தலைப்பு

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

ஏக்கம் இருந்தால் வரலாம் இறைவன் சாயி பக்கம்!


உலகத்திடம் ஏக்கம் இருந்தால் உலகம் அருகில் வரும்.. உறவுகளிடம் ஏக்கம் இருந்தால் உறவுகளோடு சேர்ந்து அடுத்த பிறவியும் சேர்ந்து வரும்.. ஆனால் இறைவன் சத்யசாயியிடம் நமக்கு ஏக்கம் இருந்தால் அண்டசராசரத்து ஆண்டவனான சத்யசாயியே நம்முள்ளும் புறமும் வருவார் என்பதை விவரிக்கும் பதிவு இதோ.. 

ஒருமுறை சுவாமி எங்களை நேர்காணலுக்கு அழைத்திருந்தபோது ஒரு சகோதரர், "சுவாமி, உங்களோடு எப்போதும் இருப்பதை நாங்கள் எப்படி உறுதிப்படுத்துவது? நீங்கள் எப்போதும் எங்களை அழைத்துப் பேசும்படியும் எங்களுக்கு நேர்காணல் தரும்படியும் நாங்கள் எப்படி உறுதி செய்துகொள்வது?" என்று கேட்டார். 

சுவாமி," நீங்கள் ஏதோ கற்பனை செய்துக்கொள்ளவில்லை.உங்களை அழைக்கும் முன் சுவாமி  இரண்டு விஷயங்களைப் பார்க்கிறார்.. முதலில், எனக்கு நேரம் இருக்கவேண்டும், சாத்தியகூறு இருக்க வேண்டும். இரண்டாவது,  உங்களுக்ககுத் தகுதியும் ஏக்கமும் இருக்கவேண்டும்.உங்களைக் கூப்பபிட்டுப் பேச சுவாமிக்கு இவையிரண்டும் போதும்" என்றார்.

ஆஹா!அவருடைய நேரம் நம்கையில் இல்லை. ஆனால் இரண்டாவது விஷயம் ஏக்கம் நிச்சயம் நம் கையில்தான்! நம்மில் போதுமான தவிப்பு  இருக்கிறதா?

ஆதாரம்: 90 Divine interactions

அவனியா? ஆண்டவனா ? எது வேண்டும் நமக்கு? சத்ய சாயியே போதுமே.. சர்வமுமே அவரே நமக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக