தலைப்பு

புதன், 30 நவம்பர், 2022

பாபாவின் கால்பட்ட இடம் எல்லாம் பொங்கிப் பூத்த தேவலோக துளசிகள்!

இறைவன் பாபாவின் இளமைக்கால விளையாடல்கள் அவரின் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் போல் குதூகலம் தருபவை... அதில் ஒன்று மிக வியப்புடன் இதோ...

வெள்ளி, 25 நவம்பர், 2022

இறைவனிடத்தில் எங்களுக்கு எப்படிப்பட்ட நம்பிக்கை இருக்க வேண்டும்?

பெரிதாக ஜபதவங்கள் செய்ய வேண்டியதே இல்லை! தாயாரை ஒரு குழந்தை நம்புவது போல் மிகவும் எளிமையாக , அதே சமயம் திடமாக தெய்வத்தின் மேல் நம்பிக்கையும் விசுவாசமும் வைத்துவிட்டாலே போதும்... அந்த சிரத்தையே தெய்வத்தை உங்களிடம் நேராக வரவழைத்து விடும்! தவ யோகியருக்கும் முனிவருக்கும் அவ்வளவு விரைவாக அடைய முடியாத கண்ணன் ஆயர்குல பாலகர்களுடனே ஆடிப்பாடிக் கொண்டிருந்தான்! 

வியாழன், 24 நவம்பர், 2022

ஸ்ரீ மகரிஷி பிருகு பாபா | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

சித்த புருஷர் ஒருவர் பாபாவை எவ்வாறு உணர்கிறார்... அவர் பாபாவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் யாது? ஏன் சித்த புருஷர்களை பாபா தன் அருகே வரவிடுவதில்லை? பாபாவிடம் நாம் எதனை பிரார்த்தனை செய்ய வேண்டும்? போன்ற பல்வேறுவிதமான கேள்விகளுக்கு விடை தரவிருக்கும் சுவாரஸ்யமான பதிவு இதோ...

பாபா வகுத்து தந்த வழியில் தான் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அரசும் செயல்படுகிறது - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

 G.Kishan Reddy - Union Minister For Culture, Tourism And Development Of North Eastern Region (DoNER), Government of India | MP - Secunderabad

தனிப்பெரும் பரம்பொருளான பாபாவின் இறையாண்மை பற்றியும்... கனிந்த பெரும் கருணைக்கடவுளான சாயியின் தீரா திவ்ய தெய்வீகத்துவம் பற்றியும்... எவ்வாறு பாபாவின் தொலைநோக்கு பேரருள் சேவையை இந்திய மோடி அரசு படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகிறது என்பதை பாபாவின் 97 ஆவது அவதார ஜெயந்தி அன்று பிரசாந்தி நிலையத்திலேயே மத்திய அமைச்சர் சிலிர்க்கப் பேசிய பரவச உரை திகட்டா தமிழில் இதோ...

புதன், 23 நவம்பர், 2022

பாபாவின் பிறந்தநாள் அறிக்கை!

1966 ஆம் ஆண்டு தீபாவளிக்குப் பின்னர் பாபாவின் பிறந்த நாள் விரைந்து வந்தது. அவருடைய பிறந்த நாள் அறிக்கையாக கீழ்க்கண்டவாறு எழுதி, அதை சனாதன சாரதியில் வெளியிடும் படிபணித்தார்.

திங்கள், 21 நவம்பர், 2022

பகவான் பாபாவின் 70, 75, 80 மற்றும் 85வது பிறந்தநாள் விழாக்கள்!


எண்ண எண்ண இனிக்கும்... நினைக்க நினைக்க விழிநீர் தித்திப்பாக நனைக்கும்... இதோ வாசிக்க வாசிக்க பரவசப்படுத்தும்... அவதார வைபவ நாள் என்பது நமக்குள்ளே தெய்வீகத்தை நினைவுப்படுத்தும்... தங்கத்தேர் மட்டுமல்ல நம் உடம்பே இறைவன் பாபா நகரும் அங்கத்தேர் என்பதை ஆழமாய் உணர்த்தும் பிறந்தநாள் வைபவக் கொண்டாட்டப் பதிவு இதோ...

சனி, 19 நவம்பர், 2022

மகளிர் தினத்தை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?

இறைவன் ஸ்ரீ சத்யசாய் பாபா, சமுதாயத்தில் பெண்களின் முக்கிய பங்கை முழு உலகிற்கும் வலியுறுத்தும் வகையில் மகளிர் தின கொண்டாட்டங்களை துவக்கினார்.  வீட்டில் மரியாதை மற்றும் சரியான நடவடிக்கையை மீட்டெடுக்க பெண்களுக்கு சிறப்பு கடமை உள்ளது என்று அவர் வலியுறுத்துகிறார்.  பிரசாந்தி நிலையத்தில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.  சுவாமி கூறுவது... 

வியாழன், 17 நவம்பர், 2022

கிரகங்களா? கர்மாவா? எது எங்களை பாதிக்கிறது?

ஜோதிட சாஸ்திரப்படி கிரகங்கள் ஒரு ஜீவனின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகத் தோன்றினாலும்... உண்மையில் அந்த ஜீவனின் கர்மாப்படியே தான் அவனது வாழ்க்கை நடக்கிறது!

செவ்வாய், 15 நவம்பர், 2022

சித்திரத்தில் விசித்திரம் காட்டிய ஸ்ரீ சத்ய சாயி சின்மயன்!

பேரிறைவன் பாபா வேறு அவரின் திருவுருவப் படம் வேறு அல்ல என்பதை உணர்த்தும் உன்னதப் பதிவில் எங்கும் பாபா நிறைந்திருக்கிறார் எனும் பரம சத்தியத்தையும் பாடம் எடுக்கிறது இதோ... 


ஞாயிறு, 13 நவம்பர், 2022

இல்லங்களில் நடந்த அகண்ட பஜன் அகிலத்தின் அகண்ட பஜனாக பரவிய வரலாறு!

எழுபத்தேழாம் வயதில் எடுத்தடி வைக்கும் இளைமை மாறாத இனிமை.. அகண்ட பஜன்.சிறுவர் முதல் சீனியர் வரை பக்திச் சீரிசையை இசைக்கும் ஆரோஹணம். அகில உலகும் மேற்கொள்ளும் சங்கீத சன்மார்க்க வேள்வி. இரவும் பகலும், சூரியனும் சந்திரனும் பக்தியுடன் கேட்டு பகவான் திருப்பாதம் பணியும் அற்புத ஒருநாள் திருவிழா. அல்லாவும் ஏசுவும் ராம கிருஷ்ண தேவரும் புத்த மகாவீரும் ஒன்றாகக் கலந்த, எல்லை இல்லாத சாயி பரம்பொருளின் கீர்த்திதனை உளம் உருகிப் பாடும், உலகம் கொண்டாடும் ஒற்றுமைப் பெருவிழா.

சனி, 12 நவம்பர், 2022

பஜன் செய்வதற்கு நேரமில்லை என்று கூறாதீர்கள்!


நேரமில்லை எனச் சொல்வது தமோ குணத்தையே வலியுறுத்துகிறது... சோம்பல் ஆம்பலாய் பூத்துவருகிற போது சொல்கிற வாசகம் நேரமில்லை... நேர மேலாண்மையை கடைபிடிப்பதும் ஆன்மீக வாழ்க்கையில் ஒரு முக்கிய பாங்கு... அதை உள்ளுணர்த்தும் வகையில் இறைவன் பாபாவே வழிகாட்ட உறுதியோடு முன்மொழிகிறார் இதோ..‌.

செவ்வாய், 8 நவம்பர், 2022

இடர் பொறுத்த ஸ்ரீ சத்யசாயி இறைவன்!

இறைவன் பேரவதாரமாக இறங்கி வருகையில் மனித தேகத்தையே உடுத்திக் கொள்கிறார்.. அந்த தேகத்திற்கான எல்லா அசௌகர்யங்களையும் மனிதனைப் போல் அன்றி பேரவதாரங்கள் புலம்புவதோ, அலுத்துக் கொள்வதே, கலங்குவதோ இல்லை என்பதற்கான மிகப் பெரிய உதாரணம் உன்னதப் பதிவாக இதோ...!

எங்கள் உடைமைகளைப் பற்றி நீங்கள் சொல்லும் போது "Less Luggage More Comfort" என்று சொல்கிறீர்கள்... விளக்க முடியுமா?

உடைமைகள் நம்மை உலகத்துடனேயே கட்டிப் போடுபவை. அவற்றின் கனம் நம்மை அழுத்திக் கொண்டிருந்தால் நாம் எப்படி விண்ணுலகத்திற்குப் பறக்க முடியும்? 

வியாழன், 3 நவம்பர், 2022

கண்ணில் விழுந்த கல்லால் இழந்த பார்வையை மீட்டுத் தந்த விபூதி சுந்தர சுவாமி!

புறக்கண்களே உலகத்தின் சாவி... புறப்பார்வையே உலகத்தின் ஜன்னல்... அது பறிபோனால் உலகமே இருண்டு விடுகிறது... நுண்ணிய புலனாகிய கண்ணின் பார்வையை சுவாமி எவ்வாறு மீட்டளிக்கிறார் என்பதற்கான ஒரு நூதன மகிமை சுவாரஸ்யமாய் இதோ...! 

புதன், 2 நவம்பர், 2022

மரணத்தை நினைத்து பயப்படுகிறதே மனம், பிறர் மரணமடைந்தால் அழுது புலம்புகிறதே... மரணம் அமங்களமா?

இயற்கையின் தவிர்க்க முடியாத விதிகளில் ஒன்று மரணம்! அது நமது கர்மாவை அனுசரித்தே உடல் தர்மமாக அமைக்கப்பட்ட ஒன்று! தாவரங்களும் பிறந்து அழிகின்றன... பிறக்கும் எதுவும் இறக்கவே செய்யும்! இந்த நிலையற்ற உலகமும் ஒருநாள் அழியவே செய்யும்! ஆக்கல் அளித்தல் அழித்தலே பரமாத்மாவின் லீலை! இறைவனே ஆக்குவதும் அழிப்பதும் எற்பதால் அவனுக்கே அழிக்கவும் உரிமை உண்டு!