தலைப்பு

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

மருத்துவத்தையே மகத்துவமாக்கிய சாயி லீலா சிகிச்சைகள் - டாக்டர் Bollmann வியக்கிறார்!

இறைவன் பேராற்றல் கர்ம நோய்களையும் நிவர்த்தி செய்கிறது. நமக்கு வேண்டிய பேரமைதியை பூர்த்தி செய்கிறது. அத்தகைய பெருங்கருணையை தேடி வந்த மருத்துவர் அனுபவித்து உணர்ந்த அற்புதங்கள் பல இதோ...


டாக்டர் போல்மென் ஒரு கத்தோலிக்கராக பிறந்து வாழ்வில் ஆரம்பத்தில் பாதிரியாராக போய்விடலாமோ என எண்ணம் கொண்டிருந்தார். இது தனக்கு உகந்த பாதை அல்ல என தீர்மானித்தார். பிறகு நியூ ஜெர்சியில் ஆரம்ப கல்வி... வில்லாநோவாவில் மருத்துவ கல்வி என படித்த போதும்.. அவரின் இதயம் ஆன்மீக ஞானத்தையே பூவை நுகரும் பட்டாம்பூச்சியாய் சுற்றி வந்தது. கீழை நாடு முதல் மேலை நாடு வரையிலான பரவிஞ்ஞான ஆன்மீக நூல்களை வாசித்தும்.. யாரை சந்திப்பது என கேள்வி வண்டு அவரின் மனதை துளைத்தபடியே இருந்தது. ஒருமுறை ஒரு புத்தக கடையில் நூல்களின் வரிசைகளை அவரின் கண்கள் மேய்ந்து கொண்டிருந்தபோது ஒரு புத்தகம் அவரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அது தான் "The Holy man and the phycatrist" இறைவன் சத்யசாயி பற்றி Dr Samuel Sandweiss எழுதிய புத்தகம். அந்தப் புத்தகமே அவரை இறைவனின் காலடியில் அழைத்து வந்து .. பல மருத்துவ பக்தர்களின் மெய் சிலிர்க்கும் அனுபவங்களை நெஞ்சம் குளிரக் குளிர கேட்க வைத்தது. 
அத்தகைய சாயிலீலா சிகிச்சை அனுபவங்கள் ஒரு சில இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது... 

பின்வரும் 5 அற்புத நிகழ்வுகளும் Dr. Bollman அவர்களுக்கு நெருங்கியவர்கள் அவரிடம் விவரித்தவை:-


🌹 1. ஒரு இளைஞர் ரூமடாட் ஆர்த்ரடீஸ் (Rheumatoid arthritis)- னால் பாதிக்கப்பட்டு நடமாட்டமே இல்லாமல் வீல் சேரிலேயே நகர்ந்து வந்தார்.  உலகிலுள்ள மிகச்சிறந்த மருத்துவர்கள் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை! கடைசியில் புட்டபர்த்திக்கு ஸ்வாமியிடம் வந்தார். வீல்சேரில் தந்தையின் உதவியுடன் நடந்து இன்டர்வ்யூ அறைக்குச் சென்றவர், அரை மணி நேரம் கழித்து தனியே நடந்து வந்து, வீல் சேரை மடக்கி  எடுத்துக் கொண்டு தந்தையுடன் வீடு திரும்பினார்!!!.


🌹 2.   டாக்டர் ராஜேஸ்வரி- மகப்பேறு பெண் மருத்துவர் இவரிடம் விவரிக்கிறார்:-


          
கட்டியின் காரணமாக கருப்பையை எடுக்க வேண்டி ஒரு பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் காலை டாக்டர் வந்த பொழுது, தனக்கு இரவே ஸ்வாமி வந்து அறுவை சிகிச்சை செய்து, ஒரு கொத்து சதையை வெளியே எடுத்துவிட்டு, மீண்டும் கருப்பையை சாதாரணமாக்கி சென்று விட்டார் என்றார். டாக்டர் நம்பாமல் போர்வையை அகற்றிப் பார்த்தால் வெறும் வடு தடம் மட்டும் (Scar) இருந்தது. மேலும் பரிசோதனை செய்து பார்த்ததில் கட்டி அகற்றப்பட்டிருந்தது தெரியவந்தது!!!.


🌹 3. ஒருவர் தனது ஒரு வயது குழந்தையுடன் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென கண் பார்வை முக்கால் வாசி போய்விட்டது. விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள, மேல் மாடியிலிருந்து குதிக்க முற்பட்ட பொழுது, ஒரு கரம் அவரை தடுத்து நிறுத்தியது!  “உன் குழந்தையும் மனைவியும் காப்பாற்ற நீ உயிரோடு இரு” என்னும் குரல் கேட்டது. இவரை புட்டபர்த்தி செல்லுமாறு கூறினார். இருவரும் சென்றனர். ஸ்வாமி, ”இவரிடம் உன் மூளையில் உள்ள கட்டியே உன் கண் கோளாறுக்கு காரணம்” எனக் கூறி விபூதி கொடுக்க, அதை உட்கொண்டவுடன் கண் பார்வை தெரிய ஆரம்பித்துவிட்டது. மகிழ்ச்சி அடைந்த அவர் அங்கேயே தங்கி விட்டார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பார்வை மங்கலாயிற்று ஸ்வாமி  மீண்டும் அவரைப் பார்த்து, உன் மூளைக்கட்டி வளர்ந்து விட்டது எனக் கூறி அவரது தலையை நன்கு அழுத்தி பிழிவது போல் செய்து, இப்போது கட்டி சுருங்கி விடும் என்றார். அவரும் தலையை லேசாகி விட்டது போல் உணர்ந்தார் பார்வையும் திரும்பிவிட்டது!


🌹 4. இது Dr. Bollmannவிடம்  ஒருவர் தனது சகோதரியை பற்றி கூறியது:


அந்தப் பெண்மணி பாபாவின் பக்தை! வயிற்றில் அல்சர்- (புண்) காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் டாக்டர்கள், அவருக்கு ட்யூப் வழியாக வயிற்றினுள் பாலை செலுத்தச் சொன்னார்கள், ஆனால் நர்ஸாக  இருந்தவர், தவறாக புரிந்து கொண்டு பாலை இன்ட்ராவினஸ் ட்யூப் வழியே செலுத்த ஏற்பாடு செய்துவிட்டார். இது உயிருக்கே ஆபத்து! இரண்டாவது பாட்டில் பால் செலுத்தும் போது தான் டாக்டருக்கே தவறு என எட்டியது.  உடனே நிறுத்தி விட, அச்சமயம் நோயாளியின் சகோதரி வந்து ”சரியாகி விடுவாள்-  நான் பாபாவின் ஆசி வாங்கி வந்துள்ளேன்” எனக் கூறி, பிறகு ICU -வில் பக்க விளைவுகளைத் தடுத்தனர்!!!.


🌹 5. ஆரிஸோனரி  என்ற ஊரில் ஒரு பெண்மணி கருப்பை புற்று நோயினால் அவதியுற்றார். அப்பொழுது ஒரு புது டாக்டர் வந்து வயிற்றில் கை வைத்து பார்த்தார். உடனே அப்பெண்மணி சுகமாகிவிட்டதாக உணர்ந்தார் அந்த புது டாக்டர், தான் அந்த ஆஸ்பத்திரி டாக்டர் கேட்டுக்கொண்டதால் வந்ததாகக் கூறினார். மறுநாள் வழக்கமான டாக்டர் வரவும், இந்த புது டாக்டர் தன் நோயை சரி செய்து விட்டதாகவும் அவரை அனுப்பியதற்கு நன்றி எனவும் கூறினார். ஆனால் ”நான் யாரையும் அனுப்பவே இல்லையே என”, அடையாளங்கள் கூறிலானர், சுருட்டை முடி, ஆரஞ்சு கலர் உடையுடன் இருந்ததாகவும், அவர் கைபட்டு குணமடைந்ததையும் கூறினார். பல மாதங்கள் கழித்து தன் நண்பர் வீட்டில் ஸாயியின் ஃபோட்டோவைப் பார்த்து தனக்கு வைத்தியம் செய்ய வந்தது பகவானே என்று உணர்ந்தார்!!!.  

ஆதாரம்: Narrated by Dr. Charles Bollmann, M.D/ Inspired Medicine, P 30,31,32,33,35

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம். 


🌻 நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு .... இறைவன் சத்ய சாயியை சரணடைந்தால் வாழ்வில் பரிபூரண அமைதியும் ... பிரசாந்தியும்... பெருங்காவலும் நமக்கு வாய்க்கும் என்பதில் கடுகளவேனும் சந்தேகப்படவே தேவையில்லை!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக