தலைப்பு

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திரு M.S. தோனியின் புட்டபர்த்தி வருகை!

வாழ்க்கையே ஒரு விளையாட்டு
வாழ்ந்திடு. அதை விளையாடி.. 
- பாபா

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன்.. அதிரடி மன்னன்.. திரு M.S. தோனி தனி விமானம் மூலம் புட்டபர்த்தி வருகை.

M.S என்றால் Master Stroke என்று புகழ் பெற்ற திரு.தோனி அவர்களை கிரிக்கெட் உலகில் அறியாதார் யார்?

அதிரடி ஆட்டம், அசத்தலான விக்கெட் கீப்பிங், பரபரப்பான பீல்டிங் இவற்றின் கலவையல்லவா அவர். இன்று(11.2.2020 ) அவர் சுவாமியை தரிசிக்க பர்த்திக்கு வருகை தந்தார்.



சாயி குல்வந்த் வளாகத்தில் பகவானின் தரிசனம் முடித்து , பகவானின் அதி சிறப்பு மருத்துவ மனை..மருத்துவக் கோயிலான.. சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையை பார்வையிடச் சென்றார். கேஷ் கவுண்டர் எனப்படும் பணம் செலுத்துமிடம் அங்கு இல்லை, சிகிச்சை அனைத்தும் இலவசம் என்று அறிந்து வியந்தார். மருத்துவமனையில் அவர் எதிர்பாராத விதமாக டாக்டர் முத்து குமார் அவர்களையும் சந்திக்க நேர்ந்தது. டாக்டர் முத்துகுமார் லண்டன் மாநகரத்தில் பணியாற்றும் விளையாட்டுத் துறை சார்த்த மருத்தவ நிபுணர். அவர் வருடம் இருமுறை இந்த மருத்துவமனைக்கு வந்து சேவை செய்கிறார். அவர் மூலமாக சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவ மனையின் செயல்திறன் கண்டு வியந்தார்.


புட்டபர்த்தியில் சுவாமியின் சூப்பர் ஸ்பெஷலிட்டி ஹாஸ்பிடலின் விருந்தினர் புத்தகத்தில் எம்.எஸ்.தோனியின் குறிப்பு.. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக