தலைப்பு

செவ்வாய், 31 மார்ச், 2020

மகான்களுக்கும்.. ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திற்கும் உள்ள வித்தியாசம்!


கேள்வி: இந்த பாரத பூமியில் நிறைய மகான்களும், சித்தர்களும் பல அற்புதங்கள் புரிந்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது சத்ய சாய்பாபாவை மட்டும் நீங்கள் ஏன் இறைவன், அவதாரம், பரப்பிரம்மம் என்றெல்லாம் வர்ணிக்கிறீர்கள் ? அவரை நீங்கள் கிருஷ்ணரின் அவதாரமாகவும் சொல்கின்றீர்கள். அதே சமயத்தில் சிவனின் அவதாரமாகவும் பல இடங்களில் குறிப்பிடுகிறீர்கள். அதனால் ஒரே குழப்பமாக இருக்கின்றது. கொஞ்சம் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

திங்கள், 30 மார்ச், 2020

உங்களிடம் நன்னடத்தை இருந்தால் போதும்.. கடவுளின் அருள் தானாக கிட்டும்!


யுகங்கள் எல்லாவற்றிலும் கலியுகமே கரையேறுவதற்கு மிகவும் எளிதான வழியைத் தருகின்றது. கலியுகத்தில் பல எளிய வழிகள் இருக்கின்றன. உலகெங்கும் கல்விக் கூடங்கள் பெரிகியிருப்பதால், மக்களுக்கு உலக அறிவு அதிகம். இருந்தும் என்ன பயன்? மனிதனிடம் அமைதியுமில்லை மகிழ்ச்சியுமில்லையே.

ஞாயிறு, 29 மார்ச், 2020

யூகிக்க முடியா ரூபம் எடுக்கும் பாதுகாவலர் பகவான் சாயி!

மனதால் வேண்டி... நினைவால் உருகினால்... எந்த கணத்திலும்... எந்த இடத்திலும்... எந்த ரூபம் எடுத்தும் நமைக் காக்க ஓடோடி வரும் ஒரே கடவுள் சத்ய சாயி. 

ஹௌராவிலிருந்து மெட்ராஸ் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸில் 3வயது மகன், 8வயது மகளுடன் ஒரு ஸ்வாமியின் பக்தை பயணப்படுகிறாள். அது 1980ஆம் ஆண்டு மே மாதம்!!. ரயில் விஜயவாடாவில் நின்றது.

சம்சாரக் கப்பலின் தியான மாலுமி இறைவன் சத்ய சாயி!


காண்கின்ற உலகம் நிலையற்றது என்பது தியானத்தின் மூலம் அறியப்படுகிறது. புதிய இடத்தில் சரியான வழியறியாது மக்கள் அங்குமிங்கும் அலையும் போது, யாராவது ஒருவர் நேர்வழியைக் காண்பிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மக்கள் அவரைக் கேலி செய்து அவமானப்படுத்தினால், கூறியதைக் கேட்காததால் குழப்பமும் அழிவுமே ஏற்படும்.

சனி, 28 மார்ச், 2020

அபயகர மலை தூக்கும் சத்ய சாயி கிருஷ்ணன்!

துவாபர யுகத்தில் மட்டுமல்ல இந்தக் கலியுகத்திலும் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரே தன் பக்தர்களைக் கவசமாய் நின்று காவல் காப்பதால் நிகழ்பவை யாவுமே நன்று.. தர்மமே என்று உணர்ந்து சரணாகதி அடைவோம். 

துவாபரயுகத்தில் இருண்ட மேகத்துடன்
பலத்த மழை இந்திரனால் ஏற்பட காரணமாயிற்று. காற்று வீசுகிறது. மழை பொழிகிறது

பாதிக்கப்பட்ட மக்கள் இறைவனிடம் பிராா்த்திக்கின்றனா்:

"ஓ இறைவா! கால்நடைகள், நாங்கள் அனைவரும் பலத்த மழையின் காரணமாக துன்பமடைகிறோம். இந்த பெருமழையிலிருந்து காப்பாற்றுவாயாக"

ரேடியோ சாயி!


துவக்கமும் பரிணாமமும்:

வேர்ல்ட் ஸ்பேஷ் (World Space) சாட்டலைட் ரேடியோ சேவையின் ஒரு இலவச சேனலாக, பகவான் பாபாவின் திருக்கரங்களால் நவம்பர் 23, 2001 அன்று துவக்கப்பட்டது ரேடியோ சாய். ஆண்டுகள் செல்ல செல்ல ரேடியோ சாய், 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் ஆறு விதமான (Asia, Afri, Ameri, Telugu, Discourse and Bhajan Stream) சேவைகளை வழங்கும் இணைய வானொலியாக பரிணமித்துள்ளது.

வெள்ளி, 27 மார்ச், 2020

சாயி அவதாரம் பற்றி மகான்கள் | தபோவனம் ஸ்ரீ ஞானாநந்த கிரி மகா சுவாமிகள்

பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து... பல அற்புதங்கள் புரிந்து... ஞான சிகரத்தில் ஏறி ஆனந்த ஜோதி ஏற்றி அதில் சத்ய சாயி வெளிச்சத்தைக் கண்ட திருக்கோவிலூர் தபோவன மகான்

பரம்பொருளின் பிரகடனம்:

பிரபல பின்னணி பாடகி அம்பிலி ராஜசேகர் அவர்களின் அனுபவங்கள்!


சுவாமியைப் பற்றி எதுவும்  தெரியாமல் இருந்த தனக்கு சுவாமி கனவில் மூலம் ஆட்கொள்ள தொடங்கினார் என்று தன்னுடைய ஆத்மார்த்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் பிரபல பின்னணி பாடகி அம்பிலி ராஜசேகர். இவர்கள் மலையாள சினிமாவில்.. 1970s & 1980s கால கட்டங்களில் மிகவும் கொடிகட்டிப் பறந்த பிரபல பின்னணி பாடகி ஆவார். இதுவரை 800 படங்களில் 3000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் இவர் தமிழ், இந்தி மற்றும் பெங்காலி மொழிகளிலும் பாடியுள்ளார்.

வியாழன், 26 மார்ச், 2020

நம்பாத முகமதியரை நம்ப வைத்து ஆட்கொண்ட அல்லா சாயி!


A. B. கோர்பு ( Abdul Razak Baburao korbu) சிறுவயதிலேயே தந்தையை இழந்து வறுமையில் வாடியவர். தாயின் திக்கற்ற நிலையால் அவரது படிப்பு கேள்விக்குறியானது. கல்விக் கட்டணம் செலுத்த இரவு நேரத்தில் ஒரு திரைப்பட கொட்டகையில் வேலை செய்தார். ஆனால் அவர் படிப்பில் படு சுட்டி அதனால் அரசின்  நிதி உதவியுடன் கல்லூரி படிப்பை முடித்து ஆசிரியர் ஆனார். பின் ஊக்கமுடன் மேற்பட்டமும் பெற்று பேராசிரியர்  ஆனார். ஆயினும்  அவரது உள்மனம் அமைதியின்றி ஒரு தேடலில் இறங்கியது. ஆம். அவர் தன் ஆன்மீக வழிகாட்டுதலுக்கு ஓரு குருவைத் தேடினார். அவர் தேடலின் முடிவு பர்த்தியில் அவர் தரிசித்த சாயிராமன் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ. பாபாவின் அருளால் அவர் ஸ்ரீசத்யசாயி கல்லூரியில்  பேராசிரியராகவும் ( visiting professor) பொறுப்பு வகித்தார்.

சாயி ஆன்மிக மெனு!

உடலுக்கான உணவை பட்டியலிடும் நாம் ஆன்மாவுக்கான உணவை நினைத்துப் பார்க்கிறோமா.. இதோ இறைவன் சத்ய சாயி காலகிரமமாய் உட்கொள்ள வேண்டிய பட்டியலைக் கட்டளையிடுகிறார்.. கடவுளே  கட்டளையிடும்  போது கண்களை மூடி  கடைபிடிப்பதே நம் கடமை. 

"தினமும் காலையில் டிபன், நண்பகல் உணவு, பிற்பகல் சிற்றுண்டி, இரவு உணவு, படுக்குமுன் பழமும் பாலும் உண்கிறீர்கள் அல்லவா?

செவ்வாய், 24 மார்ச், 2020

சுவாமியின் விபூதியே ஒரே மாமருந்து!

தன்வந்திரி எனும் வைத்திய நாராயணர் சுவாமியின் விபூதி வடிவமாகவே கலியுகத்தில் அவதரித்திருக்கிறார். சுவாமியின் விபூதி என்பது சாதாரணமானதல்ல. உலகப் பற்றையும் நீக்கும்.. அது கொரோனா எனும் கிருமித் தொற்றையும் நீக்கும்.. இதோ சுவாமியே அதை விளக்குகிறார்

சுவாமி விபூதி என்பது அடையாளச் சீட்டு:

முதலில் 'நற்குணங்கள்' என்னும் செல்வத்தை விருத்தி செய்து கொள்ளுங்கள்!


ஜகத் என்ற இந்த நிலையற்ற நாடகமாகிய உலகம், மாயையின் அடிப்படையில் நிகழ்வது. ஆகவேதான் இது பொய் எனப்படுகிறது. இவ்வுலகைப் பொய்யென்று அறிவது மட்டுமே, தன்னிடம் உள்ள குறைபாடுகள் என்ன என்று அறிவது மட்டுமே உயர்ந்த வழியில் இட்டுச் செல்ல போதுமானது என்றும், மிக உயர்ந்த உண்மைக்கு இட்டுச் செல்ல வல்லது என்றும் முடிவு செய்யாதீர்கள்.

திங்கள், 23 மார்ச், 2020

ஒரு நல்ல டாக்டர் இறைவனடி சேர்தல்!


1989ன் இடைப்பட்ட மாதங்களில் டாக்டர் சீதாராமையா அவர்கள் நோய்வாய்ப்பட்டு, திரவ உணவு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தார். காலை தரிசனத்தின் பொழுது 8.15 முதல் 8.30க்குள் டாக்டரின் பேத்தி நாகமணியை நோக்கி குல்வந்த் ஹாலில் வந்து மீண்டும் திரும்பி சென்றுவிட்டார்.

என் இருப்பை ஒருபோதும் சந்தேகிக்காதீர்கள்!

ஸ்ரீ சத்ய சாயி அருளுரைகள் 

நம் சத்தியமான தாய் ஸ்ரீ சத்ய சாயித்தாய்... ஒவ்வொரு ஜென்மத்திற்கும் ஒவ்வொரு தாய் மனிதனுக்கு... ஆனால் எல்லா ஜென்மங்களுக்கும் நமக்கு ஒரே சத்தியமான தாய் சுவாமியே!! அத்தகைய ஆயிரமாயிரம் கோடி சுயநலமற்ற தாய்ப்பாசத்தை சுவாமி எவ்வகையில் காட்டுகிறார் என்பதை சுவாமியே நமக்கு உணர்த்துகிறார் இதோ...

ஞாயிறு, 22 மார்ச், 2020

சாயி அவதாரம் பற்றி மகான்கள் | கவியோகி சுத்தானந்த பாரதி

ஷிர்டி சாயி / சத்ய சாயியை தரிசித்து இருவரும் ஒன்றே என உணர்ந்த மகா(ன்) கவி

பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                                            - இறைவன் ஸத்ய ஸாயி

கவியோகி சுத்தானந்த பாரதி (1897-1990):

பாரதி என்று பெயர் வைத்தவர்கள் யாரும் எழுதாமல்  வாழ்ந்ததில்லை.

ஒருசில பாரதிகள் எழுத்தில் மட்டுமில்லாமல் ஆன்மிகத்திலும் ஜொலித்தார்கள்.

சனி, 21 மார்ச், 2020

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே

கண்டமின்று கண்டமாக 
துண்டம் செய்யும் போதிலும்...

சத்ய சாயி கடவுளுண்டு அச்சமென்பதில்லையே

IMPORTANT | கொரோனா தொற்று நோய் தொடர்பாக, நமது அகில இந்திய தலைவரிடமிருந்து வந்துள்ள செய்தி அறிக்கையின் தமிழாக்கம்:


நம் அனைத்து சாயி குடும்ப சகோதர சகோதரிகளுக்கு,

சாய்ராம். நாம் அனைவரும் தற்போது, கொரோனா தொற்று நோயின் கடுமையான தாக்குதலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான, மிகவும் கடினமான சூழலில்  உள்ளோம்.

வெள்ளி, 20 மார்ச், 2020

சுவாமியே இயக்குகின்றார்.. டாக்டர்கள் வெறும் கருவியே!

 
USAவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் பிரபலமான இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒன்றான டாக்டர் திரு. சௌத்ரி அவர்களின் அனுபவம்! 

என் பக்தர்கள் எங்கிருந்தாலும், அவர்களது ஒவ்வொரு பேச்சையும் கேட்கிறேன்!


எவர் மனிதருக்கான தகுதியை பெறுபவர் என்பதை சுவாமி சுதந்திரப்போராட்ட தியாகியின் வாழ்க்கை மூலமாக உணர்த்துகிறார்... புற சுதந்திரம் மட்டுமல்ல அக சுதந்திரத்தையும் தரக்கூடிய சுவாமியின் மனித ஒழுக்கத்தைப் பற்றிய கீதை இதோ...

வியாழன், 19 மார்ச், 2020

பிறருக்கு அநாமதேயன்; நமக்கு அநாத ரக்ஷகன்!

🇺🇸 USAவில் உள்ள சாண்டா பார்பராவைச் சேர்ந்த முரியல் ஏஞ்சல் அவர்களின் திக் திக் சாயி அனுபவம்.. 

முரியல் ஏஞ்சல் என்னும் பெண்,USA வில் சாண்டா பார்பரா என்னுமிடத்தை சேர்ந்தவள். ஒரு சினேகிதியைச் சந்தித்துவிட்டு மலைப்பாதை ஒன்றின் வழியாக இறங்கிக் கொண்டு இருந்தாள். சான்டா பார்பராவிற்கு கொஞ்சம் தூரம் தள்ளி இந்த இடம் இருந்தது. அவள் ஒரு பொது சேவை மையத்தைச் (மிஷன்) சேர்ந்தவள். இரவு இருட்டிவிட்டது, பாதை குறுகலாக இருந்தது.

சிலை வழிபாட்டின் பின் இருக்கும் தத்துவம் என்ன?


"இந்த பிரபஞ்சத்தில் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு உருவம் உண்டு. சிலைகள் இயற்கையில் உயிரற்றவை, அவைகள் கருணை, அன்பு, சகிப்புத்தன்மை ஆகியவைகளை கொண்டிருக்காது. இதன் காரணமாகத்தான் சிலர் சிலை வழிபாட்டிற்கு எதிராக உள்ளனர். இது அறியாமையே.

புதன், 18 மார்ச், 2020

ரங்கனுக்கு தரிசனம் தந்த அந்தரங்கன்!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கன் அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவம்!

அன்று புத்தாண்டு 1995 ஜனவரி  1, வழக்கமாய்ப் புத்தாண்டில் சுவாமி தரிசனத்திற்கு புட்டபர்த்தி போய்விடும் ரங்கன் இம்முறை போகவில்லை. குடும்பத்தினர், அன்று அனுமத் ஜெயந்தியாயிருந்ததால் காக்களூர் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் புறப்பட்டுப் போயிருந்தனர். அப்போது காலை 9 மணியிருக்கும். தான் மட்டும் வீட்டிலிருந்த ரங்கன் நண்பர்களுக்கெல்லாம் ஃபோன் செய்து புத்தாண்டு வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தார்.

மனதை எப்போதும் மகிழ்ச்சிகரமாக வைத்திருக்க பழகிக் கொள்ளுங்கள்!


மனிதனுக்கு, வாழ்க்கை மகிழ்ச்சியளிப்பதாகவோ, துன்பமுள்ளதாகவோ, இருப்பது அவனது அடிப்படையான மனோபாவத்தைப் பொறுத்தது. இன்று இன்பமளிக்கும் ஒன்று, நாளைக்குத் துன்பம் தருவதாக இருக்கும். ஒரு சமயத்தில் மிகுந்த பிரியத்துடன் வரவேற்கப்பட்ட ஒன்று, அடுத்த சமயத்தில் வெறுக்கத்தக்கதாக அமைகிறது. அதைக் காண வேண்டுமென்ற ஆசை கூட இருப்பதில்லை. அவ்வப்போது இருக்கும் மனநிலை தான் இதற்குக் காரணம். ஆகவே ஒவ்வொருவரும் மனதை எப்போதும் மகிழ்ச்சிகரமாக வைத்திருக்க பழக்கிக் கொள்ளவேண்டும்.

தேன்சிந்தும் சத்யசாயி பஜனைப்பாடல்கள்!


01)
ஹரி பஜன பினா ஸுக சாந்தி நஹி
ஹரி நாம பினா ஆனந்த நஹி
ப்ரேம பக்தி பின உத்தார நஹி
குரு ஸேவ பினா  நிர்வாண நஹி
ஜபத்யான பினா ஸம்யோக நஹி
பிரபு தர்ஷ பினா ப்ரக்ஞான நஹி
தயா தர்ம பினா ஸத் கர்ம நஹி
பகவான் பினா கோயி அப்னா நஹி
சாயி நாத் பினா பரமாத்மா நஹி           

திங்கள், 16 மார்ச், 2020

உன்னதமான காணிக்கை ... அன்பும் பக்தியும் கொண்ட தூய இதயத்திலிருந்து...


தெய்வீக தந்தைக்கும் மகனுக்கும் உரையாடல் வழி நிகழ்ந்த  அற்புத சம்பவத்தை நேரில் கண்ட மாணவரின் பகிர்வு இதோ...

சில ஆண்டுகளுக்கு முன், பகவான் பாபா புட்டபர்த்தியில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி கட்டுவதற்கு உண்டான ஆயத்த பணிகளில் மும்முரமாக இருந்தார். அந்த சமயம், மாணவர்களுடன் அவரால் நீண்ட நேரம் செலவிட முடியவில்லை. புதிய மருத்துவமனை தொடர்பான விஷயங்களில் அவர் இரவும் பகலும், மிகவும் பிசியாக இருந்தார்;

ஞாயிறு, 15 மார்ச், 2020

ஸ்ரீ சத்யசாயி செய்த மோட்டார் பைக் சவாரி | 2016 MIRACLE

மஹா சமாதிக்கு பிறகு பாபா நிகழ்த்தி வரும் அற்புதம் எனும் கடலிலிருந்து ஒரு துளி...

உதிக்கின்ற ஆதவன் மறையுமோ என்றும் அது...
விதிக்கின்ற பூமி சுழற்சியின் மாயமன்றோ...
மதிக்கொன்றை சூடும் சாயீசன்
மாள்வதுண்டோ மறைவதுண்டோ
 மனமே கூறு?

சனி, 14 மார்ச், 2020

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 11 | பர்த்திப்பதியை நோக்கி - சாயி முத்துக்குமார்

🇦🇺 ஆஸ்திரேலியாவில் வாழும் திரு. முத்துக்குமார் அவர்களின் அனுபவங்கள்!

விபூதியால் நோய் போகும்! துன்பம் போகும்!
விபூதியால் பயம் போகும்! சோதனை சூழ்ச்சி போகும்!
விபூதியால் ஜெயமுண்டாகும்! வெற்றியே தோன்றலாகும்!
விபூதியே எல்லாமாகும் !விபூதியே  சாயி யாகும் !

இளம் பக்தர்:

எல்லோரும் ஞானம் பெறலாம்!


அந்தஸ்து, வகுப்பு, பாலினம் எதுவாக இருந்தாலும், அனைவரும் ஞானத்தைப் பெறலாம். பெண்களுக்கு ஞானம் பெறும் உரிமையில்லை என்று கூறுகிறார்கள். சிவபெருமான் பார்வதிக்கு வேதாந்தத்தை போதிக்கவில்லையா? சிறந்த யோகியான கபிலாசாரியார் தன் தாயான தேவஹூதிக்குச் சாங்க்ய சம்பிரதாயத்தை போதிக்கவில்லையா? பிரஹதாரண்யக உபநிஷதத்தில் கூறுகிறபடி, யாக்ஞவல்கியர் தன் மனைவி மைத்ரேயிக்கு வேதாந்த தத்துவங்களைப் போதிக்கவில்லையா? உபநிடதங்கள் பொய்யுரை புகலா. மேலே சொல்லப்பட்ட செய்திகளைத் தாங்கியுள்ள வேதங்கள் சத்தியத்தை உரைப்பவையே.

வியாழன், 12 மார்ச், 2020

சாயி அவதாரம் பற்றி மகான்கள் | சுவாமி புருஷோத்தமானந்தா


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                                            - இறைவன் ஸத்ய ஸாயி

சுவாமி புருஷோத்தமானந்தா:

வெண்தாடி முக மழலையாய் ஒற்றை வேட்டியில் எளிமையாய். எளிமையே மகிமையாய் தவ வாழ்வு மேற்கொண்டவர் சுவாமி புருஷோத்தமானந்தா.

'ஓம்' என்பதை சரியான முறையில் உச்சரிக்கும் வழி என்ன?


ஹிஸ்லாப்: இறைவனின் நாமத்தை ஜெபிக்க வேண்டி, ஸாயிபாபா, ஸாயிராம், ஸோஹம் இவற்றுக்கிடையிலான உறவு என்ன? ஒவ்வொன்றுக்கும் எந்த உருவை மனத்தில், இருத்திக்கொள்ள வேண்டும்?

புதன், 11 மார்ச், 2020

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 10 | சாயியே எல்லாம் - சாயி பிரபு

🇦🇺 ஆஸ்திரேலியாவில் வாழும் திரு. பிரபு அவர்களின் அனுபவங்கள்!

அப்போதே செய்துவந்த ஆபரணம் ஜொலிப்பதைப் போல்
 எப்போதும் இறைவன் ஜொலிக்கின்றான் தரிசனத்தில் 
பொலிகின்றான் 
 முப்போதும் காவி அணிந்தாலும் மூவுலகும் ஈர்க்கின்றான்!
 எப்போதும் தன்னிடத்து வாழும் ஏக்கத்தைச் சேர்க்கின்றான்!

கோயம்புத்தூர் கோபிகை:

கவின்மிகு காஷ்மீரத்தில் வியத்தகு சாயி மையம்!


குண்டுமழை பொழியும் பாக்கிஸ்தான் எல்லையிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜம்முவில் அன்பு மழை பொழிய ஒரு அற்புத ஆலயம். அது ஐயனின் திருஉள்ளம்.... 

காஷ்மீர். இயற்கை எழில் கொஞ்சும் மலைகளும் மலர்த் தோட்டங்களும் நிறைந்த ஒரு சொர்க்க பூமி. ஜம்மு.. காஷ்மீரின் தென்பகுதியில் அமைந்து, பாக்கிஸ்தான் மற்றும் சீன எல்லைகளுக்கு அருகாமையில் உள்ளது.

செவ்வாய், 10 மார்ச், 2020

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 9 | சர்வம் சாயி (மை)மயம் - சாயி வித்யா

🇦🇺 ஆஸ்திரேலியாவில் வாழும் சாயி வித்யா அவர்களின் சாயி அனுபவங்கள்.

அபயந்தருகின்ற கரமும் அருளைத் தருகின்ற பதமும்
அபலை உயிர் இன்பம் எய்திட வழியைத் தருகின்ற விழியும்
சபையில் நிறை பக்தர்க்கன்பு பொழியும் நற்கனிமொழியும்
சபாபதியுன் மாட்சி மையை சாசுவதமாக மொழியும்!

ஆசீர்வதிக்கப்பட்ட தம்பதி:

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலிருக்கும் ஃபாரஸ்ட் லேக்(Forest Lake) அனேகமாக ஒரு மயிலாப்பூர் அடையாறு மாம்பலம் எல்லாம் கலந்த கலவை. அங்கிருக்கும் அத்தனை தமிழ்நாட்டுக் குடும்பங்களிலும் சத்யசாயி வழிபாடு பேரளவிற்கோ ஓரளவிற்கோ கலந்திருக்கிறது.

நான் உங்களுக்கு ஒரு அதிசயத்தைக் காண்பிப்பதற்காக ஏதாவது ஒன்றை உருவாக்க வேண்டுமா? - சுவாமி


பாபா சிருஷ்டிக்கிறார்... ஏன்? தானே சிருஷ்டி கர்த்தா என்பதற்கான மினியேச்சரே அவர் நமக்கு சிருஷ்டித்துக் காட்டிய அற்புதங்கள்... கற்பக மரத்திலிருந்தும் ... சித்ராவதி மணலிலிருந்தும் பாபா சிருஷ்டித்தார் என வியக்கிறோம்.. உண்மையில் அந்த மரத்தையும்... மணலையும் ஏன் சர்வ உலகத்தையும் சிருஷ்டித்ததே பாபா தான்! அதை உணர்த்தவே லீலா சிருஷ்டி விநோதங்கள்... ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் போல்... பிரபஞ்சம் படைத்த பாபா படைக்கும் அற்புதங்களே அவரின் திருவாய் மொழியிலேயே இதோ... 

திங்கள், 9 மார்ச், 2020

சாயி வாக்கின் ரகசியம் நடந்த பின்பே புரியும்! -திருமதி நீடா பேனர்ஜி


திருமதி நீடா பேனர்ஜி நாற்பதாண்டுகால இறைவன் சத்ய சாயியின் பரம பக்தை.. தனது வாழ்வின் பல்லாண்டுகளை பல்வேறு மொழிகளிலான (அஸ்ஸாமி, ராஜஸ்தானி, ஆங்கிலம்) இலக்கியங்களை ஹிந்தியில் மொழிமாற்றியவர். இந்திய இலக்கிய பல்கலைக் கழகமான சாஹித்ய அகாடமி போன்றவற்றில் பணியாற்றியவர்.

இறைவனின் அன்பும்,  கருணையும் பற்றி நிறைய விஷயங்கள் இருப்பினும், யாருக்கு கருணை சென்றடைய வேண்டும் என்பதை கடவுள் தான் தேர்வு செய்கிறார்.

ஞாயிறு, 8 மார்ச், 2020

சாயி அவதாரம் பற்றி மகான்கள் | சுவாமி சிவானந்த சரஸ்வதி


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                                            - இறைவன் ஸத்ய ஸாயி

ஸ்ரீ சிவானந்த சரஸ்வதி (1887 –1963):

பேரைக் கேட்டவுடனே அவரின் தோள் நிமிர்ந்த சிகர கம்பீரமே கண்களில் தொற்றிக் கொள்ளும்.

சனி, 7 மார்ச், 2020

பகவானின் வழிகள் யூகிக்க முடியாதது!


இந்த அழகிய கதை ஒரு பக்தரால் விவரிக்கப்பட்டது. ப்ரஸாந்தி நிலையத்தில் ஸ்வாமி ஒரு முறை தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்.  ஒரு 5 வயதுப் பெண் குழந்தை கையில் ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு ஸ்வாமியிடம்  கொடுக்க முயன்று கொண்டு இருந்தாள். ஸ்வாமி அதை எடுத்து கசக்கி தூக்கி எறிந்து விட்டார்.

உங்களை மட்டுமே நம்புங்கள்..!


எல்லா மனிதர்களிடமும் குறைபாடு இருக்கிறது.
தவறு செய்யும் ஒருவரை நீங்கள் ஆட்காட்டி
விரலை நீட்டி சுட்டிக் காட்டுகிறீர்கள். அப்போது,
அந்த விரல் மட்டுமே எதிரே இருப்பவரை
நோக்கியிருக்கும்.
மற்ற மூன்று விரல்கள் உங்களது உள்ளங்கையை
நோக்கியே இருக்கும். அதாவது நீங்கள் சுட்டிக்
காட்டுபவரிடம் ஒரு குறை இருப்பதாக உங்களுக்கு
தெரிந்தால், உங்களிடம் மூன்று குறைகள் இருக்கிறது
என்பதை இது உணர்த்துகிறது.

HD போட்டோஸ்

👇👇

வெள்ளி, 6 மார்ச், 2020

கர்னல் ஜோகாராவ் அருகமர்ந்து உயிர்ப்பித்த பாபா!


கர்னல் ஜோகாராவ். முதல் பணி இந்திய விமான கட்டுமான நிறுவனத்தின் பிரதம பொறியாளர். பின்னர் இந்திய ராணுவ சேவை. கர்னலாக பதவி உயர்வு. அதன்பின் கட்டுமான நிறுவனம் நிறுவி தனிசேவை.. பாபாவின் பார்வை பட்டவர் மீள்வரோ?

வியாழன், 5 மார்ச், 2020

இனி சத்ய சாயி பகவானின் வெண்கல விக்ரஹம் பஜன் ஹாலின் உள்ளே!


ஜூலை 24, 2002 காலை குரு பூர்ணிமா அன்று இந்த அழகிய லைஃப் சைஸ் வெண்கல விக்ரஹம் சாய் குல்வந்த் மண்டபத்தில் சத்யசாயி பகவானின் திருக்கரங்களால் திறக்கப்பட்டது.

கவிதா வாஹினி! (பக்கம் -4) -கவிஞர் வைரபாரதி

101) தசாவதார சாயி நிஜாவதார சாயி:


சுவாமி நீ 
வெறும் அவதாரமில்லை
பெரும் அவதாரம் 

உன் சங்கல்பம்
அவதாரம் இறங்கியது
உன் சங்கல்பம் 
நீயே
அவதாரமாய் இறங்கியது

ஆயினும் நீ
தாயினும் சிறந்த 
தயாபரன் 

புதன், 4 மார்ச், 2020

எதிர்பாராமல் வந்த லாரியால் காப்பாற்றப்பட்ட வனத்துறை அதிகாரி!


வருடத்தில் சில மாதங்களாவது, ஜனசஞ்சாரமற்ற வனப்பகுதிகளில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் அந்த காட்டு இலாகா அதிகாரிக்கு இருந்தது. ஒருமுறை அவர் பாபாவின் தரிசனத்திற்காக புட்டபர்த்திக்கு வந்திருந்தார். பால்கனி வழியே அவரைப் பார்த்த பாபா, "நான் அனுப்பிய லாரி வந்ததா ?", என அந்த அதிகாரியைப் பார்த்து கேட்டார். ஸ்ரீ கஸ்தூரி நினைத்தார்; 'இவர் ஒரு தொழிலதிபர் போலும்! புட்டபர்த்திக்கு ஏதோ லாரியை அனுப்பிவிட்டு, மீண்டும் திரும்ப வருவதற்காக எதிர்பார்த்து கொண்டிருப்பார்,' என நினைத்தார். ஆனால் அந்த அதிகாரியோ, நடந்த ஒரு சம்பவத்தை விவரிக்கத் தொடங்கினார். அது பாபா அனுப்பிய லாரி பற்றியது!!

செவ்வாய், 3 மார்ச், 2020

கீதாவின் வெள்ளி குங்குமச்சிமிழ் திடீரென எதிர்பாராமல் கிடைத்தது!


ப்ருந்தாவன், பெங்களூருவில் நன்கு அறிமுகமான டாக்டர் பத்மநாபனுடைய மகள் தான் கீதா மோகன்ராம்... 

கீதா USAக்கு வந்து இறங்கிய புதிதில், ஒரு வயதான பெண்மணி அவர் வீட்டிற்கு வந்தார்கள். கீதா லக்கேஜையே இன்னும் பிரிக்கவில்லை. கீதா அந்தப் பெண்மணிக்கு, இந்தியர்களின் சம்பிரதாயப்படி பழமும், குங்குமமும் கொடுக்க விரும்பினார்.

திங்கள், 2 மார்ச், 2020

சாயி அவதாரம் பற்றி மகான்கள் | யோகி ராம்சுரத்குமார்


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                                            - இறைவன் ஸத்ய ஸாயி

யோகி ராம்சுரத்குமார் (1918 –2001):

காசியில் பிறந்த இந்த கங்கா யோகி பாய்ந்து ஓடி அண்ணாமலை அடிவாரத்தில் ஊற்றானவர்.

ஞாயிறு, 1 மார்ச், 2020

சாயி அவதாரம் பற்றி மகான்கள் | ரமண மகரிஷி


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                                            - இறைவன் ஸத்ய ஸாயி

மகரிஷி ரமணர் (1879 –1950):

வெங்கட்ராமன் எனும் இயற்பெயரில் தமிழ்நாடு மதுரை திருச்சுழியில் பிறந்து அருணாச்சலம் என்ற ஒரே ஒரு பெயர் அதனால் இழுக்கப்பட்டு பாதாள லிங்க குகையில் பூச்சிகள் செல்லரித்த போதும் உடல் மறந்த தியானத்தில் ஆழ்ந்து அண்ணாமலை அடிவாரத்தில் ஆசிரமம் அமைத்த மோன வள்ளல்.. ஞான ஜோதி பகவான் ரமண மகரிஷி.