தலைப்பு

வெள்ளி, 31 மார்ச், 2023

சுவாமி மனத்தூய்மை (சித்த சுத்தி) என்றால் என்ன?


இது தவறு! மனம் எப்போதும் தூய்மையாகவே இருக்கிறது! எனவே மனத்தூய்மை என்பது ஏது? 

மனம் என்கிற பாத்திரம் எப்போதுமே பரிசுத்தமானது தான்! 

செவ்வாய், 28 மார்ச், 2023

பனிமூடிய பத்ரிநாத் இரவு - பாபாவிடம் பிரார்த்தனை - வழிகாட்டிய மர்ம நபர்!

இமய யாத்திரை என்பது தியானம் எனும் இதய யாத்திரை போல் புனித விசேஷமானது! அந்த கடின குளிர்பனி யாத்திரையில் பிரார்த்தனை செய்த உடனேயே எவ்வாறு பாபா தன் பக்தருக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் எனும் அற்புத அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...

வெள்ளி, 24 மார்ச், 2023

அனைத்தையும் படைத்தவன் இறைவன் என்கிற போது.. சுகங்களை மட்டும் படைத்தால் போதாதா? ஏன் துக்கங்களை படைக்க வேண்டும்?

துக்கமில்லாமல் சுகம் இல்லை! 

"ந சுகாத் லப்யதே சுகம்"

சுகத்திலிருந்து சுகம் வராது! 

துக்கத்தை அனுபவித்தால் தான் சுகத்தை உணர முடியும்! 

சுகத்தின் மதிப்பை துக்கத்தை அனுபவித்தால் அன்றி அறிய மாட்டீர்கள்!

புதன், 22 மார்ச், 2023

இதய நோய் /நீரிழிவு தவிர்க்க பாபா கூறும் அற்புத வழிமுறைகள்!

இணை பிரியாத் தோழர்கள் கூட நம் இறுதிவரை உடன் இருப்பதில்லை. ஆனால் இணை நோய்களாய் உருவெடுக்கும் இருதய நோயும், நீரிழிவு நோயும்  வயதுவேறுபாடின்றி, அகில உலகத்திலும்  பல்கிப் பெருகி , நம் இறுதிவரை இணை பிரியாமல் இருக்கும் கால கட்டம் இது. இதற்கு மருத்துவ விஞ்ஞானம் கூறும் காரணங்களையும்   பகவான் பாபா அவர்களின்  அற்புத வழிகாட்டுதல் களையும்  இந்தப் பதிவில் கண்டு பயனடைவோம்...

செவ்வாய், 21 மார்ச், 2023

குகை மகான்கள் ஒரே சுதியில் தெரிவித்த ஒரே ஆச்சர்ய வார்த்தை...!

குகையில் தவம் இயற்றி வரும் வெவ்வேறு யோக சாதனை முறை மகான்களிடம் இறைவன் ஸ்ரீ சத்யசாயி பற்றி கருத்து கேட்டபோது அவர்கள் சொன்ன ஒரே பதில் மனித குலத்திற்கு ஆச்சர்யம் தரக்கூடிய... அந்த அற்புத சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...

சுவாமி! உங்கள் மேல் உள்ள பக்தியில் எங்களை விட வெளிநாட்டவர்களே அதிகமாக ஈடுபடுவதாக உணர்கிறோம்! காரணம் என்ன?

பக்தரகளின் அனுபவம் அவர்களது தீவிரத்தை பொறுத்தே அமைகிறது! அனைத்தும் உங்களது விஸ்வாசத்தின் மீதுதான் நிலை கொண்டுள்ளது! அருகாமையில் இருப்பதால் ஒன்றின் மதிப்பு உடனே தெரிவதில்லை! 

சனி, 18 மார்ச், 2023

ஜாதி பேதங்களை வென்ற ஒரு சாயி பக்தரின் பிராமண தந்தை!

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலேயே! அது நல்லவராவது தந்தையிடம் கற்கையிலே என்றவாறு எவ்வாறு ஒரு சாயி பக்தருக்கு அவரது தந்தை ஞானப்பாதை காட்டினார்... ? ஆச்சர்ய அனுபவங்கள் ஆரமாய் இதோ...! 

ஆன்மீகத்தில் கர்மநெறி, பக்தி நெறி, ஞான நெறி என மூன்று வழிகள் உள்ளன... இவற்றை எவ்வாறு புரிந்து கொள்வது?

உங்களிடம் Wrist Watch இருக்கும்! அதை கூர்ந்து கவனியுங்கள்! ஒன்று விநாடியையும், மற்றொன்று நிமிடத்தையும், மூன்றாவது மணியையும் குறிக்கும்! 

விநாடி முள்ளின் 60 முறை நகர்வே நிமிட முள்ளின் ஒரு நகர்வு! 

வெள்ளி, 17 மார்ச், 2023

பாபா யார் என்றே அறியாத ஒரு பாக்கிஸ்தானிய கிறிஸ்துவ சமையற்காரரை தேடி வந்த பாபா!!

தோற்றம் பார்த்து யாரையும் எடைபோடக் கூடாது என்பதற்கான உதாரண சம்பவம் இது... அதிலும் இறைவன் பாபா தோற்றம் வைத்தல்ல உள்ளம் வைத்தே மனிதரிடம் நெருங்கி வருகிறார் எனும் சத்தியம் உணர்த்தும் சுவாரஸ்யப் பதிவு இதோ....

வியாழன், 16 மார்ச், 2023

இமய யோகி ஸ்ரீ டாட் வாலே பாபா | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

எவ்வாறு தங்களது பக்தர் வழி இறைவன் பாபா தன்னை யார் என்று இமய யோகி வழி அகில உலகமே உணரும் வகையில் நிகழ்ந்த அற்புத சம்பவம் மெய்சிலிர்க்கும் வண்ணம் சுவாரஸ்யமாக இதோ...

சுவாமி! பக்தி வருவதற்கு நம்பிக்கை மிகவும் முக்கியமானதல்லவா...? அந்த நம்பிக்கை வருவதற்கு என்ன வழி?

நம்பிக்கை என்பது வருவதாவது!? இதென்ன கடையிலா கிடைக்கும்? யாரோ கொடுத்து நீங்கள் எடுத்துக் கொள்வது அல்ல...நம்பிக்கை உங்கள் அடிப்படை குணம்! "விசுவாசமே உங்கள் சுவாசம்"! தெய்வ நம்பிக்கையே உங்கள் உயிர்நாடி! அது இல்லை என்றால் உங்களுக்கு மூச்சே இல்லை என்று கூறலாம்! ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் ! 

புதன், 15 மார்ச், 2023

1000 அடி யமுனோத்ரி பள்ளத்தாக்கில் விழப்போன யோகி ஓம்குரு!

ஆன்மீக சாதகராக இமாலயத்தில் தெய்வீக யாத்திரை புரிந்த ஒருவரை இறைவன் பாபா எவ்வாறு காப்பாற்றினார் எனும் ஓர் ஆச்சர்ய மகிமா சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 14 மார்ச், 2023

விபூதி மறுத்த வைஷ்ணவ பெண்மணி - வீடு தேடிவந்து பூசிவிட்ட பாபா- பஹ்ரன் பரவச அனுபவம்!

தீரமாக இறைவன் பாபா மற்றும் அவரது பஜனை - விபூதி பிரசாதம் இவற்றை நம்ப மறுத்த ஒரு முதிர் பெண்மணிக்கு பாபாவே நேரடியாக அவர் வீட்டிற்கு சென்று செய்த அற்புதம் பரவசமாக இதோ‌...

திங்கள், 13 மார்ச், 2023

மகாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவ ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் பல குறுக்கு வழிகளை கையாள வேண்டும்?

இறைவனிடம் குறை என்பதே இல்லை! இறைவனிடம் குறைகளை காண விளைவது மகா பாவம்! இதை விட பெரிய குற்றம் எதுவும் இல்லை! 

தலைமுதல் கால் வரை இறைவன் எந்தவித சுயநலமும் இன்றி பரிசுத்தமான பேரன்புடன் , உலக நன்மையை மட்டுமே கருதி அனைத்தையும் நிர்வகிக்கிறான்! 

ஞாயிறு, 12 மார்ச், 2023

முன்பின் தெரியாத இருவரை தம்பதியாக்கிய தெய்வ சாயி!


சுவாமி தன் சந்நதியில் தன் தெய்வீக சாந்நியத்தில் அவரவர் திருமண முறைப்படி தன் கையால் சிருஷ்டி செய்து திருமாங்கல்யம் வரவழைத்து நிறைய திருமணங்களை நடத்தி வைத்து இருக்கிறார் என்ற மகிழ்வான விஷயம் அனைவரும் அறிந்த ஒன்றே.  ஆனால்  பெற்றோருக்கே தெரியாமல் முன்பின் தெரியாத  இருவரை தம்பதியாக இணைத்த விசித்திரமே வியக்கும் விசித்திர தெய்வீக நிகழ்வு இதோ...

புதன், 8 மார்ச், 2023

செவ்வாய், 7 மார்ச், 2023

திங்கள், 6 மார்ச், 2023

மொரிஷியஸ் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரின் புட்டபர்த்தி தரிசனம்!

மதிப்பிற்குரிய ஒரு வெளிநாட்டு முக்கிய மந்திரி பாபாவின் மேல் எத்தனை அளவுக்கு நன்றியுணர்வோடு இருக்கிறார் என்பதை நமக்கு ஒரு பாடமாக விவரிக்கும் சுவாரஸ்ய பதிவு இதோ...

சுவாமி! நீங்கள் சிருஷ்டித்த (படைத்த) அனைத்தும் நல்லவையே என்கிறபோது தீய செயல்கள் எதிலிருந்து உருவாகின்றன?

சிருஷ்டி அனைத்தும் நல்லவையே! சிருஷ்டியில் தீயவை என்பது கிடையவே கிடையாது! கால மாற்றத்தினால் உங்களுக்கு நல்லவை தீயவை எனத் தோன்றுகின்றன!

இன்று நன்றாக இருக்கும் பழம் நாளையே அது உங்களால் ஜீரணிக்கப்பட்டு மலமாக மாறுகிறது! 

சனி, 4 மார்ச், 2023

ஸ்ரீ பிரேம சாயி பாதமாய் உருமாறிய ஸ்ரீ சத்ய சாயி பாதம்!

எவ்வாறு ஒரு ஆத்மார்த்த பக்தருக்கு அரிதிலும் அரிதான விந்தையான ஒரு அற்புதத்தை இறைவன் பாபா வழங்குகிறார் என்பதைக் குறித்த சுவாரஸ்ய பதிவு இதோ‌...

சுவாமி! ஒருவர் Good'டாக (நல்லவராக) இருந்தால் போதாதா? ஏன் God'டை (கடவுளை) உணர்ந்து கொள்ள வேண்டும்?


Good'ல் ஒரு O'வை எடுத்துவிடுங்கள்.. அந்த Extra O'வே இயற்கை (பிரகிருதி). O போய்விட்டால் God ஆகிறது! 

உங்களுக்கு தெரிந்த எழுத்து W... அதாவது Double You...! 

அதுவே ஜீவாத்மா- பரமாத்மா (double you) (துவைதம்) ! அவை இரண்டின் ஒருமையை (ஏகத்துவத்தை) மறைப்பதே மாயை (அறியாமை) 

வியாழன், 2 மார்ச், 2023

முனைவர் V.K. கோகாக் | புண்ணியாத்மாக்கள்

"நமது பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வி.கே.கோகாக், ஆன்மீகப் பின்னணியுடன் மதச்சார்பற்ற கல்வியை வழங்கக்கூடிய ஒரு சிறந்த ஆசான் ஆவார். கோகாக்கின் இதயம் மிகவும் தூய்மையானது. அவர் எப்போதும் சுவாமியின் திருநாமத்தை உச்சரித்து வந்தார். அவர் எனது கட்டளையை எழுத்திலும் செயலிலும் கடைப்பிடித்தார். ஒரு சிறு சந்தேகத்தைக் கூட என்னை  அணுகித் தெளிவுபடுத்திக் கொள்வது அவர் வழக்கம். அவர் உன்னதமானவர் ஆகையால் நமது பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரானார். அவருடைய கடின உழைப்பின் பலனை இன்று மாணவர்கள் அனுபவித்து வருகின்றனர்."  என்று 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் நாள், தனது  தெய்வீகப் பேருரையில் சுவாமி குறிப்பிட்டார்.

எவ்வளவு பக்தியாக பல காலம் இருந்தும் சிலர் திடீரென ஆன்மீகப் பாதையிலிருந்து விலகிப் போகிறார்களே? காரணம் என்ன?

இப்படிப்பட்ட எண்ணமே மிகவும் தவறானது! நீங்கள் சொல்கின்ற சிரத்தை, பக்தி இவை உண்மையானதும் சிரத்தையானதும் அல்ல... அவை யாவும் செயற்கையானவையே! பிளாஸ்டிக் பூக்கள் போன்றவையே! அவற்றுக்கு நறுமணம் கிடையாது! அவற்றால் தேனீக்களை கவர இயலாது! எல்லாம் Show (வெறும் வெளிக் காட்டல்) தான்! 

புதன், 1 மார்ச், 2023

கேதார்நாத் கௌரி குண்டத்தில் பாபா யார்? எனும் ரகசியம் பகிர்ந்த ஒரு இமய யோகி!

இமய மகான்களுக்கு இறைவன் பாபா எவ்வாறு தனது அருள்மயமான மகிமையை இன்றளவும் பொழிந்து கொண்டே வருகிறார் என்பதற்கான அரியதொரு உன்னத சம்பவம் சுவாரஸ்யமாக இதோ... 

தற்கால அரசுகளின் நடப்பு நிலை எவ்வாறு இருக்கிறது?

"சத்யம் வத; தர்மம் சர" என்பது வேதத்தின் பிரகடனம்! "சத்தியம் பேச வேண்டும்.. அறத்தை கடைபிடிக்க வேண்டும்!" என்பதே இதன் பொருள்! தற்காலத்தில் என்ன நடக்கிறது? அனைவரும் ஆச்சர்யகரமான வகையில் அறத்தை அள்ளி அள்ளிப் பேசுகிறார்கள்! அதாவது 'தர்மம் வத' என்று ஆக்கிக் கொண்டுள்ளனர்...அதை வாழ்க்கையில் நடத்திக் காட்டுவது பற்றிக் கவலையே காட்டுவதில்லை! 'சத்யம் வத:' என்பதையும் சத்யம் வத(வதை)' என்றாக்கி சத்தியத்தையும் வதைத்து வருகிறார்கள்!