தலைப்பு

வியாழன், 30 செப்டம்பர், 2021

சுவாமியை நடக்க இயலாமல் செய்த விஷம் கலந்த பிரசாதத்தால் பதறிப்போன பக்தர்கள்!


திடீரென சுவாமியின் கால்கள் இரண்டும் செயலற்று போகிற பரபரப்பு சூழலில்.. யாரால்? எதனால் ? இது நிகழ்ந்தது.. அந்த அசம்பாவித சூழ்நிலையை சுவாமி எவ்வாறு அணுகினார்... பக்தர்களின் பதைபதைப்பை எவ்வாறு நீக்கினார்... உண்மையில் சுவாமிக்கு விஷம் ஒரு பொருட்டா? என்பதையும் சுவாரஸ்யமாக வாசிக்கப் போகிறோம் இதோ‌...! 

சுவாமி சாட்சாத் ஸ்ரீ கல்கி அவதாரமே என மனப்பூர்வமாய் உணர்ந்த அமெரிக்க யோகினி ஹில்டா!

அமெரிக்க ஆன்மீக ஆசிரியர் ஹில்டா சார்ல்டன் ஆன்மீக தேடலில் இந்தியாவின் எல்லை வரை சென்று ஒவ்வொரு மகான்களையும் தரிசித்து தனது ஆன்மீகத்தை மெருகேற்றியவர்.. ஒரு நர்த்தகியாக 1947ல் பாரதம் சுற்றி கிழக்கிந்திய தியானத்தை கற்றவர்... அவ்வாறு இறைவன் ஸ்ரீ சத்ய சாயியை தரிசனம் செய்கையில் அடைந்த அனுபவம் அலாதியானது... சுவாமி யார் ? என்பதற்கான பரம ரகசியமும் ஹில்டா அனுபவத்தில் வெட்ட வெளிச்சமாய் வெளிப்படுகிறது இதோ...

புதன், 29 செப்டம்பர், 2021

தீவிர சிகிச்சையில் இருந்த ஒபீலாவின் தலைமாட்டில் சுவாமி திருப்படத்திலிருந்து உதிர்ந்த ஔடத விபூதி!

வெளிநாட்டு வாழ் இளைஞர்கள் பல்லாயிரக் கணக்கானவர்களை சுவாமி தன் வழி அதாவது நல்வழிப்படுத்தி இருக்கிறார்.. அவ்வாறு அவர் ஆற்றுப்படுத்திய இருவரின் அனுபவம் இதயத்திற்கு இதமாய் இதோ...

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

கிண்டி ஷீரடி பாபா திருக்கோவிலின் வியத்தகு 9 சிறப்பு அம்சங்கள்!


தம் முந்திய அவதாரமாகிய ஷீர்டி பாபாவுக்கு , உலகிலேயே முதன் முதலாக சத்ய சாயி பாபா நிர்மாணித்த திருக்கோயில். சென்னை வாழ் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக,1949 பிப்ரவரி 3 ந்தேதி பாபாவின் திருக்கரங்களால் திறந்துவைக்கப் பட்டு , உயிர்ப்பூட்டப்பட்டது... 

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

அவதாரப் பிரகடன தினம் - குழந்தைகள் கொண்டாட்டம் 2021

நம் ஸ்வாமியின் அவதாரப் பிரகடன தினமான 20 அக்டோபர் தினத்தை ஞாபகங்கொண்டு  கொண்டாடும் வகையில் ஶ்ரீ சத்யசாயி யுகம், உங்கள் வீட்டு ‘குட்டி’ சாயிகளை வீடியோவாகத் தொகுத்தளிக்கவுள்ளது.

சனி, 25 செப்டம்பர், 2021

கொடுங்கோலன் இடி அமீன் ஆட்சியிலிருந்து உகாண்டா டாக்டரை காப்பாற்றிய கடவுள் சாயி!


ஒரு தீங்கு நேரப்போகிறதென்றால் முன்பே சுவாமி எச்சரிக்கிறார்.. அப்படி எச்சரித்தும் கேளாத ஒரு பக்தரை சுவாமி மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி காப்பாற்றிய உன்னத பதிவு மிக சுவாரஸ்யமாய்...

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

தேவசிற்பி மயன் எழுப்பிய மாளிகையோ என வியக்கும் பாபாவின் பிரசாந்தி மந்திர்!


சாயி வாக்கு சத்திய வாக்கு. அவரது சங்கல்பம் வஜ்ர சங்கல்பம். தடைகளைப் பொடியாக்கி, தரணியில் ஓங்கி நிற்கும் சங்கல்பம். இடையறாது பக்தர்களின் நலன் நாடும் இனிய சங்கல்பம் ஐயம் கொண்டவர், இடையூறுகளைக் கண்டு மலைத்தவர் என அத்தனை அவநம்பிக்கையாளர்களின் ஆருடங்களையும் பொய்யாக்கி, தன் அவதார வரைபடத் திட்டங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பாபா நிறைவேற்றினார். அதில் ஒன்றுதான் பிரசாந்தி மந்திரின் நிர்மாணம்... 

வியாழன், 23 செப்டம்பர், 2021

தாத்தாச்சாரியாரின் கேன்சரை கேன்சல் செய்த கடவுள் சாயி!


டாக்டர்கள் வைத்தியம் செய்வர். அந்த டாக்டர்களுக்கே வைத்தியம் செய்வது டாக்டர்களின் டாக்டரான கடவுள் சுவாமியே! புற்றுநோயால் அவதிப்பட்ட ஒரு டாக்டரை எவ்வாறு சுவாமி குணமாக்கினார் என்பது இன்னொரு டாக்டர் பகிர்வதால் இது விசேஷமான அனுபவப் பதிவே!!

புதன், 22 செப்டம்பர், 2021

பள‌ பளக்கும் வைரத்தில் தன் உருவம் தெரியும்படி சிருஷ்டி மோதிரம் அளித்த ஸ்ரீ சத்ய சாயி!


சுவாமியின் சிருஷ்டி தான் இந்தப் பிரபஞ்சமும் நம் வாழ்க்கை சம்பவங்களும் எனும் போது.. கூடுதலாக பேரன்பின் காரணமாக சுவாமி அளித்தும்வரும் அற்புத சிருஷ்டியின் மகிமையை கண்ணுக்கு கண் ... இதயத்துக்கு இதயம் பலமுறை உணர்ந்த பிரபல மேற்கத்திய யோக நிபுணர் இந்திரா தேவி அம்மையார் பெற்றுக் கொண்ட சிறப்பு சிருஷ்டி வைரம் பற்றிய சுவாரஸ்ய பதிவு இதோ...

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

ஒரு உபநயன வைபவத்திற்கு சிறுவன் வடிவில் வந்து அற்புதம் புரிந்த சுவாமி!


பகவான் பாபாவின் லீலா விநோதங்கள் அலாதியானவை. அவை பல தரப் பட்டவை. மானிடர்களின் ஊகத்திற்கு அப்பாற்பட்டவை. அற்புதங்கள் எனது விசிட்டிங் கார்டு என பாபா கூறுகிறார்.மக்களை தம்மிடம் ஈர்த்து நல்வழிப் படுத்த அவர் அதை உபயோகிக்கிறார்.

திங்கள், 20 செப்டம்பர், 2021

சாதாரண கிரகத்தில் உதாரண வாழ்க்கை அருள அசாதாரணமாய் வந்த இறைவன் ஸ்ரீ சத்ய சாயி!

பிரபல மேற்கத்திய யோக நிபுணர் சுவாமியை குறித்து பலரோடும் பேசி அவர்களின் அனுபவங்களை பெற்று சிலிர்த்திருக்கிறார்.. அவர்களின் கலந்துரையாடல் அனுபவமும்.. சுவாமி நமக்கு வழங்கிடும் அத்வைத ஞானமும்.. சுவாமியின் எங்கும் நிறைந்த தன்மையும் சுவாரஸ்ய சிறு தொகுப்பாய் அனுபவிக்கப் போகிறோம் இதோ...!

சனி, 18 செப்டம்பர், 2021

கணவரின் ஆயுளை சுவாமியின் கருணையால் மீட்டு வந்த மீண்டும் ஒரு சாவித்திரி!

சுவாமி மேல் துளி கூட நம்பிக்கையே இல்லாத ஒரு கிறிஸ்துவர் தனது உயிருக்கு போராடிய நிலையில் சுவாமி அவரை எவ்வாறு காப்பாற்றினார் என்பதையும் அதற்கு அவரது மனைவியின் விடாப்பிடியான பக்தி எவ்வாறு உதவி புரிந்தது என்பதையும் பரவசமாய் வாசிக்கப் போகிறோம் இதோ...

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

ஈழத்து போர் சூழலில் இருந்து சுவாமியால் காப்பாற்றப்பட்ட பக்தையின் திக் திக் நேரங்கள்!

எங்கும் குண்டு வெடிப்பு... இன பேதம் சார்ந்த கொக்கரிப்பு... அதிகார துஷ்ப்ரயோகம் என வஞ்சக சாட்டை சுழற்றப்பட்ட பரபரப்பு சூழலில் எவ்வாறு ஒரு சுவாமி பக்தை ஈழத்திலிருந்து பாதுகாப்பாய் கடல் கடந்தார் என்பதை அவரின் வாக்குமூலத்திலேயே உணரப் போகிறோம் இதோ...

வியாழன், 16 செப்டம்பர், 2021

சிறுமிக்காக எம்.எஸ் அம்மாவை பாட வைத்த சுவாமி!


இறைவன் சத்ய சாயி சம்ஹார மூர்த்தி அல்ல.. சமாதான மூர்த்தி.. ஆலிங்கன ஆண்டவன்.. இரண்டற கலக்கும் இறைவன் என்பதற்கான அற்புத பதிவு இதோ...

மனமுவந்து செய்யும் தன்னலமற்ற சேவைக்கு பகவான் ஸ்ரீ சத்ய சாயி மாபெரும் மதிப்பு தருகிறார்.   அனைத்து வகை சாதனா மார்க்கங்களிலும் சேவையே மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது.

புதன், 15 செப்டம்பர், 2021

சுருள் முடியோடு சீரடி பாபா தோற்றம்... குருவார பூஜையில் நிகழ்ந்த வினோதம்!


சீரடி பாபாவின் மறு அவதாரம் என தன்னை , ஸ்ரீ சத்ய சாயி பாபா அறிவித்தார். பாபாவின் சத்ய வாக்கிற்கு சாட்சிய பிரமாணங்கள் தேவையில்லை. ஆயினும் பாபாவின் பல லீலைகளில் அவரது இந்த பிரகடனம் பிரகாசிக்க, அரைகுறை நம்பிக்கை கொண்டவர்கள் கூட பூரண நம்பிக்கை அடைந்தனர்.  இறைவன் பாபாவின் அத்தகைய லீலைகளில் ஒன்றை இங்கு காண்போம்... 

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

இந்துலால் ஷாவிற்கு ஒருநாள் மட்டும் புரிந்த தெலுங்கு!


இறைவன்  ஸ்ரீ சத்ய சாயி புரிந்து கொள்ளவே முடியாத அதி சூட்சும ஆண்டவர். பரம்பொருள் பிரகாசர்.. அவரை உணர்ந்து கொள்ளவே முடியும்.. அதற்கும் அவர் கருணையே வேண்டும்... அப்படி அவர் கருணையால்.. விரலசைவால் புரிந்த ஒரு லீலை.. புரிந்த அந்த லீலை இதோ...

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

ஒரு அறுவை சிகிச்சையின் அடுத்த நொடியே நடமாடிய சுவாமியின் 'அப்பெண்டிசிடிஸ்' நாடகம்!

சுவாமி எவ்வாறு இந்தப் பூவுலக மனிதர்களை இயக்குகிறார் என்பதையும்.. குறிப்பாக தன் பக்தர்களுக்கு தான் இறைவன் என்பதை எவ்வாறு உணர வைக்கிறார் என்பதையும்... தன்னை ஒரு அறுவை சிகிச்சையில் உடன்படுத்தி தான் உபாதைகளுக்கு அப்பாற்பட்டவன் என்பதை எவ்வாறு உணர்த்தினார் என்பதையும் அட்சய பாத்திரம் அருளும் சுவாமி அனுபவத் தொகுப்பாய் அனுபவிக்கப் போகிறோம் இதோ...

சனி, 11 செப்டம்பர், 2021

சாயி செயல் யாவும் நன்மையே!


சுவாமி நமக்கு தருவதெல்லாம் எத்தகையது..? நம் வாழ்வில் சுவாமி நிகழ்த்தும் அன்றாட சம்பவங்கள் எல்லாம் எப்படிப்பட்டவை? என்பதை சுவாமியே ஆழமாய்... பசுமரத்தாணியாய் நம் மனதில் பதிவது போல் விவரிக்கிறார் இதோ...

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

மக்களால் அருகம்புல் கொண்டு வணங்கப்படும் விநாயகர்!


இதன் துவக்கம் என்ன? ஒரு முறை பார்வதியும் பரமேஸ்வரனும் தாயம் விளையாடிக் கொண்டிருந்தனர். நடுவராக இருக்க நந்தி வேண்டிக் கொள்ளப்பட்டார். நந்தி ஒவ்வொரு முறையும் ஈஸ்வரனே வெற்றி பெற்றதாக அறிவித்தார். ஈஸ்வரனின் சார்பாக நந்தி முடிவெடுப்பதாக அன்னை பார்வதி எண்ணினாள். அதனால் கோபம் கொண்ட அவள் அஜீரண கோளாறால் அவதியுற நந்திக்கு சாபமிட்டார். 

வியாழன், 9 செப்டம்பர், 2021

அட்சயப் பாத்திரமாய் நடமாடிக் கொண்டிருக்கும் அகில உலக ஆதவன் ஸ்ரீ சத்ய சாயி!

ஒவ்வொரு பக்தரின் வாழ்விலும்.. அவரவர் வாழ்வின் நிகழ்விலும் சுவாமி எவ்வாறு மகிமைகள் புரிகிறார் என்பதை கண்ணால் கண்ட பிரபல மேற்கத்திய யோக நிபுணர் இந்திராதேவியின் உன்னத பகிர்வு சுவாரஸ்ய பதிவாய் இதோ...

புதன், 8 செப்டம்பர், 2021

ஷீரடி மந்திர் தரிசிக்க வந்தவரை சத்ய சாயி ஆட்கொண்ட அற்புதம்!

1918ம் ஆண்டு மஹாசமாதி அடைந்த ஷீரடி பாபா, தான் 8  ஆண்டுகளுக்குப் பிறகு , மீண்டும் தோன்றப் போவதாக கூறினார். அவ்வண்ணமே 1926ம் ஆண்டு சத்யசாயி பாபாவின் திரு அவதாரம் நிகழ்ந்தது. அவரே இவர் என்பதை விளக்கும் இன்னுமொரு சம்பவத்தைக் காண்போம்... 

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

தக்க சமயத்தில் தடுத்தாட் கொள்ளும் தனிப்பெரும் தெய்வம் ஸ்ரீ சத்யசாயி!



எல்லா தேசமும் சுவாமி தேசமே.. யார் தரும் நேசமும் சுவாமி தரும் நேசமே.. இதில் வெளி தேசம் வாழ்ந்தவருக்கும் நிகழ்ந்த சுவாமி மகிமைகளை அனுபவிக்கப் போகிறோம் இதோ... பிரபல மேற்கத்திய யோக நிபுணர் இந்திராதேவி அம்மையாரின் சிஷ்யைக்கும், தோழியின் டிரைவருக்கும் சுவாமி நிகழ்த்திய மெய் சிலிர்க்கும் அனுபவமே இது...

திங்கள், 6 செப்டம்பர், 2021

கவியரசு கண்ணதாசனை பரவசப்படுத்தி‌ இலங்கையிலும் ஆட்சி செய்யும் ஸ்ரீ சத்ய சாயி கண்ணன்!


இலங்கை அமைச்சராக இருந்த இராஜதுரை அவர்களின் அனுபவங்களோடு கவியரசு கண்ணதாசனின் பரவச உணர்தலும் சுவாமியின் இலங்கை பக்தரான உதயநாயகம் இதயம் திறந்து மிக சுவாரஸ்யமாக பதிவு செய்கிறார் இதோ...

(கவியரசு கண்ணதாசனின் சுவாமி உணர்தல் முதன்முதலாக நமது சத்யசாயி யுகத்தில் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது என்பதும் சிறப்பம்சமாய் குறிப்பிடத்தக்கது)

சனி, 4 செப்டம்பர், 2021

தட்ப வெப்பநிலை மாறுதலை எதிர்க்க உதவும் சுவாமியின் ஆன்மீகத் தீர்வுகள்!

இன்றைய காலக்கட்டத்தில் உலகாயத மக்களின் சர்வதேச பிரச்சனையான தட்ப வெட்ப நிலை மாறுதல் குறித்து சுவாமி அறிவுறுத்திய தீர்வுகளையும் சேர்த்து தன்னுடைய ஆராய்ச்சியை தெளிவுறவும் மிக சுவாரஸ்யமாகவும் பதிவு செய்கிறார் அமெரிக்க விஞ்ஞானியான டாக்டர் மோகன் இதோ‌...

வியாழன், 2 செப்டம்பர், 2021

தன் பக்தர்களை கருவியாகக் கொண்டு சுவாமி குணமாக்கிடும் கொடூர நோய்கள்!


சுவாமி பக்தராய் இருப்பது பூர்வ புண்ணியம். சில பக்தரை சுவாமி கருவியாய் பயன்படுத்துவது சுவாமி கருணையே!! பரஸ்பரம் ஒரு பக்தர் வழியாக இன்னொரு பக்தருக்கு தன்னுடைய சத்திய போதனைகளை கொண்டு செல்கிறார்.. இதில் பிரபல மேற்கத்திய யோக நிபுணர் இந்திரா தேவி அம்மையாரையும்... பிரபல கண் மருத்துவர் மோடியையும் எவ்வாறு சுவாமி தன் கருவியாக பயன்படுத்திக் கொண்டார் என்பதை வாசிக்கப் போகிறோம்!!