தலைப்பு

புதன், 31 ஜனவரி, 2024

🚉 மீண்டும் பிரசாந்தி நிலையத்தில் ரயில்கள் இயங்கும்!!

சாய்ராம்... புட்டபர்த்தி அருகே உள்ள சுரங்கப்பாதை வேலை காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஸ்ரீ சத்ய சாயி பிரசாந்தி நிலைய ரயில் நிலையத்திற்கு வராமல் மாற்றப்பட்ட ரயில்கள், நாளை பிப்ரவரி -1,முதல் பழையபடி மீண்டும் புட்டபர்த்தி ஸ்ரீ சத்யசாயி பிரசாந்தி  -ரயில் நிலையம் வழியாக  இரண்டு மார்க்கங்களிலூம் (up & downward routes) நின்று செல்லும். 

இந்து மதத்தில் நாம் வர்ணாசிரமத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதனால் தான் அது பலவீனமாகி விட்டது என்று கருதுகிறேன். மற்ற மதங்களில் இப்படிப்பட்ட பிரிவு இல்லை... அப்படி இல்லாது போயிருந்தால் இந்து மதம் நமக்கு இன்று அதிகப் பலன் தருவதாக அமையும் அல்லவா?

'வர்ணாசிரமம்' என்பது உலகில் உள்ளவர்கள் முன்னேற்றம் அடைவதற்காக ஏற்பட்டது! ஒருவரை ஒருவர் தாழ்த்திக் கொள்வதற்காக ஏற்பட்டதல்ல... இந்த முறையினால் ஒவ்வொருவனும் தனக்கு ஏற்பட்ட கடமையைச் செய்கிறான்... மற்றொருவனுக்கு உண்டான வாழ்க்கையில் அவன் குறிக்கிடுவதில்லை... அதனால் சமுதாயம் சிக்கல் இல்லாமல் ஓடுகிறது...ஒவ்வொரு தனிமனிதனும் பொதுவாக சமுதாய வளர்ச்சிக்கு உதவுகிறான்... இது மதத்துக்கு உரிய சிறப்பு!

திங்கள், 29 ஜனவரி, 2024

திருமதி. (காபி பொடி) சாக்கம்மா | புண்ணியாத்மாக்கள்


பூர்ணாவதாரம் ஸ்ரீ சத்யசாயி பாபாவுக்காக "பாத மந்திரம்" (பழைய மந்திரம்) என்னும் கட்டிடம் புட்டபர்த்தி கிராமத்தில் அமைய திருமதி.சுப்பம்மாவும் திருமதி. கமலம்மாவும் முக்கியப் பங்காற்றினர் என்பது அனைவரும் அறிந்ததே! அந்தப் பழைய மந்திர் கட்டிடம் வெகு சீக்கிரமே சிரியதாகிப் போகும்படி மக்கள் வெகுவாகக்குவியத் தொடங்கினர். எனவே ஒரு புதிய, பெரிய கட்டிடம் தேவை என்பதையும், எதிர் காலத்தில்...பாபா பெரும் கூட்டத்தை வரவழைப்பார் என்பதையும் உணர்ந்து அந்த காரியத்தைப் பலரும் ஆர்வமுடன்மேற்கொண்டனர். அந்த முயற்சியின் விளைவாக சுவாமியின் தெய்வீக சங்கல்பத்தில் உருப்பெற்றது தான் "பிரசாந்தி மந்திர்" என்கின்ற பிரம்மாண்ட கட்டிடம். அந்தக் கட்டிடம் இன்று அடையாளம் காண முடியாத அளவிற்கு அகன்று வளர்ந்து, பொலிவுபெற்று, தன்னைச் சுற்றி ஒரு மாபெரும் நகரம் உருவெடுக்கக் காரணமானது. புட்டபர்த்தி என்னும் புண்ணிய சேத்திரத்தின் கருவறையாகிய "பிரசாந்தி நிலையம்" மந்திரத்தை நிறுவியதில் பெரும்பங்கு வகித்தவர் பெங்களூரூவைச் சேர்ந்த புண்ணியாத்மா திருமதி சாக்கம்மா

வெள்ளி, 19 ஜனவரி, 2024

இசைக் கச்சேரி நடத்துபவரோடு இறைக் கச்சேரி நடத்திய பாபா!

எவ்வாறு ஒரே இசைக் கச்சேரி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பாபாவை தரிசிக்கிறார்கள், பிறகு அவர்களுக்கு நடந்த மகிமை என்ன? சுவாரஸ்யமாக இதோ...!

புதன், 10 ஜனவரி, 2024

இரு அவதாரங்களின் விஸ்வரூப தரிசனப் பிரவாகங்கள்!!

எவ்வாறு இரு யுகங்களிலும் இரு அவதாரங்களும் தனது பக்தர்களுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்து தனது தெய்வீக சுயரூபம் ஆட்கொண்டனர் எனும் ஆச்சர்ய ஆனந்தப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!

செவ்வாய், 9 ஜனவரி, 2024

தன்னிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்யவேண்டும்? - பாபா


தன்னிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்யவேண்டுமென அறிவுறுத்தி பேராசிரியர் கஸ்தூரி அவர்களுக்கு 1960 புத்தாண்டு அன்று பாபா ஆங்கிலத்தில் எழுதியருளிய பிரார்த்தனை மடல் (தமிழாக்கம்)

வெள்ளி, 5 ஜனவரி, 2024

எளிமையிலும் எளிமை - ஒரே ஒரு ராகிக் களி உருண்டை - பாபாவின் பழக்க வழக்கங்கள்!


21/10/2004 ஆம் ஆண்டு தசராவின் போது பாபா பகிர்ந்த அவரது அன்றாட சுவாரஸ்ய பழக்க வழக்கங்களை வெளிப்படையாகப் பகிர்வதற்கு ஸ்ரீ சத்யசாயி யுகம் மகிழ்கிறது.. இதைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் பலருக்கு இருக்கிறது என்பது அடிப்படை...மேலும் இறைவன் பாபாவின் பழக்க வழக்கங்கள் நமக்கான முன்னுதாரண பாடங்கள்! அதையும் தனது திவ்ய திருமொழியாலேயே பாபா தெரிவிக்கிறார் இதோ...!

வியாழன், 4 ஜனவரி, 2024

"உலகத் தலைவர்களையே உருவாக்குகிறார் ஸ்ரீ சத்ய சாயி பாபா!" - மனம் திறக்கும் காந்தியவாதி வி.கே.நரசிம்மன்

The entire book of 'Bapu to Baba' by V. K. Narasimhan has been condensed into a single post.

மகாத்மா காந்தியின் அறவழியில் ஈர்க்கப்பட்ட வி.கே நரசிம்மன் நீண்ட நெடிய நேர்மையான பத்திரிகையாளராக திகழ்ந்து , அதன் வாயிலாக பாபாவின் ஆன்மீக அணுகுமுறையை எவ்வாறு உணர்கிறார்? என்பது மிகத் தெளிவாக சுவாரஸ்யமாக இதோ...

351-400 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!

பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..

செவ்வாய், 2 ஜனவரி, 2024

ஒரு மந்திரவாதி விடுத்த பயங்கர சவால்! - பாபாவின் மகிமைத் திருப்புமுனை என்ன?

ஒரு பக்தையின் மகளுக்கு குழந்தையே இல்லை... பரிதவித்து பல்வேறு பரிகாரம் செய்தும் எதுவும் பலிக்கவே இல்லை! இதில் ஒரு மந்திரவாதி வேறு சவால் விடுகிறார் , அது என்ன சவால்? அந்த பக்தை என்ன செய்தாள்? குழந்தை பிறந்ததா? இல்லையா? சுவாரஸ்யமாக இதோ...!