தலைப்பு

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

நாமங்கள் பல ஆயினும் இறைவன் ஒருவனே!


மகான்கள்..  யோகிகள்..  எல்லாம் இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள். இறைவனின் கருவிகள். தன் கருவிக்கு ஓர் ஆபத்து எனில் எப்படி பாய்ந்து வந்து பாதுகாப்பு வழங்குகிறார் என்பதன் அற்புத தெய்வீக சத்ய சாயி மகிமை இதோ... 

ஸ்வாமி தனது பக்தர்களுடன் 1957 ஜுலை பிற்பகுதியில் ரிஷிகேஷ் சென்றிருந்த சமயம்... ஸ்வாமி சிவானந்தா ஆசிரமத்திற்கு திரும்பிக் கொண்டிக்கும் வழியில் யாத்ரீக குழுவுடன் வசிஷ்ட குகைக்கு சென்றனர். பிறகு ஸ்வாமி திடீரென இடம் பெயர்ந்தார். அத்தகைய நிகழ்வுகளின் போது அவரது சூக்ஷ்ம சரீரம் வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டிருக்கும்;  ஆகவே சுய உருவம் கட்டை போல் விழுந்து விடும். பக்தர்கள், ஸ்வாமியின் உள்ளங்கை அசைவதைக் கண்டு யாரையோ காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்று யூகித்தனர். எழுந்த பிறகு ஸ்வாமியிடம் விவரம் கேட்டனர்.

ஸ்வாமி, திரு. சுப்ரமண்யம் என்பவரை அழைத்துவசிஷ்ட குகைக்கு வெளியே உள்ள ஆற்றில் என்ன கண்டாய்?” என வினவினார். ஒரு உடல் அடித்துச் செல்வதைக் கண்டதாக பதில் கூறினார். அவர் ஒரு யோகி போல், உட்கார்ந்த நிலையில் இருந்தார், கங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்தச் செல்லப்பட்டார். இதையும் அந்த யோகி உணரவில்லை. தியானத்திலேயே இருந்திருக்கிறார். ஸ்வாச கட்டுப்பாட்டினால் அவர் மூழ்காமலேயே தண்ணீரில்  மிதந்து சென்று கொண்டிருந்தார். தனது சுய பிரக்ஞைக்கு வந்த பின்பு  தான் அடித்துச் செல்லப்படுவதை உணர்ந்து ’கடவுளே’ என கத்தினார். அப்பொழுது சுவாச கட்டுப்பாட்டை இழந்தார், அவரைக் காப்பாற்றிவிடவே சென்றேன். 3 மைல் தூரம் அவரை அழைத்துச் சென்று ஒரு விவசாயியின் வீட்டு வாசலில், சிவானந்த நகருக்கு அருகே விட்டு விட்டு, ரொட்டியும், சுடு நீரும் கொடுத்து வந்தேன் என்றார்.
 

அந்த யோகிக்கு ஸாயி யார் என்றே தெரியாது. ’கடவுளே’ என்று அழைத்ததும் பாபா போய் காப்பாற்றினார். பாகவத்தில் கஜேந்திரன் எனும் யானையின் அபயக் குரல் கேட்டு நாராயணன் விஷ்ணு பகவான் வந்து காப்பாற்றினார் அல்லவா? ஸ்வாமி விளக்கினார். ”ஒருவர் ஸாயியைத்தான் கும்பிட வேண்டும் என்பதில்லை. எந்த ரூபத்தில் இறைவனை வழிபட்டாலும் அது பகவானை வந்தடையும். சத்யம், தர்மம், அன்பு இந்தப்பாதையில் நடந்தால் போதும் அவர் எந்த கடவுள் மேலும் நம்பிகையில்லாவிடினும் நான் அவனது ஆபத்துக் காலத்தில், வலியச் சென்று உதவுவேன்”.

ஆதாரம்: Baba Sathya Sai Part I – P 161
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. 

🌻 ஒரே இறை எனும் அத்வைதம் உணர்ந்தும் ஒவ்வொரு மகானும் வெவ்வேறு இறை வடிவங்களை வழிபடலாம் ஆனால் இறைவன் சத்ய சாயி எப்போதும் எல்லா மகான்களையும் தன் குழந்தைகளாகவேப் பார்க்கிறார். பரிவு காட்டுகிறார். பராமரிக்கிறார். 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக