தலைப்பு

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

அஷ்டமி, நவமி பற்றி பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா!


வளர்பிறையின் எட்டாவது, ஒன்பதாவது நாட்களாகிய அஷ்டமி, நவமி திதிகளை நல்லவை அல்ல என்று மக்கள் கருதுவது மிகவும் தவறாகும். ஏனெனில் உண்மை இதற்கு நேர் மாறானது. இவ்விரு நாட்களும் இவ்வுலகில் அவதாரங்கள் தோன்றிய திரு நாட்களைக் குறிப்பனவாகும். கண்ணன் எட்டாம் நாளாகிய அஷ்டமியிலும், ராமன் ஒன்பதாம் நாளாகிய நவமியிலும் தோன்றினர்.

கண்ணன் தோன்றிய ரோகிணி நட்சத்திரம் யோக ஆற்றலைப் பெறுவதோடு தொடர்புடையது. இராமர் தோன்றிய புனர்பூசம், சரணாகதி நெறியோடு தொடர்புடையது. அதாவது இந்த நட்சத்திரத்தில் தோன்றியவன் எளிதில் இரக்கம் கொண்டு, தன்னிடம் அடைக்கலமாக வந்த யாருக்கும் தன்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்யும் இயல்பினன்.

சாதனையைத் தொடங்குவதற்கு இந்த நாட்களைத் தேர்ந்தெடுங்கள்; பூசை செய்யவும், வழிபாடு செய்யவும், நீங்களே தேர்ந்தெடுத்த கடவுள் வடிவத்தை நாடுவதற்கும் இந்நாட்களைத் தேர்ந்தெடுங்கள். இந்நாட்களுடனும், நட்சத்திரங்களுடனும் கெட்டவற்றைத் தொடர்பு படுத்தாதீர்கள். நீங்கள் இவற்றை மதித்து வழிபடுங்கள். இந்நாளில் இதுவே என் அறிவுரையாகும்

ஸ்ரீ சத்ய சாயி பாபா (பிரசாந்தி, அக்டோபர் ,1965) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக