தலைப்பு

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

கபாலீஸ்வரர் கோவிலில் வெளிநாட்டு நந்தனார் செய்த சிவசாயி தரிசனம்!


பாபா மதம் கடந்தவர்... மனிதம் அளந்தவர்... மனிதம் ஒன்றே புனிதம் எனும் ஆன்மீகம் ஆற்றுபவர்... பாபா செய்கின்ற ஆன்ம புரட்சி பற்பல... அதில் ஒரு சிறுதுளி சுவாரஸ்யமாய் இதோ...

சனி, 26 பிப்ரவரி, 2022

பக்தி என்னும் ஏணியின் உச்சிப்படி -மதுர பக்தி

பக்தி என்னும் நதிகள் பல. ஆயின் அவை எல்லாம் இறுதியில் இறைவன் என்ற கடலில் கலக்கத் தான் தமது பயணத்தைத் தொடர்கின்றன. அறுவகை பக்தியை பட்டியலிடும் பகவான், ராதையை உதாரணம் காட்டி , மதுர பக்தியின் மேன்மையே விளக்குகிறார்... 

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

நான் பாபாவை ஏன் நம்புகிறேன்? - Dr. தேவி பிரசாத் ஷெட்டி


Dr. தேவி பிரசாத் ஷெட்டி அவர்கள் உலக புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணரும், 21 தொடர் மருத்துவ மையங்களை கொண்ட 'நாராயணா ஹெல்த்' (முன்பு 'நாராயணா ஹ்ருதயாலயா' என அறியப்பட்டது) நிறுவனங்களின் தலைவரும் நிவாக இயக்குனரும் ஆவார். இவர் இதுவரை 15,000க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். இவருக்கு, இந்திய அரசால், 2004ல் பாரதத்தின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும், 2012ல் பாரதத்தின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷணும்  வழங்கப்பட்டது... 

'திக் திக்' என ஒருவருக்கு சுவாமி தந்த அமானுஷ்ய கனவு அனுபவங்கள்!

இறை பக்தியே இல்லாத ஒருவருக்கு ஏற்பட்ட ஆன்மீக கனவு அனுபவங்கள் பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்தவையாக அவரின் வாழ்வையே சுவாமி பக்தியில் திசை திருப்பிய அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ...

வியாழன், 24 பிப்ரவரி, 2022

பரவசக் கண்ணீர் வரவழைக்கும் பாபாவின் பால்ய காலத்து நேரடி வாக்குமூலங்கள்!

கோடை கால வகுப்புகளிலும்.. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பக்தர்கள் சிலரோடும் தனது பால்ய நாட்களை சுவாமி பகிர்ந்த கொண்ட தனது தெய்வீக இளமை நாட்கள் சுவாரஸ்யமாய் சுவாமியின் சொல்வழியே இதோ‌...

புதன், 23 பிப்ரவரி, 2022

டாக்டர் குழந்தையே பிறக்காது என சொன்ன போதும் டாக்டரின் மருமகளுக்கு மகப்பேறு தந்த சுவாமி!

குழந்தைப் பேறு பெரிய பாக்கியமே... அந்தப் பேற்றை எவ்வாறு சுவாமி பலருக்கும் மருத்துவத்தையே சவால் விடும் அளவிற்கு மகத்துவம் புரிந்திருக்கிறார் என்பதற்கான ஓர் சிறு சான்று சுவாரஸ்யமாய் இதோ...

Love All, Serve All; Help Ever, Hurt Never -ஓர் அகமுக ஆய்வு

சுவாமியின் ஆத்ம போதனை எனும் துவாரகாபுரி மாளிகையின் நான்கு தூண்களாகிய இவற்றைப் பற்றிய ஒரு பகுப்பாய்வும்...இதன் சாராம்சத்தை ஆழம் காணும் முயற்சியும்... நமக்குள் நாமே விதைத்து அதை வளர்த்து மலர வைத்து வாழ்வாக்க வேண்டிய அடிப்படை ஆன்மீக நெறிகளுக்கான அகமுக சுவாரஸ்ய ஆய்வின் சுவாரஸ்ய முதல் பகுதி இதோ...

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

தென்னாடுடைய சுவாமி போற்றி! தென்னாப்பிரிக்காவிலும் இறைவா போற்றி!

தென்னாப்பிரிக்க தேச பக்தர்களை சுவாமி எவ்வகையில் எல்லாம் காப்பாற்றி அருள் பொழிந்தார் எனும் சுவாரஸ்ய சம்பவங்கள் சரம் சரமாய் இதோ...

சுவாமியின் கவிமொழி!


சுவாமியின் தெய்வீகப் பேருரைகளின்போது குறிப்பாக தொடக்கத்தில், சுவாமி ஏதாவதொரு தெலுங்கு பத்யம் (அதாவது கவிதை/பாடல்) சொல்வதுண்டு. பெரும்பாலும் அத்தகைய கவிதைகள், சுவாமியின் உரைகளுடன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் வெவ்வேறு பிராந்திய மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரசுரிக்கப்படுகிறது. அதன் கருத்துச்செறிவும் அழகும் மொழிமாற்றங்களினால் கவனமுடன் பாதுகாக்கப்படுகிறது என்பது உண்மைதான். இருப்பினும் சுந்தரத் தெலுங்கின் இனிமையும் குறிப்பாக… அமுதினையொத்த  சுவாமியின் தெய்வீகக்குரலின் அற்புதமும் மொழிமாற்றத்தில் மறைந்துபோகிறது. சுவாமியின் குரல் பின்புலத்தில் தெலுங்கில் ஒலிக்கும் அதேவேளையில் அக்கவிதைகளின் தமிழிணைப் பொருளை படிக்கும் வாய்ப்பு நேர்ந்தால், அது மிக இனிமையான அனுபவமாக இருக்கும். அந்த ரம்யமான அனுபவத்தை தமிழன்பர்களுக்கும் தரும் முயற்சி தான் "சுவாமியின் கவிமொழி" என்ற இந்த தொடர். இறைவனின் கவிதைகளை, பாடல் மேற்கோள்களை அவரின் குரலிலேயே பொருள் விளங்க அனுபவித்து மகிழுமாறு அன்புடன் அழைக்கிறோம். 

👇👇

திங்கள், 21 பிப்ரவரி, 2022

பல்வேறு பக்தர்களின் இதயத் தடாகத்தில் சுவாமி பூக்க வைத்த அனுபவத் தாமரைகள்!

அனுபவங்கள் சமுத்திரம் போல் பரந்து விரிந்து கொண்டிருப்பவை... அதில் மூழ்கி ஆழம் சென்றால் பரவச முத்துக்கள் கிடைக்கின்றன‌... சுவாமி இறைவனே எனும் முத்தார சத்தியமும் ஜொலிக்கின்றன... அப்படி ஒவ்வொரு முத்து மணியாய் கோர்த்து அளிக்கப்பட்ட அனுபவ ஆரம் இதோ...

சனி, 19 பிப்ரவரி, 2022

ஒரு பக்தரின் அனுபவம் வாசித்ததால் சொந்த வீடு அனுகிரகமான சுவாமி குடும்பம்!

வேறொரு பக்தருக்கு நிகழ்ந்த சுவாமி அனுபவம்.. அதை வாசித்து அதனால் ஏற்பட்ட சுவாமி மேலான திட நம்பிக்கையும் பக்தியும் ஒரு பெருஞ்செயலை எவ்வாறு நிறைவேற்றியிருக்கிறது என்பதற்கான பரவச அனுபவம் இதோ...

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

ஆளுநர் தமிழிசையின் ஆழ்மனதில் யாழ் மீட்டும் சுவாமி எனும் தெய்வீக இசை!

தெலுங்கானாவின் ஆளுநரும் மற்றும் புதுவையின் துணைநிலை ஆளுநருமான திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் சுவாமி அனுபவங்களும்... அவர் இதயம் திறந்து பகிர்ந்து கொண்ட சுவாமியின் எங்கும் நிறைந்த இறைத்தன்மையும் அவர் செயல்பாட்டின் பாணியிலேயே விறுவிறுப்பாய் இதோ...

ஸ்ரீருத்ர பாராயணம் மட்டும் போதும் - வழிகாட்டி பிணி தீர்த்த பாபா!

சுவாமி கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவரின் அனுபவப் பக்கங்களிலிருந்து...

வியாழன், 17 பிப்ரவரி, 2022

ஶ்ரீ சுவாமி ராமா(1925 –1996) | சாயி அவதாரம் பற்றி மகான்கள்

பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                                            - இறைவன் ஸத்ய ஸாயி

என் வாழ்வில் பாபாவின் அற்புதங்கள் - மேதகு N.V. ரமணா

👨‍⚖️இந்தியாவின் 48வது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மேதகு N.V. ரமணா அவர்களின் ஸ்ரீ சத்யசாயி அனுபவங்கள்!

தமது  ஒரு கண் அசைவில் உலகையே மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவர் பகவான் பாபா. ஆனால் வியத்தகு செயல்களை  தகுதியான மனிதர்களைக் கொண்டு செய்யவைத்து, மானவ தத்துவத்தில் உள்ள மாதவ தத்துவத்தை செயல்  முறையில் விளக்குகிறார். அன்னையின் அன்பு , எப்போதும் குழந்தையை தூக்கிச் செல்வதல்ல. குழந்தையின் கைபிடித்து, அதை நடக்கக் கற்றுக் கொடுப்பதும்தான் அல்லவா?

வருங்காலத்தில் நிகழப் போவது பற்றி சுவாமியின் தீர்க்க தரிசன தெய்வத் திருவுரை!

1976 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் உதகமண்டலத்தில் நிகழ்ந்த கோடைகாலப் பயிற்சி முகாமின்போது, சுவாமி இந்திய வரைபட வெள்ளி மெடாலியன் சிருஷ்டித்த பிறகு அவர் பேசிய நெருங்கி வரும் எதிர்காலம் எனும் ஒளிர்காலம் குறித்தான தீர்க்க தரிசன திருவுரை தமிழில் சுவாரஸ்யமாய் முதன்முறையாக இதோ...

புதன், 16 பிப்ரவரி, 2022

Celebrating 66 Years of Sanathana Sarathi


பாரதப் போரில் பார்த்தனுக்கு சாரதியாய் தேர் ஓட்டிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர், சொந்தங்களுக்கு எதிராக போரிட விரும்பாத மனம் கலங்கிய அர்ஜூனனுக்கு பகவத் கீதையை உபதேசித்து சிந்தை தெளிவித்தார். மஹா பாரத யுத்தம் ஏற்படுத்திய கொடிய விளைவுகளுக்கு நிகராக கலியுகத்தின் அதர்மம் தலை விரித்து ஆடுகின்ற இந்த சந்தர்ப்பத்தில், தர்மம் என்ற தேரில் ஏறி, அன்பு என்னும் கீதையை "சனாதன சாரதி"யின் வழி அச்சிலேற்றி அனைவருக்கும் உபதேசித்து சத்ய யுகம் மலரச் செய்ய , அதே ஸ்ரீ கிருஷ்ணரே பகவான் ஸ்ரீ சத்யசாயியாக அவதரித்துள்ளார்....

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

1948'ல் சென்னையில் 22வது வயதில் சுவாமியின் நேரடி மகிமா லீலைகள்!


சுவாமியை யார் எனவே தெரியாத ஒரு சென்னை வாசியின் கடும் நோயை குணமாக்க தான் இருக்கும் இடத்திற்கு வரச்சொல்கிறார் சுவாமி... ஆனால் அவரோ கண்டிப்பான முதலாளியிடம் வேலை பார்ப்பவர்.. அவர் எங்கு சென்றார்? அலுவலகமா? சுவாமியிடமா? அவரின் நோய் தீர்ந்ததா? அமானுஷ்ய சுவாரஸ்யமாய் இதோ...

சனி, 12 பிப்ரவரி, 2022

சூர்ப்பனகை போல் கோபம் கொண்ட ருக்மணிக்கு ராமராய் காட்சி தந்த ஸ்ரீ சத்ய சாயி ராமன்!

சுவாமியை இகழ்பவர்களையும் சுவாமி நேசிக்கிறார்... சுவாமி மேல் கோபம் கொண்டவர்களையும் பிற்காலத்தில் தன் மேல் தாபம் கொள்ளும் அளவிற்கு அக மாற்றம் தருகிறார்... அப்படி ஒரு கோபக்கனல் எவ்வாறு சுவாமியின் திருவிளக்கு தீபக்கனலாய் சுடர்ந்தது எனும் சுவாரஸ்யப் பதிவு இதோ...

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

இன்னார்க்கு இன்னார் என இல்லறத் தீர்மானம் எழுதுகிற இறைவன் சாயி!


சுவாமியின் விசித்திர லீலை வியப்பானது! அது காலம் கடந்தும்... காலம் கனிந்தும் தெளிவாக உணரக் கூடியது...! அப்படி ஓர் இல்லறத் தீர்மானம் பல ஆண்டுகளுக்கு முன்பே சுவாமி நிர்ணயித்த ஓர் வைபவ நிகழ்வு சுவாரஸ்ய அனுபவமாய் இதோ...

வியாழன், 10 பிப்ரவரி, 2022

விஜயநகர சாம்ராஜ்ய மகாராஜாவின் மகள் ரூபவதியின் சுவாமி அனுபவங்கள்!

பல சாம்ராஜ்ய அரச குடும்பத்திற்கு சுவாமி வழிகாட்டி இருக்கிறார்... பரிவு காட்டி நற்கதி அளித்திருக்கிறார்.. அந்த வரிசையில் விஜயநகர சாம்ராஜ்ய அரச வம்சரின் மகள் ரூபவதியின் சுவாமி அனுபவங்கள் சுவாரஸ்யமாய் இதோ...

சுவாமி சிருஷ்டித்த இந்திய வரைபட அதிசய வெள்ளிப் பதக்கத்தில் பொறிக்கப்பட்ட ரகசியங்கள்!


ஒருமுறை நம் சுவாமி, இந்திய வரைபடம் கொண்ட அபூர்வ பதக்கமொன்றை சிருஷ்டித்தார். பின் அதில் பொதிந்திருந்த ரகசியங்கள்... அதுசார்ந்த தீர்க்கதரிசனங்கள் மற்றும் விபரங்களை ஸ்வாமியே தந்தார். அந்த அதிசயநிகழ்வு குறித்த சுவாரஸ்யமான விபரங்கள், முதன்முறையாக தமிழில் இதோ....

புதன், 9 பிப்ரவரி, 2022

இலங்கை சகோதரிகளின் முன்தோன்றி புட்டபர்த்தி வரவழைத்து திருமணங்கள் நிகழ்த்திய தெய்வ சாயி!

ஒரு இலங்கை குடும்பத்திற்கே தீர்த்த யாத்திரைப் பலனை தேடிப் போய் அளித்து திருமணங்கள் நிகழ்த்தி.. கலவர பூமியில் அவர்களின் நிலவரம் மாற்றி கவசமாக திகழ்ந்த ஒரு சுவாமி அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

மளிகைக் கடை பொட்டல காகிதத்தின் ஒரு செய்தியால் பக்தராக்கி நேர்காணல் அளித்த அதிசய சுவாமி!

ஷிர்டி சுவாமி பக்தராக இருந்த ஒரு குடும்பத்தை எவ்வாறு இரு சாயியும் ஒருவரே என உணர வைத்து... பர்த்தி அழைத்து நேர்காணல் அருளியதே மிக மிக சுவாரஸ்யமான அனுபவம் இதோ.. அதே சுவாரஸ்யத்தோடு...

திங்கள், 7 பிப்ரவரி, 2022

விடுதலை வீரர் நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை! -போஸ் பற்றி பாபா கூறியது


நம் தாயக விடுதலைக்காக, வீறுகொண்டு எழுந்து, தன்னலமற்று பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றி, நெஞ்சம் நெகிழ்ந்து பாபா அவர்கள் பாராட்டிக் கூறியது என்ன?

சனி, 5 பிப்ரவரி, 2022

புகைப்படங்களுக்கு ஃபிரேம் போட்டுத்தரும் கடைக்காரரின் இதயத்தில் ஃபிரேம் போட்டு அமர்ந்த சுவாமி!


பல்வேறு தொழில் செய்யும் மனிதர்களின் வாழ்வில் சுவாமி எவ்வாறெல்லாம் தன் திருச்சாந்நித்யத்தை நிரப்பி...தன்னை உணர வைத்து...பக்தராக்கி அபயமளிக்கிறார் என்பதை அறியும் போது வியப்பாகிறது..‌. அப்படி ஒரு அனுபவம் இதயத்தில் ஃபிரேம் போடும் விதமாக இதோ...

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

ஒரு நாத்திக பத்திரிகை எழுத்தாளரையே பக்தராய் மாற்றி ஞானம் கேட்க வைத்த பரப்பிரம்ம சாயி!

சுவாமியை போலி என அசிங்க அசிங்கமாக எழுதிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நாத்திக எழுத்தாளரை சுவாமி எவ்வாறு தன் பக்தராக மாற்றி தன் காலடியில் விழ வைத்து 'எனக்கு ஞானம் வேண்டும் சுவாமி' எனக் கேட்க வைத்த மகா மகிமை வாய்ந்த சுவாரஸ்ய பதிவு இதோ...

வியாழன், 3 பிப்ரவரி, 2022

அண்டி வருவோரைக் காக்கும் கிண்டி பாபா திருக்கோவில்!

(03-02-1949) இதே நாளில் அன்று!

அன்றும் ஒரு குருவாரம். அது 1949 பிப்ரவரி 3 ம் நாள். மன்று ஆடும் நடராசன், குன்றத்தை குடைபிடித்து கோகுலத்தைக் காத்த நேசன், பக்தர் மனம் நின்றாடும் பர்த்தீசன், தருமிகு சென்னையில், பெருமைமிகு ஷீர்டி பாபா கோயிலைத் துவக்கிவைத்து நம் அனைவரையும் ஆசியளித்த நந்நாள். வாருங்கள் நினைவுத் தடங்களில் பயணித்து அந்த கோலாகலக் காட்சிகளைக் காண்போம்...

புதன், 2 பிப்ரவரி, 2022

சிக்கிம் முதலமைச்சர் நர் பகதூர் பண்டாரி அவர்களின் சுவாரஸ்ய சுவாமி அனுபவங்கள்!

தேசத்தை ஆள்பவர்களின் சுவாசத்தையும் சுவாமியே ஆள்கிறார்... அரசாட்சி அமைப்பவரின் ஒவ்வொருவர் உள்ளத்திலும் சுவாமியே அரசாட்சி நடத்தி உலகத்தை நல்வழிப்படுத்துகிறார்... அந்த வரிசையில் சிக்கிம் முதலமைச்சர் நர் பகதூர் பண்டாரி அவர்களின் சுவாமி அனுபவங்கள் இதோ...

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

கோடிக்கணக்கான பக்தர் குவிய இருக்கும் புனித புட்டபர்த்தியும்... சுவாமியின் தீர்க்க தரிசனப் பார்வையும்!


வருங்காலத்தில் பக்த வெள்ளம் எவ்வாறு திரளப்போகிறது... அதற்கு ஏற்றார் வகையில் சுவாமியின் திருச்சங்கல்பம் முன்கூட்டியே தனது தீர்க்க தரிசனத்தை செயல்படுத்த ஆரம்பித்திருக்கிறது என்பதை குறித்தும் ஒரு சராசரி பக்தனின் பார்வையில் இருந்து ஒரு சுவாரஸ்ய அலசல் இதோ...