தலைப்பு

வியாழன், 9 பிப்ரவரி, 2023

சுவாமி! கொடுப்பினைக்கு முக்கியமாக எங்களிடம் என்ன இருக்க வேண்டும்?

எல்லாவற்றுக்கும் interest (புண்ணிய கர்ம சேமிப்பு) இருத்தல் வேண்டும்! இதன் மூலம் வாழ்வில் எதை வேண்டுமானாலும் சாதிக்க இயலும்! விஷயங்களில் உங்களுக்கு In-Trust (நம்பிக்கை) இருக்க வேண்டும்! அதுவே interest (ஆர்வம்)!


உங்களுக்கு சுவாமியின் (பாபா) மீது interest (ஆர்வம்) இருப்பதால் தான், ஓடி வந்து பாதங்களின் அருகில் உட்காருவதற்காக போட்டிப் போடுகிறீர்கள்! நீங்கள் எல்லோரும் இங்கே சுவாமிக்காக(பாபா) காலையிலிருந்தே எதிர்பார்த்து அமர்ந்திருக்கிறீர்கள்! 

எந்த சின்ன ஓசை வந்தாலும், எந்தக் கதவு திறந்தாலும் சுவாமி (பாபா) வந்துவிட்டாரோ என நினைக்கிறீர்கள்! 

எவர் வந்தாலும் , சுவாமியின் திருச்செய்தியை (Message) எடுத்துக் கொண்டு வருகிறார்கள் என எண்ணுகிறீர்கள்! காரணம்? உங்களுக்கு சுவாமி மீது உள்ள interest (ஆர்வம்)! அந்த. Interest (புண்ணிய கர்ம சேமிப்பு + ஆர்வம்) இல்லை என்றால் உங்கள் முன்பு சுவாமியே (தன்னை சுட்டிக் காட்டுகிறார் பாபா) நின்று கொண்டிருந்தாலும் கூட நீங்கள் கவனிக்கவே மாட்டீர்கள்! எனவே Interest (புண்ணிய கர்ம சேமிப்பு + (அதனால் விளையும்) ஆர்வம்) மிகவும் முக்கியமானது!


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 249 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக