தலைப்பு

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

சின்ன கதை - மாயையை விரட்டும் சாயி மாஇறைவன்!


மாயையின் நாடகம்.... மாயையின் இயல்பை நாம் நன்றாகப் புரிந்துகொண்டோ மென்றால் அது ஒரு கணத்தில் நம்மை விட்டு ஓடிப்போகும். புரிந்துகொள்ளாமல் அதற்கோர் உயர்ந்த இடத்தைக் கொடுத்துவிட்டால், அதன் கை வலுத்துவிடும், அது நம் தலைமீது ஏறி ஆட்டம் போடும்.

ஒரு கிராமத்தில் கல்யாணம் ஏற்பாடாகி இருந்தது. மாப்பிள்ளை வீட்டார் அந்த கிராமத்திற்கு வந்து ஒரு வீட்டில் தங்கினர். பெண் வீட்டார் வேறு ஒரு வீட்டில் இருந்தனர். இவ்விருவருக்கும் நடுவில் வேறொருவர் வந்து, தனக்கு எல்லாச் சவுகரியங்களும் வேண்டும் என்று இரு  வீட்டாரிடமும் அதட்டிக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்  மாப்பிள்ளை  வீட்டாரிடம் சென்று "நீங்கள்  எல்லாவற்றுக்கும் தாமதமாக வருகிறீர்கள். அதனால் பெண் வீட்டாருக்குப் பிரச்சினையாக இருக்கிறது "என்பார். மாப்பிள்ளை வீட்டார் அவரைப் பெண் வீட்டு பெரிய மனிதர் போலும் என்று எண்ணினர். அவர் பெண்வீட்டாரிடம் மாப்பிள்ளைக்கும் அவரது உறவினர்களுக்கும் போதிய மரியாதை கொடுப்பதில்லை என்று குற்றம் சாட்டினார். இப்படியாக நாடகமாடினார். பெண் வீட்டாரிடம் பெண்வீட்டுப் பெரியவர் போலவும் அவர் நடித்தார். இந்த நாடகம் அளவுக்கதிகமாகப் போனதும் இரு வீட்டாரும் சேர்ந்து அவர் யார் என்று தூண்டித் துருவ ஆரம்பித்தனர். இருபக்கத்தார் எவருக்கும் அவர் சொந்தமல்ல என்பது  தெரியவந்தது. மாயையின் மூலத்தை நீ தேடத்தொடங்கினால், அது காணாமல் போய்விடும், நமது கதையில் வருகின்ற 'பெரியமனிதரை'ப் போலவே. -பாபா

எவ்வளவு அழகாகவும் எளிமையாகவும் மாயையை சிறு சம்பவம் வழி விளக்குகிறார் இறைவன் சத்ய சாயி.

வெளிச்சத்தில் நாம் இருந்தால் இருட்டு நம் காலடிகளுக்குள்..
இறைவன் சத்யசாயியின் வெளிச்ச காலடிக்குள் நாம் இருந்தால் மாயை என்பது மனதின் இடுக்கில் கூட மறைந்திருக்க வாய்ப்பே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக