தலைப்பு

ஞாயிறு, 8 நவம்பர், 2020

கருவில் இறந்த சிசுவிற்கு உயிர் கொடுத்த சத்ய சாயி பகவான்!


இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் சாரா பவன் என்பவரால் பதிவுசெய்யப்பட்டது. கீழ்காணும் பதிவில் வரும் குழந்தைக்கு இவர் தாத்தா. இவர், இவர் மனைவி, மகள், மருமகன் மற்றும் மருமகனின் தாய் தந்தையர் என அனைவரும் பெரிய மருத்துவர்கள். மருமகனின் தந்தை  பல வருடங்களுக்கு முன்னால் இங்கிலாந்து ராணி எலிசபெத் இலங்கைக்கு வந்தபோது மருத்துவம் பார்த்தவர்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி இருக்கும் அந்த மருத்துவ குடும்பத்தில், சுவாமி தான் டாக்டர்க்கு எல்லாம் டாக்டர் என ஓர் மெய்சிலிர்க்கும் அற்புதத்தின் மூலமாக நிரூபித்திருக்கிறார்.  


1992 செப்டம்பர் 19ம் தேதி, மிக உன்னதமான மருத்துவ அதிசயம் சிட்னி, ஆஸ்திரேலியாவில் நடந்தது. பிறந்து 20 மணிநேரம் கழித்து (இறந்து பிறந்த) குழந்தைக்கு பகவான் உயிர் கொடுத்தார். ஹைபர் டென்ஷன் மற்றும் கருப்பை வீக்கம் காரணமாக, கருவில் இருந்த குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால், மிக சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவக் குழு 34 வாரங்களிலேயே குழந்தையை பிறக்க வைக்க வேண்டி இருந்தது. பிரசவ வலி ஏற்பட்ட ஸின்டோஸினன் செலுத்தப்பட ஆரம்பித்ததும் குழந்தையின் இதயத்துடிப்பு நின்று விட்டது! இதயத்துடிப்பு கேட்கவில்லை, கருச்சிசுவின்  இதயத்துடிப்பு பதிவு செய்யும் கருவியிலும் இது உறுதி செய்யப்பட்டு விட்டது. மிக அவசர அறுவை சிகிச்சை 45 நிமிடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது உயிரற்ற 2.2 கிலோ எடையுள்ள குழந்தை பிரசவிக்கப்பட்டது.

டாக்டர் சாரா பவன் 

முடியாது என்று தெரிந்தும் அனஸ்தஸ்லாஜிஸ்ட் டாக்டர். பவான் உயிர்பிக்க முயன்றார்.  அவர் மிகச்சிறந்த மகப்பேறு மருத்துவ  நிபுணராயினும் குழந்தைக்கு அவர் தாத்தா! 4 நிமிடங்களுக்கு மேல் மூளைக்கு ரத்தம் செல்லாவிட்டால் மூளைச் செல்கள் இறந்து செயலிழந்து விடும். ஆனால் தீவிர சத்ய சாயி பக்தரானதால் பகவானை உதவிக்கு அழைத்து பிராத்தித்தார். குழந்தையின் நெஞ்சுப் பகுதிகளில் சிவப்பு சிவப்பாக தெரிய ஆரம்பித்தன. ஆனால் பகவான், ”எந்த இயக்கமும் இல்லாத இந்த குழந்தையை வீட்டில் வளர்த்து என்ன செய்வாய்?” என்று கேட்பது போல இருந்தது. தன் மனைவி மூலம் பகவானுக்கு SOS அனுப்பச் சொல்லி விட்டு, எல்லா முயற்சிகளையும் விட்டுவிட்டு இருந்தார். அதிசயமாக இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 60 வீதம் துடிக்கத் தொடங்கியது. பிறந்த குழந்தைக்கு நிமிடத்திற்கு 140 துடிப்பு இருக்கும். இந்த நிலையில் குழந்தை ஒரு நிமிடத்திற்கு மேல் உயிரோடு இருப்பதே அதிகம். ஆனால் ஒரு நாள் முழுவதும், உடலெல்லாம் சாம்பல் கலந்த நீல நிறத்தில் இருந்தது. குடும்ப டாக்டர்கள் அனைவரும் ‘சாய்ராம்’ என்ற வார்த்தையே சுவாசமாக இருந்தார்கள். குழந்தையின் தாய் மயக்க மருந்து காரணமாக தூக்க நிலையில் இருந்தார். ஏதோ ஒரு உள்ளுணர்வு, இதைவிட அதிக வசதியுள்ள ICUவிற்கு மாற்ற வேண்டும் என்பதைத் தடுத்து, அனைத்து மருத்துவர்களையும் நடப்பது நடக்கட்டும் என சும்மா இருக்கச் செய்து விட்டது!

பகவான்தான் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். முழுவதும் அவர் கையில்தான் இருக்கிறது. வேறு இடத்திற்கு மாற்றியிருந்தால், “ஓரிரு நாட்கள் கழித்து, இத்தகைய குழந்தையை எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. வீட்டிற்கு அழைத்துப் போங்கள்” என்று கூறியிருப்பார்கள். மருத்துவர்கள்  இதயத்தைக் கூட துடிக்கச் செய்துவிடலாம். ஆனால் இறந்த மூளையை பகவான்தான் உயிர்ப்பிக்கச் செய்ய முடியும். பகவான் தான் அனுக்கிரஹிக்கப் போவதை உணர்த்தினார். ஊதுபத்தி சாம்பல் S(Meaning: SAI or SAVE) என்றவாறு நின்றது- உதிராமல்!


20 மணி நேரங்கள் கடந்தன. எந்த மாற்றமும் இல்லை. மறுநாள் காலை 5 மணிக்கு, நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு சென்றார் டாக்டர் தாத்தா! இரவில் ஏதோ ஒரு மாயக்கை குழந்தையின் பால் புகட்டும் குழாயை பிடுங்கி விட்டிருந்தது. நர்ஸ் மிகவும் வேதனையுடன் அதை மீண்டும் சரி செய்யுமாறு டாக்டரிடம் கூறினாள். ஆனால் இனி ஃபீடிங் டியூப் இல்லாமல் குழந்தை நேரே அதன் தாயிடம் பால் அருந்தக்கூடும் என்பதனால் டியூப் பிடுங்க பட்டதோ?! அதேபோல் குழந்தையை தாயின் அருகில் சென்று கொண்டு விட, குழந்தை உறிஞ்சும் செயலை தொடங்கி பால் அருந்த ஆரம்பித்தது. ஒரு காரின் ஜம்பரில் இருந்து மறு காருக்கு வோல்டேஜ் கொடுப்பது போலிருந்தது! ஒரு அன்னையின் அன்பு தனது உரிமைபால் எதையும் செய்யக் கூடும் என்பது கண்கூடாக தெரிந்தது! ஆயிரம் அன்னைகளின் அன்பு ஒருசேர கொண்டவர் நம் பகவான்! அளவிட  முடியாத, எல்லையற்ற அன்பு!!

குழந்தை கைகால்களை அசைக்க ஆரம்பித்தது! அற்புதம் நிகழ்ந்தது!! குழந்தையின் அன்னைக்கும் கோளாறுகள் நீங்கி சகஜமானாள். ஐந்தாம் நாள் எல்லோரும் வீட்டிற்குச் சென்றார்கள். அதன் பிறகும் தொடர்ந்து பகவானின் அருள் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என தொடர்ந்து சுவாமியின் காயத்ரி மந்திர ஜப குறுந்தகடை எப்பொழுதும் ஒலிக்கச் செய்தனர்.

ஒரு வாரம் கழித்து, தாத்தா பிரசாந்தி நிலையம் சென்று, பகவானை நன்றியுடன் பார்த்து, “இறந்து பிறந்த என் பேரனுக்கு  உயிர் ஊட்டினீர்கள்  ஸ்வாமி.” அவன் உங்கள் குழந்தை, நீங்களே பெயரிடுங்கள் எனவும், பகவானும் கருணையுடன், “சாய் ஆதித்யா” என பெயரிட்டார். ஆம் பகவான்தான் கொடுப்பவரும் எடுப்பவரும்!

பகவான் காப்பாற்றிய குழந்தை சாய் ஆதித்யா

ஆதாரம்: DR. Sara Pavan, Prashanthi Nilayam. (Inspired Medicine, P271 to P273)
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக