தலைப்பு

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

ஒரு பங்காரு பக்தருக்காக விற்ற பங்காருவை மீட்ட பாபா!


இறைவன் சத்ய சாயி இதயத்திலேயே குடியிருக்கிறார்.. அவருக்காக எந்த ஆடம்பர பூஜையும் எந்தவித சடங்குகளும்.. வெளித் தேடலுக்கான பிரயாணமும் அவசியமில்லை என உணர்த்தும் உன்னத பதிவு இதோ...

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

முத்தமிழ் வித்தகி பத்மஸ்ரீ கே.பி. சுந்தராம்பாள் அவர்களின் சாயி அனுபவங்கள்!


கே.பி.சுந்தராம்பாள் பாடுவதை கேட்கும்போது, ஏதோ அந்த அவ்வையாரே வந்து பாடுவதுபோல் இருக்கும். இப்படி குரலில் கம்பீரத்தையும் தெய்வீகத்தையும் கொண்ட கே.பி. சுந்தராம்பாள் அவர்களின், பகவான் பாபா உடனான தெய்வீக அனுபவத்தை  இந்த பதிவில் பார்ப்போம்.

சனி, 29 ஆகஸ்ட், 2020

சுந்தரம்மா என்ற பக்தைக்கு சத்ய சாயி பாபா எழுதிய கடிதம்!


பால் நினந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து, பர்த்தீசன் அந்தக் காலத்தில் தம் பக்தர்களுக்கு எழுதிய கடிதங்கள் சொற் காவியங்கள் எனலாம். வாய்மை என்ற எழுதுகோலில் , ப்ரேமை என்ற மையிட்டு, வெண்மை என்ற மனத் தாளில்  தூய்மை என்ற சொற்களைத் தூவி, பக்தர்களின் நன்மை என்கிற பரிவோடு எழுதப்பட்டவை அவை பக்தர்களுக்கு மட்டுமல்ல , இந்த  உலகத்தில் உள்ள அத்துணை மாந்தர்களுக்கும் நல் வழிகாட்டும் ஒப்பற்ற அறநூலாக அவற்றைக் கருதலாம். 

பாபாவால் காப்பாற்றப்பட்ட சுதா ரகுநாதன்!

Sudha Ragunathan. One of the brightest stars of Carnatic music in India

திரையிசையிலும் கர்னாடக சங்கீத உலகிலும் தனக்கெனத் தனி இடத்தைத் தக்கவைத்துக்கொண்டு புகழ்பெற்று விளங்குபவர், சங்கீத கலாநிதி கலைமாமணி சுதா ரகுநாதன். இவர் பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய பட்டங்களுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளுக்கும் சொந்தக்காரர். 

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

உயர்ந்த இலட்சியமே மேலான கடமை!


வாழ்க்கையின் உண்மையான லட்சியம் என்ன என்பதை ஷாஜகான் உணர்ந்த அந்த உன்னத நொடிகளை நமக்கு சுட்டிக் காட்டி உணர்த்துகிறார் மதங்களைக் கடந்த மகா கடவுள் சத்ய சாயி.. 

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

வாழ்க்கையில் நிறைய சோதனை வருகிறதே? ஏன் சத்ய சாயி இப்படி சோதிக்கிறார்?


கேள்வி: வாழ்க்கையில் நிறைய சோதனை வருகிறதே? ஏன் சத்ய சாயி இப்படி சோதிக்கிறார்? தாங்க முடியவில்லை..
அவரை வழிபடாமல் இருந்தால் சோதனை வராதோ எனத் தோன்றுகிறதே...

பதில்: உங்களின் மன வருத்தம் புரிகிறது.
சற்று நிதானமாக ஆழ்ந்து யோசித்தால் சோதனையே பக்தியை இன்னும் பலப்படுத்துவது புரியும்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

வயலின் மேதை சௌடைய்யாவுக்கு வயலின் காற்றாய் மகிமை புரிந்த சத்யசாயி!


மைசூர் டி. சௌடையா (Mysore T. Chowdiah) எனப் பிரபலமாக அறியப்படும் சௌடையா இந்தியா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபலமான கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞராவார். மிகவும் வித்தியாசமான வயலின் வாசிப்பினால் தனித்துவம் பெற்றிருந்தார். இவரே ஏழு தந்திகள் கொண்ட வயிலினை அறிமுகப்படுத்தியவர். அவரைப் போற்றும் வகையில் தேசிய அளவிலான சௌடையா நினைவு விருது வயிலின் வாசிக்கும் இசைக் கலைஞர்களுக்கு வருடா வருடம் (தற்போதும்) வழங்கப்பட்டு வருகிறது.

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

கறையையும் பொருட்படுத்தாமல் வெல்டர்களுக்கு பாபா காட்டிய பரிவு!


உழைப்பினால் வரும் வெளிக் கறையை இறைவி சத்ய சாயி மாதா தன்னுடைய கவசமாக அணிந்து கொள்கிறாள். உலகினால் வரும் உள் கறையையும் அவளின் கருணையே  சுத்தப்படுத்தி நம்மை புனிதமாய்ப் பூரிக்கச் செய்கிறது வெல்டர்களுக்கு( Welders) கிடைத்த பகவானின் அனுக்ரஹம். 

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

கொதிக்கும் எண்ணெய் சட்டியில் விழுந்த பச்சிளம் குழந்தையின் வடுவை நினைவூட்டி காரோட்ட வைத்த சுவாமி!

சுவாமி ஒருவரை நல்வழிப்படுத்த தனது ஆயுதமாய் அவர் பயன்படுத்துவது பேரன்பையே!! யாரும் அறியாத ஒருவரின் அந்தரங்க விஷயங்களை அவருக்கே நினைவூட்டி தன் பேரிறை ஆற்றலை வெளிப்படுத்தி இதயத்தை பக்தியால் ஒளிப்படுத்துவது இறைவன் சத்யசாயிக்கு மட்டுமே கைவந்த கலை.. அந்தக் கலையால் சுவாமி இயக்கிய இதயத்தின் வாகனமும்...வாகனத்தின் இதயமும் சுவாரஸ்ய நிகழ்வாய் இதோ...!

நம்மை கருவியாக கொண்டு செய்ய வேண்டிய காரியத்தை, சுவாமி எவரை கொண்டும் செய்து கொள்வார்!


இறைவன் சத்ய சாயி நமக்கு தரும் சேவை நம் உயிரை விட மேலானது.. அன்றாடம் வந்து போகும் சுவாசத்தை விட மேன்மையானது.. 
உலகமே தருகிறேன் இறைவன் சத்யசாயிக்கு சேவை செய்யாதே என மாயை சொன்னாலும்.. அதை துச்சம் என நினைத்து நாம் இறைவனுக்கே சேவை செய்ய வேண்டும்.. எந்த நொடியிலும் அதற்காக தயாராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அற்புத பதிவு இதோ... 

நன்றிக் கடனை தண்ணீரில் சேர்த்த சாயி பக்தை!


இறைவன் ஸ்ரீ சத்ய சாயி எனும் பிரபஞ்சப் பெருங்கங்கையே நம் புற தாகத்தையும்.. அக தாகத்தையும் தீர்க்கிறது. வேறெவருக்கும்.... வேறெதற்கும் அந்த பேராற்றல் இல்லை.. இப்படி அவர் தீர்த்த தாகத்திற்கு நன்றிக் கடனாய் பக்தை அளித்த பொதுநல அன்பளிப்பு இதோ... 

சனி, 22 ஆகஸ்ட், 2020

ஜாம்நகர் மன்னர் திக்விஜய் சிங்கிற்காக போர்களத்திற்கே சென்ற பாபா!


இறைவன் சத்ய சாயிக்கு தேச பேதம் ஏதும் இல்லை என்ற போதிலும் போர் என்று வரின் தர்மத்தின் பக்கமே அவர் நிற்பார். உலகில் ஆயிரம் தேசம் இருக்கலாம் ஆனால் இறைவன் சத்ய சாயிக்கு எங்கு தர்மம் இன்னமும் உயிரோடு இருக்கிறதோ அங்கேயே அவர் தேசம் இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது... 

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

சுவாமியின் விநாயகர் சதுர்த்தி அருளுரை!


விநாயகரே அனைவருக்கும் தலைவர், அவருக்கு மேலான தலைவரோ, எஜமானரோ கிடையாது. ஒரு புதிய காரியமோ செயலோ தொடங்குவதற்கு முன், வெற்றிக்காக விநாயகரின் ஆசிகளை வேண்டுவது நமது வழக்கம். எப்போது அவரை வழிபட்டு, அவரது ஆசிகளை வேண்டுகிறீர்களோ, அப்போது உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெரும்.

சாயி லீலாம்ருதம்: சுவாமியை ஏமாற்ற முடியுமா?


பழம் பெரும் பக்தர், திரு.பால பட்டாபி செட்டியார் கூறும் சுவாரஸ்யமான நிகழ்ச்சி... 

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

தாலியை கூட தருவேன் .. இதை தரமாட்டேன் என மறுத்த டி.எம்.எஸ் மகள்!


அய்யன் டி.எம்.எஸ் பாடுவதற்கென்றே பிறந்த தனிப்பிறவி. அவரின் இதயக்கூடு ஆறு படையைச் சுமந்த ஏழாம் படை.. அவரின் குரல் ஏழ் ஸ்வரங்களைச் சுமந்த எட்டாம் ஸ்வரம். அவருக்கும் இறைவன் சத்யசாயிக்கும் உள்ள பக்த நெருக்கம் அனைவரும் அறிந்ததே... பல பதிவுகளை சத்ய சாயி யுகத்திலும் பதிவு செய்திருக்கிறோம்.. அதில் இன்னொரு சிறு பதிவு அவரின் வாழ்க்கைப் புத்தகத்தில் வாசிக்க நேர்ந்தது இறைவன் சத்யசாயி சங்கல்பமே!

புதன், 19 ஆகஸ்ட், 2020

மொழிகளைக் கடந்த முழுமுதற் பொருள் ஸ்ரீ சத்ய சாயி!


இறைவனோடு எந்த பாஷையில் பேச வேண்டும் எனக் கேட்டால்.. எதுவும் பேசாமல் நினைத்த மாத்திரத்திலேயே பதில் அருளும் ஒரே பரம்பொருள் சத்ய சாயி என்பதே பூரண பதில். அவர் எந்த பாஷையில் பேசுவார் எனக் கேட்டால்.. பிரேமையே அவரின் பரிபாஷை அதனை மொழி பெயர்த்தால் உலகத்தின் எல்லா மொழியிலும் அது பதிலளிக்கும் என்பதன் மகிமையைப் பேசும் பதிவு இதோ... 

எளிய பக்தர் உணர்ந்து கொண்ட ஒரே சாயி!


ஏழ்மையான ஒரு எளிய வடநாட்டு பக்தருக்கு வேறு வடிவத்தில் தோன்றி தானே ஷிர்டி சாயி என உணர்த்திய இறைவன் சத்யசாயியின் லீலா மகிமைப் பதிவு இதோ.. 

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

ரகுமாயிக்கு மங்கள சூத்திரம் சிருஷ்டித்த சாயி பாண்டுரங்கன்!


துவாபர யுக கண்ணனே அவதாரம் எடுத்து கலியில் சத்யசாயியாய் புவியில் இறங்கியது... மூலஸ்தான ரகுமாயிக்கு உற்சவ சத்ய சாயி கண்ணன் அளித்த அருள் மயமான அன்பளிப்பு... ஆம்.. அதற்கு அற்புத சான்றாக தன் பாதி இணைக்கு ஜோதி சாயி நிகழ்த்திய அற்புதம் இதோ..  

ஏக்கம் இருந்தால் வரலாம் இறைவன் சாயி பக்கம்!


உலகத்திடம் ஏக்கம் இருந்தால் உலகம் அருகில் வரும்.. உறவுகளிடம் ஏக்கம் இருந்தால் உறவுகளோடு சேர்ந்து அடுத்த பிறவியும் சேர்ந்து வரும்.. ஆனால் இறைவன் சத்யசாயியிடம் நமக்கு ஏக்கம் இருந்தால் அண்டசராசரத்து ஆண்டவனான சத்யசாயியே நம்முள்ளும் புறமும் வருவார் என்பதை விவரிக்கும் பதிவு இதோ.. 

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

TVS குழுமத்தின் தலைவர் திரு. வேணு ஸ்ரீநிவாசன் அவர்களின் சாயி அனுபவங்கள்!


Chairman and Managing Director, TVS Motor Company, India; Former President of Confederation of Indian Industry (CII)

வாழ்க்கை என்பது "நான்" என்பதில் துவங்கி "நானாகவே" வாழ்ந்து "நான்" என்பதில் முடிவதில், மலர்ச்சி பெறுவதில்லை. "நான் யார் " என்று உள் நோக்கி விசாரணையைத் துவங்கினால் , அது தானாகவே இறைவனிடம் நம்மைச் சேர்த்துவிடும்.  பணம், பதவி, பட்டம்  - ஊர், உறவு , சுற்றம்  இவை அனைத்தையும் ஒருவர் வாய்க்கப் பெற்றாலும் , மன அமைதி என்பதை இறை நாட்டத்தில்தான் பெற இயலும். இந்த  வகையில் தம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் பாபா ஏற்படுத்திய மாறுதலை மனம் உருகி சொல்கிறார் திரு. வேணு ஸ்ரீநிவாசன்( TVS குழுமத்தின் தலைவர்). 

மூன்றாம் தலைமுறை பக்தருக்கு பிறந்து நான்கரை வருடங்களுக்கு பின் பெயர் வைத்த சாயி!


தாத்தா நாகராஜன் சத்ய சாயி மருத்துவமனை பணி மற்றும் சாயி நிறுவனப் பணிகளில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்பவர். தந்தை ரமணி அவர்களும் தாத்தா வழியில் சாயி சேவைகளில் பங்கு கொள்பவர். தனக்கு முன் பிறந்த இரண்டு மூத்த சகோதரிகளுக்கு பகவான்தான் பெயர் சூட்டுகிறார், சுமனா, சுஜனா என்று. சிறிது காலங்களுக்குப் பின் பிறந்த தனக்கு பெயர் வைப்பதில் பகவான் காலம் தாழ்த்துகிறார்..வார கணக்கில், மாத கணக்கில் அல்ல..வருடக் கணக்கில்.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

பரம்பொருள் சாயியின் பாரத ரத்னா!


ஆத்ம பக்தர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் ஜி அவர்களின் சாயி அனுபவப் பதிவு.. 

ஒரு மனிதர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கும்..
ஒரு அரசியல்வாதி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும்...
ஒரு பிரம்மச்சாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும்...
ஒரு பக்தன் எப்படி வழிபட வேண்டும் என்பதற்குமான
ஒட்டுமொத்த ஒரே உதாரணம் பாரத ரத்னா ஸ்ரீ அட்டல் பிஹாரி வாஜ்பாய் ஜி.

புட்டபர்த்தி ஸ்ரீ சத்யசாயி அதிசிறப்பு மருத்துவமனைக்கு கிடைத்த மற்றும் ஒரு அங்கீகாரம்!


உலகமே இது சாத்தியமில்லை என்று அன்று சொன்னது.. இப்படி ஒரு தூய்மை மிகு தன்னலமில்லா அதி நவீன இலவச மருத்துவமனையை ஆரம்பிப்பது கடினம் .. அதுவும் சில மாதங்களிலேயே கட்டி முடிப்பது அதைவிட கடினம் என்று வீண் வாய்ச்சொல் ஆடியது. ஆனால் இன்று நித்திய சத்தியத்தின் நிரூபணமாய் .. பகவான் சத்ய சாயியின் ஆன்மீக அதிர்வலைகளுடன் இது சாத்தியப்பட்டு வருகிறது. சாதனைப் படுத்தப்பட்டு வளர்கிறது.. அதற்கான உலக அங்கீகாரமும் கிடைக்கப் பெற்று வந்திருப்பது பரிபூரண சாயி சங்கல்பம் அன்றி வேறென்ன? 

சனி, 15 ஆகஸ்ட், 2020

மேஜர் ஜெனரல் S.P. மகாதேவனின் உயிர் உறையும் 'திக்திக்' சாயி அனுபவங்கள்!


Major General S. P. Mahadevan AVSM, Commander of the first Madras Regiment, Former TNPSC chairman, 
Former State President of SSSSO, Tamilnadu. 

இராணுவம் ஒரு கருவியே... இறைவன் சத்ய சாயி அந்தக் கருவியை வைத்தும் பாரதம் காப்பாற்றுகிறார். ஒவ்வொரு வீரர்களையும் அவரே உள்ளிருந்து வழி நடத்துகிறார். தனது ஆத்ம பக்தரான இராணுவ தீரர் மகாதேவன் அவர்களோடு அவரின் குழுவினரையும் எவ்வகையில் எல்லாம் .. எவ்வித இக்கட்டுகளில் எல்லாம் காப்பாற்றினார் என்பதை உயிர் உறையும் படி அந்த திக் திக் நொடிகளைக் காண்போம்... 

"ஜனநாயகம் என்பது முடியாட்சிக்கு மாற்றாக வந்தது" பாபா அரசர்களுக்கு விளக்கியது..


பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயிக்கு தெரியாமலும்.. அவர்  விருப்பம் இல்லாமலும் எதுவும் இந்த பூமியில் நிகழ்வதே இல்லை.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அப்போதிருந்த உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் நாட்டிலிருந்த அநேக பல சிறு சமஸ்தானங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒன்றுபட்ட குடியரசாக்க செயலாற்றினார்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

சத்ய சாயி விபூதி தடவியே இறந்து பிறந்த குழந்தை உயிர்பெற்றது!


இறைவன் சத்ய சாயி வேறு அவரின் நாமம் வேறல்ல.. அதுபோல் இறைவன் சத்ய சாயி வேறு அவர் விபூதி வேறல்ல... என்பதை மிகத் துல்லியமாய் .. ஆத்மார்த்தமாய் உணர்த்தும் அற்புதப் பதிவு இதோ...

மகான்கள் செய்யாத மகிமைகளா..? அவர்களுக்கு இல்லாத சக்தியா.. ? இதில் உங்கள் சத்ய சாயி மட்டும் எவ்வாறு தனித்துவப்படுகிறார்?


அவசியக் கேள்வி. இதற்கான பதில் மகான்களை தாழ்த்தி இறைவனை உயர்த்தும் தவறான புரிதலில் மடைமாற்றம் செய்யாமல் உணர வேண்டும்.

புதன், 12 ஆகஸ்ட், 2020

இந்தோ -- பாக். போரில் வெற்றியை தந்த இறைவன் சத்ய சாயி!


Aban Naidu, former Major General in the Indian Army, who set a record by leading the Republic Day parade four times in a row(1976 - 79)

1965ல்  நடந்த indo-pak யுத்தத்தில் இந்தியா பெரும்பான்மையான இடங்களை வென்றது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அந்த யுத்தத்தில் சத்ய சாய்பாபாவின்  வழிகாட்டுதலால் மட்டுமே ஜெயித்தோம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஆம் இதுகுறித்து அந்த யுத்தத்தில் தலைமை பங்காற்றிய மேஜர் ஜெனரல் அபான் நாயுடு அவர்களின் 'திக்திக்' சத்ய சாயி அனுபவங்களை நாமும் படித்து தெரிந்துகொள்வோம் வாருங்கள்... 

இரு சாயியும் ஏக சாயியே என உணர்த்திய அநேக சாயி பால லீலை!


தான் ஷிர்டி சாயியே என பல லீலைகள் வழி இறைவன் சத்ய சாயி உணர்த்திய பால விநோதங்களின் ஆச்சர்யப் பதிவு இதோ...

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

ஸ்ரீ கிருஷ்ணனின் கடைசி முரளி கானம்!


தாரா என்பதன் அர்த்தம் ஊற்று ... ராதா என்பதன் அர்த்தம் ஊற்று.. மீண்டும் எங்கிருந்து தொடங்கியதோ அங்கேயே திரும்புவது.. அதுவே பக்தி.. பக்தியே பரம் பொருளிடம் ஒடுங்குவது.. ராதா பரம  பக்தியின் ஆத்மார்த்த வடிவம்.. இறைவன் சத்ய சாயி கிருஷ்ணரிடம் ஐக்கியமான பேரருட் பிரவாக பக்தி ஊற்று பக்தை ராதா!

தற்காலத்தில் பரவலாக ஆன்லைனில் கூட பஜனை செய்கின்றனர் பல சாயி பக்தர்கள்.. ஆனால் அதில் பலர் தியானத்திற்கு முக்கியத்துவமோ.. இல்லை அதில் ஆர்வமோ காட்டுவதில்லையே ஏன்?


அதற்கு காரணம் தியானத்தின் அருமை தெரியவில்லை என்பதால் தான்.. மனம் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதால் தான்.. தனக்கு எல்லாம் தியானம் நிகழாது என்கிற தமோ குணத்தால் தான்...  தியானம் செய்ய நேரமே இல்லை என்கிற வறட்டு பிடிவாதத்தினால் தான்...
தவறான நம்பிக்கையில் பிடிமானம் மிக்கவர்கள் அதிலேயே உழன்று.. அதுவே சரி என்று மனதை சமாதானப்படுத்துவதால் தான்...

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

இறைவன் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி பலருக்கு தெரியாதவை: (பகுதி 4 - நிறைவு பகுதி)


பகுதி 4 | பகவானின் எல்லா செயல்களுக்கும் அர்த்தம் உண்டு:

பகவான் எப்போதும் தனது அதிகாரத்தை நிலை நாட்டுபவர்.. அதிகாரத்தை
அடையாளம் காண்பதும், ஏற்பதும் மிக கடினம். அதற்கு ஒரு சிறிய உதாரணம். ஒரு மருத்துவமனையில் கை தேர்ந்த திறமையான ஒரு மருத்துவரை  காண்கிறோம். அவருடைய துறையில் அவர் மிகவும் பிரிசித்தி பெற்றவர்.

இறைவன் கிருஷ்ணரை பற்றி பலருக்கு தெரியாதவை (பகுதி 3):


ஸ்ரீ கிருஷ்ணர் போர் விரும்பியா அல்லது தெய்வீக மருத்துவரா? 

(பகுதி 3): 

பிரபல இசைக்கலைஞர் 'மாண்டலின்' U.ஸ்ரீனிவாஸ் அவர்களின் சாயி அனுபவங்கள்!


மாண்டலின் இசைக்கருவியில் கர்நாடக இசையை மீட்டி சாதனை படைத்த உலகப் புகழ்பெற்ற மாண்டலின் U. ஸ்ரீனிவாஸ் அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

இறைவன் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி பலருக்கு தெரியாதவை (பகுதி 2):


சுவாமியின் ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தை குறித்து பலருக்கான அடிப்படை சந்தேகங்கள்... சில விஷமிகள் எழுப்பும் சர்ச்சைக் குறிய வினாக்களுக்கான தெளிவான மற்றும் ஆழமான பதிலையும் ஐயம் தீர விளக்குகிறார்.. சுவாமிக்கு 16,000 மனைவியரா? ராசலீலை ?? போன்றவற்றுக்கான விடை இதோ...

இறைவன் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி பலருக்கு தெரியாதவை (பகுதி1):

ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு, பெயரின் அர்த்தங்கள்

இறைவன் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் தான் துவாபர யுகத்தில் அவதரித்த போது கிருஷ்ணா எனும் அவரின் பெயருக்கான ஆழமான காரணத்தையும் .. உட் பொருளையும் விவரிக்கிறார் இதோ.. அவரை தவிர வேறு யாரால் இத்தனை ஆழமாக அவரை விளக்கிவிட முடியும்?

சனி, 8 ஆகஸ்ட், 2020

சத்ய சாயி சிவத்திடம் சரணம் அடைந்த சுகி சிவம்!


இறைவன் சத்யசாயியும் இறைவன் ஷிர்டி சாயியும் ஒன்றென உணரும் தருணம் அதுவே உயிர்கள் மனித வடிவெடுப்பதற்கான முழுமுதற் காரணம்... அதை உணர்ந்து பிரபல சொற்பொழிவாளர் 'சொல்வேந்தர்' சுகி சிவம் அவர்கள் இலங்கையில் ஆற்றிய அனுபவ உரையோடு அந்த பரம்பொருள் ஒன்றிணைவில் அவரின் இதயமும் மலர்ந்திருப்பது இறைவன் சத்ய சாயி சங்கல்பமே!

காமதேனுவான சாயி கடவுள்!


"நான் செய்யும் அற்புதங்கள் யாவும் எனது தெய்வீக சக்தியை உங்களுக்கு உணர்த்தும் ஒரு சிறு 'விசிடிங் கார்டு ' மட்டுமே". - இறைவன் சத்ய சாயி

திருமதி மங்கா, வயது 33, இவர் ஒரு இல்லத்தரசி. சத்ய சாய்பாபாவின் அநேக அற்புதங்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர். அத்தகைய அனுபவங்கள் சிலவற்றை நம்மிடம் தனது சொந்த நடையில் இங்கே விவரிக்கிறார்.

ஸ்ரீ சத்யசாயி யுக பதிவுகளில் 'பகவான்' ஸ்ரீ சத்ய சாயியை ஏன் நீங்கள் 'இறைவன்' ஸ்ரீ சத்ய சாயி என அழைக்க வேண்டும்? இரண்டும் ஒன்றுதானே!

பகவான் என்றால் God ஆங்கிலத்தில்.. Lord என்றும் அழைப்பர்.

ஆனால் ஆங்கிலேயர் தங்கள் அழுக்கு அரசாட்சியின் மடமையால் தங்களை தாங்களே Lord என பட்டம்  வைத்து அழைத்துக் கொண்டனர்... 

ஆக Lord Krishna என்பதற்கு பதில் God Krishna என்று தற்காலத்தில் அழைப்பதே பொருத்தமாக இருக்கும்...‌அதுவே நாம் இறைவன் கிருஷ்ணருக்கு அளிக்கிற மரியாதையும் பேரன்பும்...!

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

நாமங்கள் பல ஆயினும் இறைவன் ஒருவனே!


மகான்கள்..  யோகிகள்..  எல்லாம் இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள். இறைவனின் கருவிகள். தன் கருவிக்கு ஓர் ஆபத்து எனில் எப்படி பாய்ந்து வந்து பாதுகாப்பு வழங்குகிறார் என்பதன் அற்புத தெய்வீக சத்ய சாயி மகிமை இதோ... 

ஆந்திர மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் திரு. K.V நடராஜன் IAS அவர்களின் அனுபவங்கள்!

Chief Secretary (1991-1992) and
Vigilance Commissioner (1993-1998) of Andhra Pradesh

ஆந்திர மாநில முன்னாள் தலைமைச் செயலரும், சுவாமியின் நீண்ட நாள் பக்தரும் ஆன திரு K.V நடராஜன் IAS அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்.

சாயி சத்சங்கம் - 10 | சகா சாயியே நம் சத்ய சாயி!

👇👇

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

ராணுவ அதிகாரியை வாட்ச்மேன் வடிவில் காப்பாற்றிய சாயி!

இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றிய Col. S. K. போஸ்  அவர்களின் சத்ய சாயி அனுபவம்..

கவனித்துக் கொள்வது என்பது இரண்டு வகை .. மனிதரின் நடவடிக்கையை கவனிப்பது மற்றும் மனிதரின் தேவையை கவனிப்பது.. கல்லுக்குள் மறைந்திருக்கும் தேரைக்கும் இறைவனே உணவளிக்கிறான். அப்பேர்ப்பட்ட இறைவன் சத்யசாயியின் கவனிப்பில் மீண்டும் புறப்பட்ட ஒரு வாழக்கை பயணம் இதோ...

ராம ஜென்ம பூமியிலிருந்து கிருஷ்ண ஜென்ம பூமி வரை...

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நகைச்சுவையும் எங்கும் நிறை தன்மையும்!

பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயிபாபா அறியாததேதும் இல்லை.. போகிற போக்கில் தான் இறைவன் என்பதை புரிய வைப்பது அவரின் திருக்கல்யாண குணம்..
விழிப்புணர்வு பெற்றவரால் மட்டும் அவர் கருணையோடு அதைப் புரிந்துணர முடியும்... அப்படி சர்வ சகஜ நிலையில் இறைவன் சாயி தன்னை உணர்த்திச் சென்ற அனுபவம் இதோ..

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

நீங்கள் என்னிடம் சரணடைந்து விட்டால் உங்கள் கஷ்டங்கள் என்னுடையவையே!


சகல ஜீவ ராசிகள் உள்ளிலும் ஊடுறுவி நிறைந்திருப்பவர் இறைவன் சத்ய சாயி. அவரே ஷிர்டியில் இறைவன் சாயிபாபாவாக வாழ்ந்தது .. தனது முந்தைய அவதாரத்தில் ஏற்பட்ட ஓர் நிகழ்வை தத்ரூபமாக நமக்கு விளக்கி கீதை புகுட்டுகிறார் இதோ ...

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

கிணற்றிலிருந்து இரு பிஞ்சு உயிர்களை அரூபமாக காப்பாற்றிய கடவுள் சாயி!


இறைவன் சத்யசாயியிடம் பக்தி வைப்பது சென்ற ஜென்மத்தில் ஒருவர் செய்த புண்ணியமே.. சத்ய சாயி பக்தராய் இருப்பது முக்தராவதற்கான ஆன்மீக நிலையின் முன்னால் நிற்பதே .. அவரின் பக்தராகிவிட்டால் எந்த ஆபத்து எங்கிருந்து எப்படி வரினும் அதை இருந்த இடத்திலிருந்தே போக்கி.. உயிர்களை காத்து ரட்சிக்கும் சத்ய சாயி அவதாரத்தின் அற்புதம் பதியும் படி பதிவாக இதோ... 

சனி, 1 ஆகஸ்ட், 2020

தியானச் சாவியே பிரம்ம வித்தையை திறக்கும்!


பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் கீதையை உள்வாங்கியவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அதனை நடைமுறைப் படுத்துபவர்கள் பாக்கியசாலிகள். அவரின் பாதத்தைப் பிடித்தபடியே வாழ்க்கையை எதிர்பார்ப்புகளின்றி வாழ்பவர்கள் முக்திவான்கள் என்பதை அணுஅணுவாய் தியான வாஹினி இதோ வழிகாட்டி தெளிய வைக்கிறது.