தலைப்பு

ஞாயிறு, 30 ஜூன், 2019

போட்டோவில் பேசிய சாயி பகவான்!


சத்ய சாய்பாபாவின் எத்தனையோ மெய்சிலிர்க்கும் அற்புதங்களை நாம் புத்தகத்தில் படித்திருப்போம், பிறர் சொல்லி கேட்டிருப்போம், ஏன் நமது வாழ்வில் கூட நடந்திருக்கும். ஆனால் இந்த அற்புதமோ சற்றும் வித்தியாசமானது. 

ஒரிசாவைச் சேர்ந்த அசோக் சந்திரா என்ற ஒரு சாயி அன்பர், நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர். அவர் சம்பாதிக்கும் வருமானம் அவர் குடும்பத்திற்கு பத்தாமல் இருந்தது.  இப்படி அவர் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த தருவாயில். 1982இல் ஒருமுறை பகவான் பாபாவை தரிசிக்க புட்டபர்த்திக்கு சென்றார்.

சனி, 29 ஜூன், 2019

ஓ சாயி! யோகிகளின் தலைவரால் வணங்கப்படுபவரே!


101. ஓம் ஸ்ரீ சாயி யோகீந்திர வந்திதாய நம:

யோகி – யோகிகளின், 
இந்திர – தலைவன், 
வந்தித – வணங்கப்படுபவர்

ஜூலை 22-ம் தேதி சுவாமி சிவாநந்தரின் ஆஸ்ரமத்துக்கு இறைவன் பாபா சென்றார். சுவாமிகளின் சீடர்கள் ஹரித்வாரத்திலேயே, பாபாவை எதிர்கொண்டு அழைத்துச் சென்றனர்.

வெள்ளி, 28 ஜூன், 2019

கேக்' எப்படி ஆயினும் துணுக்கு இனியது தான்! - ரா. கணபதி


அப்படிப்பட்ட கீழ்த்தர எண்ணம் எனக்கு ஏன் தான் வந்ததோ? பின்னால் தனது போதனை இனிமையை ஊட்ட அவனே தான் அப்படி எண்ண வைத்தானோ? (சாமர்த்தியமாக பழியை அவனுக்கு தள்ளுகிறேன்)

 எந்த ஒரு மனிதனின் சாதிப்புக்கும் ஆதாரமாக அவனது மனைவியின் தியாகம் இருக்கிறது என்பார்கள். இப்படி என் பணிகளுக்கெல்லாம் ஆதரவாக இருப்பது தம்பி மோகன ராமனின் தொண்டு, தொண்டின் இனிமை,அன்பின் இனிமை, இவற்றோடு இனிப்பு தின்பண்டங்களும் 'அண்ணா'வுக்காக தவறாமல் கொண்டு வருவார். உங்களுக்கென்றா செய்கிறோம்? மாமனார் ஆத்தில், சித்தி ஆத்தில், இன்ன விஷேசம், எனக்கு தரும் போது உங்களுக்கும் கொடுக்கிறார்கள் என்பார். அதுவும் நிஜமே. அக்குடும்பங்கள் இன்று போல் என்றுமே 'நித்திய கல்யாணம்'' பச்சை தோரணமாய்' விளங்க வேண்டுகிறேன்.( எனக்கு பக்ஷணம் கிடைக்கும் என்பதற்காக மட்டும் அல்ல!)

புதன், 26 ஜூன், 2019

காயரஸமும் சாயிரஸமும்!


பாபாவை போல் பார்த்துப் பார்த்து செய்ய யாரால் முடியும்?

அம்பத்தூரில் மாடி வீட்டில் நாங்கள் குடியிருந்த போது இரவு தோறும் ஒரு குறிப்பிட்ட மூலையில் ஃபிளாஸ்கில் பாலும், வெகு 'லைட்'டான சிற்றுண்டி எதுவேணும் அம்மா வைத்திருப்பாள். தியான முடித்து வந்து அவற்றை அருந்துவேன்.

செவ்வாய், 25 ஜூன், 2019

பகவானிடம் பெற்ற அரிய நிகழ்வுகளை இதயத்திலிருத்தி என்றும் நன்றி உள்ளவா்களாக இருப்போம்!


ஒருமுறை ஸ்வாமி பிருந்தாவனத்தில் தரிசனம் தந்து முடித்து "த்ரயீ"(Trayee) என பெயரிடப்பட்ட தனது இருப்பிடத்திற்கு திரும்புகையில் அவரது பாதம் நிலத்தில் பதிருந்த கூா்மையான கல்லிலே பட்டது. உடனடியாக அந்த பாதத்திலிருந்து அபரிமிதமான இரத்தம் வெளியேற ஆரம்பித்தது. ஸ்வாமியை சுற்றியிருந்த மாணவா்கள் திடுக்கிட்டு அந்த சூழ்நிலையினை ஜாக்கிரதையாக கையாள்வதற்கு அங்குமிங்கும் ஓடினார். ஒரு மாணவன் ஸ்வாமியை நோக்கி ஓடிவந்து மண்டியிட்டு அந்தகல்லை

திங்கள், 24 ஜூன், 2019

பகவானுக்கு எதை உண்ணப் பிடிக்கும்?


பகவானுக்கு படைக்க வேண்டும் என்றால் மிகவும் ருசியாக இருக்க வேண்டும் என்று பக்தர்கள் விரும்புவார்கள். விதவிதமாக பண்டங்களை செய்து படைப்பார்கள். ஆனால் பகவானுக்கு எதை உண்ணப் பிடிக்கும் என்று பார்ப்போம்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சின்ன கிராமத்தில் வாழ்ந்துவந்தார் லட்சுமிபாய் தேஸ்முக் என்ற பெண்மணி. மண்சுவர்களால் கட்டப்பட்ட குடிசையில் வாழ்ந்து வந்தாள். அவளுடைய கணவர் வெளியூருக்கு போயிருந்தார். ஆகவே மிகவும் எளிமையாக உணவு இருந்தால் போதும் என்று இரண்டு ரொட்டிகளுக்கு மட்டுமே மாவு பிசைந்து கெட்டியான ரொட்டிகளை மட்டும் அடுப்பில் வாட்டி எடுத்து வைத்திருந்தாள். அதற்கு தொட்டுக்கொள்ள பச்சைமிளகாயையும் உப்பையும் சேர்த்து அரைத்து சட்னியாக வைத்திருந்தாள். 

வெள்ளி, 21 ஜூன், 2019

கடவுளைக் கண்ட நாத்திகவாதி!


உடுமலைப்பேட்டை திரு. R. பாலபட்டாபியின் சாயி அனுபவங்கள். 

சிறிது நேரத்தை அங்கே செலவழித்தபிறகு, நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். சிறிது நேரங்கழித்து, நம் பகவான் காரோட்டியைத் திரும்பவும் நிறுத்தச் சொன்னார். சாலையில் எந்த வாகனமும் செல்லவில்லை. அந்த நேரம் மிக அற்புதமாகவும் நிலவொளியில் மிக ரம்மியமாகவும் இருந்தது. அப்பொழுது நம் பகவான் சிறிதுநேரம் உலாவினார். அந்த சந்தர்ப்பத்தில் வண்டி ஓட்டுனர் காரின் பின்புறம் புகைபிடிப்பதற்காக ஒதுங்கிச் சென்றார். பகவான் அவரிடம் நேராகச் சென்று அவரின் பெயரை வினவினார்.

வியாழன், 20 ஜூன், 2019

பிழைத்த குழந்தையை குழைத்த அருமை!


கோலாலம்பூரில் வசித்த ஆறரை வயது தேவேந்திரனின் மெய்சிலிர்க்கும் அனுபவம். 

1976இல் கோலாலம்பூரில் இருந்த டாக்டர் கே.வி. சேகராவின் ஆறரை வயது பிள்ளை தேவேந்திரனுக்கு தொண்டையில் உபாதை ஏற்பட்டது. டான்ஸிலிடிஸ் என கருதி, டாக்டர் தந்தை ட்ரீட் செய்தார். உபாதை அதிகமாயிற்று. ஈ.என். டி.ஸ்பெஷலிட்டிடம் காட்டினார். தொண்டையிலிருந்து இரத்தமாக பெருக்கிய குழந்தையை அவர் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து கொண்டார்.

புதன், 19 ஜூன், 2019

வெள்ளை ஆடை பாபா!


கனடா நாட்டு ஆஸ்பத்திரியில் ICU வில் இருந்த  அன்பரின் கணவனை நேரில் வந்து காப்பாற்றிய சுவாமி.

பிறந்தநாள் ஊஞ்சல் உற்சவத்தில் சுவாமி வெள்ளை அங்கி பூண்டு கொள்ளை அழகாய் அமர்ந்திருப்பதை இங்கு சொல்ல வரவில்லை. பின் எதை சொல்லியிருக்கிறது? மேலே படித்தால் தெரியும்.

திங்கள், 17 ஜூன், 2019

ஸுதர்சன சாயி!


நிகில துஷ்கர்ம கர்சந! 
நிகம  ஸத்தர்ம தர்சந! 
ஜெய ஜெய ஸ்ரீ ஸுதர்சன! 
ஜெய ஜெய ஸ்ரீ ஸுதர்சன! 
- ஸ்ரீ வேதாந்த தேசிகரின் 'ஸுதர்சநாஷ்டகம்'

மேற்சொன்ன மனநோய்களின் வரிசையிலேயே வரும் ஒன்றிலிருந்து ஒரு பெண்மணி விடுதலை பெற்ற அற்புதத்தை சொல்ல வேண்டும். ஸ்தூலத்தில் தோன்றாமல், சூட்சுமமாய் செய்த அருள் லீலை.

ஞாயிறு, 16 ஜூன், 2019

அமுது பெருகும் சிரத்தில் ஆவி நோய் நஞ்சு!


ஆவி சேஷ்டை என்பது மனோ பலவீனமுள்ளவர்களையே தாக்கும். இதே மனோ பலவீனம்தான் மூளைக்கோளாறு, அபஸ்மாரம் (காக்காய் வலிப்பு) முதலிய நோய்களுக்கும் காரணம். இவை யாவற்றையுமே சுவாமி குணம் செய்ததுண்டு. பிட்டிதேவ மன்னனின் மகளை பிடித்திருந்த பேயை ராமானுஜர் ஓட்டினார். கொல்லி மழவனுடைய பெண்ணின் முயலக நோயை (அபஸ்மார வியாதியை) ஞானசம்பந்தர் குணமாக்கினார். உன்மத்த ஊமையான சிங்கள இளவரசியை மாணிக்கவாசகர் சரி செய்தார் என்றிப்படி பெண்களை பொறுத்ததாகவே பூர்வகால பெருந்தகையர் அருள் மருத்துவம் புரிந்தது போலவே நமது சுவாமியும் தாய்க்குலத்தினருக்கே இவ்வினத்தில் விசேஷ கிருபை புரிவதாக தெரிகிறது.

பிரசாந்தி நிலையம் செல்வதால் நாம் எதனை பெறுகிறோம்?


1) அடிப்படையான ஆன்மிகரீதியில் சரி செய்யும் இடம். 

2) உடல் தடவாளம் எனில் புத்தி இயங்குவதற்குரிய பொருளாகும்.இயங்குவதற்குரிய பொருள் தூய்மையற்றதாக ஆவது என்பது மிகவும் பொதுவானது. புத்தியினை களங்கப்படுத்துவதற்கு எதிரான வழி முறை தொகுப்பினை பொறுத்தும் ஒரே தலம் பா்த்திதலமாகும்.

வெள்ளி, 14 ஜூன், 2019

இப்படியும் உண்டோ ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி?


சாயி சந்திரசேகர தாஸ்வானி சாயி கல்லூரியில் சேர்ந்தபோது மிகவும் குள்ளம். நம் 'குள்ள சுவாமியே' கேலி செய்யும் அளவுக்கு 'பக்ஷணம்' போல சந்துரு பையன் இருந்தான். அவனைப் போல இன்னும் நாலு பேரும் உண்டு. இவர்களிடம் தம்மாஷ் செய்வதுடன் கோபிக்கவும் செய்வார் கோமான்! "இப்படி ஸ்கூல் பாய்ஸ் மாதிரி இருக்கப்படாது. யு மஸ்ட் பிகம் டால்" என்பார்! அவர்கள் என்ன செய்வார்கள், பாவம்!

வியாழன், 13 ஜூன், 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 15 | இசைக்காத குரலை இசைக்கச் செய்த இறைமை (PART 2) நிறைவுப் பகுதி


அன்றைய தினம் மாலை எனக்கும் நேர்காணல் கிடைத்தது. மற்ற எனது நண்பர்களுக்கும் சுவாமி அனுக்கிரகம் செய்தார். ஆதலால் நாங்கள் யாவரும் மறுநாள் அங்கிருந்து புறப்படச் சித்தமானோம். கல்கத்தா பெண்மணியும், அவள் தகப்பனாருடன் எங்களைப் பின்தொடர விரும்பியதால், நாங்கள் யாவரும் பெனுகொண்டா ரயில்நிலையம் சென்றடைந்தோம். அந்த நாட்களில் பெனுகொண்டா ரயில்நிலையத்தில்,  வடக்கே குண்டக்கல் பக்கம் மிகச்சில  ரயில்களும், தெற்கே பெங்களூர்

புதன், 12 ஜூன், 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 15 | இசைக்காத குரலை இசைக்கச் செய்த இறைமை (PART 1)


புட்டபர்த்தியில் பகவான், அன்றாட நிகழ்ச்சியாக நிகழ்த்திக் கொண்டிருந்த பல லீலா வினோதங்களில், சற்றேறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன் நான் நேரில் பார்த்து பிரமித்த ஓர் அற்புத லீலையைப் பற்றியும், அதற்கும் எனக்கும் தொடர்புடைய, என் அனுபவமாகவே பகவான் நிகழ்த்திக் காட்டிய அற்புதத்தோடு கூடிய அருள் பொழிவையும், இனிவரும் வரிகளில் உங்களுக்கு விவரிப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

செவ்வாய், 11 ஜூன், 2019

உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சத்யசாயி நிறுவனமும் இணைந்தது.


கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்(University of Cambridge) என்பது இங்கிலாந்தில், கேம்பிரிட்ச் என்னும் ஊரில் அமைந்துள்ள தொல்முதுப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் சுமார் கி.பி. 1209-இல் தொடங்கப்பட்டிருக்கும் என கணிக்கின்றனர். ஆங்கிலம் பேசும் நாடுகளில் இதுவே இரண்டாவது தொன்மை வாய்ந்த பல்கலைக்கழகம் எனக் கருதப்படுகின்றது மற்றும் செயல்பாட்டில் இருக்கும் மூன்றாவது தொன்மைவாய்ந்த பல்கலைக்கழகம் எனவும் கூறப்படுகிறது.

திங்கள், 10 ஜூன், 2019

முன்னாள் நாசா விஞ்ஞானி திரு. டாக்டர் ஆர்ட் - ஓங் ஜும்சாயின் அனுபவங்கள்.



டாக்டர் ஆர்ட்-ஓங் ஜும்சாய், முன்னாள் நாசா விஞ்ஞானி, கல்வியாளர், முன்னாள் தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சர் ஆவார். இவர் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர். இவர் நாசாவில் இருக்கும் பொழுது, நம் பகவான் அருளால், அமெரிக்காவிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு "வைக்கிங்"1"2" செயற்கைக்கோள்களை வடிவமைத்து வெற்றிகரமாக இயங்கச் செய்தவர்.

ஞாயிறு, 9 ஜூன், 2019

சமீபத்தில் பாபா சிங்கப்பூரில் ஒரு அன்பர் வீட்டில் நிகழ்த்திய அற்புதம்!


சாய்ராம் நான் ஓசூரிலிருந்து K. P. கிருஷ்ணமூர்த்தி(கிச்சு வாத்தியார்) எழுதுகின்றேன். சமீபத்தில் சுவாமி ஒரு அற்புதத்தை சிங்கப்பூரில் உள்ள ஒரு சாயி அன்பர் வீட்டில் நிகழ்த்தியுள்ளார். என் மகள் குடும்பம் கடந்த 13 வருடங்களாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார்கள் என்று உங்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் மூலமாக இந்த அற்புதம் என் காதுகளுக்கு எட்டியது. அதை நம் ஓசூர் சாயி அன்பர்களுக்கு பகிரலாம் என்று இதை எழுதுகின்றேன்.

பொன்விழா காணும் சத்ய சாயி கல்லூரி (பிருந்தாவன்)!

வைட்பீல்டில் சத்ய சாயி கல்லூரியை திறந்து வைத்த கர்நாடக முதலமைச்சர் (போட்டோ தொகுப்பு)
ஜூன் 9, 1969, திங்கட்கிழமை (50 வருடங்களுக்கு முன்)
மைசூர் முதல்வர் ஸ்ரீ. வீரேந்த்ர பாட்டில் 1969 ஜூன் 9ம் தேதி காடுகோடியில் (வைட்பீல்டு) ஆடவர்க்கான 'ஸ்ரீ சத்ய சாயி கலை மற்றும் அறிவியல் கல்லூரி'யை துவாக்கிவைத்தார்.

சனி, 8 ஜூன், 2019

பகவானின் பணியை நாம் பார்த்தால் நமது தேவைகளை அவர் கவனித்துக் கொள்வார்.

தியாகேனைகே அமிர்தத்துவ மானஸு
(அமரத்தன்மை தியாகத்தினாலேயே அடையப்படுகிறது - வேத வாக்கு)

மதுரை விஸ்வநாதபுரம் சமிதியை சேர்ந்தவர் திருமதி. கவிதா சாய்ராம்.

கடந்த 2008 முதல் பிரசாந்தி சேவையில் வருடம் 2 முறை கலந்துகொள்கிறார்.

வெள்ளி, 7 ஜூன், 2019

இறைவன் ஒருவனே குரு. அவனே சத்குரு!


1993இல் திருப்பதியை சேர்ந்த ராமாராவ் என்ற ஒருவர் பாபாவை பார்ப்பதற்காக புட்டபர்த்திக்கு வந்திருந்தார். அவர் ஏதோ ஒரு மூலையில் தர்மசங்கடத்தோடு தரிசனத்தில் அமர்ந்திருந்தார். பின்னர் தரிசனத்துக்கு வந்த பாபா பக்தர்களுக்கு தரிசனம் வழங்கி விட்டு பின்னர் உள்ளே சென்றார். பாபாவின் உதவியாளர் ஒருவர் உள்ளே இருந்து நேராக ராமராவிடம் வந்து நீங்கள்தான் ராமாராவா என்று கேட்டார். அதற்கு அவர் ஆம் என்று பதிலளித்தார். உங்களை பாபா நேர்காணலுக்கு அழைக்கிறார் என்று நேர்காணல் அறைக்கு அவரை அழைத்து சென்றார்.

வியாழன், 6 ஜூன், 2019

சாயி பகவானின் இசைக்கச்சேரி!

சனிக்கிழமை, பிப்ரவரி 22, 1948

1948 பிப்ரவரி 21ஆம் தேதி அன்று ராதாகிருஷ்ணன் அவர்களின் இரு மகன்களான அமரேந்திர மற்றும் கிருஷ்ணகுமார் ஆகிய இருவரும் பாபாவை தங்களுடைய சகோதரி விஜயகுமாரியின் திருமணத்திற்காக
குப்பம் என்னும் ஊருக்கு  பாபாவை அழைத்து வர புட்டபர்த்திக்கு சென்றார்கள்

புதன், 5 ஜூன், 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 14 | அன்பே பாபாவின் மொழி


அது அநேகமாக 1966ஆம் ஆண்டு என்று எனக்கு ஞாபகம். பகவான் கொடைக்கானலுக்கு விஜயம் செய்வதாய் அறிந்த நானும் எனது நண்பனும், சுவாமி அங்கு செல்லும் முன்பே கொடைக்கானல் சென்றோம். வாடகை அறை ஒன்று ஏற்பாடு செய்துகொண்டு, அதில் தங்கி, சுவாமியின் வருகைக்காகக் காத்திருந்தோம்.

சனி, 1 ஜூன், 2019

தத்தாத்ரேயராக ஸ்ரீ சத்ய சாயிபாபா!


பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா தான் அனைத்து இறைவடிவங்களின் ஒன்றிணைந்த அவதாரம் என்பதை பலமுறை பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். இங்கே அவர் ஸ்ரீ தத்தாத்ரேயரின் வடிவமாகவும் இருப்பதை வெளிப்படுத்திய ஒரு நிகழ்ச்சியை காண்போம்....