தலைப்பு

திங்கள், 29 ஏப்ரல், 2019

உயிரும் நீயே, உணர்வும் நீயே!

சிதம்பரத்தைச் சேர்ந்த திரு. டி.சி. ஏகாம்பரம் அவர்களின் சாயி அனுபவங்கள்.

நான் சிறுவனாக இருந்த போதிலிருந்தே என் இதயத்தில் இரண்டு துளைகள் இருந்தன. அவ்வப்போது வலியால் துடிப்பேன். என்னுடைய முப்பதாவது வயதில் திருமணம் நடந்து மூன்று ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. ஏழைமை நிலையில் இருந்த நான் வறுமையாலும், இதய வலியாலும் துன்புற்று நடக்கமுடியாமலும் கஷ்டப்பட்டேன்.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

ஓ சாயி திக்கற்றவர்களுக்கு உதவுபவனே!

39. ஓம் ஸ்ரீ சாயி அநாத நாதாய நம
அநாத நாதாய – திக்கற்றவர்களின் நாதனுக்கு

சுவாமி காருண்யாநந்தா ராஜமஹேந்திரத்தில் ஊனமுற்றவர்களுக்கும் திக்கற்றவர்களுக்கும் ஓர் இல்லம் நடத்தி வருகிறார். ஒரு நாள் காலை அவர் இல்லத்திலிருந்து வெளியே வந்த போது, துயரம் மிகுந்த பெண் ஒருத்தி

சனி, 27 ஏப்ரல், 2019

பஜனை பாட்டிற்கு தாளம் போட்ட சுவாமி!



ஷெனாய் நகர் பிரேமா அவர்கள், தினமும் மாலையில் விளக்கு ஏற்றியதும், ஒரு சிறு வழிபாடு ஆற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார், பிறகு, மூன்று பஜனைப்  பாட்டுக்கள் பாடுவார். அதன் பின்னர் ஆர்த்தியும் எடுப்பார். மூன்று

வியாழன், 25 ஏப்ரல், 2019

அதே பாபாதான் இவர் - 6: M.S. தீக்ஷித்தின் அற்புத அனுபவம்


M.S.தீக்ஷித் என்பவர் குழந்தையாக இருந்தபோது ஷிர்டி சாயிபாபாவைப் பார்த்திருக்கிறார். அவரது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் பகவான் சத்ய சாயிபாபாவுடன் பிருந்தாவனத்தில் வாழ்ந்திருக்கிறார். சிறுவனாக இருந்தபோது பொறுக்க முடியாத ஒற்றைத் தலைவலியால் (மைக்ரெய்ன்)

சத்ய சாயிபாபாவின் மிகப்பெரிய அற்புதம் - கல்கி ராஜேந்திரன்


ஸ்ரீ சத்ய சாயிபாபா எத்தனையோ அற்புதங்களைச் சாதிக்கிறார், பார்க்கிறோம்; கதை கதையாகக் கூறக் கேட்கிறோம். அவற்றிலெல்லாம் மிகப்பெரிய அற்புதம், அவரது தரிசனத்துக்காகக் காத்திருக்கும் மக்களிடையே காணப்படுகிற கட்டுப்பாடுதான். கோவில்களில் சுவாமி தரிசனம் செய்யப்போகும் மக்கள்

புதன், 24 ஏப்ரல், 2019

பாபாவின் சங்கல்பத்தால் கர்ப்பப்பை இல்லாத தாய்க்குப் பிறந்த அதிசயக் குழந்தை!


நம் சுவாமியின் சங்கல்பம் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் ஆற்றல் கொண்டது. இது ஒரு மாபெரும் அற்புதம்!

ஒரு தம்பதியினர் (இருவரும் Gynaecologist - கர்ப்பப்பை மருத்துவர்கள்) சுவாமியிடம் பல முறை நேர்முகப் பேட்டி கிட்டிய பாக்கியசாலிகள். அவர்களுக்குப் பல வருடங்களாகக் குழந்தை இல்லை. ஒருமுறை நேர்முகப் பேட்டியின்போது சுவாமி அவர்களிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டு கேட்டார்.

ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திற்கு பிறப்பு இறப்பு என்பதே இல்லை! - திரு. கல்கி ராஜேந்திரன்


பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற அற்புதப் படைப்புகளை படைத்த காலம்சென்ற திரு. கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஒரே மகனும், தற்போது கல்கி குழுமத்தை நிர்வகித்து வரும்  திரு. கல்கி ராஜேந்திரன் அவர்களின் சாயி அனுபவங்கள்... 

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

ஓ சாயி! சரணடைந்தவரைக் காப்பவனே!


35. ஓம் ஸ்ரீ ஸாயி சரணாகத த்ராணாய நம

ஆகத – வந்த,
சரண் – சரணம்,
த்ராண – காப்பாற்றுபவர்

பக்தர் ஒருவர்! தனது வீட்டில் பகவானின் பஜனையை விடாது தினமும் நடத்தி வந்தார். அவருக்கு ஒருநாள் பயமுறுத்தல் கடிதம் ஒன்று வந்தது. பஜனையை நீ

சுவாமி கனவில் அருளிய மருந்து!


திருவனந்தபுரம் நீலாம்பிகையைச் சில நாட்களாக, முதுகிலும், கழுத்துபுறத்திலும், ஒருவலி தோன்றி துன்புறுத்தி வந்தது.அவரால் சற்று நேரம்கூட உட்கார்ந்திருக்க முடிவதில்லை. அவருடைய கணவர், டாக்டர்

தூய மனதுடன் அழைத்தால் சாயி பகவான் எங்கும் வருவார்!


சாயிராம். பகவானின் தாமரைப் பாதங்களில் பணிவான வணக்கங்கள்!

இன்று (15.04.2019) எனது இல்லத்திற்கு பகவான் ஒரு பிச்சைக்காரர் (இப்பதத்தை பயன்படுத்துவதற்கு மன்னிக்கவும்) வடிவத்தில் நேரில் வருகை புரிந்தார். ஃபிரான்சின் உஸைன்ஸ் சென்டரில் வீட்டிற்குத்  தேவையான

திங்கள், 22 ஏப்ரல், 2019

பாபாவின் புகைப்படத்தை குப்பைத் தொட்டியில் போட்ட பாவிக்கு பாபா கொடுத்த பரிசு..


இன்று சத்ய சாயிபாபாவின் படத்தை எங்கு பார்த்தாலும் கும்பிட்டு சாயி காயத்ரி சொல்லும் நான் ஒரு காலத்தில் அவரின் புகைப்படத்தை குப்பைத் தொட்டியில் எறிந்திருக்கிறேன். அப்படிப்பட்ட இந்தப் பாவிக்கு அவர் காட்டிய கருணை  சொல்லில் அடங்காது. தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றிருந்த எனக்கு சுவாமி தன்னுடைய அற்புதத்தால் எவ்வாறு காப்பாற்றினார் என்பதை  ஜெயகிருஷ்ணன் (Jaykay) ஆகிய நான் உங்களோடு இந்தப் பதிவில் பகிர்கிறேன்...

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

''அல்லா சாயி'' - எல்லாம் பாபாவின் கருணைதான்!


ஒரு எளிய முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் பட்ட கஷ்டங்கள் நாங்கள் வணங்கும் அல்லாவிற்குத்  தான் தெரியும். வறுமை, நிரந்தர வருமானம் இல்லை. எங்கள் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு, மொட்டை மாடியில்

பிரபல பாடகர்கள் பாடிய சாயி பாடல்கள்



முழுதாய் உணர்ந்தவர்  யாரோ - பாரத ரத்னா M.S. சுப்புலட்சுமி

ஞானத்தின் உருவானவனே சத்ய சாயி பாபா -T. M. சௌந்தரராஜன்

த்வாரகாமாயியில் வஸிப்பவரே!



ஓம் ஸ்ரீ ஸாயி த்வாரகாமாயி வாஸினே நம

த்வாரகா மாயி – ஷிர்டியில் உள்ள இடங்களில் ஒன்று, 
வாஸினே – வஸிபவருக்கு

சீரடி பற்றி கொஞ்சமும் கேள்விப்படாத தன்னுடைய ஆரம்பகால பக்தர்கள் சிலரை இளம் சாயி, ஷிர்டிக்கு போய் வருமாறு உத்ஸாகப் படுத்துவார். ஷிர்டிக்கு போகும் மார்க்கம், அங்கு கிணற்றில் நீர் இறைக்கும் முறைகள், விவசாயம் செய்யும் வகை, ஸமாதியைச் சுற்றிவைத்திருக்கும் படங்கள் இவைகளைப் பற்றி நெடுநாள் அங்கேயே இருந்து வாழ்ந்து, நன்கு அறிந்தவர் போல சொல்லுவார்.

சனி, 20 ஏப்ரல், 2019

சாப்பாடு ரெடியா? / தாயும் நானே



மீனாட்சி அது தான் என் பெயர். என் கணவர் ஸ்ரீ.ஸங்கம் எங்களை ''ஸங்கம்ஸ்'' என்று நண்பர்கள் குறிப்பிடுவர். 1960ல் பம்பாயில், வடாலா என்ற பகுதியில் இருந்தோம். ஸங்கம் ஒரு புகழ் பெற்ற கம்பெனியின் பாக்டரியில் வேலை பார்த்து வந்தார்.

என் மனைவிக்கு சாயிநாதன் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்!


பூஜை அறையை எட்டிக்கூட பார்த்திராத என் மனைவியை சுவாமி தன் அற்புதத்தால் பூஜை அறையே கதி என்று மாற்றிய அற்புதக் கதைதான் இது. ஆம் எங்கள் வாழ்வில் நடந்த அந்த மெய்சிலிர்க்கும் நீண்ட அனுபவத்தைச் சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் எழுதி உள்ளேன்.

வியாழன், 18 ஏப்ரல், 2019

புதன், 17 ஏப்ரல், 2019

கோவை சாயிபாபா காலனி பாபா கோவிலுக்கும் ஸ்ரீ சத்ய சாயிக்கும் உள்ள தொடர்பு!


இதற்கு முன் எங்கும் இல்லாத ஒரு அவதாரத்திற்கு இன்னொரு அவதாரம் செய்த பிரதிஷ்டை, நடத்திய வைபவம், பகிர்ந்த அருளுரை, கொடுத்து வைத்தவர்கள் கண்களால் கொடுத்து வைத்த கடவுள் ஸ்ரீ சத்ய சாயி பிரதிஷ்டை செய்த கோவை நாகசாயி மந்திரை குறித்து பாபாவே பேசிய அதிசய ரகசியங்கள் இதோ...

தர்மம் தலைகாக்கும்!



திருப்பதி வெங்கடாசலபதிதான் என் இஷ்ட தெய்வம். அவரே சத்ய சாயிபாபாவாக மனித உருவில் நடமாடுகிறார் என்பது என் நம்பிக்கை. 
1980-ம் வருடம் அலுவலக விஷயமாக ஆந்திராவிலுள்ள விஜய நகரத்தில் தங்கியிருந்தேன். அப்போது என் மேலதிகாரியாக இருந்தவர் அரசியல் செல்வாக்கு மிகுந்தவர். அதை பிரயோகித்து எனக்கு தொந்தரவு கொடுத்துக்

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

ஷீரடி பாபா காலத்தில் வாழ்ந்த பெத்த பொட்டு அம்மையாரின் சத்ய சாயி அனுபவங்கள்!

அதே பாபாதான் இவர்  - 4

ஸ்ரீ சத்ய சாயி பக்தர்களுக்கு பெத்த பொட்டு அம்மையாரை (சாரதா தேவி) தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஸ்ரீ சத்ய சாயி விரத கல்ப பூஜையை முதன்முதலில் வழங்கியவர் இவரே. இந்த அம்மையார் ஷீரடி சாயி, சத்ய சாயி என இரு பாபாக்களையும் பார்த்துப் பழகி ஆசி பெற்றவர் ஆவார்.

திங்கள், 15 ஏப்ரல், 2019

நம்முடைய ஒவ்வொரு பிரார்த்தனையும் பகவான் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்!


”என்னை அடைய ஒரே வழி...தூய உணர்வே!!!”- பகவான் பாபா

பக்தர்களின் ஸகலவிதமான விருப்பங்களையும் தருபவர் பாபா! பாபாவின் பக்தர் ஒருவர் தினமும் அஷ்டோத்திரமும், வியாழக்கிழமைகளில் ஆயிரத்தெட்டு நாமங்கள் ஓதி பாபாவை
வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். 

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

ஓ ஸாயி! எல்லாவித பயங்களையும் போக்கி காப்பவனே!

ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ பய நிவாரிணே நம

ஸர்வ – எல்லா வித
பய – பயங்கள் 
நிவாரிணே – போக்குபவருக்கு

பாபா அவர்கள் ஊழின் தத்துவத்தைப் பற்றி எப்போதும் கூறுவார். எவராயினும் தன்னுடைய அருளுக்கு பாத்திரமானால் அது ஊழ்வினைப் பயன் என்று அடிக்கடி சொல்லுவார். “கட்டுப்பாடான வாழ்க்கை, தன்னலமற்ற எல்லா ஜீவராசிகளுக்கும் சேவைசெய்தல் இவைகளை கடைபிடித்தால் என் அருளைப் பெறமுடியும்” என்று கூறுவார்.

சனி, 13 ஏப்ரல், 2019

வெவ்வேறு சாதிகளை சேர்ந்த இரு சாயி உள்ளங்களுக்கு திருமணம் செய்து வைத்த சாயி பகவான்!


பகவான், தனது இருபத்தி எட்டாவது அகவையில் நிகழ்த்திய அதி அற்புதம் இதோ! 

இது1954ல் வாரங்கல்லில் நடந்தது. பகவானின் இரு பக்தர்கள்களான அவர்கள் வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள். அவர்கள் தத்தம் குடும்ப மூத்த உறுப்பினர்களின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். மிகவும் சீற்றம் கொண்ட இருவரின் பெற்றோர்களும்,

ஸ்ரீ ராமனாக சாயிராமன்!


பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்னையான ஈஸ்வரம்மா, பெங்களூர் அருகில் அமைந்துள்ள வைட்ஃபில்டில் 1972 ஆம் வருடம் தமக்கு ஏற்பட்ட ஒரு தெய்வீக அனுபவத்தை தன்னுடன் இருந்த பெத்த பொட்டு என அழைக்கப்பட்ட பக்தையிடம் பகிர்ந்து கொண்டார்.
அன்னை ஈஸ்வரம்மா குதூகலத்துடன் பெத்த பொட்டு அம்மையாரிடம், “நான் எனக்கு ஏற்பட்ட மிக உன்னதமான அனுபவத்தை உன்னிடம் சொல்ல வேண்டும். இதை யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

பகவானின் கருணை!


நல்லவரெல்லாம் மகிழட்டும்! தீயவரும், பொய் சொல்பவரும் கொடூர மனம் கொண்டோரும் கூட மகிழட்டும்!
என்னுடைய கருணை அவர்களைப் புனிதமான பாதைக்குத் திருப்பிவிடும்! பாவம் செய்பவர்க்கும்,பழியினால் விழுந்தவருக்கும், என் கதவுகள் மூடப்படுமானால், அவர்கள் எங்கே போவார்கள்?

ஆதாரம்: சனாதன சாரதி, ஜனவரி 1995

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

ஹோவர்ட் மர்ஃபட் அவர்களின் முதல் அனுபவம்!


விஞ்ஞானத்தை மீறி இயங்கும் எந்த செயலுமே அற்புதம்தான் என்று சொல்ல வேண்டும்.
"இப்படி நடக்குமா" ? இப்படி முடியுமா  ? என்று கேள்வி கேட்டால் விடை தெரியாது. ஆனால் அற்புதங்களின் சக்தியை உணர்ந்து அனுப்பப்பட்டவர் ஆம் முடியும்  !! ஆம் நடக்கும் !! என்றே பதில் கூறுவர்.

ஒளி வடிவில் உருவம் காட்டுவது, தொலைவில் நடப்பதை கண்டறிவது, சிறிய அளவு உணவை பன்மடங்காக்கிவது,  வியாதியஸ்தரையும் அங்கஹீன ரையும், ஸ்பரிசமாத்திரத்தால் குணப்படுத்துவது, இறந்தவர்களை மீட்பது, மகா பாவிகளை திருத்துவது.. இவையெல்லாம் கிருஷ்ணபரமாத்மாவின் அற்புதங்களாக பகவான் தாஸ் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 9 ஏப்ரல், 2019

பக்தர்கள் வைத்துள்ள நம்பிக்கையின் ஆழத்தினை நீங்கள் அறிவீர்களா?


இறைவனுடைய அருளுடன் ஒருவனால் வாழ்வில் எதனையும் சாதித்திட இயலும். இறைவன் தரும் சோதனைகளை எதிர்கொண்டு, நீங்கள் இறைவனின் மீது முழுமையான நம்பிக்கையினை வைத்து, உங்கள் கடமையினை செய்து வந்தால், நிச்சியமாக நீங்கள் வெற்றி காண்பீர்கள்.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

சாயி பற்றி சாயி!


"இந்நாள் மட்டுமல்ல, எந்நாளும் யார் முயன்றாலும், எவ்விதம் ஆராய்ந்தாலும், எத்தனை காலம் தவமிருந்தாலும், என் உண்மை தத்துவம் மக்களுக்கு விளங்காது" என்று தன் அண்ணனுக்கு எழுதிய கடிதத்தில் சுவாமி தமது 14ஆவது வயதிலேயே குறிப்பிட்டுள்ளார். ஆயினும் ஆங்காங்கு சுவாமி அருளியிருக்கும் சொற்பொழிவுகளுள் தன் ஸ்வரூபம் குறித்து விளக்கம் தந்ததுண்டு. அதில் வெளிவந்த விபரங்களில் சிலவற்றை அடியிற் காணலாம்:

நீ ஏன் பயப்பட வேண்டும்?


அன்பின் வடிவங்களே! 
கடவுள் தனகு தெய்வீக சங்கல்பத்தால் எதையும் செய்வான். எல்லாம்வல்ல இறைவன் எப்பொழுதும் உன்னுடன், உன்னுள், உன்னைச் சுற்றி இருக்கும்போது நீ ஏன் பயப்பட வேண்டும்? அத்தகைய தைரியமும் நம்பிக்கையும் கொண்டு நட. இவ்வுலகில் கடவுள் நம்பிக்கையைக் காட்டிலும் மகத்தான சக்தி எதுவும் கிடையாது. 
- பாபா

சனாதன சாரதி: செப்டம்பர், 200

♥ மனத் திருத்தகமாக மாறிய முடி திருத்தகம்!

(திரு. கே. ராஜேந்தின்,அழகு ஹேர் கட்டிங் சலூன், கள்ளக்குறிச்சி அவர்களின் சாயி அனுபவங்கள்)

கள்ளக்குறிச்சி தாலுகாவில் நல்லாத்தூர் கிராமத்தில் ராஜேந்தின் என்ற ஒருவர் சின்ன கடை போட்டு முடி திருத்தும் தொழில் செய்து வந்தார். அப்போது வாடிக்கையாளரான சாயிபாபா பக்தர் ஒருவர், பாபாவின் படம் ஒன்றைத் தந்து, அவரின் மஹிமைகள் பற்றிக் கூறியிருக்கிறார்.ஆனால் அவருக்கோ பாபாவை

வியாழன், 4 ஏப்ரல், 2019

"காலம்" முழுவதும் பகவான் கையில்

முன்னாள்  பிரதமர் பகதூர் சாஸ்திரி அவர்களின் தனிப்பட்ட   உதவியாளராக இருந்த திரு. தியாகராஜ் அவர்களின் சாயி அனுபவம்:

(30 நாள் கால அவகாசத்தை 30 வருடங்களாக மாற்றினார் பாபா)

சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த போது, அவரின் தனிப்பட்ட உதவியாளராக இருந்தவர் தியாகராஜ். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, பெங்களூருக்கு மருத்துவப் பரிசோதனை பெறச் சென்றார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கேன்சர் நோயாளி என முடிவு செய்தனர். அவர் மூன்று மாத காலம்தான் உயிர்வாழ முடியும் என்று கூறினர். அவரிடம் மேலும் “சார் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் குறிப்பாக ஒன்று தெரிவிக்கிறோம். உங்கள் வியாதிக்குத் தீர்வு உண்டு. பகவான் சாயிபாபாவின் அருளை வேண்டி, உங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். வேறு எந்த வழியும் இல்லை. பாபாவின் பக்தரான புகழ்பெற்ற விஞ்ஞானி சூரி பகவந்தம் இப்போது சிகிச்சைக்காக இந்த மருத்துவ மனையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காண ஸ்வாமி நாளை இங்கு வருகிறார். இந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று கூறினர்.

ஆனால் தியாகராஜ் இந்த அறிவுரையை ஏற்கவில்லை. “நான் பிரதமரின் தனிப்பட்ட உதவியாளன், எந்த பாபாவின் காலிலும் விழவேண்டிய தேவை எனக்கு இல்லை” என்று கூறி, அவர் தன் மனதுக்குச் சரி எனப்பட்டதைப் பின்பற்றி, அங்குமிங்கும் மருத்துவ உதவி நாடிச் சென்றார். இரண்டு மாதம் கழித்து அதே மருத்துவமனைக்குத் திரும்பி வந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார். முன்பு கூறியது போலவே, மருத்துவர்கள் அவர் ஆயுட்காலம் சுமார் ஒரு மாதம்தான் என்று கூறினர்.

தியாகராஜ் பதற்றத்துடனும், கவலையுடனும் புட்டபர்த்திக்கு அவசரமாகச் சென்றார். அவர் தரிசனத்திற்கு காத்திருந்த போது, பாபா அவரை நெருங்கி “கேன்சர்?” என்று கேட்டார். பாவம், தியாகராஜ் மனமுடைந்து கண்ணீர் விட்டு, பாபாவின் மலர்ப் பாதங்களில் வீழ்ந்தார். பாபா அவருக்கு விபூதி வரவழைத்துக் கொடுத்து, உட்கொள்ளும்படிக் கூறினார். இவ்வாறு மூன்று நாட்கள் கடந்தன. மூன்றாவது நாள் பகவான் ஸ்வாமி அவரிடம் “கேன்சர் இஸ் கேன்சல்டு” என்று கூறினார்.

பிறகு நடைபெற்ற மருத்துவப் பரிசோதனையில், தியாகராஜிடம் கேன்சரின் ஒரு சுவடு கூடக் காணப்பட வில்லை. இந்தச் சம்பவம் 50 வருடங்களுக்கு முன் நடந்தது. மூன்று மாதம் என்று இருந்த அவரது ஆயுளைச் சுமார் 30 ஆண்டுகள் நீட்டித்தார் சுவாமி. அந்த 30 ஆண்டுகளும் பிரசாந்தி நிலையத்தில் உள்ள சனாதன சாரதி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார் தியாகராஜ். காலம் முழுவதும் கருணை மிகு‌ந்த பகவான் கையில் உள்ளது.

ஆதாரம்: பெங்களூரு திரு. பாலசுப்ரமணியன் அவர்களின் நேரடி அனுபவம்.


அகில இந்திய ஸாயி சமாஜத்திற்கு பகவான் வருகை தந்த போது தெரிவித்த கருத்து 


ஜனவரி 1959

சென்னையில் உள்ள அகில இந்திய ஸாயி சமாஜத்திற்கு ஸ்ரீ ஸத்ய ஸாயிபாபா அவர்கள் வருகை தந்த போது தெரிவித்த கருத்து தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராமன், ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிய அவதாரங்கள் இரண்டும் வாழ்க்கை நெறியிலும்,கருத்திலும் மாறுபட்டே இருந்தன. இரண்டு அவதாரங்கள் போதித்த வழிகளும் ஒன்றுக்கொன்று சிறிது மாறானவை.ஆனால் இருவரும் ஒருவரே என்பதில் ஐயமில்லை. அதை போலவே என்னுடைய தோற்றங்களின் அடிப்படை தன்மையை ஆராய்ந்து பார்ப்பவர் அந்த ஸாயி சக்தி தான் இன்றும் மானிட வடிவில் வந்திருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்வர் "

ஆதாரம்: Bhagawan Sri Sathya Saibaba Satcharitra book - Published by Giri publication. 

அன்னை ஈஸ்வரம்மா அவர்களின் அனுபவங்கள்!

அதே பாபாதான் இவர் - 2

ஈஸ்வரம்மா, சத்யா ஒரு சமயம் தனக்கு எதிரில் வயதான தாடியுள்ள மனிதராகக் காட்சியளித்தது பற்றி சுப்பம்மாவிடம் கூறினார். இன்னொரு சமயத்தில், “உற்றுக் கேளுங்கள் ஷீரடி சாயி இங்கு இருக்கிறார்” என்று கூறிய போது தனக்கு ஏற்பட்ட பரவச அனுபவத்தைப் பற்றிப் பேசுகிறார். அவளும் அந்த அறையி-ருந்த ஒவ்வொருவரும் கனத்த மரப்பாதுகைகள் அணிந்த காலடிச் சப்தம் முன்னேறி வருவதைக் கேட்க முடிந்தது. பாபா

என் பணியை நீ செய்தால் உன் வேலையை நான் பார்த்துக்கொள்வேன்.

என் பணியை நீ செய்தால் உன் வேலையை நான் பார்த்துக்கொள்வேன்!
~பகவான் பாபா

மும்பை சத்ய சாயி நிறுவன தத்து கிராமமான பைர்வாடி (Bhairwadi) கிராமத்தில் வசிக்கும் திரு. ஆகாஷ் அவர்கள், நிறுவன சேவைப் பணிகள் அந்த கிராமத்தில் நடைபெற 3 வருடங்களாக நிறுவனத்திற்கு உதவியாக இருப்பவர். 

புதன், 3 ஏப்ரல், 2019

பிருகு முனிவருடைய தீர்க்க தரிசனங்கள்!


ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பிருகுமுனிவர் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் ஜாதகத்தை கணித்திருக்கிறார்நூறு ஓலைச்சுவடிகள் ஸ்ரீ சத்ய சாயியின்  வாழ்க்கையைப் பற்றி பெங்களூரில் இப்பொழுது வசித்து கொண்டிருக்கும் சாஸ்திரி ஒருவருடைய பாதுகாப்பில் பத்திரமாக உள்ளதுமுப்பத்தியொன்று அல்லது முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு
முன்பாக இவர் இந்த ஓலைச்சுவடிகளை பகவானுடைய தெய்வீக

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

அதே பாபாதான் இவர் -1 (சிஞ்சோலி ராணியின் சாயி அனுபவங்கள்)

அதே பாபா தான் இவர் - 1
(சிஞ்சோலி  ராணியின் சத்ய சாயி அனுபவங்கள்)

நைஜாம் அரசாங்கத்தைச் சேர்ந்த  சிஞ்சோலியின் ராஜா ஷீரடி பாபாவின் பக்தர். அவர் ஷீரடி பாபாவோடு  மாதக்கணக்கில் தங்குவார். அரசர்  காலமான பிறகு, ராணியார்(ராணி லட்சுமி பாய்) அப்போது  15 வயதேயான புட்டபர்த்தி சத்ய நாராயணனை, ஷீரடி பாபாவின் அவதாரம் எனக் கேள்விப்பட்டு புட்டபர்த்தி வந்து அவரை வணங்கி, சிஞ்சோலிக்கு அழைத்துச் சென்றார்.

சத்ய சாயி பகவானின் உத்தரவை நிறைவேற்றும் நீர், நிலம், காற்று.

(சென்னையை சேர்ந்த சாயி அன்பர் திரு வைத்தியநாதன் அவர்களின் அனுபவப் பக்கங்களிலிருந்து..)

1970-ல் இந்தியாவின் மானம் கப்பலேறாமல் தடுக்கப்பட்டது. பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலையில் (Integral Coach Factory) வைத்தியநாதன் என்பவர் பொது மேலாளராக  இருந்த சமயத்தில், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் 100 ரயில் பெட்டிகளை  ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய

கூப்பிட்ட நொடியுள் ஓடி வந்த ஆபத்பாந்தவன்


திருமதி. சுசீலா அவர்கள் எவ்வாறு ஸ்வாமியால் காப்பாற்ற பட்டார் என்பதை பேராசிரியர் கஸ்தூரி அவர்களின் ஆனந்த பகிர்வு தங்களுக்காக…

ஜீன் 22ம் தேதி 1959-ம் ஆண்டு சத்யசாய் பாபா பக்தர்களுடன் சேர்ந்து இரவு உணவு அருந்திக் கொண்டு இருந்தார்.  திடீரென்று ஸ்வாமியின் உடலின் வெப்பநிலை 104.5 டிகிரிக்கு உயர்ந்து, 5 நிமிடத்திற்கு பிறகு 99 டிகிரிக்கு குறைந்தது. அந்த 5 நிமிடம் ஸ்வாமி 104.5 டிகிரி வெப்பத்தை தன் உடலில் ஏற்றுக்கொண்டது தன் பக்தை சுசிலாவிற்காக.  ஆனால் பக்தர்களுக்கு இந்த செய்தி தெரியவில்லை.  அதுதானே நம் ஸ்வாமியின் தனிச்சிறப்பு.  எங்கோ நடக்கும் விபத்தை அறிந்து தன் உடலை வருத்தி பக்தர்களை எப்போதும் காப்பார்.

காலம்சென்ற பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவின் சாயி அனுபவங்கள்


எங்கள் வாழ்க்கையை மாற்றிய முதல் சாயி தரிசனம்
( காலம்சென்ற பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி)

பாபாவின் முதல் தரிசனம் கிடைத்த மாத்திரத்தில் என் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.

குற்றவாளியை கூட திருத்தும் கருணை உள்ளம் பாபாவுக்கு உண்டு!


'கல்பகிரி' என்ற குற்றவாளி கொலை ஒன்றை செய்துவிட்டு,தலைமறைவாகி, இமயம் சென்று காஷாயம் பூண்டு,அத்வைதத்தைப் பற்றி சொற்பொழிவாற்றும் அளவுக்கு புலமை பெற்றான். அவன் ஒரு சமயம் பிரசாந்தி நிலையத்திற்கு வந்து பாபாவை தரிசித்த போது "தண்டனை யை அடுத்த பிறவிக்கு தள்ளிப் போடாதே. குற்றத்தை ஒப்புக்கொள், காவியை களைந்து விடு" என ஆலோசனை கூறினார்.

என்னை விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி நீ என் குழந்தையே!


ஸ்வாமியின் வாழ்வில் நடந்த இரு சம்பவங்கள்.. 

(1) கர்நாடக மாநிலத்தில் உள்ள "கொத்தனகட்டா" என்னும்  ஊரில் இருந்து இரு சிறுவர்கள் பாபாவைப் பற்றி கேள்விப்பட்டு செலவுக்கு கூட பணமின்றி கடன் வாங்கிக் கொண்டு புட்டபர்த்தி சென்றார்கள்.

🇻🇪 வெனிசுலா நாட்டு அதிபா் பகவான் சத்திய சாயி பாபாவின் பக்தா்

வெனிசுலா சாயி மையங்களின்  சாயி சேவைகளும்

அழகிய கரீபியன் பீச்சுகள், பனிபடர்ந்த ஆண்டிஸ் மலைத்தொடர் என இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் வெனிசுலா, எண்ணெய் வளம் கொண்ட பொக்கிஷ நாடு. தற்போதைய வெனிசுலா நாட்டு அதிபா் திரு. நிக்கலோஸ் மதுரோ ஶ்ரீ சத்திய சாயிபாபாவின் ஒரு தீவிர பக்தா் ஆவாா். மேலும் அவரது ஆன்மிக குருவான ஶ்ரீ சத்திய சாயி பாபாவின் பெரிய புகைபடத்தை அவரது காரகஸ் அலுவலகத்தில் வைத்துள்ளாா்.

மறக்க வேண்டியவைகளை மறந்து இறைவனை அடையுங்கள்

அனைத்து இந்திய ஶ்ரீ சத்தியசாயி சேவை நிறுவனங்களின் தலைவா் திரு. நிமிஷ் பாண்ட்யா அவா்கள் பெற்ற நோ்முக பேட்டியிலிருந்து.. 

எனது தந்தை ஒரு நுண்ணறிவுள்ள வழக்கறிஞராக இருந்தவா். விநோதமான நினைவு ஆற்றல் பெற்றவா். ஒருநாள் பிரசாந்தி மந்திரின் தாழ்வாரத்தில்

ஸ்ரீ சத்ய சாயிபாபா தன் கையால் உண்டாக்கும் பொருட்களை அவரே பயன்படுத்துவார?


பகவான் சத்யசாய்பாபா பக்தர்களுக்கு துன்பம் வந்த போதெல்லாம் கையசைப்பின் மூலம் விபூதி, தாயத்து என வரவழைத்து நிவர்த்தி செய்தார். அதுபோலவே பாபா தனக்கு துன்பம் வரும்போது இம்மாதிரியான அற்புதங்களால்  சரி செய்து கொள்ள முடியுமா?

(சாதாரண பக்தனுக்கு இம்மாதிரியான கேள்வி எழுவது நியாயமே! அதுபோல் சம்பவமும் நிகழ்ந்தது)

மகரிஷி என்னை அடைந்துவிட்டார்! - பாபா

1950ம் வருடம் ஏப்ரல், 14ம் தேதி விசித்திரமான நிகழ்வு ஒன்று புட்டபா்த்தியில் நிகழ்ந்தது.

அது ஶ்ரீ ரமணமகரிஷி மஹாசமாதி அடைந்த நாளாகும். இதுபற்றி ஶ்ரீவரது எனும் பக்தா் தெரிவிக்கிறார்... 

திருவண்ணாமலையில் ஶ்ரீரமணமகரிஷி மறைந்த இரவு 9.00மணி அளவில் கீழே விழுவதைப்போன்ற அச்சுறுத்தும் வகையில் திடீரென அசைவற்று பகவான் பாபா அவர்கள் பரவசநிலைக்கு சென்றுவிட்டார். நான்(ஶ்ரீவரது) மற்றும் மற்றொரு பக்தர் ஶ்ரீ கிருஷ்ணா ஆகிய நாங்கள் பகவான் பாபா அவர்களை எங்களது கரங்களில் தாங்கிகொண்டோம்.

புட்டபர்த்தியில் இருக்கும் புலித்தோல் வந்த கதை


புட்டபர்த்திக்கு செல்லும் அனைவரும் பகவானின் சமாதிக்கு பின்புறத்தில் உள்ள அறையில் சுவாமியின் நாற்காலியின் கீழ் இருக்கும் புலித்தோலை கவனித்திருப்போம். அது எப்படி வந்தது என்ற கதையை பின்வருமாறு பார்ப்போம்...

பாபா அனைத்து உயிரினங்களையும் சமமான அளவிலேயே நேசிக்கிறார், மிருகங்களைக் கொல்லுதல் அல்லது வேட்டையாடுவதை அவர் பொறுத்துக் கொள்ளவே மாட்டார்.

பகவானின் சித்ராவதி நாட்கள் (1942-1953)



நீங்கள் பார்க்கும் இந்த வீடியோவில் பகவான் சித்ராவதி நதிக்கரையில் செய்த அற்புதங்களைப் பற்றி அவருடைய ஆரம்பகால பக்தர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து உள்ளார்கள். ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் இருக்கும் இந்த  வீடியோவில் அவர்கள் சொன்ன  விஷயங்களுடன் ஆங்கிலப் புத்தகத்தில் இருந்து ஒரு சில விஷயங்களையும் சேர்த்து ஒரு கதையாக மொழிபெயர்த்துள்ளேன்...

பகவான் வாக்கு பலிக்கும்!



பகவானை துதிப்பதும் நிந்திப்பதும் பக்தர்களின் குணம் - அது மாதிரியான நிகழ்வு கூட உண்டு.. 
  
பாபாவின் பக்தர் ஒருவர் மைசூர் தனியார் பள்ளி ஒன்றில் பணியில் இருந்தார். நன்றாக இருந்த அவரது கண்களில் பார்வை பறிபோனது. கூடவே வேலையும் போனது.

அமைதியும் ஆனந்தமும் அடைவது எப்படி?

(சத்ய சாயி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் திரு. நிதின் ஆச்சார்யா பகிர்ந்தது)

ஒரு முறை பகவான் மந்திர் வராந்தாவில் இருந்து ஒரு பக்தரை பேட்டிக்கு அழைத்தார், உடன் அவருடைய 'பெரிய' குடும்பத்தினரையும் அழைத்தார்.

முடி அரசரின் முடிவில்லா விளையாட்டு!


தன்னை நாடியோரை மட்டும் பாபா பண்படுத்தவில்லை.... கடவுளை நிந்தித்தவரை கூட அவர் பண்படுத்தி இருக்கிறார். அதுதான் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் கருணை!

பகவானின் கருணை - டாக்டர் ராஜ்குமார்

பகவானின்  கருணை 

பிரபல வெல்வெட் ஷாம்பூவின் உரிமையாளர் டாக்டர் ராஜ்குமார். அவருடைய பாட்டனார் ஒரு டாக்டர். படைத்துறையில் பணியாற்றியவர் தாத்தாவைப் போலவே பேரனும் ஒரு டாக்டராக வேண்டும் என்பது அன்னையார் ஹேமா