தலைப்பு

புதன், 31 மார்ச், 2021

விஷத்தை கால்களால் எட்டி உதைத்து தம்பதியை காப்பாற்றிய சாயி தெய்வம்!


இறைவன் சத்ய சாயி சர்வ வல்லமையான ஆண்டவர் என்பது பலர் நேரடி அனுபவம் .. அதில் ஓர் உன்னத அனுபவம் இது,.. இக்கட்டான சூழ்நிலையில் உற்றாரோ இல்லை.. உறவினரோ இல்லை.. நண்பரோ இல்லை .. இறைவன் சத்ய சாயி மட்டுமே உதவி செய்வார் என்பதே நிறைந்த சத்தியம் .. அந்த சாத்தியத்திற்கான சாட்சியம் இதோ.. 

குமார் என்ற பெயருடைய நேர்மையான அரசாங்க அதிகாரியின் மீது தவறாக சாற்றப்பட்டக் குற்றத்தினால் 2 வருடம் சிறை தண்டனைக்கு அவர் ஆளாகி , 4 குழந்தைகளுடனான குடும்பம் சொல்லவொண்ணாத கஷ்டங்களையும் .. பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்தது .
அப்பெண்மணியின் (குமாரின் மனைவி ) உறவினர் "சத்ய சாயி புகைப்படத்தை வீட்டிலிருந்து அகற்றினால் ஒழிய உதவமுடியாது" என்றனர். இவள் அதை மறுத்து ஏதோ வீட்டு வேலை செய்து  தனது குடும்பத்தின் வயிற்றை கழுவிக் கொண்டிருந்தாள் ...

ஒரு நாள் யாரோ ஒருவர் ரூ 50 கொடுத்து பாபாவிற்கு பூ சாற்றி பஜன் நடத்துங்கள் என்று சொல்லிச் சென்றார்...
அந்த சமயத்தில் அந்தப் பெண்மணிக்கே தெரியாமல் அவள் கணவன் ஜெயிலிலிருந்து வீடு வந்து சேர..  அந்தப் பணத்தை வந்திருந்த தன் கணவன் கையில் கொடுத்து வெற்றிலை, பாக்கு, பழம் வாங்கி வரப் பணித்தார் அந்தப் பெண்மணி. ஆனால் ஜெயிலிலிருந்து திரும்பிய அவள் கணவன் குமாரோ கூடவே விஷத்தையும் சேர்த்து வாங்கிக் கொண்டார். அவ்வளவு வலி .. அவமானம்..
சிறைக்கு சென்று வருவது என்ன பிக்னிக் சென்று வருவது போலவா ?

குமார் வீட்டில் நிகழ்ந்த பஜன் முடிந்து அனைவரும் பிரசாதம் உட்கொண்டு அவரவர் வீடு திரும்பினர். அந்த நேரத்தில் குமாரோ தனது வீட்டின் உள்ளே சென்று அந்த விஷத்தை இரண்டு டம்பளர்களில் ஊற்றி பாலில் கலந்து மனைவியை அழைத்து..
"இனி எனக்கு எங்கும் வேலை கிடைக்காது.. மிகவும் அவமானமாக இருக்கிறது... இதை அருந்தி.. பாபாவின் பிரசாதமாக கருதி .. இருவரும்  இறந்து விடலாம்" என யோசனை சொல்கிறார்.


அதை கை நடு நடுங்க இருவரும் கண்களில் நீரோடு அருந்த முயற்சிக்கும் போது..
திடீரென இரண்டு கால்கள் தோன்றி   அந்த இரண்டு டம்ப்ளர்களை எட்டி உதைத்து...
"முட்டாள்களே... நாளை உனக்கு வேலைக்கான ஆர்டர் வர இருக்கிறது .." எனக் குரல் கேட்டது."
இருவரும் பாபாவின் கருணையில் மீள முடியாமல் இருக்கையில் ... அடுத்த நாளே குமாரின் ஆபீசில் இருந்து .. உண்மையான குற்றவாளியைக் கண்டு பிடித்து விட்ட படியால் மீண்டும் ஆபீசில் சேரச்  சொல்லி மன்னிப்பும் .. வேலைக்கான  கடிதமும் வந்து சேர்ந்தது ...

ஆதாரம்: Sri Sathya Sai Miracles & Spirituality By – Mrs. Sarojini Palanivelu
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

🌻 எட்டும் தீயதை  இறைவனால் மட்டுமே எட்டி உதைக்க முடியும்.. அவரே நன்மையையும் அளிப்பவர்.. அவரே சர்வ வியாபி.. எங்கும் நிறைந்திருப்பவர்.. நெஞ்சில் உறைந்திருப்பவர் என்பதற்கான சான்று ஏகதேசம் அனைத்து பக்தர்களையுமே அணைத்து கொள்ளக் கூடிய சாயி அனுபவங்கள் ஏராளம்...🌻

2 கருத்துகள்: