தலைப்பு

சனி, 11 டிசம்பர், 2021

என்னுடைய அனைத்து சக்திகளும் உங்களுக்காகவே - பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா

நீங்கள் என்னை மறுத்தாலும் கூட , என்னுடைய சொந்தம் நீங்களே. நீங்கள் இல்லையென்று கூறினாலும் , உங்கள் சொத்து நானே. நான் உங்களிடம் பாசம் காட்டி, என்னை உங்களுடன் இணைத்துக் கொள்வேன். 

நான் எனது சொத்தினைப் பாதுகாப்பாக எனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அனைத்துப் பிரயத்தனங்களையும் செய்வேன். அதாவது இறைவனது கட்டுப்பாட்டில், நீங்கள் எந்தப் பெயரிட்டு அவரை அழைத்தாலும் என்று பொருளாகும்.நான் கொண்டுள்ள அனைத்து சக்திகளும் உங்களுக்காகவே. நான் ஒரு கடை போல, அவற்றை நீங்கள் கேட்கும்போதெல்லாம் உங்களுக்குக் கொடுத்திட தயாராக வைத்திருப்பேன். நீங்கள் கேட்காவிடினும், நான் உங்களுக்குப் பிரேமையை அளித்திடுவேன். ஏனெனில் , உங்கள் பங்கினைக் கேட்க உங்களுக்கு உரிமை உள்ளது.

நான் இதைத் தரவில்லை, அதைத் தரவில்லை என சிலர் குற்றம் கூறுகின்றனர். ஏனெனில் அவர்களது பார்வை, உடனடியாக உள்ள எதிர்காலம் அல்லது நிகழ்காலம் அளவிற்கே கட்டுப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு மேல் என்ன நேரிடும் என எனக்குத் தெரியுமாதலால் அதிக அளவு துயரத்தினைத் தடுத்து நான் பாதுகாத்திட வேண்டும். அவர்கள் என்மீது பழி சுமத்தி அவதூறு கூட பேசுகின்றனர். ஆனால் அவர்களை நான் விட்டுக் கொடுத்திட மாட்டேன்.நான் எவறாலும் பாதிக்கப் படவில்லை என்பதை உணருங்கள். எனது செயல்பாட்டினை எவறாலும் மாற்றிட இயலாது அல்லது எனது வழிமுறையை சிறிதளவு கூட எவறாலும் பாதிக்க இயலாது. ஏனெனில் நானே அனைவருக்கும் எஜமானன்.


ஆதாரம்: பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் அருளமுதம் | பாகம் -2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக