தலைப்பு

வியாழன், 29 டிசம்பர், 2022

பாபாவின் சுடர் மிகு ஞான மொழி பற்றி ஸ்ரீமான் கஸ்தூரி!

இப்படி ஒரு விளக்கத்தை இதுவரை யாரும் வழங்கியதில்லை... அப்படி வழங்கிய அவர் ஒரு உன்னதர்... இறைவன் பாபாவின் பேராற்றலை துல்லியமாக உணர்ந்தவர்... தொண்டு செய்து பழுத்தப் பழம் எனும் சொற்றொடர் அவருக்கே பொருந்தும்! இல்லை எனில் ஸ்ரீ பிரேம சாயி அவதாரத்திற்கான அன்னையாக அவரால் எப்படி பிறந்திருக்க முடியும்? அவர் பெயரே சாயி சேவைக்கான உத்வேக சக்தி.. அவரே சேவைத் திலகம் ஸ்ரீமான் கஸ்தூரி...‌அவர் அளித்த மெய்சிலிர்க்கும் விளக்கம் இதோ...

இயற்கை நடத்தும் பாடம் என்ன?

மானுடர் தர்மப்படிக் கர்மங்களைப் புரிந்து பழைய கர்மாவைத் தீர்த்துக் கொள்ள ஆன்ம சாதனா லயமாக இருப்பது உலகமே! எனவே இறுதியில் உலகை விட்டு இறைவனிடம் செல்ல வேண்டியவர்களாக இருந்தாலும் அதற்கான திறத்தை இந்த உலகிலிருந்து கொண்டு, உலகப் பொருட்களைக் கொண்டு வாழும்போதேதான் பெற வேண்டும்; உலகத்துடனேயே பந்தமுறுத்தும் மாயையில் சிக்காமல் இந்த உலகத்தில் வாழ்ந்தே பரத்துக்கு (வேற்றுலகத்திற்கு) பக்குவமாக வேண்டும்! 

செவ்வாய், 27 டிசம்பர், 2022

தெய்வப் பெயர்கள் உள்ளிருக்கும் ஆழமான ஆன்மீக உண்மை? மற்றும் ஏன் இந்திய தேசத்தை பாரத தேசம் என அழைக்கிறோம்?

நாராயணன் என்றால் நார-நயன்! நீர் நிறைந்த கண்ணே நார நயனம்! அதாவது பிரேம பக்தியின் உள்ளுருக்கம் கண்ணீராகப் பெருகும் போது எந்த திவ்ய அனுபவத்தை நீங்கள் பெறுகிறீர்களோ அதுவே நாராயணன்! 

திங்கள், 26 டிசம்பர், 2022

குஜராத் நவாநகர் ராஜமாதா திருமதி.குன்வெர்பா சாஹிபா | புண்ணியாத்மாக்கள்

பூர்ணாவதாரம் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஒரு பெண்மணியிடம், "நீ எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. நான் உன் மகன்." என்று வாக்குறுதி அளித்தார் எனில் அந்தப் பெண்மணி எத்தகைய பாக்கியசாலியாக இருந்திருக்க வேண்டும். தற்போதைய குஜராத்தின் நவாநகர் சமஸ்த்தானத்தின் ராஜமாதா திருமதி.குன்வெர்பா சாஹிபா தான் அவர். ஶ்ரீ சத்யசாயி மத்திய அறக்கட்டளை, பல்கலைக்கழக அறக்கட்டளை மற்றும் சத்யசாயி அமைப்பின் உலக கவுன்சிலிலும் முக்கிய உறுப்பினராக… சுவாமியால் பரிந்துரைக்கப்பட்ட புனிதவதி இந்த நவாநகர் ராஜமாதா. புண்ணியாத்மாக்கள் வரிசையில் அந்த அம்மையாரின் வாழ்க்கைக் குறிப்பு இதோ…

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

மேரி மாதாவாக சென்று Dr. லேலியாவின் கருவை காத்த சாயி மாதா!

இயேசுவைத் தவிர நான் வேறு யாரையும் வணங்க மாட்டேன் என்று சொன்ன ஒரு வெளிநாட்டு குடும்பத்திற்கு ஏற்பட்ட ஒரு சுவாரசிய சுவாமி அனுபவம்.... 

இயேசுவின் முக்கிய அறிவிப்பை அறிவித்த அவரின் பரமபிதா ஸ்ரீ சத்ய சாயி!

தனது புனித மகன் ஏசுபிரான் குறித்த பரவச சம்பங்களை பரலோக பரமபிதாவான பாபா நம்மிடையே பகிர்ந்து.. ஏசுநாதரின் இறைவழியில் நம்மை நடத்த சங்கல்ப மொழியை ஒளிமயமாய் பேசுகிறார் இதோ...

வியாழன், 22 டிசம்பர், 2022

தனது பிரேம சாயி அவதாரத்தை 1970'களிலேயே உரைத்த பாபா!

காலம் மூன்று... அதைக் காணும் கண்கள் மூன்று... அவை தரிசிக்கும் சாயி அவதாரங்கள் மூன்று... என்கிற ஆழமான உணர்வில் பக்தர்கள் இப்போதிருக்க... அதனை 1970 களில் பிரசாந்தி நிலையத்திலேயே பாபா தனது பிரேம சாயி அவதாரத்தை பதிவு செய்திருக்கிறார் எனும் நெகிழ் நிகழ்வு சுவாரஸ்யமாக இதோ...

புதன், 21 டிசம்பர், 2022

மாயாவதார பாபாவை புரிந்து கொண்ட 4 வயது குழந்தை மாயா!!

இறைவன் பாபாவை புரிந்து கொள்வது அத்தனை எளிதல்ல..‌அதற்கு கள்ளம் கபடமற்ற உள்ளம் வேண்டும்! சரணாகத பக்தி வேண்டும்... மேதைகளாலும் புரிந்து கொள்ள முடியாத பாபாவை எவ்வாறு ஒரு சிறு குழந்தை புரிந்து கொண்டு என்ன பேசியது? சுவாரஸ்ய அனுபவம் இதோ...

இறைவனிடம் ஒரு பக்தர் எதைப் பிரார்த்தனை செய்ய வேண்டும்?

இறைவனை அன்றி வேறெதையும் அறவே நாடாமல் இருப்பதே உண்மை பக்தனின் தலையாய லட்சணம்! வேறு எது எதற்காகவோ இறைவனை நாடுவதே பக்தரென்று நினைத்துக் கொண்டிருப்போரில் மிகப் பெரும்பாலோரின் 'லட்சணமாக' இருக்கிறது!

செவ்வாய், 20 டிசம்பர், 2022

ஒரே ஒரு தரிசனத்தில் சாயி'யிசமாக மாறிய கம்யூனிசம்!

பாபா நிகழ்த்தும் அற்புதங்கள் மகிமைகள் எண்ணில் அடங்கா... எண்ணிக்கையில் மட்டுமல்ல எண்ணத்திலும் அடங்கா... விதவித அனுபவங்கள் விசித்திர நிகழ்வுகளின் வியன்மிகு வரிசைகளில் ஓரிரண்டு சுவாரஸ்யமாக இதோ...

திங்கள், 19 டிசம்பர், 2022

தஞ்சம் அடைந்ததில் இரு சாயி அவதாரமும் தீர்த்து வைத்த தண்ணீர்ப் பஞ்சம்!

இறைவன் ஸ்ரீ ஷிர்டி பாபாவே இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபா... மனிதனுக்கு உடம்பில் உடை...இறைவனுக்கோ உடம்பே உடை... ஆக மூன்று உடை அணிந்திருக்கும் சாயி அவதாரம் முதல் இரண்டு உடையில் செய்த சேவையும் ஒன்றே என நிரூபிக்கும் சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...

வெள்ளி, 16 டிசம்பர், 2022

சித்ராவதி மணலை ரவையாக்கி படுகையை அவையாக்கி பாபா அளித்த ரவாலாடு!

காணக்கிடைக்காத பாபாவின் இளமைக் கால மகிமைகள் கேட்டாலே இனிக்கும்.. வாசித்தாலே சிலிர்க்கும்.. கண்ணனே தான் என்பதை கணப்பொழுதும் வாழ்ந்த ஸ்ரீ சத்ய சாயி கண்ணனின் அதிசய லீலைகளின் ஒன்று இதோ...

வியாழன், 15 டிசம்பர், 2022

ஏற்கனவே பெயர் வைத்த குழந்தைக்கு பெயர் வைக்க சொன்ன பக்தையிடம் பாபா என்ன சொன்னார்?

பேரிறைவன் பாபா அறியாதது ஏதும் இல்லை... எந்த மறைத்தலுமின்றி மனித செயல்கள் யாவும் வெளிப்படையாக அறிகிறார்... மனித ரகசியம் அனைத்தும் அறியும் இறை அதிசயம் பாபா ஒரு குழந்தைக்குக் காட்டிய கருணை சுவாரஸ்யமாக இதோ...

ஏன் கடவுளை வந்தனை செய்பவர் ஏழ்மையாகவும்.. நிந்தனை செய்பவர் வசதியாகவும் வாழ்கிறார்கள்?

பக்தி உள்ளவர்களில் பலர் வசதியை கோரித்தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்! அப்படிப்பட்ட  அவர்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்றியும் கூட அதற்கும் மேற்பட்ட வைராக்கிய பக்தி நிலையில் அவர்கள் செல்கிறார்களா? என கடவுள் பார்க்கிறார்! ஆயினும் உண்மையான பக்தர் விஷயத்தில் அவர்களின் அனைத்து உடைமைகளையும் பறித்துக் கொண்டு அவர்களை வைராக்கியத்தில் மேலும் முதிர்ச்சி பெறச் செய்கிறான்! ஹரி- ஹரன் என்ற பெயர்களுக்கே அபகரிப்பவன் என்றே பொருள்! உங்கள் மனதை அபகரிப்பவன் மட்டுமல்ல உங்கள் உடைமைகளையும் அவனே அபகரிக்கிறான்!

செவ்வாய், 13 டிசம்பர், 2022

பாபாவுக்கான ஒரு கோப்பைத் தண்ணீரில் வளர்ந்த ஆளுயர மணி ப்ளான்ட்! 

இறைவன் பாபாவால் நிகழ்த்தப்படும் அனுபவங்கள் ஏராளம்... குறிப்பாக அதில் நூதன அனுபவங்கள் பரவசங்கள் மிகுந்தவை... அவ்வனுபவங்கள் நமக்கு வழிகாட்டிகளாகவும் அமைகின்றன... அதில் ஓரிரண்டு சுவாரஸ்யமாக இதோ...

திங்கள், 12 டிசம்பர், 2022

இராமலிங்க அடிகளார் உணர்த்திய அருட் பெருஞ்ஜோதியை பாபாவிடம் உணர்ந்த வள்ளலார் பக்தர்!

வெவ்வேறு மகான்கள் வெவ்வேறு வடிவிலான போதனைகள் ஆனால் அவர்கள் காட்டிய வழிமுறைகள் யாவும் ஒரே பரப்பிரம்மத்திடமே கொண்டு சேர்க்கிறது.. அத்தகைய பரப்பிரம்மமான பாபாவின் மகிமைகள் ஓரிரண்டு சுவாரஸ்யமாக இதோ...

வெள்ளி, 9 டிசம்பர், 2022

சீசனே இல்லாத போதும் பாபா விளைவித்த மாங்கனி!

பல்வேறு விதமான பக்தர்களுக்கு பாபா அளித்த பல்வேறுவிதமான கனவு அனுபவங்களும்...‌அது வெறும் கனவல்ல நிஜம் என்று உணரும்படியான நிகழ்வுகளும் சுவாரஸ்யமாக இதோ...

வியாழன், 8 டிசம்பர், 2022

இனிப்பு இறைவன் பாபாவின் திருப்படத்திலிருந்து பொழிந்து கொண்டே இருந்த திதிப்புச் சக்கரை!

பாபா எவ்வாறு தன் ஏழ்மையான ஒரு பக்தர் குடும்பத்தை திதிப்போடு அவர்களுக்கு இருந்த பக்தித் துடிப்போடு காப்பாற்றி கரை சேர்க்கிறார் என்பது மிகவும் சுவாரஸ்யமாக இதோ...

புதன், 7 டிசம்பர், 2022

அணுவிலும் சிறியவர் அண்டத்திலும் பெரியவர் ஸ்ரீ சத்யசாயீஷ்வரர்!


இறைவன் பாபா அன்றாடம் அவரவர் வாழ்வில் நிகழ்த்தி வரும் பேரற்புதம் ஒன்றல்ல இரண்டல்ல...‌பாபா வழங்கிடும் பிறந்தநாள் லட்டுவில் ஆங்காங்கே தோய்ந்த முந்திரியாய் குறிப்பிட்ட சில சுவாரஸ்ய அனுபவங்களில் ஓரிரண்டு இதோ...

"ஏன் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் துயில் எழுந்து தியானம் செய்ய வேண்டும்?"

ஆன்மீக சாதனை வாழ்வின் தொடக்கத்தில் இருப்பவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்... இரவு அதிக நேரம் டி.வி போன்றவற்றை பார்ப்பதை நிறுத்தி விரைவாக படுக்கைக்குச் சென்று உறங்க வேண்டும்... ஆரோக்கிய வாழ்க்கை முறை கடைபிடிப்பலர்களுக்கு 6 மணி நேர உறக்கமே போதுமானது! பின்னிரவு 3 மணியிலிருந்து 6 மணி வரையிலான காலகட்டமே ஆன்மீக சாதனை புரிவதற்கு ஏற்றது... மிகவும் சிறந்தது! எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து தியானத்தில் அமருங்கள்...ஆற்றங்கரை, மரத்தின் அடியில் தியானிப்பது இன்னமும் சிறந்தது! 


ஸ்ரீ B V ராஜா ரெட்டி | புண்ணியாத்மாக்கள்

அகத்திலும் புறத்திலும்… சுவாமியை நெருங்கி வாழவும், சேவைகள் புரியவும் மிக மிக அத்தியாவசியமான செயல்  நமது அகங்காரத்தை நாமே துடைத்தெறிவது ஆகும். பல ஜென்மங்களாகத் தொடரும் பயிற்சிகளாலன்றி, உண்மையான பணிவுடன்கூடிய நடத்தையினாலன்றி… அவ்வளவு சுலபமாக அகன்றுவிடாதது அகங்காரம்.  ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற அகங்காரம் அழிவதற்கான சிறந்த உபாயம், "தவ தாஸோஹம்" ( நான் உங்கள் அடிமை ) என்கின்ற பாவனையே! இந்த பாவனையில் தான் அரிஷ்டத்வர்கம் என்று சொல்லப்படுகின்ற காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம் மற்றும் மாச்சர்யம்  எளிதில் அழிந்து போகும். மேற்கண்ட உபாயத்தை சொன்னவர் ஸ்ரீ போரிகிலமண்ட வெங்கட ராஜா ரெட்டி அவர்கள். புத்தகங்களில் கற்றோ, பண்டிதர்கள் அல்லது குருக்களின் வார்த்தைகளைக் கடன் வாங்கியோ சொன்ன விஷயமல்ல அது. புண்ணியாத்மா திரு. B.V. ராஜா ரெட்டி அவர்கள், மற்ற பக்தர்களுக்கும் சேவகர்களுக்கும் தனது சொந்த அனுபவத்திலிருந்து எடுத்துச் சொல்லும் உயரிய சத்தியம் அது!

சனி, 3 டிசம்பர், 2022

பக்தர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

நடைமுறையில் தாங்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம்... அப்படி வாழ்ந்து கொண்டே பெரிதாக ஆடம்பர பூஜை செய்து, திருப்பதி உண்டியலில் பொன்னும் பொருளும் போட்டுவிட்டால் அதுவே பக்தி என்று நினைப்போர் நிறைய பேர் இருக்கிறார்கள்! ராச லீலா அனுபவம், தந்திர மார்க்கம் என்று சொல்லிக்கொண்டும் பக்தி என்ற பெயரில் தகாத காரியங்கள் செய்து கொண்டிருப்பவர்கள் இருக்கின்றனர்... இதெல்லாம் இறைவனுக்கு உகந்தவையே அல்ல! உண்மையில் ஏனைய மனிதர்களை விடவும் தன்னிடம் பக்தி கொண்டவர்கள் தான் தர்ம நெறிகளை அதிகக் கண்டிப்புடன் கடைபிடித்து வாழ வேண்டும் என இறைவன் விரும்புகிறான்! பக்தி இல்லாதோர் செய்யும் அதர்மங்களை கூடப்  பொறுத்துக் கொள்வான்... ஆனால் பக்தர்கள் அதர்மம் செய்தால் முளையிலேயே இறைவன் கிள்ளி எறிந்து விடுவான்! 

வியாழன், 1 டிசம்பர், 2022

பாபாவின் ஆசிகள் பெற்று அவர் பக்தரால் தயாரிக்கப்பட்ட உலகப்புகழ் "பர்னால்" ஆயின்மென்ட்!

என் வாழ்வே எனது செய்தி என்றார் பாபா. பின்னர், உங்கள் வாழ்வே எனது செய்தி எனக் கூறினார். அவரது பக்தர்கள் பாபாவின் நல் உபதேசங்களைக் கேட்டதுடன் நில்லாமல், அவர்களது வாழ்விலும் அவற்றைச் செயல் படுத்தவேண்டும் என்கிற நிதர்சனத்தை இது குறிக்கிறது.... 

ஓங்காரத்தில் அப்படி என்ன சிறப்பு? அதை ஏன் 21 முறை உச்சரிக்க வேண்டும்?

அசையாத ஒன்று அசையும் போது சப்தம் பிறக்கிறது! ஓம்கார சப்தத்தின் தனிப்பெருமை என்னவெனில்... அசையாத பிரம்மம் அதனுள்ளேயே தோன்றிய சங்கல்பத்தில் அசைந்தபோது ஏற்பட்ட முதல் சப்தம் அதுவே என்பது தான்! அதன் பின்பே , அதிலிருந்தே பிரபஞ்ச சிருஷ்டித்தான இதர இயக்கங்கள் தோன்றின... ஆகையால் பிரபஞ்சத்திலுள்ள ஜீவன் பிரம்மத்துக்குத் திரும்பவும் அதுவு நுழைவாயிலாக உள்ளது! அனைத்துப் படைப்புக்கும் அஸ்திவாரமான அதுவே ஜீவனின் விமோச்சனத்துக்கும் வழியாக உள்ளது!