்.

 மொத்தம் 6 பாகங்கள்



நன்றி: ரேடியோ சாய் தமிழ் 

திங்கள், 7 அக்டோபர், 2019

குழந்தைகளின் கரங்களில் ஓர் நிமிடத்தில் உதயமான லட்டுக்கள்!


இறைவன் சத்ய சாயி எனும் பிரபஞ்ச மாதா தன் குழந்தைகளுக்கு ஓர் நொடியில் வாரி வழங்கிய ஓர் இனிப்பான பரவச அனுபவம். இப்படித் தான் ஒரே நேரத்தில் இந்த பூமி எனும் லட்டுவை அனைத்து ஜீவராசிகளுக்கும் சமமாய் அளித்திருக்கும்  ஒப்பற்ற ஒரே இறைவன் சத்ய சாயி.. 

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

துக்கமதை தீாத்திட்ட சாயி துா்க்கை!


பெங்களூா் ஒயிட்பீல்டு ப்ருந்தாவன் வளாக கல்லூரியில் சிங்கப்பூரை சோ்ந்த மாணவன் படித்துக்கொண்டிருந்தான். பகவான் அப்போது  ப்ருந்தாவனத்தில் இருந்தாா். காலைப் பொழுது தரிசன நேரம் அளிக்க அன்பிற்கினிய எம்பெருமான் இதோ புறப்பட்டாயிற்று. மழை நீரை மட்டுமே பருகுகின்ற சகோர பட்சியினைப் போல் பகவந்தனின் மாதுா்யம் கலந்திட்ட உருவத்தினை கணமேணும் விடாது தரிசன நோ்த்தியை பருகிட அத்தனை பேரும் அண்ணலின் திசை நோக்கி முகம் திருப்பியிருந்தனா். எங்கும்

வெள்ளி, 4 அக்டோபர், 2019

🌞 பிரசாந்தி நிலையம் முழுமையாக சூரிய மின் சக்தியால் இயங்குகிறது!


பசுமை சூழல் நோக்கிய பயணத்தையும், மாசு நீக்கத்திற்கும் உதவியாக, பிரசாந்தி நிலையம் தற்போது, மாற்று எரிபொருள் வகையை சார்ந்த, சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் (Solar power plant) மூலம் அனைத்து மின்
சாதனங்களையும் செயல்படுத்துகிறது.

🎶 பிரபல TOP 12 அம்பாள் தமிழ் சாயி பஜனைப்பாடல்கள்


இக்கலியில் இறை நாம சங்கீர்த்தனம் ஒன்றே கடைத்தேற வழி என்பது நாம் அறிந்ததே. நம்மை கடைத்தேற்றுவதற்காகவே அவதரித்த பகவான், நமக்காக வழங்கிய அற்புதமான பாதையே சாயி பஜன். இந்தப்பதிவில் தேன்சிந்தும் பிரபல டாப் 12 அம்பாள் சாயி பஜனை பாடல்களை  கேட்டு மகிழுங்கள்.

புதன், 2 அக்டோபர், 2019

அனைத்தும் அறிந்திட்ட அன்னையாம் சாயி!


பல ஆண்டுகளுக்கு முன்னா் பகவான் ஶ்ரீ சத்ய சாயி பாபா அவா்கள் சென்னைக்கு விஜயம் செய்தாா். அங்கு நடந்த பல்வேறு நிகழ்சிகளில் பங்கு கொண்டாா். ஒரு நாள் மாலை நேரத்தில் சென்னையில் உள்ள S.A.P கல்யாண மண்டபத்தில் உரை நிகழ்த்த இருந்தார்.  ஆயிரக்கணக்கான ஆர்வமுள்ள பக்தர்கள் அவரின் தெய்வீக அருளுரையை கேட்கவும், அவரின் தரிசனத்தை பெறவும் ஆர்வமாக கூடியிருந்தார்கள். சுவாமியின் தெய்வீக வடிவத்தை கண்டது அவர்களை ஆனந்தத்தில்  ஆழ்த்தியது. சுவாமி,

யக்ஞங்களில் திரவியங்களை கொட்டி வீணாக்கலாமா?


 யக்ஞங்களில் திரவியங்களை கொட்டி வீணாக்கலாமா?
நவீன அறிவாளிகளுக்கு பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் பதில்!


1962ல் இருந்து பிரசாந்தி நிலையத்தில் தசரா சமயத்தில் 7 நாட்கள் தினத்தோறும் ‘வேத புருஷ சப்தாஹ ஞான யக்ஞம்’ பகவானின் தெய்வீக வழிகாட்டுதலுடன் துவங்கி இன்று வரை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.