தலைப்பு

ஞாயிறு, 15 மார்ச், 2020

ஸ்ரீ சத்யசாயி செய்த மோட்டார் பைக் சவாரி | 2016 MIRACLE

மஹா சமாதிக்கு பிறகு பாபா நிகழ்த்தி வரும் அற்புதம் எனும் கடலிலிருந்து ஒரு துளி...

உதிக்கின்ற ஆதவன் மறையுமோ என்றும் அது...
விதிக்கின்ற பூமி சுழற்சியின் மாயமன்றோ...
மதிக்கொன்றை சூடும் சாயீசன்
மாள்வதுண்டோ மறைவதுண்டோ
 மனமே கூறு?

மத்திய பிரதேஷ் மாநில சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீதாராமன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இருதய நோயால் அவதிப்பட்டு, அறுவைச் சிகிச்சை செய்தால்தான் உயிர் பிழைக்க இயலும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதற்கான பொருள் வசதி இல்லாததால், மன வருத்தத்துடன் வீடு  திரும்பிக் கொண்டிருந்தார். அவர் அருகே வந்து நின்றது ஒரு மோட்டார் பைக். அதில் அமர்ந்திருந்தநபர் கூறினார். "உங்களுக்கு இதயக் கோளாறு இருப்பதை நான் அறிவேன். நீங்கள் உடனே புட்டபர்த்தி செல்லுங்கள். அங்குள்ள சத்ய சாயி மருத்துவமனையில் இலவசமாக அறுவைச் சிகிச்சை பெறலாம்." இவ்வாறு கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார். பர்த்தியும், பாபாவும் பற்றி அதுவரை அவர் கேள்விப்படடதே இல்லை. அண்டை அயலாரிடம் விசாரித்து, ஒரு வழியாக ஸ்ரீ சத்யசாயி சிறப்பு மருத்துவ மனையை சென்றடைந்தார். மாலை நேரமாதலால் மறுநாள் காலை யில் வரச் சொல்லவே , இரவு தங்குவதற்கு பிரசாந்தி நிலையம் வந்தார். கண்டார் பாபாவின் புகைப்படம். 


ஆம். இவர்தான் அன்று மோட்டார் பைக்கில் வந்து என்னை  பர்த்திக்கு போகச்சொன்னவர். இவர் மஹா சமாதி அடைந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டனவா என்று கண்ணீர் மல்க வியந்து பணிந்தார். பிறகு அவரது இதய அறுவைச் சிகிச்சை நடந்து நலம் பெற்றார் என்பதைக் கூறவும் வேண்டுமோ? அடுத்த ஆண்டே அவரது நண்பர் ஒருவரையும் அழைத்துவந்து இதய அறுவைச் சிகிச்சை பெற உதவினார்... 

ஆதிமுதல் ஆனவர்க்கு ஆதி ஏது
அந்தம் ஏது? ஜோதி வடிவான சாயி
தோன்றிய பின் மறைவரோ?


🌻 பாபா மறையவில்லை. அவர் நமக்கு உதவுவதற்காக தன் மோட்டார் பைக்குடன் நம் வீதிமுனையில் காத்திருக்கிறார். அவரே நமது மார்க்க தரிசியாம் வழிகாட்டி. 🌻

ஆதாரம்: Taken from the official newsletter of the SSSIHMS. Read more at: https://templeofhealing.sssihms.org.in/

தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக