தலைப்பு

வியாழன், 25 ஜூலை, 2024

டாக்டர் B சீதாராமையா | புண்ணியாத்மாக்கள்


மனிதர்கள் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் ஒவ்வொரு மனிதரும் கடவுளின் சொரூபமே! மனிதருக்கு விளைகின்ற இன்பமும் துன்பமும் தனிப்பட்ட உணர்தலுக்கானது மட்டுமல்ல.. அடுத்தவர்களின் இன்ப துன்பங்களைப் புரிந்து கொள்வதற்காகவும் தான்! இன்னும் சொல்லப்போனால்... ஒவ்வொரு மனிதரும், தாம் பெற்றிருக்கும் உடல்.. பிறருக்கு சேவை செய்வதற்காகப் பெற்ற வரமாகக் கருத வேண்டும் என்று வேதமும் "பரோபகாரார்தம் இதம் சரீரம்" என்று பிரகடனம் செய்கிறது! துரதிர்ஷ்டவசமாக, இன்று மனிதனுக்கு சேவை என்றால் என்ன என்றே தெரியவில்லை. மனிதர்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு செயலும் வணிக நோக்கத்திலேயே செய்யப்படுகிறது. மனிதர்கள், ஏதாவது ஆதாயம் இருந்தால் ஒழிய... ஒருவரை சந்தித்து சிரித்துப் பேசி நலம் விசாரிப்பதைக் கூட பயனற்ற காரியமாக கருதத் தொடங்கிவிட்டனர். 20ம் நூற்றாண்டில்...  மனித வாழ்க்கைக்கு அடிப்படையான.. உணவு, நீர் மற்றும் மருத்துவம்  ஆகிய மூன்றுமே உச்சகட்ட வணிகமயம் ஆகிவிட்டது. அப்படியே போனால்.. மனிதன் மிருகநிலைக்கு எளிதில் தள்ளப்பட்டு மீண்டும் பல உலக யுத்தங்கள் வெடிப்பது நிச்சயம் என்ற சூழ்நிலையில் தான் இறைவன் பூர்ணாவதாரம் ஸ்ரீ சத்யசாயியாக பூமிக்கு வந்தார்.

வியாழன், 18 ஜூலை, 2024

"எல்லா பெயர்களும் வடிவங்களும் என்னுடையவையே!" -- இரு அவதாரங்களின் ஒரு சேர்ந்த பிரகடனம்!

சகலம் ஸ்ரீ கிருஷ்ண மயம் போலவே சகலம் ஸ்ரீ சாயி மயம் என்கிற ஆன்மீகப் பேருண்மையை வாசிப்பவர்களின் இதயங்களில் ஆழமாகப் பதிகிறபடி இரு அவதாரங்களுமே அதனை எவ்வாறு பிரகடனப்படுத்துகிறார்கள் எனும் ஆச்சர்ய மொழிகள் சுவாரஸ்யமாக இதோ...!

செவ்வாய், 9 ஜூலை, 2024

1948'ல் சனாதன சாரதியை அனுபவித்துச் சிலிர்த்த கப்பல் பார்த்தசாரதி!

பாபாவின் ஆதிகாலத்து பக்தர்களின் சிலிர்க்க வைக்கும் நேரடி வாக்குமூலங்கள் பற்பல... அதை ஒட்டுமொத்தமாகத் திரட்டினால் பாற்கடலாய் இதயத்தில் அமுத அலையோசையே எழும்... அத்தகைய பக்தர் ஒருவரின் அனுபவங்கள் சுவாரஸ்யமாய் இதோ...

சனி, 6 ஜூலை, 2024

ஸ்ரீ சத்ய சாயி அவதாரம் வழங்கிய ஸ்ரீ கிருஷ்ண தரிசனங்கள்!

பாபா ஸ்ரீ கிருஷ்ணரே என்கிற சத்தியத்திற்கு சாட்சியாக பாபாவே பல பக்தர்களுக்கு வழங்கிய ஸ்ரீ கிருஷ்ண தரிசனங்கள் மெய் சிலிர்க்கும்படியானது... அதன் ஆச்சர்ய நிகழ்வுகள் சுவாரஸ்யமாக இதோ...!

வெள்ளி, 28 ஜூன், 2024

ரம்மியமான இரு அவதாரங்கள் வழங்கிய ராம தரிசனங்கள்!

ஸ்ரீ கிருஷ்ணரும் ராம தரிசனம் வழங்கி இருக்கிறாரா? பாபாவும் அவ்வாறு புரிந்திருக்கிறாரா? எனும் ஆச்சர்யப்படுபவர்களின் இதயங்களில் அமுத மழையே வரிவடிவமாகப் பொழியப் போகிறது சுவாரஸ்யமாக இதோ...!

வெள்ளி, 14 ஜூன், 2024

பேராசிரியர் ஸ்ரீ அனில்குமார் காமராஜு | புண்ணியாத்மாக்கள்

பேராசிரியர் அனில் குமார் காமராஜு, பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் சொற்பொழிவுகளின் போது ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர் என்பதாக பெரும்பாலோரால் அறியப்படுபவர்.ஒயிட்ஃபீல்டில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் (பிருந்தாவன் வளாகத்தின்) முதல்வராக இருந்தவர். பிரசாந்தி நிலைய வளாகத்தில்... உயிரி வேதியியல் துறையில், 2012ம் ஆண்டு வரை பேராசிரியராகப் பணியாற்றியவர். பொதுவாக வெளியுலகிற்குத் தெரிந்ததெல்லாம் இவ்விதமான அறிமுகமே! இவற்றைக் கடந்து... அவர், சுவாமியின்  மகாசேவகர்களில், அத்யந்த பக்தர்களில்  குறிப்பிடத்தகுந்த ஒருவர். சுவாமிக்கும் அவருக்கும் இருந்த அனுபந்தம், அதன் ஆரம்பகால சிக்கல்கள், பிற்கால முதிர்ச்சி மற்றும் இறுதி ஐக்கியம் பற்றி புண்ணியாத்மாக்கள் வரிசையில் காண்போம்.

திங்கள், 10 ஜூன், 2024

ஆவியின் பேயாட்டத்தை தனது பார்வையிலேயே அடக்கிய பாபா!

முற்காலத்தில் பேய் பிடித்தவர்களை பாபாவிடம் கொண்டு வருவார்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான அணுகுமுறையில் பாபா அதை சரி செய்திருக்கிறார், அப்படி ஒரு திகில் சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...

சனி, 8 ஜூன், 2024

பணத்தின் அளவு vs பணத்தின் தரம் - ஸ்ரீ சத்ய சாயுடன் பேராசிரியர். சுதிர் பாஸ்கரின் அனுபவங்கள்


"சிக்கன வாழ்வினை தந்து நீ காக்க!" என்று ஸ்ரீ சத்ய சாயி கவச வரிகள் பகிரும் பேருண்மை கீழ்வரும் அனுபவங்களில் சம்பவமாகி இருக்கிறது இதோ...!

வெள்ளி, 7 ஜூன், 2024

பூர்வ ஜென்மங்கள் பேசி காரணத்தை புரிய வைத்த இரு கடவுள் அவதாரங்கள்!

ஒரு விஷயத்தை ஏன் அவதாரங்கள் புரிகின்றன? ஏன்? ஏன்? ஏன்? எனக்கு இல்லையா? அவனுக்கா? என்ன இந்த பாரபட்சம்? போன்ற பல்வேறு விதமான நமது கேள்விகளுக்கு இரு அவதாரங்களும் உணர்த்தும் பூர்வ ஜென்ம காரணங்கள் சுவாரஸ்யமாக இதோ...!

வியாழன், 6 ஜூன், 2024

இறைத்தாய் ஈஸ்வரம்மா பாபாவின் கைக்குட்டையால் இதயத்தில் எழுதிய பாசக் கடிதம்

பாபாவின் தாய் ஒரு தெய்வீகத் தனிப்பிறவி... அந்த ஸ்படிக வயிற்றில் நீல ஒளியாய் நுழைந்த சூரியன் பாபா... அவரே ஈஸ்வர அன்னையின் இயல்பை விளக்குகிறார் இதோ...

புதன், 5 ஜூன், 2024

பரம்பொருள் பாபா - சூட்சும அறுவை சிகிச்சை நிபுணர்!



நான் ஒரு ஆன்மீக குடும்பத்தில் பிறந்தது எனக்குக் கிடைத்த ஒரு வரமாக நான் நினைக்கிறேன். எனது தாயார் ஸ்ரீ ஷிரடி சாயிபாபாவின் தீவிர பக்தர். எனது மூத்த சகோதரருக்கும் எனக்கும் அவரது மகிமைகளைப் பாட கற்றுக் கொடுத்து தினசரி காலை மற்றும் மாலை பிரார்த்தனைகளில் பாட வைத்து பக்தி மார்க்கத்திற்கு அடித்தளம் அமைத்தார். என் தந்தை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் இருந்து உத்வேகத்தைப் பெற்று, ஆன்மீக பயிற்சியின் அத்வைத அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி ஆன்மீகத் தேடுலில் ஈடுபட்டிருந்தவர். எங்கள் தந்தை எங்களுக்கு ஞான மார்க்கம் பற்றிய புரிதலை வளர்ப்பதற்கு அடித்தளம் அமைத்தவர். எனது சிறுவயதில் இருந்தே எனக்கு வழிகாட்டியாகவும் ஆதரவாகவும் ஆன்மீக வளர்ச்சியில் எனது நாயகனாகவும் வழிகாட்டியாகவும் தொடர்ந்து இருந்த வந்த என் மூத்த சகோதரர் எனக்குக் கிடைத்த மற்றொரு வரம்.

அவதார ரகசியம் - 17.05.1968' ஆம் ஆண்டு உலக மகா நாட்டில் பாபா பகிர்ந்தவை!

பேரிறைவன் பாபாவின் ஆதிகாலத்து அரிய உரை! அதுவும் உலக மகாநாட்டில் மேடையில் பாபா பொழிந்த சத்திய மொழிகள், வாசிக்க அரிதான பொக்கிஷம், உணரப்பட வேண்டிய பேருண்மை சுவாரஸ்யமாக இதோ...

வியாழன், 30 மே, 2024

மகாசமாதிக்குப் பிறகும் உயிர் வாழ்கிறார் பாபா! - நேரடி அனுபவங்கள்!

பேரிறைவன் பாபா மறைந்தே போகவில்லை... தற்போதும் நம்மோடு இயங்கி வருகிறார், உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார், தன் உண்மையான பக்தர்களோடு தொடர்பில் இருக்கிறார், பல தருணங்களில் தரிசனமும் தருகிறார் எனும் மெய்சிலிர்க்கும் அனுபவம் இதோ...!

ஞாயிறு, 26 மே, 2024

Ebooks - பகவான் ஸ்ரீ சத்தியசாயி மதுரம் பாமாலை - திருமதி. தமிழரசி பாலசுப்பிரமணியம்


பகவான் பாபா ஒவ்வொருக்கும் ஒரு சேவையை அருளுகிறார். நாமாவளியில், சேவையில்,  பால விகாஸ் குருவாக, கவிமாலை தொடுக்க  என யார்யார் எதில் ஈடுபட்டாலும் பகவான் மகிழ்ந்து அவர்களை ஆசீர்வதிக்கிறார். அந்த விதத்தில் தன்னை அனைத்திலும் ஈடு படுத்திக் கொண்டவர் , கோபிசெட்டிப் பாளையத்தைச் சேர்ந்த, திருமதி தமிழரசி பாலசுப்ரமணியம் அவர்கள். தினம் ஒரு கவிதை என மனம் நெகிழ்ந்து அவர் இயற்றிய கவிதைகளை 'பகவான் ஸ்ரீ சத்யசாயி மதுரம் பாமாலை' என்ற புத்தக உருவமாக, இதுவரை 3 பாகங்களாக வெளியிட்டுள்ளார். அதன் மிண்ணனு வடிவங்களை ஸ்ரீ சத்யசாயி யுகத்தில் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.அன்பர்கள் அனைவரும்  இதைப் படித்து, ரசித்து பரவசமடைய வேண்டுகிறோம்... 

சனி, 25 மே, 2024

"என்னை உங்களால் புரிந்து கொள்ளவே முடியாது!" -- இரு அவதாரங்களின் பளீர் விளக்கம்!

எவ்வாறு இரு அவதாரங்களும் மண்ணுலகில் மக்களிடையே திகழ்கின்றனர்? ஏன் அவர்களை சரிவர சராசரி மனிதர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை...? அதற்கு இரு அவதாரங்களும் தெளிவுபடுத்தும் தன்னிலை விளக்கம் என்ன? சுவாரஸ்யமாக இதோ...!

புதன், 8 மே, 2024

SSY நேயர்களுக்கு ஓர் வேண்டுகோள்!

ஸ்ரீ சத்யசாயி யுகம் முழுக்க முழுக்க தன்னார்வத் தொண்டுள்ளம் கொண்ட சாயி பக்தர்களால் இயக்கப்படும் சேவை முயற்சி! 

திங்கள், 6 மே, 2024

வரிசை கட்டி வர இருக்கும் மகா பெரியவா - ஸ்ரீ சத்ய சாயி திவ்யானுபவ சீரியஸ்!!


இந்த அபூர்வ நேர்காணல் தொடர் வழி பலருக்கு பல புரிதலும் தெளிதலும் கிடைக்க இருக்கிறது! இது ஒரு அற்புதமான நேர்காணல் சீரியஸ்! பலவித ஆதாரங்கள் பவனி வந்து உங்களை பரவசப்படுத்த இருக்கின்றன...!

வெள்ளி, 3 மே, 2024

இறந்து போனவர்களை உயிரோடு காட்டிய இரு இணையில்லா அவதாரங்கள்!


இறந்து போனவர்களை மீண்டும் பூமிக்குக் கொண்டு வந்து காட்ட இயலுமா? வியப்பின் உச்சத்திற்கே நம் இதயத்தை செலுத்தக் கூடிய இரு அவதாரங்களின் அற்புத மகிமைகள் சுவாரஸ்யமாக இதோ...!

வியாழன், 2 மே, 2024

காணாமல் போன அந்த கால்குலேட்டர்!! -  ஸ்ரீ சஞ்சய் சாஹ்னி(Alumni, SSSIHL)

ஒருவர் பாகவதத்தில்  இறைவன் ஸ்ரீ பாலகிருஷ்ணனின் எண்ணற்ற குறும்புத்தனங்கள் தன்னுடைய பிரஜைகளின் மீது அவர் மகத்தான மகிழ்ச்சியாக பொழிந்ததை நாம் படித்துள்ளோம். அவ்வண்ணமே நமது இறைவன் ஸ்ரீ சாய் கிருஷ்ணரும் இத்தகைய லீலைகள் செய்வதில் விதிவிலக்கு காட்டியதில்லை. என்னால் எல்லாவற்றையும் ஞாபமாக சொல்ல முடியா விட்டாலும் குறிப்பாக இந்த கால்குலேட்டர் பற்றிய எனது அனுபவத்தை மறக்கவே முடியாது... 

சனி, 27 ஏப்ரல், 2024

இரு அவதாரங்கள் வெளிப்படுத்திய சிவ அம்சங்கள்!

ஸ்ரீ கிருஷ்ணர் விஷ்ணு அவதாரம் தானே.. எப்படி அவர் சிவனின் அம்சமாகிறார்? பாபாவும் ஸ்ரீ கிருஷ்ணர் என்கிற போது அவரும் சிவமா? எப்படி? ஆச்சர்யப்படும்படியான ஆதாரப் பூர்வமான பதிவுகள் சுவாரஸ்ய சுருக்கமாக இதோ..!

திங்கள், 15 ஏப்ரல், 2024

கனல் எறிந்தாலும் கல் எறிந்தாலும் மந்தஹாசம் குறையாத இரு அவதார அகம்!


இரு அவதாரங்களின் மேல் பொறாமைப் பட்டு இரு யுகங்களிலும் தீய குணங்கள் பெற்றோர் என்னவெல்லாம் செய்தனர்... ? அதை எவ்வாறு இரு யுகத்து அவதாரங்களும் எதிர்கொண்டனர்? சுவாரஸ்யமாக இதோ...!

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

தனக்கொரு நிகர் இல்லா இரு தனிப்பெரும் அவதாரங்கள்!


போலியான ஆசாமிகள் உண்மையான அவதாரத்திடம் சவால் விட்டால் என்ன நேரும்பிரபஞ்ச நெருப்பிடம் சிறு பிரகாசத்தைச் சுமக்கும் மின்மினிப் பூச்சிகள் சவால் விட்டால் என்ன நேருமோ அது நேரும்ஆம்...இரு யுகங்களிலும் இரு அவதாரங்களும் பல சவால்களை எதிர் கொண்டிருக்கிறார்கள்... அப்படி சில மூடர்கள் சவால் விட்ட அந்த விநோத சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...! 

வியாழன், 4 ஏப்ரல், 2024

ஸ்ரீ சத்ய சாயிபாபா ~ என் வாழ்க்கையின் ஒளி - லெப்டினன்ட் ஜெனரல் S.P. மல்ஹோத்ரா P.V.S.M. (Retd)

லெப்டினன்ட் ஜெனரல் S.P. மல்ஹோத்ரா P.V.S.M. (Retd) அவர்களுக்கு பாபாவை பற்றி எப்படி தெரிய வருகிறது என்பது பற்றியும், இவரது வாழ்க்கை முறைகளை சுவாமி எவ்வாறு மேம்படுத்துகிறார், வேண்டுகோள்களை ஏற்கிறார், நெருக்கடியான சமயங்களில் சுவாமி எவ்வாறு அருள் பாலிக்கிறார் என்பதை குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். இறைவனுடனான அவருடைய அனுபவங்களில் சில.... 

புதன், 3 ஏப்ரல், 2024

பாபா எனும் ஜோதியில் கலந்தார் பரம பக்தர் Prof. அனில் குமார்!

பகவானால் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர். பாபாவின் அண்மை என்னும் அருள் நிழலை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து, மகிழ்ந்து, அந்த சுவையை அனைவரிடமும் சத்சங்க அனுபவமாகப் பகிர்ந்து வாழ்ந்தவர். பரமனும் பர்த்தியை விட்டுஅகலவில்லை , பக்தரும் தமது இறுதிவரை எங்கும் செல்லவில்லை. ஐயனின் இணையடி நிழலில் ஒன்றாகக் கலந்து விட்டார் Prof. அனில் குமார் காமராஜூ அவர்கள்.

திங்கள், 1 ஏப்ரல், 2024

"மறு ஜென்மம் எடுத்தேன்!" -- நடிகர் ரகுவரன்

(கல்கி பத்திரிகையில் 26-11-2000'ல் வெளியான ஆச்சர்யக் கட்டுரை)

பிரபல நடிகர் ரகுவரன் எவ்வாறு பேரிறைவன் பாபாவின் கருணை வளையத்திற்குள் வந்தார்? என்பது பற்றியும், எத்தகைய அகம் - புறம் மாற்றத்தை அவர் பெற்றார் எனும் ஸ்ரீ சத்ய சாயி அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...! 

புதன், 27 மார்ச், 2024

பெண்மையாகவும் உருமாறி தயை காட்டிடும் இரு தாய்மை அவதாரங்கள்!


எவ்வாறு பெண் வடிவிலும் பெண்மைத் தன்மையிலும் தன்னை உருமாற்றிக் கொண்டு தனது பக்தர்களுக்காக இரண்டு அவதாரங்களும் அனுகிரகம் அளிக்கிறது.. சுவாரஸ்யமாக இதோ...!

செவ்வாய், 26 மார்ச், 2024

நீயும் நானும் ஒன்று!! (இலங்கை யாழ்ப்பாண "வலம்புரி" பத்திரிகையில் வெளியான கட்டுரை - 2012)

யாழ்ப்பாணத்தில் வலம்புரி பத்திரிகையில் எழுந்த வளமையான கட்டுரை இது!! இதில் பேரிறைவன் பாபா யார் என்பதும்? அவருக்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதும்? யாழ்ப்பாணத்தில் பாபாவை அறிய ஏன் சற்று தாமதமானது என்பதும் - மிக சுவாரஸ்யமாக விளக்கப்பட்டிருக்கிறது இதோ..!

புதன், 20 மார்ச், 2024

ஸ்ரீ பெங்களூர் நாகரத்னம்மா | புண்ணியாத்மாக்கள்

 

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பான கடினமான காலகட்டத்தில் தேவதாசி பிரிவில் பிறந்து சங்கீத சாஸ்திரம், நாட்டியக் கலை மற்றும்  பன்மொழிப் பாண்டித்யம் பெற்று நாடுபோற்ற விளங்கியவர் பெங்களூர் நாகரத்னம்மா. அன்றைய மெட்ராஸில் "வருமான வரி செலுத்திய முதல் பெண் கலைஞர்" என்ற பெருமைக்கு உரியவர். சமூக நலனிலிலும், சமத்துவம் நாட்டலிலும் ஒரு பெரும் போராளியாகத் திகழ்ந்து சாதித்துக் காட்டிய பரோபகாரி. தனது  மானசீக குருவான ஸ்ரீ தியாகராஜரின்   சந்நதிக்கு அருகிலேயே தனக்கும் ஒரு நிரந்தர நினைவிடத்தைப் பெற்றவர். எல்லாவற்றிற்கும் மேலாக, கலியுக ராமபிரான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் அருளுக்குப் பாத்திரமான புண்ணியாத்மா.

திங்கள், 18 மார்ச், 2024

பங்களாதேஷில் மோசடிகளுக்கு பெயர் போன ஒரு சிற்றூர் பாபாவால் பெற்ற புத்துயிர்!

மிக முரட்டுத்தனமான மனதை மலரினும் மென்மையாக மாற்ற பாபா எடுக்கும் மிகப் பெரிய ஆயுதம் பேரன்பு... பாபாவின் ஒவ்வொரு பேரற்புதங்களில் ஒளிந்திருப்பது பேரன்பே! தலைகீழாய் இருந்த பலரை எவ்வாறு பாபா நேராக மாற்றி அருளினார் என்பவை மிக சுவாரஸ்யமாய் இதோ...!

சனி, 16 மார்ச், 2024

ஒரே நேரத்தில் இரு இடங்களிலும் நிறைந்திருக்கும் இரு சர்வ வியாபக அவதாரங்கள்!


அது எப்படி சாத்தியம்? ஒரே நேரத்தில் ஒரே நொடியில் பௌதீகமாகக் கூட அவதாரங்களால் இருக்க முடியுமா? ஆம் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் அவதாரங்களால் இரு இடங்களில் இருக்க இயலாதா? எனும்படி ஆச்சர்யம் தரக் கூடிய அற்புதப் பதிவு சுவாரஸ்யமாக இதோ..

வெள்ளி, 15 மார்ச், 2024

உன்னத பாபாவுக்கு நன்றி! உலக பக்தர்களுக்கும் நன்றி!


• 1 Million+ Pageviews(பார்வைகள்)
• 120 தேசங்கள் தாண்டிய பல லட்சம் பார்வையாளர்கள்!
• 1600 மேலான அரிய தமிழ் பதிவுகள்!

புதன், 13 மார்ச், 2024

"உன்னால் என்னிடம் வர இயலாததால், நானே உன்னிடம் வந்தேன்!" - என்ற பேரன்பு பாபா

எவ்வாறு நூலாசிரியரின் வலி மிகுந்த நகர முடியாத நிலையில் பாபாவே வலிமை மிகுந்தபடி அனுகிரகம் செய்தார் எனும் கருணை தோய்ந்த உருக்கப் பதிவு இதோ...!

வெள்ளி, 8 மார்ச், 2024

லிங்கோத்பவகரா சாயி லிங்கேஸ்வரா!!

அருவாய் உருவாய், உளதாய் இலதாய் இலங்கும் ஈசனுக்கு உகந்த திருவுறு லிங்கமாகும். உருவமாய், அதே சமயம் உருவமற்று சிவனின் அடையாளமாய் வணங்கப்படும் லிங்கம், சுந்தர ரூபனாய், சிந்திடும் கருணையாய் வந்து நம்மைக் காக்கும் பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபா அவர்களுடன் இடையறாத் தொடர்பு கொண்டது... 

புதன், 21 பிப்ரவரி, 2024

சாயி கிருஷ்ணா - புதுச்சேரி, ஸ்ரீ சத்யசாயி சேவா மையத்தின் புது விலாசம்

மணக்குள விநாயகர் அருள் பாலிக்கும் தலம். அரவிந்தர், அன்னை ஆன்மீக சுவாசம் தவழும் இடம் புதுச்சேரி என்னும் பாண்டிச்சேரி. அங்குள்ள ஆன்மீக ஒளியில் கலந்து சுடர்விட இன்று உதிக்கிறது ஸ்ரீ சத்யசாயி சேவா மையம்... 

திங்கள், 19 பிப்ரவரி, 2024

அனைத்திலும் ஊடுறுவி அனைத்தையும் பாதுகாத்து ரட்சிக்கும் இரு அவதாரங்கள்!

எவ்வாறு இரு அவதாரங்களே இவ்வுலகத்தையும் இப்பிரபஞ்சத்தையும் நிர்வகித்து ஆள்கின்றன எனும் ஆச்சர்யமான அனுபவம் இருவரின் வாய் மொழி வழியாக சுவாரஸ்யமாக இதோ...!

திங்கள், 12 பிப்ரவரி, 2024

18 உபநிஷதங்களும் சாயி உன்னத மொழிகளும் ஒன்றே!

எவ்வாறு வேத உபநிஷதங்களும் பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியின் ஞான மொழிகளும் ஒன்றாகவே திகழ்கின்றன எனும் பேராச்சர்ய பதிவுகள் சான்றாதாரங்களோடு சுவாரஸ்யமாக இதோ...!

சனி, 10 பிப்ரவரி, 2024

கடும் பிரச்சனைகளே இரு அவதாரங்களையும் பக்தர் பால் இழுத்திடும் காந்தம்!

எவ்வாறு இரு யுகங்களிலும் கடும் பிரச்சனைகள் வரும் போதெல்லாம் அது பக்தியை, ஆன்மீகத்தை , பரிபக்குவத்தை ஏற்படுத்துகிறது  எனும் ஆச்சர்யப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!

வியாழன், 8 பிப்ரவரி, 2024

தூர தரிசனத்திலேயே தீராத நோயை பாபா தூர விரட்டினார்!

எவ்வாறு ஒரு நபருக்கு இருந்த உடற் பிரச்சனையை தனது தூர தரிசனத்திலேயே பாபா அதை நீக்கினார் எனும் அதிசய அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...!

புதன், 7 பிப்ரவரி, 2024

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

பிரம்மம் சத்யம் ஜகன் மித்யா (பிரம்மமே உண்மை, உலகம் மாயை) என்பதற்கும்... சர்வம் விஷ்ணு மயம் ஜகத் (உலகமே விஷ்ணு மயம்) என்பதற்கும் முரண்பாடு இருக்கிறதே?

நீங்கள் குறிப்பிடும் இரண்டும் உண்மையே! இதை நீங்கள் புரிந்து கொள்வதில் தான் முரண்பாடு இருக்கிறது! இவை இரண்டுமே உங்களுடைய மனநிலை வளர்ச்சியை பொறுத்தே விளங்கிக் கொள்ளப்படுகிறது! 

உதாரணத்திற்கு: நீங்கள் எப்போது வந்தீர்கள்? எனும் என்னுடைய கேள்விக்கு... "இப்போது தான் வந்தேன் சுவாமி" என பதில் அளிக்கிறீர்கள்! நீங்கள் சொல்வது இங்கே அமர்ந்திருக்கும் உங்கள் உடலைத் தான் அல்லவா! 

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

"அன்புள்ள பக்தனே...‌ அருள் தரும் ஓர் கடிதம்!" -பாபாவின் அதிசய கடிதங்கள்

பேரிறைவன் பாபா தனது பக்தர்களுக்கு எழுதிய அதிசய கடிதங்களில் பேரன்பு சொட்டும் விதத்தையும் படித்து பரவசம் பெறப் போகிறோம் இதோ...

சனி, 3 பிப்ரவரி, 2024

விபத்திலிருந்து உயிர் காத்திடும் இரு வினய அவதாரங்கள்!

எவ்வாறு இரு யுகத்திலும் இரு அவதாரங்களும் தங்களது பக்தர்களுக்கு ஏற்படும் விபத்திலிருந்து உயிரை காப்பாற்றுகின்றனர் எனும் ஆச்சர்யப் பதிவு சுவாரஸ்ய சுருக்கமாக இதோ...!

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

சுவாமி! நாங்கள் எவ்வளவோ படித்தும் சம்பாதித்தும் ஏன் மனசாந்தியோடு இருக்க முடிவதில்லை?

மனசாந்தியை கல்வி அளிப்பதில்லை. 18புராணங்கள் எனும் அஷ்டாதச புராணங்களை இயற்றிய வியாச முனிவருக்கும் மனசாந்தி ஏற்படவில்லை! இறுதியில் நாரதரின் ஆலோசனைப்படி பாகவதம் எழுதியபின் தான் அவருக்கு மனசாந்தி கிடைத்தது! ஆகவே கல்வியால் மட்டுமே மனசாந்தி கிடைக்காது! பணம், அந்தஸ்து, அதிகாரம் இவற்றால் கூட மனநிம்மதி கிடைக்காது! 

"சொர்க்கம்-- நரகம்'ன்னு ஒண்ணு இருக்கா சுவாமி?" என உம்மாச்சி பாபாவை கேள்வி கேட்ட குழந்தை

குழந்தைகள் பக்தியில் பழுத்திருப்பதைப் பார்க்கும் போது அவர்களே பிறருக்கு குருவாக செயல்படுகிறார்கள் ஞான சம்பந்தர் போல்... இத்தகைய குழந்தைகளின் பாபாவுடனான ஆன்மீகத் தொடர்பு பற்றி சுவாரஸ்யமாய் இதோ...!

வியாழன், 1 பிப்ரவரி, 2024

பாபாவின் தரிசனத்திற்கு ஏங்கிய ஒரு பத்ரிநாத் யோகி! - சுவாமி திவ்யானந்த சரஸ்வதி

பத்ரிநாத் யோகி ஒருவர் ஸ்ரீ சத்ய சாயி அவதாரம் பற்றியும் தியான தரிசனம் மற்றும் நேரடி தரிசனத்திற்கான வித்தியாசம் பற்றியும் தெளிவுற மொழிந்திருப்பது சுவாரஸ்யமாக இதோ...!

புதன், 31 ஜனவரி, 2024

🚉 மீண்டும் பிரசாந்தி நிலையத்தில் ரயில்கள் இயங்கும்!!

சாய்ராம்... புட்டபர்த்தி அருகே உள்ள சுரங்கப்பாதை வேலை காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஸ்ரீ சத்ய சாயி பிரசாந்தி நிலைய ரயில் நிலையத்திற்கு வராமல் மாற்றப்பட்ட ரயில்கள், நாளை பிப்ரவரி -1,முதல் பழையபடி மீண்டும் புட்டபர்த்தி ஸ்ரீ சத்யசாயி பிரசாந்தி  -ரயில் நிலையம் வழியாக  இரண்டு மார்க்கங்களிலூம் (up & downward routes) நின்று செல்லும். 

இந்து மதத்தில் நாம் வர்ணாசிரமத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதனால் தான் அது பலவீனமாகி விட்டது என்று கருதுகிறேன். மற்ற மதங்களில் இப்படிப்பட்ட பிரிவு இல்லை... அப்படி இல்லாது போயிருந்தால் இந்து மதம் நமக்கு இன்று அதிகப் பலன் தருவதாக அமையும் அல்லவா?

'வர்ணாசிரமம்' என்பது உலகில் உள்ளவர்கள் முன்னேற்றம் அடைவதற்காக ஏற்பட்டது! ஒருவரை ஒருவர் தாழ்த்திக் கொள்வதற்காக ஏற்பட்டதல்ல... இந்த முறையினால் ஒவ்வொருவனும் தனக்கு ஏற்பட்ட கடமையைச் செய்கிறான்... மற்றொருவனுக்கு உண்டான வாழ்க்கையில் அவன் குறிக்கிடுவதில்லை... அதனால் சமுதாயம் சிக்கல் இல்லாமல் ஓடுகிறது...ஒவ்வொரு தனிமனிதனும் பொதுவாக சமுதாய வளர்ச்சிக்கு உதவுகிறான்... இது மதத்துக்கு உரிய சிறப்பு!

திங்கள், 29 ஜனவரி, 2024

திருமதி. (காபி பொடி) சாக்கம்மா | புண்ணியாத்மாக்கள்


பூர்ணாவதாரம் ஸ்ரீ சத்யசாயி பாபாவுக்காக "பாத மந்திரம்" (பழைய மந்திரம்) என்னும் கட்டிடம் புட்டபர்த்தி கிராமத்தில் அமைய திருமதி.சுப்பம்மாவும் திருமதி. கமலம்மாவும் முக்கியப் பங்காற்றினர் என்பது அனைவரும் அறிந்ததே! அந்தப் பழைய மந்திர் கட்டிடம் வெகு சீக்கிரமே சிரியதாகிப் போகும்படி மக்கள் வெகுவாகக்குவியத் தொடங்கினர். எனவே ஒரு புதிய, பெரிய கட்டிடம் தேவை என்பதையும், எதிர் காலத்தில்...பாபா பெரும் கூட்டத்தை வரவழைப்பார் என்பதையும் உணர்ந்து அந்த காரியத்தைப் பலரும் ஆர்வமுடன்மேற்கொண்டனர். அந்த முயற்சியின் விளைவாக சுவாமியின் தெய்வீக சங்கல்பத்தில் உருப்பெற்றது தான் "பிரசாந்தி மந்திர்" என்கின்ற பிரம்மாண்ட கட்டிடம். அந்தக் கட்டிடம் இன்று அடையாளம் காண முடியாத அளவிற்கு அகன்று வளர்ந்து, பொலிவுபெற்று, தன்னைச் சுற்றி ஒரு மாபெரும் நகரம் உருவெடுக்கக் காரணமானது. புட்டபர்த்தி என்னும் புண்ணிய சேத்திரத்தின் கருவறையாகிய "பிரசாந்தி நிலையம்" மந்திரத்தை நிறுவியதில் பெரும்பங்கு வகித்தவர் பெங்களூரூவைச் சேர்ந்த புண்ணியாத்மா திருமதி சாக்கம்மா

வெள்ளி, 19 ஜனவரி, 2024

இசைக் கச்சேரி நடத்துபவரோடு இறைக் கச்சேரி நடத்திய பாபா!

எவ்வாறு ஒரே இசைக் கச்சேரி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பாபாவை தரிசிக்கிறார்கள், பிறகு அவர்களுக்கு நடந்த மகிமை என்ன? சுவாரஸ்யமாக இதோ...!

புதன், 10 ஜனவரி, 2024

இரு அவதாரங்களின் விஸ்வரூப தரிசனப் பிரவாகங்கள்!!

எவ்வாறு இரு யுகங்களிலும் இரு அவதாரங்களும் தனது பக்தர்களுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்து தனது தெய்வீக சுயரூபம் ஆட்கொண்டனர் எனும் ஆச்சர்ய ஆனந்தப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!