தலைப்பு

வெள்ளி, 24 மார்ச், 2023

அனைத்தையும் படைத்தவன் இறைவன் என்கிற போது.. சுகங்களை மட்டும் படைத்தால் போதாதா? ஏன் துக்கங்களை படைக்க வேண்டும்?

துக்கமில்லாமல் சுகம் இல்லை! 

"ந சுகாத் லப்யதே சுகம்"

சுகத்திலிருந்து சுகம் வராது! 

துக்கத்தை அனுபவித்தால் தான் சுகத்தை உணர முடியும்! 

சுகத்தின் மதிப்பை துக்கத்தை அனுபவித்தால் அன்றி அறிய மாட்டீர்கள்!

புதன், 22 மார்ச், 2023

இதய நோய் /நீரிழிவு தவிர்க்க பாபா கூறும் அற்புத வழிமுறைகள்!

இணை பிரியாத் தோழர்கள் கூட நம் இறுதிவரை உடன் இருப்பதில்லை. ஆனால் இணை நோய்களாய் உருவெடுக்கும் இருதய நோயும், நீரிழிவு நோயும்  வயதுவேறுபாடின்றி, அகில உலகத்திலும்  பல்கிப் பெருகி , நம் இறுதிவரை இணை பிரியாமல் இருக்கும் கால கட்டம் இது. இதற்கு மருத்துவ விஞ்ஞானம் கூறும் காரணங்களையும்   பகவான் பாபா அவர்களின்  அற்புத வழிகாட்டுதல் களையும்  இந்தப் பதிவில் கண்டு பயனடைவோம்...

செவ்வாய், 21 மார்ச், 2023

குகை மகான்கள் ஒரே சுதியில் தெரிவித்த ஒரே ஆச்சர்ய வார்த்தை...!

குகையில் தவம் இயற்றி வரும் வெவ்வேறு யோக சாதனை முறை மகான்களிடம் இறைவன் ஸ்ரீ சத்யசாயி பற்றி கருத்து கேட்டபோது அவர்கள் சொன்ன ஒரே பதில் மனித குலத்திற்கு ஆச்சர்யம் தரக்கூடிய... அந்த அற்புத சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...

சுவாமி! உங்கள் மேல் உள்ள பக்தியில் எங்களை விட வெளிநாட்டவர்களே அதிகமாக ஈடுபடுவதாக உணர்கிறோம்! காரணம் என்ன?

பக்தரகளின் அனுபவம் அவர்களது தீவிரத்தை பொறுத்தே அமைகிறது! அனைத்தும் உங்களது விஸ்வாசத்தின் மீதுதான் நிலை கொண்டுள்ளது! அருகாமையில் இருப்பதால் ஒன்றின் மதிப்பு உடனே தெரிவதில்லை! 

சனி, 18 மார்ச், 2023

ஜாதி பேதங்களை வென்ற ஒரு சாயி பக்தரின் பிராமண தந்தை!

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலேயே! அது நல்லவராவது தந்தையிடம் கற்கையிலே என்றவாறு எவ்வாறு ஒரு சாயி பக்தருக்கு அவரது தந்தை ஞானப்பாதை காட்டினார்... ? ஆச்சர்ய அனுபவங்கள் ஆரமாய் இதோ...! 

ஆன்மீகத்தில் கர்மநெறி, பக்தி நெறி, ஞான நெறி என மூன்று வழிகள் உள்ளன... இவற்றை எவ்வாறு புரிந்து கொள்வது?

உங்களிடம் Wrist Watch இருக்கும்! அதை கூர்ந்து கவனியுங்கள்! ஒன்று விநாடியையும், மற்றொன்று நிமிடத்தையும், மூன்றாவது மணியையும் குறிக்கும்! 

விநாடி முள்ளின் 60 முறை நகர்வே நிமிட முள்ளின் ஒரு நகர்வு! 

வெள்ளி, 17 மார்ச், 2023

பாபா யார் என்றே அறியாத ஒரு பாக்கிஸ்தானிய கிறிஸ்துவ சமையற்காரரை தேடி வந்த பாபா!!

தோற்றம் பார்த்து யாரையும் எடைபோடக் கூடாது என்பதற்கான உதாரண சம்பவம் இது... அதிலும் இறைவன் பாபா தோற்றம் வைத்தல்ல உள்ளம் வைத்தே மனிதரிடம் நெருங்கி வருகிறார் எனும் சத்தியம் உணர்த்தும் சுவாரஸ்யப் பதிவு இதோ....

வியாழன், 16 மார்ச், 2023

இமய யோகி ஸ்ரீ டாட் வாலே பாபா | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

எவ்வாறு தங்களது பக்தர் வழி இறைவன் பாபா தன்னை யார் என்று இமய யோகி வழி அகில உலகமே உணரும் வகையில் நிகழ்ந்த அற்புத சம்பவம் மெய்சிலிர்க்கும் வண்ணம் சுவாரஸ்யமாக இதோ...

சுவாமி! பக்தி வருவதற்கு நம்பிக்கை மிகவும் முக்கியமானதல்லவா...? அந்த நம்பிக்கை வருவதற்கு என்ன வழி?

நம்பிக்கை என்பது வருவதாவது!? இதென்ன கடையிலா கிடைக்கும்? யாரோ கொடுத்து நீங்கள் எடுத்துக் கொள்வது அல்ல...நம்பிக்கை உங்கள் அடிப்படை குணம்! "விசுவாசமே உங்கள் சுவாசம்"! தெய்வ நம்பிக்கையே உங்கள் உயிர்நாடி! அது இல்லை என்றால் உங்களுக்கு மூச்சே இல்லை என்று கூறலாம்! ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் ! 

புதன், 15 மார்ச், 2023

1000 அடி யமுனோத்ரி பள்ளத்தாக்கில் விழப்போன யோகி ஓம்குரு!

ஆன்மீக சாதகராக இமாலயத்தில் தெய்வீக யாத்திரை புரிந்த ஒருவரை இறைவன் பாபா எவ்வாறு காப்பாற்றினார் எனும் ஓர் ஆச்சர்ய மகிமா சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 14 மார்ச், 2023

விபூதி மறுத்த வைஷ்ணவ பெண்மணி - வீடு தேடிவந்து பூசிவிட்ட பாபா- பஹ்ரன் பரவச அனுபவம்!

தீரமாக இறைவன் பாபா மற்றும் அவரது பஜனை - விபூதி பிரசாதம் இவற்றை நம்ப மறுத்த ஒரு முதிர் பெண்மணிக்கு பாபாவே நேரடியாக அவர் வீட்டிற்கு சென்று செய்த அற்புதம் பரவசமாக இதோ‌...

திங்கள், 13 மார்ச், 2023

"அன்புள்ள பக்தனே...‌ அருள் தரும் ஓர் கடிதம்!" -பாபாவின் அதிசய கடிதங்கள்

இறைவன் பாபா தனது பக்தர்களுக்கு எழுதிய அதிசய கடிதங்களில் பேரன்பு சொட்டும் விதத்தையும் படித்து பரவசம் பெறப் போகிறோம் இதோ...

மகாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவ ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் பல குறுக்கு வழிகளை கையாள வேண்டும்?

இறைவனிடம் குறை என்பதே இல்லை! இறைவனிடம் குறைகளை காண விளைவது மகா பாவம்! இதை விட பெரிய குற்றம் எதுவும் இல்லை! 

தலைமுதல் கால் வரை இறைவன் எந்தவித சுயநலமும் இன்றி பரிசுத்தமான பேரன்புடன் , உலக நன்மையை மட்டுமே கருதி அனைத்தையும் நிர்வகிக்கிறான்! 

ஞாயிறு, 12 மார்ச், 2023

முன்பின் தெரியாத இருவரை தம்பதியாக்கிய தெய்வ சாயி!


சுவாமி தன் சந்நதியில் தன் தெய்வீக சாந்நியத்தில் அவரவர் திருமண முறைப்படி தன் கையால் சிருஷ்டி செய்து திருமாங்கல்யம் வரவழைத்து நிறைய திருமணங்களை நடத்தி வைத்து இருக்கிறார் என்ற மகிழ்வான விஷயம் அனைவரும் அறிந்த ஒன்றே.  ஆனால்  பெற்றோருக்கே தெரியாமல் முன்பின் தெரியாத  இருவரை தம்பதியாக இணைத்த விசித்திரமே வியக்கும் விசித்திர தெய்வீக நிகழ்வு இதோ...

புதன், 8 மார்ச், 2023

செவ்வாய், 7 மார்ச், 2023

திங்கள், 6 மார்ச், 2023

மொரிஷியஸ் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரின் புட்டபர்த்தி தரிசனம்!

மதிப்பிற்குரிய ஒரு வெளிநாட்டு முக்கிய மந்திரி பாபாவின் மேல் எத்தனை அளவுக்கு நன்றியுணர்வோடு இருக்கிறார் என்பதை நமக்கு ஒரு பாடமாக விவரிக்கும் சுவாரஸ்ய பதிவு இதோ...

சுவாமி! நீங்கள் சிருஷ்டித்த (படைத்த) அனைத்தும் நல்லவையே என்கிறபோது தீய செயல்கள் எதிலிருந்து உருவாகின்றன?

சிருஷ்டி அனைத்தும் நல்லவையே! சிருஷ்டியில் தீயவை என்பது கிடையவே கிடையாது! கால மாற்றத்தினால் உங்களுக்கு நல்லவை தீயவை எனத் தோன்றுகின்றன!

இன்று நன்றாக இருக்கும் பழம் நாளையே அது உங்களால் ஜீரணிக்கப்பட்டு மலமாக மாறுகிறது! 

சனி, 4 மார்ச், 2023

ஸ்ரீ பிரேம சாயி பாதமாய் உருமாறிய ஸ்ரீ சத்ய சாயி பாதம்!

எவ்வாறு ஒரு ஆத்மார்த்த பக்தருக்கு அரிதிலும் அரிதான விந்தையான ஒரு அற்புதத்தை இறைவன் பாபா வழங்குகிறார் என்பதைக் குறித்த சுவாரஸ்ய பதிவு இதோ‌...

சுவாமி! ஒருவர் Good'டாக (நல்லவராக) இருந்தால் போதாதா? ஏன் God'டை (கடவுளை) உணர்ந்து கொள்ள வேண்டும்?


Good'ல் ஒரு O'வை எடுத்துவிடுங்கள்.. அந்த Extra O'வே இயற்கை (பிரகிருதி). O போய்விட்டால் God ஆகிறது! 

உங்களுக்கு தெரிந்த எழுத்து W... அதாவது Double You...! 

அதுவே ஜீவாத்மா- பரமாத்மா (double you) (துவைதம்) ! அவை இரண்டின் ஒருமையை (ஏகத்துவத்தை) மறைப்பதே மாயை (அறியாமை) 

வியாழன், 2 மார்ச், 2023

முனைவர் V.K. கோகாக் | புண்ணியாத்மாக்கள்

"நமது பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வி.கே.கோகாக், ஆன்மீகப் பின்னணியுடன் மதச்சார்பற்ற கல்வியை வழங்கக்கூடிய ஒரு சிறந்த ஆசான் ஆவார். கோகாக்கின் இதயம் மிகவும் தூய்மையானது. அவர் எப்போதும் சுவாமியின் திருநாமத்தை உச்சரித்து வந்தார். அவர் எனது கட்டளையை எழுத்திலும் செயலிலும் கடைப்பிடித்தார். ஒரு சிறு சந்தேகத்தைக் கூட என்னை  அணுகித் தெளிவுபடுத்திக் கொள்வது அவர் வழக்கம். அவர் உன்னதமானவர் ஆகையால் நமது பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரானார். அவருடைய கடின உழைப்பின் பலனை இன்று மாணவர்கள் அனுபவித்து வருகின்றனர்."  என்று 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் நாள், தனது  தெய்வீகப் பேருரையில் சுவாமி குறிப்பிட்டார்.

எவ்வளவு பக்தியாக பல காலம் இருந்தும் சிலர் திடீரென ஆன்மீகப் பாதையிலிருந்து விலகிப் போகிறார்களே? காரணம் என்ன?

இப்படிப்பட்ட எண்ணமே மிகவும் தவறானது! நீங்கள் சொல்கின்ற சிரத்தை, பக்தி இவை உண்மையானதும் சிரத்தையானதும் அல்ல... அவை யாவும் செயற்கையானவையே! பிளாஸ்டிக் பூக்கள் போன்றவையே! அவற்றுக்கு நறுமணம் கிடையாது! அவற்றால் தேனீக்களை கவர இயலாது! எல்லாம் Show (வெறும் வெளிக் காட்டல்) தான்! 

புதன், 1 மார்ச், 2023

கேதார்நாத் கௌரி குண்டத்தில் பாபா யார்? எனும் ரகசியம் பகிர்ந்த ஒரு இமய யோகி!

இமய மகான்களுக்கு இறைவன் பாபா எவ்வாறு தனது அருள்மயமான மகிமையை இன்றளவும் பொழிந்து கொண்டே வருகிறார் என்பதற்கான அரியதொரு உன்னத சம்பவம் சுவாரஸ்யமாக இதோ... 

தற்கால அரசுகளின் நடப்பு நிலை எவ்வாறு இருக்கிறது?

"சத்யம் வத; தர்மம் சர" என்பது வேதத்தின் பிரகடனம்! "சத்தியம் பேச வேண்டும்.. அறத்தை கடைபிடிக்க வேண்டும்!" என்பதே இதன் பொருள்! தற்காலத்தில் என்ன நடக்கிறது? அனைவரும் ஆச்சர்யகரமான வகையில் அறத்தை அள்ளி அள்ளிப் பேசுகிறார்கள்! அதாவது 'தர்மம் வத' என்று ஆக்கிக் கொண்டுள்ளனர்...அதை வாழ்க்கையில் நடத்திக் காட்டுவது பற்றிக் கவலையே காட்டுவதில்லை! 'சத்யம் வத:' என்பதையும் சத்யம் வத(வதை)' என்றாக்கி சத்தியத்தையும் வதைத்து வருகிறார்கள்! 

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

சிறு குழந்தையின் முனகல் குரலைக் கேட்டு சிருஷ்டி கல்கண்டு கொடுத்த தெய்வத்தாய் சாய்!

பெரியோர் முதல் குழந்தைகள் முதல் பறவைகள் முதல் எறும்புகள் வரை பாபா காட்டும் பரிவு சரிசமமானது...‌ அதற்கான உதாரணங்களோடும் ஊடாடும் அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ...

திங்கள், 27 பிப்ரவரி, 2023

பாபாவின் முடி நிஜமா? என சோதிக்க சென்றவர் அடியும் நிஜமே என சரண் அடைகிறார்!

எவ்வாறு ஒரு நாத்திகவாதியை ஆன்மீகவாதியாக இறைவன் பாபா உருமாற்றி இமயமலை அழைத்துச் செல்கிறார் எனும் பரவச சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...

சனி, 25 பிப்ரவரி, 2023

வியாழன், 23 பிப்ரவரி, 2023

பாபா கனவில் வருவதற்கான காரணம் என்ன? கனவு அருளும் சாயி கனிவு!

ஒரு பக்தரின் கனவில் அடிக்கடி தோன்றி... ஒருமுறை ஏன்? தான் அவருக்கு சாயி கனவுகளை வழங்குகிறேன் என்பதன் காரணத்தை விளக்குகிறார் இறைவன் பாபா... அந்த சுவாரஸ்ய அனுபவம் இதோ...

சுவாமி! உங்கள் ஆசீர்வாதத்தினால் உங்கள் சந்நதி அடைந்திருக்கும் நாங்கள் பூர்வ ஜென்ம வாசனைகள் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டுமா?


இப்போது உங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாக்கியங்கள், முற்பிறவிகளில் நீங்கள் செய்த நல்ல காரியங்கள் இரண்டும் தேவையானவையே!

ஒன்றுக்கு மற்றது சம்பந்தப்பட்டவையே! 

செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

மாதாஜி  கிருஷ்ணாபாய் | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

மகான் யோகி ராம்சுரத்குமாருக்கு நாம தீட்சை குருவாகவும் , தனது ஸ்ரீராம பக்தியால் மகானாகவும் உயர்ந்த காஞ்சன்காட் ஸ்ரீ பப்பா ராம்தாஸ் அவர்களுக்கு ஒரு திருமகளாக திகழ்ந்து குருசேவை புரிந்த அவரது சிஷ்யை ஸ்ரீ மாதாஜி கிருஷ்ணா பாய் பாபாவை பற்றி உரைத்தவை என்ன? சுவாரஸ்யமாக இதோ...

இவ்வளவு பெரிய உடலில் உயிர் (பிராணன்) எங்கே இருக்கிறது?

நீங்கள் இதயத்தில் இருப்பதாக நினைக்கிறீர்கள்! அது தவறு! தற்காலத்தில் இதய மாற்று சிகிச்சை நடைபெறுகிறது... இதயத்தை எடுத்துவிட்டால் உடனே மரணம் ஏற்படுவதில்லை! அதில் உயிர் எங்கே இருக்க முடியும்? 

திங்கள், 20 பிப்ரவரி, 2023

மனதை அடக்க நம் சுவாமி கூறும் நல் உபதேசம்! Divine Discourse Jan.08, 1983

மனதின் ஓட்டமே மனிதனின் ஆட்டம். மனம் மயங்கி மதி கெட்டவர்களை, மக்களே போல்வர் கயவர் என்கிறார் திருவள்ளுவர். மனதை அடக்க மலை, காடுகளை நாடினர் பலர். ஆயின் மனமும் அவருடன்தானே சென்றது. நம்முடன் எப்போதும் ஒட்டி உறவாடும் மனதை  எளிதில் அடக்க இயலாது. ஆயின் பகவான் பாபா காட்டும் இந்த எளிய வழியை பின்பற்றினால் மனம் அடங்கி, மனிதன் யோகி ஆகலாம்.

புதன், 15 பிப்ரவரி, 2023

சாக்ஷாத் சங்கர ஸ்வரூபம்

பகவானின் இளம் வயதில், மந்திரில் தினசரி பூஜை செய்யும் புரோகிதர் திரு. சேஷகிரிராவ் மற்றும் அந்நாளைய பக்தர்கள் சிலர் இணைந்து நம் ஸ்வாமி மேல் 108 நாமங்களை தொகுத்து ஸ்ரீ சத்ய சாயி அஷ்டோத்திர சத நாமாவளியை உருவாக்கினர். 


ஸ்ரீ காமாவதானி | புண்ணியாத்மாக்கள்


வேத சாம்ராட் பிரம்மஸ்ரீ காமாவதனுலு (அ) செருக்குமில்லி ஸ்ரீ காமாவதானி சாஸ்திரி   (அ)  காமேஸ்வர கணபதி என்ற பெயர்களில் அறியப்படும் ஸ்ரீ காமாவதானி அவர்கள் அனைத்து வேதசாஸ்திரங்களையும் நன்கு அறிந்த பண்டிதர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள ராஜோல் தாலுக்காவில் உள்ள 'கதலி' கிராமத்தைச் சேர்ந்தவர். செல்வச்செழிப்பும் சமூக மதிப்பும் நிறைந்த பிரபலமான ஒருவராக வாழ்ந்து வந்தவர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் வேத சாஸ்திர பரிஷத்-தின் தேர்வாளராக இருந்தவர். ஆனால் சொந்தஊர், சொத்து, சௌகர்யம்,  பிள்ளை, பேரப்பிள்ளைகள் அனைத்தையும் விட்டுவிட்டு சுவாமியின் மீதான பக்தியினால்  பிரசாந்தி நிலையத்தில் குடியேறியவர். ஆரம்பகால தசரா கொண்டாட்டங்களுக்கு பொறுப்பாளராக இருந்தார். தசரா கொண்டாட்டங்களின் போது நூறு குரல்களுக்கு மத்தியிலும் ஸ்ரீ காமவதனியின் குரலை மற்றவர்கள்  எளிதாக கண்டுணர்ந்துவிட முடியும்; அத்தகைய தங்கக்குரலுக்கு சொந்தமானவர் அவர். ஸ்ரீ காமாவதானி தனது வாழ்க்கை முழுவதையுமே வேதங்களைப் பயில்வதிலும் பயிற்றுவித்தலிலுமே கழித்தார். 

தினமலர் செய்தி: சத்ய சாய் கோவிலில் காஞ்சி மடாதிபதி!


விசாகப்பட்டினம், பிப், 14-  ''அன்பு, அக்கறையுடன் ஏழைகளுக்கு சேவை செய்வது ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நோக்கம்,'' என, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தன் அருளாசியில் தெரிவித்தார்.

சனி, 11 பிப்ரவரி, 2023

ஆன்மீக ஆனந்தத்தை ஒருவர் எவ்வாறு அடைய முடியும்?

ஆன்மீகத்தில் கூட ஒருவர் அமைதியின்றி இருப்பது துரதிருஷ்டமே! ஆசிரமத்தில் வாழ்ந்து கொண்டே மனக்கஷ்டத்துடன் இருப்பது கேலிக்குரியது! 

வியாழன், 9 பிப்ரவரி, 2023

நீங்கள் அறியாத ஸ்ரீ சத்யசாயி யுக பன்முக சாயி பொக்கிஷங்கள்!


ஓம் ஸ்ரீ சாயிராம் 


பரப்பிரம்ம ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அடியவர்களான தங்களின் மேலான கவனத்திற்கு!

சுவாமி! கொடுப்பினைக்கு முக்கியமாக எங்களிடம் என்ன இருக்க வேண்டும்?

எல்லாவற்றுக்கும் interest (புண்ணிய கர்ம சேமிப்பு) இருத்தல் வேண்டும்! இதன் மூலம் வாழ்வில் எதை வேண்டுமானாலும் சாதிக்க இயலும்! விஷயங்களில் உங்களுக்கு In-Trust (நம்பிக்கை) இருக்க வேண்டும்! அதுவே interest (ஆர்வம்)!

புதன், 8 பிப்ரவரி, 2023

ஸ்ரீ ஆதிசங்கரர் மிகச் சிறிய வயதிலேயே உடலை துறந்துவிட்டார்! இதற்கு காரணம் என்ன சுவாமி?

அத்வைத சித்தாந்தத்தை நிலைநாட்டிய ஸ்ரீ ஆதிசங்கரர் இளம் வயதிலேயே உடலை துறந்தவர் என்பது உண்மையே! 

பிரஸ்தானத்ரயத்திற்கு பாஷ்யம் (விரிவுரை) எழுதி... ஞான மார்க்கத்தை போதித்து... பக்தி மார்க்கத்தை நிலை நாட்டி... அநேக இறை துதிகளை உலகிற்கு அளித்து... இமயம் முதல் குமரி வரை பிரயாணம் செய்து... பீடங்களை ஏற்படுத்தி , சநாதன தர்மத்தின் இலட்சிய மூர்த்தியாக நிலை பெற்றவர் ஸ்ரீ ஆதிசங்கரர்! 

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதருக்கு பாபா அளித்த கண் பார்வை!


தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என கொடிகட்டிப் பறந்தவர் தியாகராஜ பாகவதர். எளிமையான குடு்ம்பத்தில் பிறந்து தனது கந்தர்வ கானக் குரலால் தமிழகத்தை 40 களில் கட்டிப்போட்டவர். தங்க நிற உடல் கந்தர்வ குரல் ஆழமான பார்வை இதுதான் எம்.கே.தியாகராஜபாகவதர் அவர்களின் மெய் சிலிர்க்கும் பாபா அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ‌...

கடவுளின் அருள் எங்களுக்கு ஏன் கிடைப்பதில்லை?


இந்த எண்ணம் தவறானது! கடவுளின் அருள் அனைவருக்கும் சமமாகவே உள்ளது! குறைபாடு உங்கள் மனதில் தான் இருக்கிறது! 

மழை பெய்து கொண்டிருக்கும் போது... பாத்திரத்தின் முகப்பை மேல்நோக்கி வைத்தால் தான் மழை நீர் அந்த பாத்திரத்தில் விழும்! அதை விடுத்து பாத்திரத்தை கவிழ்த்தி வைத்தால் , பாத்திரத்திற்குள் எப்படி மழை நீர் வரும்? 

சனி, 4 பிப்ரவரி, 2023

பாபாவை பின்தொடர்ந்த 5 வெளிநாட்டு பெண்மணிகளின் ஆச்சர்ய அனுபவங்கள்!!

ஐந்து வெளிநாட்டு பெண்மணிகளின் பாபா உடனான பயணமும் சாயி அனுபவங்களும் சுவாரஸ்யமாக இதோ...

சுவாமி! உலகில் பலத்தரப்பட்ட பல்வேறு துறைகளை சார்ந்த மனிதர்கள் உங்கள் பக்தராக இருந்து பல்வேறு கௌரவங்களைப் பெறுகிறார்கள்! இதற்கு உங்கள் கருத்து?

இது சகஜமே! நற்சேர்க்கையால் விளையும் பலன் இதுதான்! பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்!

ஸ்ரீவிநாயகருக்கு மூஞ்சூறு வாகனமாக அமைந்ததால் அதுவும் ஒரு வழிபாட்டுப் பொருளாக மாறிவிட்டது! 

எருது சிவனின் வாகனமாக இருப்பதால் அதையும் மக்கள் ஆராதிக்கிறார்கள்! 

வியாழன், 2 பிப்ரவரி, 2023

24 ரூபாய் தேவைப்படும் தையல்காரரனின் பயணச் செலவுக்கு 14 ரூபாய் மட்டுமே கொடுத்தார் பாபா! ஏன்?

பிரபலம் முதல் பராரி வரை முராரி பாபா அனைவரையும் சமமாக அரவணைப்பவர்... இதை உணர்த்தும் உன்னத அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...

சுவாமி! உங்கள் மீதுள்ள எங்களது நம்பிக்கை ஒரே அளவில் இருப்பதில்லை... ஆனால் உங்களுக்கோ எங்கள் மீது எதனால் அத்தனை நம்பிக்கை?

"ஏகோவசி சர்வ பூதாந்தராத்மா" 

இறைவன் சகல ஜீவராசிகளிடமும் , விதவிதமான உருவங்களில் , வேறுபட்ட பெயர்களில் வாழ்கிறார்!

புதன், 1 பிப்ரவரி, 2023

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

சுவாமி! ஒரு தலைவரின் குணநலன்கள் எவ்வாறு அமைந்திருப்பது அவசியம்?


முக்கியமாக இரண்டு லட்சணங்கள் ஒரு தலைவருக்கு இருப்பது அவசியம்! இவை இல்லாமல் இருப்பதால் தான் தற்போது தீய குணங்கள் தலைவிரித்து ஆடுகின்றன...! 
அவையே Individual character (தனிக்குணம்) , National Character (சமூக குணம்)!
இந்நாளில் இந்த இரண்டும் சேர்ந்து இருப்பவர் ஒருவர் கூட இல்லை எனலாம்! 

வெள்ளி, 27 ஜனவரி, 2023

ஸ்ரீ சந்திர யோகி | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

யோகிகள் யார் கண்ணிலும் சிறைபடாதவர்கள்... அவ்வாறு இருக்கும் ஒரு யோகி பாபாவை பற்றி கூறிய மொழிகள் என்ன? அதை யாருக்கு கூறினார்? அவரின் தீர்க்க தரிசன மொழிகள் நடந்தனவா? இல்லையா? மிக பிரம்மிப்போடு இதோ...

சுவாமி நாங்கள் மூன்று நான்கு வேளைகள் சாப்பிட்டும் உடம்பில் போதிய வலுவில்லை ஆனால் தாங்கள் குறைந்த அளவே உணவருந்தி ஏராளமான சேவை, தரிசனம் என 24/7 நாளும் இயங்குகிறீர்கள்! எப்படி இது சாத்தியப்படுகிறது?


இதுவே தெய்வீகம்! உங்களுக்கு சக்தி உணவிலிருந்து கிடைக்கிறது! அது குறைந்தால் உங்களுக்கு சக்தி குறைகிறது! 

சுவாமிக்கு சக்தி ஆகாயத்திலிருந்து கிடைப்பதில்லை... நான் காலையில் எதுவும் உட்கொள்வதில்லை! ஒரு கோப்பை தண்ணீர் (Glass of water ) அவ்வளவு தான்! 

சனி, 21 ஜனவரி, 2023

சுவாமி! ஆன்மீக சாதனா (ஆன்மீகப் பயிற்சி) தினசரி தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமா?


ஆன்மீக சாதனா அத்தியாவசியமாக இருப்பதால் தான் அதை தினசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்று சுவாமி சொல்கிறேன்! 
பாத்திரங்களை தினமும் தேய்த்துக் கழுவுவதால் தான் அவை தூய்மையாக இருக்கின்றன!