தலைப்பு

திங்கள், 30 டிசம்பர், 2019

சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வேலன் அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்!

புட்டபர்த்தியைப் புகைப்படத்தில் கூடப் பார்க்காத இவருக்கு, நம் அன்பு தெய்வம் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா புட்டபர்த்தியை முழுவதும் கனவில் சுற்றி காண்பித்திருக்கிறார். இவரின் அனுபவங்கள் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். இந்த பதிவை தவறாமல் படித்து மற்றவர்களுக்கும் பகிருங்கள். 

இன்று (28/12/2019) (மதியம் 1.45)
ஒரு மீட்டிங் சாலிகிராமத்தில்.. கோடம்பாக்கத்திலிருந்து ஓலா ஆட்டோ புக் செய்தேன்..
அது ஓலா அல்ல சுவாமி லீலா என பிறகு தான் புரிந்தது ...

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

கவிதா வாஹினி! (பக்கம் -2) -கவிஞர் வைரபாரதி

32) ஷிர்டி சாயி சத்ய சாயி:

ஷிர்டியில் வாழ்ந்த 
அதே ஜோதி தான் 
பர்த்தியில் பிறந்தது 

அகல் விளக்கா 
குத்து விளக்கா 
எதில் 
எந்த ஜோதி சிறந்தது? 

சனி, 28 டிசம்பர், 2019

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 5 | பாதங்கள் தருவாய் பர்த்தீசா! - உமேஷ்



 🇦🇺 ஆஸ்திரேலியாவில் வாழும் ஃபிஜியன் உமேஷ் அவர்களின் அனுபவங்கள்! 

மன்பதை காக்கும் சாயி மாணிக்கப் பாதம் தானே!
துன்பத்தைப் போக்கும் சாயி தூமணிக் கரங்கள் தானே!
அன்பதைப் பொழியும் அந்த ஆனந்த மூர்த்தம் தானே!
இன்பத்தைப் பொழியும் சாயி ஈடிலாக் கருணை தானே!









ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பனில் உள்ள கரண்டேலில் அற்புதமானதொரு சாயி சக்தி செயல்படுகிறது. சென்ட்டர் என்றும் சமிதி என்றும் பதிவு செய்து கொள்ளாத ஒரு சாயி பக்தர் குழு அங்கே நிதானமாய் அமைதியாய் இயங்குகிறது. வியாழக்கிழமைகள் தோறும் நடக்கும் பஜனைகளில் சுவாமியின் படங்களிலிருந்து பூக்கள் 'பட்பட்'டென்ற சப்தத்துடன் கீழே விழுவது ஆனந்தமான சாயி லீலை. கராஜ் ஒர் அழகிய சத்யசாயி கோயிலாகியிருக்கிறது.

வெள்ளி, 27 டிசம்பர், 2019

பாகம் 3 (நிறைவுப் பகுதி) | ஸ்ரீமதி. M.S. சுப்புலட்சுமி அவர்களின் சத்ய சாயி அனுபவங்கள்!


பாரத ரத்னா M.S.அம்மாவிற்கு பாபா பரிசளித்த வைரநெக்லஸ்:

வாழ்வே தவம். இசையே வழிபாடு. ஈகையே மகிழ்ச்சி என வாழ்ந்தவர் இசைக்குயில் M.S. அம்மா.

கோவிந்தன் குழல் கொண்டு ஊதியபோது கோபிகைகள் மட்டுமின்றி ஆவினங்களும் பறவைகளும் கூட உண்பதை நிறுத்தி இமைப்பதை மறந்து நின்றனவாம். M.S அம்மாவின் இசைக்கும் அந்த அறபுத சக்தி உண்டல்லவா.?
தன் தெய்வீக இசையால் அவர் கோடிக்கணக்கில் பொருள் சேர்த்து பெரும் செல்வந்தராக ஆகி இருக்கலாம். ஆனால் அவர்  தம் இசைக் கச்சேரிகள் மூலம் ஈட்டிய செல்வம் அனைத்தும் நற்பணிகளுக்காக வழங்கினார்.

வியாழன், 26 டிசம்பர், 2019

பாகம் 2 | ஸ்ரீமதி. M.S. சுப்புலட்சுமி அவர்களின் சத்ய சாயி அனுபவங்கள்!


இன்னிசை அரசி M.S. அவர்கள் வாழ்வில் பாபா நிகழ்த்திய அற்புதம்:

மன அமைதி குன்றி சற்றே கண் மூடி அமர்ந்திடும் போது காற்றினிலே ஒரு கீதம் அது கண்ணனின் மோகன கீதமாக சற்றே வந்து காதில் விழுகிறது. குறை ஒன்றும் இல்லாத மறை மூர்த்தி கண்ணன் கோவிந்தனின் நாமமும் காதில் கேட்க நமது உள்ளம் பரவசத்துடன் அமைதி அடைகிறது.

புதன், 25 டிசம்பர், 2019

பாகம் 1 | ஸ்ரீமதி. M. S. சுப்புலட்சுமி அவர்களின் சத்ய சாயி அனுபவங்கள்!


'திருப்பதியானது புட்டபர்த்தி ' - கவிஞர் பொன்மணி

பிரபல வார இதழான குமுதத்தில் "வெற்றிப் பெண்மணிகள்" என்ற வரிசையில் ஒவ்வொரு துறையில் ஒவ்வொரு சிறப்பான பெண்மணியைப் பேட்டி கண்டு தொடராக எழுதியிருந்தேன். அவர்களுள் சாயி பக்தர்களாயிருந்தவர்களிடம் சுவாமி தந்த அனுபவங்களைக் கேட்டு எழுதினேன். அதற்கு மிக நல்ல வரவேற்பு இருந்தது. இசைத்துறைக்கு இசைப்பேரரசி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களைப் பேட்டிகாண முயன்றேன். அதற்குமுன் 'கல்கி' குடும்பத்தின் பேட்டிக்காக குடும்பத்தோடு அவர்கள் இல்லம் சென்றபோது... எம்.எஸ். அம்மாவும் அங்கு வந்து எங்களோடு அன்பாகப் பேசிக் கொண்டிருந்தார்.

செவ்வாய், 24 டிசம்பர், 2019

கொடைக்கானல் அருகே மண் சரிவு தடுக்கப்பட்டது! -T.G கிருஷ்ண மூர்த்தி


1990 களில் ஆரம்ப காலத்தில் நடைப்பெற்றது,  (T G கிருஷ்ண மூர்த்தி முன்னாள் தமிழ்நாடு மாநில சாயி சேவா தலைவர் –  Ex Tamil Nadu State President) ஸ்வாமியுடன் கொடைக்கானல் சென்று மதிய உணவுக்குப் பிறகு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஸ்வாமி திடீரென வெளியே வந்து உடனே காரை எடுத்து, கிளம்ப வேண்டும் என்றார், ராதாக்ருஷ்ணன் அவர்களும் காரைக் கொண்டு வர பின் சீட்டில் தனது அருகில் TGK ஐ அமரச் செய்து, இன்னொரு பக்தரை பின்புறம் அமரச் செய்தார்.  மைசூர் போகும் பாதையில்  போகச் சொல்லி வண்டியும் போயிற்று, ராதாகிருஷ்ணன், மிகவும் கவனமாக வண்டியை ஓட்ட வேண்டியிருந்தது ஏனெனில் மலைப் பாதையாக இருந்தது.

திங்கள், 23 டிசம்பர், 2019

எனது வாழ்க்கையே நான் தரும் நற்செய்தி | பாபாவின் வாழ்விலிருந்து ஒரு சம்பவம்!


பகவான் அடிக்கடி தன்னுடைய உரைகளில் 'எனது வாழ்க்கையே நான் தரும் நற்செய்தி' என்று குறிப்பிடுவர். அவர் செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட பக்தர்களுக்கு ஒரு செய்தியாக இருக்கும். அப்படி பகவானின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை தான் நீங்கள் இப்போழுது பார்க்க போகிறார்கள்! 

பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு(Tippu) மற்றும் அவர்களுடைய மனைவி ஹரிணி அவர்களின் சாயி அனுபவங்கள்!


சாய்ராம்! சுவாமியின் அன்பிற்குரிய  பக்தரும், பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகருமான சாய் சகோதரர் திரு திப்பு மற்றும்  அவரது துணைவியார் ஸ்ரீமதி  ஹரிணி திப்பு (  பிரபல  திரைப்படப் பின்னணிப் பாடகி) அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்.. 

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

அமெரிக்காவைச் சேர்ந்த திருமதி. கீதா மோகன்ராம் அவர்களின் அனுபவங்கள்


ப்ருந்தாவன், பெங்களூருவில் நன்கு அறிமுகமான டாக்டர் பத்மநாபனுடைய மகள் கீதா மோகன்ராம். பத்மநாபனுடைய மாமா சேஷகிரிராவ் இன்றும் பிரபலமானவர்.

வெள்ளி, 20 டிசம்பர், 2019

ஏன் இந்த உடல் கொடுக்கப்பட்டுள்ளது?

 ஏன் இந்த உடல் கொடுக்கப்பட்டுள்ளது?



யாருக்காகவும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, உங்களுக்காகவும் கவலைகொள்ளாதீர்கள், உங்களுக்காக மகிழ்ச்சி  கொள்ளுங்கள்.

தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்!

மங்களூரை சேர்ந்த பிரபல ஸ்தாபனமான M.S PAI & CO குழுமத்தை சேர்ந்த திரு. பத்மநாப பாய் அவர்களின் அனுபவங்கள்!

ஓம் ஸ்ரீ சாயி சரணாகத வத்சலாய நமஹ.
                   
தன்னை நாடிவந்த பக்தர்களை பாபா ஓடிவந்து துயர் துடைத்த நிகழ்ச்சிகள்
எண்ணில் அடங்கா.

வியாழன், 19 டிசம்பர், 2019

ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் சமாதிக்கு பின்னர் நடந்த அற்புதம்!

கொல்கத்தாவில் பிரபல நரம்பியல் டாக்டராக இருந்த Dr. D. P பானர்ஜி அவர்களின் அனுபவப் பக்கங்களிலிருந்து..

டாக்டர் D.P பானர்ஜியும் அவரது துணைவியாரும் பிராசாந்தியிலே வாழ வேண்டுமென, 2008ல் அக்டோபரில் வந்து சேர்ந்தனர். திருமதி.ஷோபா பானர்ஜி இறைவனின்(சாயியின்) அருளுக்குள், ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே வந்தவள். இதயபூர்வமான இந்த பந்தம், வளர்ச்சி அடைந்து, ஆண்டாண்டுகளாக உறுதிப்பட்டுள்ளது. அவளது கனவில் ஸ்வாமி அடிக்கடி வருவார்; ஆனால் மற்றவர்களுக்கான நலனுக்காகவே  அது  நடந்தது. ஸ்வாமியின் கருவியாக அவள் செயல்பட்டமைக்கு மிகுந்த ஆசி பெற்ற ஒருவள், அவள்!! மிகுந்த தெய்வீக மாகவும், மனித நேயத்தோடும் சேவையை செய்து வந்தாள்.

புதன், 18 டிசம்பர், 2019

பிரபல புகழ்பெற்ற கன்னட இலக்கியப் படைப்பாளி பத்மஸ்ரீ V.K கோகாக் அவர்களின் அனுபவங்கள்!

V.K கோகாக் என்பவர் பிரபல புகழ்பெற்ற கன்னட இலக்கியப் படைப்பாளி ஆவார். இவர் கன்டத்தில் எழுதி 1982-ல் வெளிவந்த 'பாரத சிந்து ராஷ்மி' என்ற காவியத்துக்காக 1990இல் 'ஞானபீட விருது'(Jnanpith Award) பெற்றவராவார். இவர் கன்னடம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நிறைய நூல்களை எழுதியுள்ளார். 1961 ஆம் ஆண்டில், கோகாக்கிற்கு இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

செவ்வாய், 17 டிசம்பர், 2019

மாமிசம் உண்பவர்களுக்கும் பாவ கர்மாவில் பங்குண்டு!


அசைவ உணவு உண்பது பெருந்தீய பாவம்... அந்த கொடுப்பாவம் நிழலாய் நம்மையே பின் தொடரும்... பின் தொடர்ந்து கெடுதல் விளைவுக்கு.. பொழிகின்ற இறை அருளை முரணாய் முன்நின்று தடுக்கும்... ஜீவகாருண்ய அடிப்படையில்  எதற்காக ஒருவர் அசைவத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது மிக விளக்கமாக இதோ..!

திங்கள், 16 டிசம்பர், 2019

ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 4 | ஆண்டவன் தோட்டத்து அன்பு மலர்கள்!

🇦🇺 ஆஸ்திரேலியா பெண்மணி மோயா(MOYIA) அவர்களின் அனுபவங்கள்! 

சேவையின் மகத்துவங்கள் ஜெகமெலாம் புரியவைப்பாய்
சேவைகள் பக்தர் புரியப் பாரெலாம் அனுப்பி வைப்பாய்
சேவையே உனக்கு கந்த சிறந்த வழிபாடென்பாய் நீ
சேவையை வாழ்க்கை யாக்கும் அன்பரை அரவணைப்பாய்!









🌹ஆஸ்திரேலிய ரோஜாக்கள்:

ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் வாழும் 'பிங்க் சிஸ்டர்ஸ்' சுவாமியின் பிரத்யேகமான அன்பையும் அருளையும் அடைந்திருக்கும் அதிர்ஷ்டசாலிகள்.

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

அவர் திருநாமம் "அலிபாபா" அல்ல "சாயிபாபா"

🇻🇪 வெனிசுலா நாட்டைச் சேர்ந்த திருமதி. அனா எலினா டயஸ் தன் வாழ்வில் நடந்த நிகழ்வை தன் கட்டுரையில் விவரிக்கிறார்.. 

நிறைமாத கர்ப்பிணியாக... நான் 2வது குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு, என்னுடைய 10 வயது மூத்த மகன் எட்வர்டு உடன் தொலைக்காட்சி நிகழ்சியை பார்த்துக்கொன்டிருந்தேன், அது இயேசுநாதரின் வாழ்க்கை பற்றிய ஆவணப்படம்.18 வயது முதல் 30 வரை யாரும் அறிந்திராத, எந்த விவிலிய(Bible) நூல்களிலும் எழுதப்படாத  காலத்தைப்பற்றியது.. ரிச்சர்டு பேக் என்ற ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் தான் அதை வெளியிட்டிருந்தார். அதில் பல விஷயங்களை தெளிவுப் படுத்தியிருந்தார். இயேசு வட இந்தியாவின் பல தபோவனங்களில் வாசம் செய்ததாகவும், பாகிஸ்தானில் வசித்துவந்ததாகவும் தெரிவித்திருந்தார். கடைசியில் ஆவணப்படம் சத்ய சாயிபாபாவின் செய்திகளுடன் முடிவடைந்தது.

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்!

தமிழ்த் திரையுலகின் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவராகத் திகழ்ந்த "சௌகார் ஜானகி" அவர்களின் அனுபவங்கள்!

இவர்கள் தென்னிந்திய திரைப்படங்களில் மட்டும் இன்றுவரை கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா உடனான இவர்களின் அனுபவங்கள் கேட்பதற்கு மிகவும் மெய்சிலிர்க்கும் படியாக இருக்கும். குறிப்பாக இரண்டாம் பாகம் மிகவும் சுவாரசியமாக இருக்கும். அதனால் தவறாமல் சௌகார் ஜானகி அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்களை கேட்டு ஆனந்தம் அடையுங்கள்.

சனி, 14 டிசம்பர், 2019

உலகில் முதன்முதலாக நிறுவப்பட்ட ஷீரடி பாபா சிலை!

கிண்டி ஷீரடி பாபா திருக்கோயில், சென்னை. 

அன்பெனும் கங்கையும் கருணையாம்
யமுனையும் அருள் என்னும் சரஸ்வதியும்
சங்கமம் ஆகும் சாயியின் திருவடி.
இங்கவர் நிகழ்த்தியது ஒரு அற்புத ரக்ஷணம் கதையையும் மிஞ்சிய ஒரு உண்மை வாழ்க்கை கதை... 

வெள்ளி, 13 டிசம்பர், 2019

ஸ்ரீ ராமர் - ஏற்றமிகு கதாநாயகர் -ஸ்ரீ சத்ய சாயி பாபா


ஸ்ரீ மத் இராமாயணத்தை ஸ்ரீ இராம கதா ரச வாஹினியாக பாபா அளித்ததே துல்லியமான இராமாயணம்...! காரணம் தன் முந்தைய அவதாரத்தில் என்னென்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றி அவரை விட வேறு யாரால் அவ்வளவு தெளிவாக விளக்கிவிட முடியும்?! ஸ்ரீ ராம நிகழ்வுகளைக் குறித்து நாம் அறியாத பல ஆச்சர்ய அதிசய ரகசியங்களை எல்லாம் நம்மை பரவசமாக்கிட பேரிறைவன் பாபாவே விவரிக்கிறார் இதோ...

வியாழன், 12 டிசம்பர், 2019

மருத்துவக் கல்லூரி மாணவர்களை தீ விபத்தில் இருந்த காத்த பாபா!


அது 1992ம் ஆண்டு. T.A.பாய் அறக்கட்டளையின் மூத்த நிர்வாகி பாபாவுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்.
நடந்தது என்ன?

பாபா தம் மாணவர்களிடையே உரையாடிய போது கூறியது...
T A. பாய் மருத்துவக் கல்லூரி(Kasturba Medical College, Manipal) மாணவர்கள் 40 பேர் கலாசாலையில் ஒரு அறையில் குழுமி இருந்தனர். விலை உயர்ந்த கருவிகளும் அந்த அறையில் இருந்தன.

புதன், 11 டிசம்பர், 2019

கர்நாடகத்தின் தலைசிறந்த மேதை பத்மபூஷன் திரு. T A.பாய் அவர்களின் அனுபவங்கள்!

பிரபல T. A. PAI மேனேஜ்மெண்ட் இன்ஸ்டியூட், மணிபால் சேர்மன் பத்மபூஷன் 
திரு. T A.பாய் அவர்களின் அனுபவ பக்கங்களிலிருந்து...

ஷீரடி சிவன்தான் பின்
பர்த்தியில் சிவசக்தி.....
மாறியது உருவம்தான்
மாறாதது பக்த ரட்சணம்.

திரு. T A.பாய். கர்நாடகத்தின் தலைசிறந்த மேதை. பன்முகத் திறமை கொண்டவர். தொட்டது எல்லாம் துலங்க வைத்தவர். அவர் எவ்வாறு ஷீரடி பாபாவும் சத்யசாயி பாபாவும் ஒருவரே என உணர்ந்தார் நிகழ்வுகளை அறியும் முன்.. திரு பாய் அவர்களைப்  பற்றி.....

சாயி சாஸ்திரிகள் - திரு. ரா. கணபதி


'108' என்று விரல் ரேகைகளில் சரியாக கணக்கிட்டவாறுதான் காயத்ரீ ஜபம் செய்யவேண்டுமா என்ன? எண்ணிக்கை பாராமல் எண்ணம் ஒருமுகப்பட்டு நிற்கும் வரை செய்தால் தேவலை போலிருக்கே!’ என்ற எண்ணம் எனக்குத் தலைதூக்கியிருந்த காலம்.

செவ்வாய், 10 டிசம்பர், 2019

மறக்க முடியாத அந்த பிருந்தாவனம் பயணம்!

1957ஆம் ஆண்டு பகவானுடன் ஆன்மீக சுற்றுலாவாக வடஇந்தியா சென்று வந்த ஒரு பக்தரின் அனுபவ பக்கங்களிலிருந்து...

30 ஜூலை 1957ஆம் ஆண்டு சாயி பகவானுடன் ரிஷிகேஷில் இருந்து புறப்பட்டு டெல்லி வழியாக பிருந்தாவன் சென்றோம். யமுனை நதியின் ஒவ்வொரு அலையும் பாபாவின் வரவை எதிர் பார்த்தது போல அன்று ஆர்ப்பரித்தது. 

திங்கள், 9 டிசம்பர், 2019

ஸ்ரீ சத்யசாயி லீலைகள் - தொலைந்தது கிடைத்தது!

இச்சம்பவம் பகவானின் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவரால் விவரிக்கப்பட்டது.

ஒருமுறை இந்த மாணவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன் லண்டன் சென்றிருந்தபோது, அங்கு ஷாப்பிங் செல்ல தெருக்களில் நடந்து கொண்டிருந்தார். வெளியே வரும் பொழுது எதேச்சையாக அவரது தந்தையார் தனது கைப்பையில் கைவிட தங்கள் அனைவரது பாஸ்போர்ட்டுகளும் இல்லாததை உணர்ந்து மிகவும் தடுமாறிவிட்டார். முதலில் மிகவும் பதட்டம் அடைந்த பொழுதிலும், பகவானிடம் அவர்கள் வைத்திருந்த பக்தி அவர்களை நிதானப்படுத்தியது.

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

விபூதியால் குணமான விஷப்பாம்பு கடி!


ஒருமுறை பாபா தரிசனம் கொடுத்துவிட்டு தனது இருப்பிடம் திரும்பி கொண்டிருந்த பொழுது, ஒரு டாக்டர் வேகமாக வந்து ஒரு மாணவனை விஷப்பாம்பு கடித்து விட்டதால் பாபாவிடம் கூட்டி வந்தார். மகளிர் பகுதியில் வந்து கொண்டிருந்த பகவானை நிறுத்தி விஷயத்தை கூறினார். சுவாமி விபூதியை வரவழைத்து விஷம் தீண்டப்பட்ட மாணவனை உண்ணச் செய்தார். பாம்பின் விஷம் பலவீனமடைந்து விட்டது. மாணவன் பிழைத்தான்.

ஆதாரம்: ஆரோக்கியப்ரதாயினி - P18

சனி, 7 டிசம்பர், 2019

சென்னையை சேர்ந்த பிரபல கண் டாக்டர் ரங்காராவ் அவர்களின் அனுபவங்கள்.


ரங்காராவ் என்ற டாக்டர், சென்னையில் இருந்த முன்னணி கண் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவர் தனது தொழில் தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தில் பீமாவரத்தில் பொது மருத்துவராக இருந்துவந்தார். ஒரு முறை, சீரடி பாபாவை உயிருடன் தரிசித்த ஒரு பக்தருக்கு வைத்தியம் செய்ய நேர்ந்தது. அன்று முதல் ரங்காராவ் டாக்டரும் சீரடி பாபா பக்தராகி, தினமும் அவரை பிரார்த்தித்து வந்தார், எப்பொழுதும் தன்னை ஷீரடி பாபா வழி நடத்துவதை உணர்ந்தார்.

நான் தினமும் நிறைய ஸ்லோகம் சொல்றேன். ஆனாலும், பிரச்சினைகள் தீரவே இல்லையே!

 ஒரு பக்தையின் கேள்வியும் இறைவன் சத்ய சாயியின் பதிலும்

ஒரு பெண்மணி, 'நான் தினமும் நிறைய ஸ்லோகம் சொல்றேன். ஆனாலும், பிரச்சினைகள் தீரவே இல்லை. பகவான் இன்னும் கண்திறந்து பார்க்கலை' என்று வருத்தப்பட்டார்.

வெள்ளி, 6 டிசம்பர், 2019

குறள் வடிவில் சத்ய சாயி பகவானின் பொன்மொழிகள்:


(LOVE ALL SERVE ALL) 

 அன்புக்கு இணையான தவமில்லை ஆதலால்
அன்பு செய் அனைவருக்கும்.

 செய்திடு சேவை செய்தக்கால் அச்சேவை(நீ)
உய்ந்திடு வழி காட்டியாம்.

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 3 | உலகின் ஒரே பாதுகாவலன்!


ஆஸ்திரேலியாவில் வாழும் திரு. சைலேஷ் சந்த் தர்ஷன் அவர்களின் அனுபவங்கள்.

நடனம் செய்வோரில் வல்ல நடராசன் நானே! நடன
 அடியினை ஒவ்வொன்றாக அவரவர் புத்திக் கேற்ப
படிப்படியாய்ப் பயிற்றநான் படும் பாடு யாரறிவார்?
கடினமே எனினும் நடனம் பயிற்றவே வந்தேன் நானே!
 - பாபா

சனி, 30 நவம்பர், 2019

அவருடன் ஒன்றாக இணைய சாயியை சார்ந்து இருங்கள் -ரகுராம் அனுமுலா (Alumni, SSSIHL)

இந்த கட்டுரையில், ஸ்ரீ சத்யசாய் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரான ரகுராம், சாய் மாணவராக தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

இதை தொடங்குவதற்கு முன், எங்கள் அன்பான தாய் சாயிக்கு, எனது மனமார்ந்த அன்பையும் நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன். சுவாமி என் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் தனது அன்பையும் கருணையையும் பொழிந்த சம்பவங்கள் எண்ணற்றவை. அவர் மிகச் சிறந்த ஆசிரியர். ஆனால் மிகவும் அன்பானவர். சகிப்புத்தன்மை கொண்டவர். அவரது வடிவமைப்புகள் எளிதில் தெரியவோ, கற்பனை செய்யவோ முடியாதவை. சுவாமியின் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் மாசற்ற அம்சம் அவருடைய அன்புதான். அவரது அன்பானது நாம் அனுபவிப்பதற்காகவே அன்றி எந்தவொரு மனிதனின் ஆராய்ச்சி மற்றும் புரிந்து கொள்ளும் முயற்சிக்காக இல்லை. சுவாமி நமக்கு அனுபவங்களை தருவதற்கு ஒரு காரணம் இருக்கும். அவர்மீது நம்முடைய அன்பை வளர்க்கும்படி அவர் அனுபவங்களைத் தருகிறார்.

வியாழன், 28 நவம்பர், 2019

காலையில் எழும்போதும் இரவு படுக்கும் முன்பும் நாம் செய்ய வேண்டிய பிரார்த்தனை பற்றி நம் அன்பு பகவான் கூறியுள்ளவற்றை தெரிந்து கொள்வோமா ?


சூரியன் உதயமாகும் போதே, பக்ஷிகள் கூவிக்கொண்டிருக்கும் போதே நித்திரையிலிருந்து எழுந்து  மனமார தியானிக்க வேண்டும். "ப்ரபோ! இரவும் பகலும் இது தான் என் சாவும் பிழைப்பும்  இதுவே என் மனித பிறப்பு,  என்ன செய்தாலும்  என்ன செய்வித்தாலும் எல்லாம் உன்னுடையதே. எல்லா பாரமும் உன்னுடையதே. எல்லோரிடமும் அன்பு செலுத்திக் கொள்ளும்படி இருக்க ஆசீர்வதியுங்கள்!" 

புதன், 27 நவம்பர், 2019

செளந்தர ஸாயி சௌபாக்கிய ஸாயி! (பிரபல பாடகர் T.M.S அவர்களின் சாயி அனுபவங்கள்)


 பிரபல பாடகர் டி.எம்.எஸ் என்னிடம் பகிர்ந்து கொண்ட சுவாமி அனுபவங்கள். - கவிஞர் வைரபாரதி✍🏻









கனிவை ஊற்றி நிரப்பிய தொண்டை ‌.. தமிழை அழுத்தம் திருத்தமாய்ப் பாடிய குரல்..
ரசங்கள் ஒன்பது மட்டுமல்ல அதன் உட்பிரிவுகளையும் ஊடுறுவிப் பாடிய இதழ்...
மனிதப் பிறவிகளின் எல்லா பரிணாமங்களிலும் அவன் கைகளைப் பிடித்து ஊர்வலம் வரும் ஒரே பாடகர்...
பிறப்புக்கு தாலாட்டு .. வளர்ப்புக்கு போதனை .. மகிழ்வுக்கு காதல்..‌ வலிக்கு ஆறுதல் .. இளைப்பாறலுக்கு பக்தி ... இறப்புக்கு ஒப்பாரி என அங்கிங்கெனாது எங்கும் வியாபித்த ஒரே உலகப் பாடகர் என் பாட்டன் டி.எம்.எஸ்...

கவிதா வாஹினி! (பக்கம் -1) - கவிஞர் வைரபாரதி

1) அமர சாயி அமரத்துவ சாயி:

எந்த மரம் செய்த புண்ணியமோ? 
தேக்கா 
சந்தனமா 

நாங்கள் என்ன 
மரத்து விட்டோமா ? 
கடவுளே நீ 
மறந்து விட்டாயா என 
மற்றவை
முறையிடுமா? 

செவ்வாய், 26 நவம்பர், 2019

பிரபல பாலிவுட் பின்னணி பாடகர் திரு. குணால் காஞ்சாவாலா அவர்களின் சாயி அனுபவங்கள்!


குணால் காஞ்சாவாலா ஒரு பிரபல இந்திய பின்னணி பாடகர், இவரது பாடல்கள் பெரும்பாலும் இந்தி மற்றும் கன்னட படங்களில் இடம்பெறுகின்றன.  மராத்தி, பெங்காலி மற்றும் இந்தியாவின் பிற அதிகாரப்பூர்வ மொழிகளிலும் பாடியுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா என்பவர் சாமியாரோ, துறவியோ அல்ல அவர் தான் கடவுள், இறைவன். எங்கள் குடும்பத்தினரின் கஷ்டமான காலங்களில் எல்லாம் அவரின் உன்னதமான சக்தி தான் எங்களை காப்பாற்றியது. எங்கள் குடும்பத்தில் அனைவரும் பாபவையும், அவருடைய அதி அற்புதமான சக்தியிலும் முழு நம்பிக்கைக் கொண்டுள்ளோம்.

ராமாயணம் பற்றி பக்தர்களின் சந்தேகங்களுக்கு ஸ்ரீ சத்ய சாய் அளிக்கும் விளக்கம்



கேள்வி:

ஸ்வாமி, ஸ்ரீ ராமருக்கு இளவரசர் பட்டமளிப்புக்கு சற்று முன்னதாக கைகேயி ஸ்ரீ ராமரை காட்டுக்கு அனுப்பினார்.  கைகேயிடம் ஸ்ரீ ராமரின் அணுகுமுறை எப்படி இருந்தது? பொதுவாக ஸ்ரீ ராமரின் அணுகுமுறை விரோதமாகத் தான்
இருந்திருக்கும் அல்லவா?

ஞாயிறு, 24 நவம்பர், 2019

பாபாவின் நேர்காணல் அறை வழியே ஆஸ்திரேலியா வந்து சேர்ந்த அன்பர்!


ஒருமுறை ஆஸ்திரேலியாவிலிருந்து பகவானைக் காண ஆறு சாய் அன்பர்கள் புட்டபர்த்திக்கு வந்திருந்தனர். பாபா அவர்களை நேர்காணலுக்கு அழைத்தார். அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, ஒரு பக்தரை நோக்கி,"நீ ஏன் இப்பொழுது வந்தாய்? உன் தாயார் உடல் நலமில்லாமல் இருக்கிறார்; அவர் உன்னைக் காண தவிக்கின்றார்", என்று கூறினார்.

சனி, 23 நவம்பர், 2019

பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் பிறந்த நாள் செய்தி!


"அன்பின் திருஉருவங்களே. இன்று என் பிறந்த தினம் என்ற எண்ணத்துடன் இதை கொண்டாடுவதில்  மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றீர்கள்." என்னை பொருத்தவரை எனக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் தேவை இல்லை.

வெள்ளி, 22 நவம்பர், 2019

தெய்வத்தின் குரல் - சத்ய சாயி பாபா | N.கஸ்தூரி


பேராசிரியர் N.கஸ்தூரி அவர்கள் 1958-ல் சுவாமியைப் பற்றி எழுதிய அற்புதமான கட்டுரை:

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா தான் ஒரு அவதார புருஷர் என உலகுக்கு அறிவிப்பதை, பல சமயங்களில் தவிர்த்து வந்தார். எனினும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், தனது 14வது வயதில் தான் ஒரு அவதாரம் எடுத்து வந்திருப்பதை பிரகடனப்படுத்தினார். அவருடைய இளம் பருவத்திலேயே தன்னுடைய தெய்வீக சக்தியை வெளிப்படுத்தி, தன்னுடன் இருந்தவர்களை ஆச்சரியப்படுத்தி அருள்பாலித்தார். அவர் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அறிந்தவராயிருந்தார்.

வியாழன், 21 நவம்பர், 2019

சுவாமியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் - 1960 மற்றும் 1975


இறைவன் ஸ்ரீ சத்யசாயியின் ஆதிகாலத்து அவதாரத்திருநாள் கொண்டாட்டத்தில் இப்போதுள்ள பலர் கலந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை... ஊடகப்புரட்சி அற்று வெறும் ஆன்மீகப் புரட்சியே நிகழ்ந்து கொண்டிருந்ததால் எல்லா அவதார வைபவங்களும் காணொளி பதிவாக அரங்கேறும் வாய்ப்புமில்லை.. இதோ அந்தக் குறை இனிதே அகன்று போகிறது இதோ... ஸ்ரீசத்யசாயி யுகத்தின் பதிவு வழியாக... நாம் நமது வாசிப்பில் இறைவனின் திருக்கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளப் போகிறோம் இதோ...

சனி, 16 நவம்பர், 2019

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 2 | வாழ்வெனும் வழக்கில் ஆண்டவன் தீர்ப்பு!


ஆஸ்திரேலியாவில் வாழும் பிரியா சிவராஜா அவர்களின் அனுபவங்கள்.

உலவிடும் காற்றில் வெளியில் உலகங்கள் எங்கும் எங்கும் நிலவினில் வானில் நீரில் நீணிலம் எங்கும் எங்கும் அலகிலா விளையாட்டுடைய சாயியின் காட்சி தோன்றும்
நிலையிலா வாழ்வு தன்னில்
நிலையான தெய்வம் தோன்றும்!

சுவாமி நட்சத்திரம் திருவாதிரையன்று மாலை சாயி  பக்தை பிரியாவிடம் பேசுகின்ற நல்வாய்ப்பு சாயி சங்கல்பத்தால் கிடைத்தது. கனடாவிலிருந்து

புட்டபர்த்தியில் முதன் முதலாக பிறந்தநாள் கொண்டாட்டங்கள்!


பிறப்பு இறப்பற்ற இறைவன் பூமியில் இறங்கி வரும் அவதாரத் திருநாளை அகில உலகமே கொண்டாடக் கடமைப்பட்டிருக்கிறது... அதை ஆதி சாயி பக்தர்கள் கொடுத்து வைத்திருந்தபடி கோலாகலமாகக் கொண்டாடினர், அதன் கொண்டாட்ட விவரங்கள் வியப்பு மிகு பதிவாக இதோ...

திங்கள், 11 நவம்பர், 2019

ஆந்திர முன்னாள் அமைச்சர் டாக்டர் J. கீதா ரெட்டி அவர்களின் அனுபவங்கள்

டாக்டர் J. கீதா ரெட்டி. 
ஆந்திர முன்னாள் அமைச்சர் (2004 - 2014)

நான் எப்பொழுதுமே “பாபாவின் பக்தையாவேன்“ என நினைத்துப் பார்த்தது இல்லை, ஆனால் விதி வேறு விதமாக இருந்தது. 1980இல், என் கணவர் திரு. டாக்டர் இராமச்சந்திரரெட்டி தன் 30-வது வயதில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அது அவரின் இடது பக்க உடம்பையும், வாயையும் முடக்கியது,

இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்த, அவர்களின் குணத்தையும் நடைமுறையையும் சீர்திருத்த நாம் என்ன செய்ய வேண்டும்?


பக்தர் கேட்டவை பாபா அருளியவை:

ஹிஸ்லாப்: இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்த, அவர்களின் குணத்தையும் நடைமுறையையும் சீர்திருத்த நாம் என்ன செய்ய வேண்டும்?

பாபா:  சூடாயிருக்கும்விளக்கை ஒரு குழந்தை தொடுவது, அவ்விளக்கு குழந்தையை சுடும் வரை தான். இளைஞர்கள் நிதானமற்று இருக்கிறார்கள். மேலும் அவர்கள் உடனுக்குடன் பலன் காண விழைகிறார்கள்.

சனி, 9 நவம்பர், 2019

அகண்ட பஜன் உருவான பின்னணி!


அகண்ட ஜோதி ஏற்றி ஆன்மாவிலும் சுவாமி வெளிச்சம் பிரகாசிக்க வருடா வருடம் இரு முழு நாள் சங்கீர்த்தனமாய்.. நாத உபாசனையாய் .. பஜனைச் சரமாய் ... இரவு பகலாய் தொடரும்  கீதமழையாய் கொண்டாடப்படும் இறைவன் சத்யசாயியின் அகண்ட பஜனையின் துவக்கமும் அதன் முக்கிய காரணம் மற்றும் பலன்களையும்.. அதன் பின்னணி சுவாரஸ்யங்களையும் தனது உரையால் விளக்குகிறார் சாயி சகோதரி விழுப்புரம் அர்ச்சனா சாயி ராம் இதோ...

பஜனை மிகவும் மதிப்பு வாய்ந்தது!


"சாய் பாபாவிடம் செல்லும்போது, ​​பஜனையைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று மக்கள் கூறலாம். ஆனால், பஜனை விட பெரியது எதுவுமில்லை என்பதை உணருங்கள். பஜனையில் என்ன ஒரு பேரின்பம் இருக்கிறது!