தலைப்பு

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

சுவாமி! ஒரு தலைவரின் குணநலன்கள் எவ்வாறு அமைந்திருப்பது அவசியம்?


முக்கியமாக இரண்டு லட்சணங்கள் ஒரு தலைவருக்கு இருப்பது அவசியம்! இவை இல்லாமல் இருப்பதால் தான் தற்போது தீய குணங்கள் தலைவிரித்து ஆடுகின்றன...! 
அவையே Individual character (தனிக்குணம்) , National Character (சமூக குணம்)!
இந்நாளில் இந்த இரண்டும் சேர்ந்து இருப்பவர் ஒருவர் கூட இல்லை எனலாம்! 

வெள்ளி, 27 ஜனவரி, 2023

ஸ்ரீ சந்திர யோகி | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

யோகிகள் யார் கண்ணிலும் சிறைபடாதவர்கள்... அவ்வாறு இருக்கும் ஒரு யோகி பாபாவை பற்றி கூறிய மொழிகள் என்ன? அதை யாருக்கு கூறினார்? அவரின் தீர்க்க தரிசன மொழிகள் நடந்தனவா? இல்லையா? மிக பிரம்மிப்போடு இதோ...

சுவாமி நாங்கள் மூன்று நான்கு வேளைகள் சாப்பிட்டும் உடம்பில் போதிய வலுவில்லை ஆனால் தாங்கள் குறைந்த அளவே உணவருந்தி ஏராளமான சேவை, தரிசனம் என 24/7 நாளும் இயங்குகிறீர்கள்! எப்படி இது சாத்தியப்படுகிறது?


இதுவே தெய்வீகம்! உங்களுக்கு சக்தி உணவிலிருந்து கிடைக்கிறது! அது குறைந்தால் உங்களுக்கு சக்தி குறைகிறது! 

சுவாமிக்கு சக்தி ஆகாயத்திலிருந்து கிடைப்பதில்லை... நான் காலையில் எதுவும் உட்கொள்வதில்லை! ஒரு கோப்பை தண்ணீர் (Glass of water ) அவ்வளவு தான்! 

சனி, 21 ஜனவரி, 2023

சுவாமி! ஆன்மீக சாதனா (ஆன்மீகப் பயிற்சி) தினசரி தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமா?


ஆன்மீக சாதனா அத்தியாவசியமாக இருப்பதால் தான் அதை தினசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்று சுவாமி சொல்கிறேன்! 
பாத்திரங்களை தினமும் தேய்த்துக் கழுவுவதால் தான் அவை தூய்மையாக இருக்கின்றன! 

வியாழன், 19 ஜனவரி, 2023

கர்னல் ஜோகா ராவ் | புண்ணியாத்மாக்கள்


பூரணாவதாரம் ஸ்ரீ சத்ய சாயிபாபா தனது 65வது பிறந்ததினப் பேருரையின்போது பின்வருமாறு குறிப்பிட்டார், "கடந்த இருபது ஆண்டுகளாக பிரசாந்தி நிலையத்தின் பல்வேறு வசதிகளை மேம்படுத்துவதிலும், மத்திய அறக்கட்டளையின் உறுப்பினராக சிறப்பாகப் பணியாற்றுவதிலும் இரவும் பகலும் இடைவிடாது உழைத்தவர்   ஜோகாராவ். எல்லோரும் அவரை கர்னல் ஜோகாராவ் என்று அழைக்கிறார்கள், ஆனால் அவர் உண்மையில் கர்மயோகி ஜோகாராவ்.  (பகவான் பின்னர் கர்னல். ஜோகாராவின் கையில் தங்கத்தாலான கங்கணம் ஒன்றை அணிவித்தார்). எப்ப்பேற்பட்ட பாராட்டு! பரமாத்மாவினிடமே நேரடியாக கர்மயோகி பட்டம் பெறுவதென்றால் எத்தகைய அயராத சேவையாற்றியிருக்க வேண்டும் அந்த புண்ணியாத்மா?  

சுவாமி! ஆன்மீக சாதனையின் பயன்கள் உடனுக்குடன் எங்களுக்குக் கிடைப்பதில்லையே! இது பற்றி சுவாமி என்ன கூறுகிறீர்கள்?

உங்கள் அணுகுமுறையே தவறானது! நீங்கள் விஷயங்களை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்! உதாரணத்திற்கு ஒன்றை சொல்கிறேன்! 

பிள்ளையை பள்ளியில் lkg'யில் சேர்த்து கல்வியை ஆரம்பித்து வைக்கிறீர்கள்... அப்படியே தொடர்ந்து 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, BA or B.Sc அல்லது B.Com போன்ற பட்டப்படிப்பு வரை எத்தனை ஆண்டுகள் பிடிக்கின்றன?!

எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டும்! 

புதன், 18 ஜனவரி, 2023

பலவடிவில் பாபா தோன்றி தற்கொலையை தடுத்த ஆச்சர்ய லீலை!


தன்னை சரண் அடைந்தவர்கள் அபயம்  எனக்கூறி  கண்ணீர் விடும் போது   பாபா தான் கூறியதை போலவே அவர்கள் கவலையை  போக்க பல  அற்புதங்களை செய்தார். அவரது  அற்புதங்கள்  ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி  அனைத்தும்  சமத்துவ நோக்கிலேயே நிகழ்த்தப்பட்டது.

சுவாமி! எங்கள் செயல்களுக்கு நாங்களே பொறுப்பு... அதன் விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியாது என்கிற போது இந்நிலையில் கடவுள் பக்தி எந்த அளவில் பயனளிக்கும்?

இறைவன் எல்லாவற்றையும் படைத்துவிட்டு அவற்றை அனுபவிப்பதற்கான முழு சுதந்திரத்தையும் மனிதருக்கு வழங்கி இருக்கிறார்! ஆனால் அதில் ஓர் நிபந்தனை... 

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

பொங்கலாய்ப் பொங்கிய பாபாவின் சர்க்கரைப் பொங்கல் கருணை!


சக்கரைப் பொங்கல் சாப்பிடு என அக்கறையாய் மொழிந்த இறைவன் பாபா பேச்சைக் கேட்டும் அங்கே பொங்கலே இல்லை....பிறகு எவ்வாறு பாபா உரைத்த பொங்கல் சாப்பிடும் நிகழ்வு சேவைத் திலகம் கஸ்தூரியே எதிர்பாராத வேளையில் நிகழ்ந்தது என்பதும் இது தொடர்பான இன்னொரு சுவாரஸ்ய அனுபவமும் பொங்கல் வாழ்ந்தாய் இனிக்க இனிக்க இதோ...

301-350 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!

பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..

சனி, 14 ஜனவரி, 2023

எங்களின் இந்த மனதை ஆன்ம விசார மார்க்கத்தில் செலுத்தமுடியவில்லையே! இயல்பாக மனம் அலைபாய்கிறது என்பதாலா? இல்லை வேறு எதனாலுமா?

மனம் நிலை கொள்வதில்லை, மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லை என்கிறீர்கள்! இது உண்மை அல்ல!

மனம் என்பதே உண்மையில் இல்லை.. 

எப்படி துணியானது நூல்களின் சேர்மானமோ அதுபோல் ஆசைகளின் அழுக்குமூட்டையே மனம்! மனம் என்பது தனியாக ஒன்று இல்லை! 

வியாழன், 12 ஜனவரி, 2023

இறைவனது அருள் கிடைக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

இறைவனின் இதயத்தை நெகிழச் செய்து நெக்குருகச் செய்யும் சக்தி பக்தி ஒன்றே தான்! இறைவன் உங்கள் செல்வத்தையோ , கல்வித்திறனையோ, அதிகார பலத்தையோ மதிப்பதில்லை! உங்கள் பக்தி மட்டுமே இறைவனை ஈர்க்க வல்லது!

புதன், 11 ஜனவரி, 2023

ஓம் சரவணபவ சுவாமிகள் | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

இலங்கை சாயி நிலையத்திற்கு வந்திருந்த ஒரு துறவி அனுபவித்த நிகழ்வும், நடந்த புத்தாண்டு வைபவத்தில் இறைவன் பாபா தனது பேரிருப்பை காட்டியதும் சுவாரஸ்ய அனுபவப் பகிர்வாக இதோ‌...

செவ்வாய், 10 ஜனவரி, 2023

சுவாமி! சிலர் இறைவனுக்கு உருவம் இல்லை எனவும் பலர் உருவம் உள்ளது எனவும் வழிபடுகின்றனர்? இதில் எது உண்மை? எது சிறந்தது?


இதில் நான் பலரின் எண்ணம் தவறாக உள்ளது! 

உருவம் என்ற ஒன்றே இல்லாமல்.. உருவம் இல்லாமை  எப்படி வரும்?

இறைவனை உருவமற்றவனாக எப்படி உன்னால் நினைக்க இயலும்?

உனக்கே ஒரு உருவம் இருக்கிறது அல்லவா?!

உருவம் இல்லாமல் எப்படி ஒன்றோடு தொடர்புபடுத்திக் கொள்ள இயலும்?

திங்கள், 9 ஜனவரி, 2023

யோகினி ஸ்ரீ வேங்கட லஷ்மம்மா | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

யோகிகள் விளம்பரங்களில் வருவதில்லை... அவர்களுக்கு விளம்பரங்களும் தேவையில்லை... அப்படி ஒரு யோகினி பாபாவை எவ்வாறு உணர்கிறார்? தன்னை நாடி வந்த ஒருவருக்கு அவர் பாபா பற்றி பகிர்ந்த பேருண்மை யாது? அந்த நபர் யார்? சுவாரஸ்யமாக இதோ...

சனி, 7 ஜனவரி, 2023

NEW BOOK: சாயியுடன் ஒரு பயணம் (ஆன்மீக விழிப்புணர்வூட்டும் கனவுகளும், அனுபவங்களும்)

சாய்ராம் ! 

சாயியுடன் ஒரு பயணம் ஆன்மீக விழிப்புணர்வூட்டும் கனவுகளும், அனுபவங்களும்!


நூல் ஆசிரியர்: திரு S.R. ஹரிஹர கிருஷ்ணன்.

நூலை பற்றி அறிமுகம்: S.ரமேஷ்

Ex கன்வீனர் சேலம் சமிதி

வெள்ளி, 6 ஜனவரி, 2023

ஸ்ரீ விஸ்வயோகி விஷ்வம்ஜி மகராஜ் | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

ஒரு துறவி எவ்வாறு யோகியாகிறார்... அவருக்கு ஏற்படுகிற ஒரு விபத்து.. அதை எவ்வாறு பாபா சங்கல்பம் என உணர்ந்து கொள்கிறார்.. பிற்பாடு எதிர்பாரா அந்த விபத்து எவ்வகையே பலனை ஏற்படுத்துகிறது என்பது சுவாரஸ்யமாக இதோ...

சுவாமி! நிறைய பேர் எப்போதும் கவலைப்படுகின்றனர்... Worry (வருத்தம்) என்பது எதனால் விளைகிறது?

எனது நோக்கில் worry என்பதே இல்லை! இந்த Worry ( வருத்தம்) என்பது Mental Created Fear (மனதால் கற்பனை செய்யப்படுகிற பயமே!) அவ்வளவு தான்!

செவ்வாய், 3 ஜனவரி, 2023

தன் சமாதிக்குப் பிறகு பாபாவை தரிசிக்க வந்த இறைத்தாய் ஈஸ்வராம்பா!

இறைவன் பாபா பற்றற்றவர்... அவருக்கெந்த பந்த பாசமும் இல்லை... சத்தியத்தை தன் அங்க அசைவிலும் வெளிப்படுத்துகிறவர் பாபா! அப்படி இருக்கையில் பாபா எனும் சைதன்ய ஜோதியை தாங்கிய தெய்வீகத் திருவிளக்கான ஈஸ்வராம்பா பாபாவால் பெற்ற சத்தியப் பாராட்டு யாவை? சுவாரஸ்யமாக இதோ...

திங்கள், 2 ஜனவரி, 2023

பாபாவே விஷ்ணு என உணர்ந்தபின் ஒரு பக்தருக்கு ஏற்பட்ட விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண அனுபவங்கள்!


பேரிறைவன் பாபா பல பக்தர்களுக்கு அவரவர் இஷ்ட தெய்வ ரூபங்களில் காட்சி தருபவர்.. காரணம் - பாபாவே பரப்பிரம்மம்! ஒரு பக்தருக்கு பாபாவால் ஏற்பட்ட விஷ்ணு அனுபவமும், நூலாசிரியரின் தரிசன அனுபவமும்... ஒரு முதிய பக்தைக்கு குணமான காது பிரச்சனையும் சுவாரஸ்யமாக இதோ...

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

ஸ்ரீ சத்யசாயி பகவானின் புத்தாண்டு செய்தி ~ அஸ்வின் குமார் (Alumnus, SSSIHL, Prasanthi Campus)


ஒவ்வொரு ஆண்டும் புதிதாய் பிறப்பதாக வெளியே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். ஆண்டு மட்டுமல்ல ஒவ்வொரு நொடியுமே கடந்த நொடியைப் போல் அன்றி புதிதாகவே பிறக்கிறது. தனது கடந்த கால அழுக்கு மூட்டைகளை சுமக்காத இதயமே புதியதை கொண்டாடுகிறது. அத்தகைய இதயத்திற்காக இறைவன் அளிக்கும் செய்தி இதோ...

வியாழன், 29 டிசம்பர், 2022

பாபாவின் சுடர் மிகு ஞான மொழி பற்றி ஸ்ரீமான் கஸ்தூரி!

இப்படி ஒரு விளக்கத்தை இதுவரை யாரும் வழங்கியதில்லை... அப்படி வழங்கிய அவர் ஒரு உன்னதர்... இறைவன் பாபாவின் பேராற்றலை துல்லியமாக உணர்ந்தவர்... தொண்டு செய்து பழுத்தப் பழம் எனும் சொற்றொடர் அவருக்கே பொருந்தும்! இல்லை எனில் ஸ்ரீ பிரேம சாயி அவதாரத்திற்கான அன்னையாக அவரால் எப்படி பிறந்திருக்க முடியும்? அவர் பெயரே சாயி சேவைக்கான உத்வேக சக்தி.. அவரே சேவைத் திலகம் ஸ்ரீமான் கஸ்தூரி...‌அவர் அளித்த மெய்சிலிர்க்கும் விளக்கம் இதோ...

இயற்கை நடத்தும் பாடம் என்ன?

மானுடர் தர்மப்படிக் கர்மங்களைப் புரிந்து பழைய கர்மாவைத் தீர்த்துக் கொள்ள ஆன்ம சாதனா லயமாக இருப்பது உலகமே! எனவே இறுதியில் உலகை விட்டு இறைவனிடம் செல்ல வேண்டியவர்களாக இருந்தாலும் அதற்கான திறத்தை இந்த உலகிலிருந்து கொண்டு, உலகப் பொருட்களைக் கொண்டு வாழும்போதேதான் பெற வேண்டும்; உலகத்துடனேயே பந்தமுறுத்தும் மாயையில் சிக்காமல் இந்த உலகத்தில் வாழ்ந்தே பரத்துக்கு (வேற்றுலகத்திற்கு) பக்குவமாக வேண்டும்! 

செவ்வாய், 27 டிசம்பர், 2022

தெய்வப் பெயர்கள் உள்ளிருக்கும் ஆழமான ஆன்மீக உண்மை? மற்றும் ஏன் இந்திய தேசத்தை பாரத தேசம் என அழைக்கிறோம்?

நாராயணன் என்றால் நார-நயன்! நீர் நிறைந்த கண்ணே நார நயனம்! அதாவது பிரேம பக்தியின் உள்ளுருக்கம் கண்ணீராகப் பெருகும் போது எந்த திவ்ய அனுபவத்தை நீங்கள் பெறுகிறீர்களோ அதுவே நாராயணன்! 

திங்கள், 26 டிசம்பர், 2022

குஜராத் நவாநகர் ராஜமாதா திருமதி.குன்வெர்பா சாஹிபா | புண்ணியாத்மாக்கள்

பூர்ணாவதாரம் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஒரு பெண்மணியிடம், "நீ எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. நான் உன் மகன்." என்று வாக்குறுதி அளித்தார் எனில் அந்தப் பெண்மணி எத்தகைய பாக்கியசாலியாக இருந்திருக்க வேண்டும். தற்போதைய குஜராத்தின் நவாநகர் சமஸ்த்தானத்தின் ராஜமாதா திருமதி.குன்வெர்பா சாஹிபா தான் அவர். ஶ்ரீ சத்யசாயி மத்திய அறக்கட்டளை, பல்கலைக்கழக அறக்கட்டளை மற்றும் சத்யசாயி அமைப்பின் உலக கவுன்சிலிலும் முக்கிய உறுப்பினராக… சுவாமியால் பரிந்துரைக்கப்பட்ட புனிதவதி இந்த நவாநகர் ராஜமாதா. புண்ணியாத்மாக்கள் வரிசையில் அந்த அம்மையாரின் வாழ்க்கைக் குறிப்பு இதோ…

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

மேரி மாதாவாக சென்று Dr. லேலியாவின் கருவை காத்த சாயி மாதா!

இயேசுவைத் தவிர நான் வேறு யாரையும் வணங்க மாட்டேன் என்று சொன்ன ஒரு வெளிநாட்டு குடும்பத்திற்கு ஏற்பட்ட ஒரு சுவாரசிய சுவாமி அனுபவம்.... 

இயேசு சிறுவயதிலிருந்தே தெய்வீக குணங்களோடு இருந்தார்! - ஸ்ரீ சத்ய சாய்பாபா

தனது புனித மகன் ஏசுபிரான் குறித்த பரவச சம்பங்களை பரலோக பரமபிதாவான பாபா நம்மிடையே பகிர்ந்து.. ஏசுநாதரின் இறைவழியில் நம்மை நடத்த சங்கல்ப மொழியை ஒளிமயமாய் பேசுகிறார் இதோ...

வியாழன், 22 டிசம்பர், 2022

தனது பிரேம சாயி அவதாரத்தை 1970'களிலேயே உரைத்த பாபா!

காலம் மூன்று... அதைக் காணும் கண்கள் மூன்று... அவை தரிசிக்கும் சாயி அவதாரங்கள் மூன்று... என்கிற ஆழமான உணர்வில் பக்தர்கள் இப்போதிருக்க... அதனை 1970 களில் பிரசாந்தி நிலையத்திலேயே பாபா தனது பிரேம சாயி அவதாரத்தை பதிவு செய்திருக்கிறார் எனும் நெகிழ் நிகழ்வு சுவாரஸ்யமாக இதோ...

புதன், 21 டிசம்பர், 2022

மாயாவதார பாபாவை புரிந்து கொண்ட 4 வயது குழந்தை மாயா!!

இறைவன் பாபாவை புரிந்து கொள்வது அத்தனை எளிதல்ல..‌அதற்கு கள்ளம் கபடமற்ற உள்ளம் வேண்டும்! சரணாகத பக்தி வேண்டும்... மேதைகளாலும் புரிந்து கொள்ள முடியாத பாபாவை எவ்வாறு ஒரு சிறு குழந்தை புரிந்து கொண்டு என்ன பேசியது? சுவாரஸ்ய அனுபவம் இதோ...

இறைவனிடம் ஒரு பக்தர் எதைப் பிரார்த்தனை செய்ய வேண்டும்?

இறைவனை அன்றி வேறெதையும் அறவே நாடாமல் இருப்பதே உண்மை பக்தனின் தலையாய லட்சணம்! வேறு எது எதற்காகவோ இறைவனை நாடுவதே பக்தரென்று நினைத்துக் கொண்டிருப்போரில் மிகப் பெரும்பாலோரின் 'லட்சணமாக' இருக்கிறது!

செவ்வாய், 20 டிசம்பர், 2022

ஒரே ஒரு தரிசனத்தில் சாயி'யிசமாக மாறிய கம்யூனிசம்!

பாபா நிகழ்த்தும் அற்புதங்கள் மகிமைகள் எண்ணில் அடங்கா... எண்ணிக்கையில் மட்டுமல்ல எண்ணத்திலும் அடங்கா... விதவித அனுபவங்கள் விசித்திர நிகழ்வுகளின் வியன்மிகு வரிசைகளில் ஓரிரண்டு சுவாரஸ்யமாக இதோ...

திங்கள், 19 டிசம்பர், 2022

தஞ்சம் அடைந்ததில் இரு சாயி அவதாரமும் தீர்த்து வைத்த தண்ணீர்ப் பஞ்சம்!

இறைவன் ஸ்ரீ ஷிர்டி பாபாவே இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபா... மனிதனுக்கு உடம்பில் உடை...இறைவனுக்கோ உடம்பே உடை... ஆக மூன்று உடை அணிந்திருக்கும் சாயி அவதாரம் முதல் இரண்டு உடையில் செய்த சேவையும் ஒன்றே என நிரூபிக்கும் சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...

வெள்ளி, 16 டிசம்பர், 2022

சித்ராவதி மணலை ரவையாக்கி படுகையை அவையாக்கி பாபா அளித்த ரவாலாடு!

காணக்கிடைக்காத பாபாவின் இளமைக் கால மகிமைகள் கேட்டாலே இனிக்கும்.. வாசித்தாலே சிலிர்க்கும்.. கண்ணனே தான் என்பதை கணப்பொழுதும் வாழ்ந்த ஸ்ரீ சத்ய சாயி கண்ணனின் அதிசய லீலைகளின் ஒன்று இதோ...

வியாழன், 15 டிசம்பர், 2022

ஏற்கனவே பெயர் வைத்த குழந்தைக்கு பெயர் வைக்க சொன்ன பக்தையிடம் பாபா என்ன சொன்னார்?

பேரிறைவன் பாபா அறியாதது ஏதும் இல்லை... எந்த மறைத்தலுமின்றி மனித செயல்கள் யாவும் வெளிப்படையாக அறிகிறார்... மனித ரகசியம் அனைத்தும் அறியும் இறை அதிசயம் பாபா ஒரு குழந்தைக்குக் காட்டிய கருணை சுவாரஸ்யமாக இதோ...

ஏன் கடவுளை வந்தனை செய்பவர் ஏழ்மையாகவும்.. நிந்தனை செய்பவர் வசதியாகவும் வாழ்கிறார்கள்?

பக்தி உள்ளவர்களில் பலர் வசதியை கோரித்தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்! அப்படிப்பட்ட  அவர்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்றியும் கூட அதற்கும் மேற்பட்ட வைராக்கிய பக்தி நிலையில் அவர்கள் செல்கிறார்களா? என கடவுள் பார்க்கிறார்! ஆயினும் உண்மையான பக்தர் விஷயத்தில் அவர்களின் அனைத்து உடைமைகளையும் பறித்துக் கொண்டு அவர்களை வைராக்கியத்தில் மேலும் முதிர்ச்சி பெறச் செய்கிறான்! ஹரி- ஹரன் என்ற பெயர்களுக்கே அபகரிப்பவன் என்றே பொருள்! உங்கள் மனதை அபகரிப்பவன் மட்டுமல்ல உங்கள் உடைமைகளையும் அவனே அபகரிக்கிறான்!

செவ்வாய், 13 டிசம்பர், 2022

பாபாவுக்கான ஒரு கோப்பைத் தண்ணீரில் வளர்ந்த ஆளுயர மணி ப்ளான்ட்! 

இறைவன் பாபாவால் நிகழ்த்தப்படும் அனுபவங்கள் ஏராளம்... குறிப்பாக அதில் நூதன அனுபவங்கள் பரவசங்கள் மிகுந்தவை... அவ்வனுபவங்கள் நமக்கு வழிகாட்டிகளாகவும் அமைகின்றன... அதில் ஓரிரண்டு சுவாரஸ்யமாக இதோ...

திங்கள், 12 டிசம்பர், 2022

இராமலிங்க அடிகளார் உணர்த்திய அருட் பெருஞ்ஜோதியை பாபாவிடம் உணர்ந்த வள்ளலார் பக்தர்!

வெவ்வேறு மகான்கள் வெவ்வேறு வடிவிலான போதனைகள் ஆனால் அவர்கள் காட்டிய வழிமுறைகள் யாவும் ஒரே பரப்பிரம்மத்திடமே கொண்டு சேர்க்கிறது.. அத்தகைய பரப்பிரம்மமான பாபாவின் மகிமைகள் ஓரிரண்டு சுவாரஸ்யமாக இதோ...

வெள்ளி, 9 டிசம்பர், 2022

சீசனே இல்லாத போதும் பாபா விளைவித்த மாங்கனி!

பல்வேறு விதமான பக்தர்களுக்கு பாபா அளித்த பல்வேறுவிதமான கனவு அனுபவங்களும்...‌அது வெறும் கனவல்ல நிஜம் என்று உணரும்படியான நிகழ்வுகளும் சுவாரஸ்யமாக இதோ...

வியாழன், 8 டிசம்பர், 2022

இனிப்பு இறைவன் பாபாவின் திருப்படத்திலிருந்து பொழிந்து கொண்டே இருந்த திதிப்புச் சக்கரை!

பாபா எவ்வாறு தன் ஏழ்மையான ஒரு பக்தர் குடும்பத்தை திதிப்போடு அவர்களுக்கு இருந்த பக்தித் துடிப்போடு காப்பாற்றி கரை சேர்க்கிறார் என்பது மிகவும் சுவாரஸ்யமாக இதோ...

புதன், 7 டிசம்பர், 2022

அணுவிலும் சிறியவர் அண்டத்திலும் பெரியவர் ஸ்ரீ சத்யசாயீஷ்வரர்!


இறைவன் பாபா அன்றாடம் அவரவர் வாழ்வில் நிகழ்த்தி வரும் பேரற்புதம் ஒன்றல்ல இரண்டல்ல...‌பாபா வழங்கிடும் பிறந்தநாள் லட்டுவில் ஆங்காங்கே தோய்ந்த முந்திரியாய் குறிப்பிட்ட சில சுவாரஸ்ய அனுபவங்களில் ஓரிரண்டு இதோ...

"ஏன் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் துயில் எழுந்து தியானம் செய்ய வேண்டும்?"

ஆன்மீக சாதனை வாழ்வின் தொடக்கத்தில் இருப்பவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்... இரவு அதிக நேரம் டி.வி போன்றவற்றை பார்ப்பதை நிறுத்தி விரைவாக படுக்கைக்குச் சென்று உறங்க வேண்டும்... ஆரோக்கிய வாழ்க்கை முறை கடைபிடிப்பலர்களுக்கு 6 மணி நேர உறக்கமே போதுமானது! பின்னிரவு 3 மணியிலிருந்து 6 மணி வரையிலான காலகட்டமே ஆன்மீக சாதனை புரிவதற்கு ஏற்றது... மிகவும் சிறந்தது! எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து தியானத்தில் அமருங்கள்...ஆற்றங்கரை, மரத்தின் அடியில் தியானிப்பது இன்னமும் சிறந்தது! 


ஸ்ரீ B V ராஜா ரெட்டி | புண்ணியாத்மாக்கள்

அகத்திலும் புறத்திலும்… சுவாமியை நெருங்கி வாழவும், சேவைகள் புரியவும் மிக மிக அத்தியாவசியமான செயல்  நமது அகங்காரத்தை நாமே துடைத்தெறிவது ஆகும். பல ஜென்மங்களாகத் தொடரும் பயிற்சிகளாலன்றி, உண்மையான பணிவுடன்கூடிய நடத்தையினாலன்றி… அவ்வளவு சுலபமாக அகன்றுவிடாதது அகங்காரம்.  ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற அகங்காரம் அழிவதற்கான சிறந்த உபாயம், "தவ தாஸோஹம்" ( நான் உங்கள் அடிமை ) என்கின்ற பாவனையே! இந்த பாவனையில் தான் அரிஷ்டத்வர்கம் என்று சொல்லப்படுகின்ற காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம் மற்றும் மாச்சர்யம்  எளிதில் அழிந்து போகும். மேற்கண்ட உபாயத்தை சொன்னவர் ஸ்ரீ போரிகிலமண்ட வெங்கட ராஜா ரெட்டி அவர்கள். புத்தகங்களில் கற்றோ, பண்டிதர்கள் அல்லது குருக்களின் வார்த்தைகளைக் கடன் வாங்கியோ சொன்ன விஷயமல்ல அது. புண்ணியாத்மா திரு. B.V. ராஜா ரெட்டி அவர்கள், மற்ற பக்தர்களுக்கும் சேவகர்களுக்கும் தனது சொந்த அனுபவத்திலிருந்து எடுத்துச் சொல்லும் உயரிய சத்தியம் அது!

சனி, 3 டிசம்பர், 2022

பக்தர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

நடைமுறையில் தாங்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம்... அப்படி வாழ்ந்து கொண்டே பெரிதாக ஆடம்பர பூஜை செய்து, திருப்பதி உண்டியலில் பொன்னும் பொருளும் போட்டுவிட்டால் அதுவே பக்தி என்று நினைப்போர் நிறைய பேர் இருக்கிறார்கள்! ராச லீலா அனுபவம், தந்திர மார்க்கம் என்று சொல்லிக்கொண்டும் பக்தி என்ற பெயரில் தகாத காரியங்கள் செய்து கொண்டிருப்பவர்கள் இருக்கின்றனர்... இதெல்லாம் இறைவனுக்கு உகந்தவையே அல்ல! உண்மையில் ஏனைய மனிதர்களை விடவும் தன்னிடம் பக்தி கொண்டவர்கள் தான் தர்ம நெறிகளை அதிகக் கண்டிப்புடன் கடைபிடித்து வாழ வேண்டும் என இறைவன் விரும்புகிறான்! பக்தி இல்லாதோர் செய்யும் அதர்மங்களை கூடப்  பொறுத்துக் கொள்வான்... ஆனால் பக்தர்கள் அதர்மம் செய்தால் முளையிலேயே இறைவன் கிள்ளி எறிந்து விடுவான்! 

வியாழன், 1 டிசம்பர், 2022

பாபாவின் ஆசிகள் பெற்று அவர் பக்தரால் தயாரிக்கப்பட்ட உலகப்புகழ் "பர்னால்" ஆயின்மென்ட்!

என் வாழ்வே எனது செய்தி என்றார் பாபா. பின்னர், உங்கள் வாழ்வே எனது செய்தி எனக் கூறினார். அவரது பக்தர்கள் பாபாவின் நல் உபதேசங்களைக் கேட்டதுடன் நில்லாமல், அவர்களது வாழ்விலும் அவற்றைச் செயல் படுத்தவேண்டும் என்கிற நிதர்சனத்தை இது குறிக்கிறது.... 

ஓங்காரத்தில் அப்படி என்ன சிறப்பு? அதை ஏன் 21 முறை உச்சரிக்க வேண்டும்?

அசையாத ஒன்று அசையும் போது சப்தம் பிறக்கிறது! ஓம்கார சப்தத்தின் தனிப்பெருமை என்னவெனில்... அசையாத பிரம்மம் அதனுள்ளேயே தோன்றிய சங்கல்பத்தில் அசைந்தபோது ஏற்பட்ட முதல் சப்தம் அதுவே என்பது தான்! அதன் பின்பே , அதிலிருந்தே பிரபஞ்ச சிருஷ்டித்தான இதர இயக்கங்கள் தோன்றின... ஆகையால் பிரபஞ்சத்திலுள்ள ஜீவன் பிரம்மத்துக்குத் திரும்பவும் அதுவு நுழைவாயிலாக உள்ளது! அனைத்துப் படைப்புக்கும் அஸ்திவாரமான அதுவே ஜீவனின் விமோச்சனத்துக்கும் வழியாக உள்ளது!

புதன், 30 நவம்பர், 2022

பாபாவின் கால்பட்ட இடம் எல்லாம் பொங்கிப் பூத்த தேவலோக துளசிகள்!

இறைவன் பாபாவின் இளமைக்கால விளையாடல்கள் அவரின் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் போல் குதூகலம் தருபவை... அதில் ஒன்று மிக வியப்புடன் இதோ...

வெள்ளி, 25 நவம்பர், 2022

இறைவனிடத்தில் எங்களுக்கு எப்படிப்பட்ட நம்பிக்கை இருக்க வேண்டும்?

பெரிதாக ஜபதவங்கள் செய்ய வேண்டியதே இல்லை! தாயாரை ஒரு குழந்தை நம்புவது போல் மிகவும் எளிமையாக , அதே சமயம் திடமாக தெய்வத்தின் மேல் நம்பிக்கையும் விசுவாசமும் வைத்துவிட்டாலே போதும்... அந்த சிரத்தையே தெய்வத்தை உங்களிடம் நேராக வரவழைத்து விடும்! தவ யோகியருக்கும் முனிவருக்கும் அவ்வளவு விரைவாக அடைய முடியாத கண்ணன் ஆயர்குல பாலகர்களுடனே ஆடிப்பாடிக் கொண்டிருந்தான்! 

வியாழன், 24 நவம்பர், 2022

ஸ்ரீ மகரிஷி பிருகு பாபா | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

சித்த புருஷர் ஒருவர் பாபாவை எவ்வாறு உணர்கிறார்... அவர் பாபாவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் யாது? ஏன் சித்த புருஷர்களை பாபா தன் அருகே வரவிடுவதில்லை? பாபாவிடம் நாம் எதனை பிரார்த்தனை செய்ய வேண்டும்? போன்ற பல்வேறுவிதமான கேள்விகளுக்கு விடை தரவிருக்கும் சுவாரஸ்யமான பதிவு இதோ...