தலைப்பு

சனி, 2 மே, 2020

எங்கள் கண்களால் பார்க்க முடியாத சத்யசாயி பாபாவை எப்படி நம்புவது?


நட்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்சத்திரம் தெரியாது.

சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.
இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.
எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.


உதாரணமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்
சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..? முடியாது !
அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...
என் கையைப் பார்த்தேன் இதோ இருக்கிறது,
 எனக்கு 'கை' உண்டு.
என் காலைப் பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கால்' உண்டு.
நான் என் கண்ணைப் பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை, ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..? அது தவறு!

கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பிம்பம் தெரியும்...! அதைப்போல் விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது.

இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..
இது என்ன பூ எனக்கேட்டால்
அதன் பெயரை சொல்லலாம்..!
நிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்
இது எந்த இடத்தில் கிடைக்கும் என்வும் சொல்லிவிடலாம்..ஆனால்..
அதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால் "முகர்ந்து" பார் என்றுதான் சொல்லமுடியும்!
.

அதேபோல் சத்ய சாய்பாபாவின் மகிமையை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்...  உணர்ந்துபார் என்றுதான் சொல்லமுடியும். உணர்ந்து பார்த்தால்தான் அவருடைய மகிமை உங்களுக்கு புரியும்.  பகவானே பலமுறை சொல்லியிருக்கிறார் 
என்னை நோக்கி நீ ஓர் அடி எடுத்து வைத்தால் உன்னை நோக்கி நான் நூறு அடிகள் எடுத்து வைப்பேன் என்று. அதனால் சத்திய சாயி பகவானை முழுமையாக நம்பி முதலில் ஒரு அடி எடுத்து வையுங்கள், பின்பு அவர் உங்களை முழுவதுமாக பார்த்துக் கொள்வார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக