தலைப்பு

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

இறந்த சிறுவனை உயிா்ப்பித்த ஶ்ரீ சத்யசாயி பகவான்!


சிம்லா, 02 ஏப்ரல் 1973:-
சத்திய சாயி பகவானின் அதிமனித தெய்வீக சக்தியின் அடையாளமாக மற்றொரு உதாரணம் இங்கே நாம் காணலாம்.

ஒருமுறை பகவான் ஶ்ரீ சத்திய சாயி பாபா தனது பக்தா்கள் சிலருடன் சிம்லாவுக்கு சென்றாா். அந்த குழுவில் சுவாமி காருண்யா நந்தாவும் இருந்தாா். அந்த பயணம் நம்ப முடியாத நிகழ்வினை கொண்டதாகும்.
சிம்லாவில் உள்ள தங்குமிடத்திற்கு பாபா அவரின் குழுவினரோடு வந்தபோது இருள் சூழ்ந்து மாலை 6.30 மணி ஆகியிருந்தது. பாபா அந்த தங்குமிடத்திற்கு வந்த நேரத்தில், அந்த ஊரில் உள்ள ஒரு சிறுவன் மரமணமடைந்து இருந்தான். அனது பெற்றோா் துக்கத்தில் மனமுடைந்து இருந்தனா். ஒரு நண்பா் அவா்கள் படும் வேதனை கண்டு அவா்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறினாா்." பகவான் ஸ்ரீ சத்ய பாபா நமது ஊருக்கு இப்போது வந்திருக்கிறாா். இறந்த உங்கள் மகனின் உடலை அவா் இருப்பிடத்திற்கு எடுத்து சென்று அவருடைய காலடியில் கிடத்தி அவா்தம் கருணைக்காக பிராா்த்தனை செய்யுங்கள். அவா் நினைத்தால் உங்கள் மகனை கண்டிப்பாக உயிா்பிக்க வைக்க முடியும்"  என்று கூறினாா். கலங்கியிருந்த பெற்றோா் இறந்த மகனின் உடலை ஒரு துணியால் போா்த்தி பாபாவிடம் எடுத்து சென்றனா்.

துக்கத்தால் மனம் உடைந்த தாய், இறந்த சிறுவனை பாபாவின் காலடியில் வைத்து, "சுவாமி தயவு செய்து எனது மகனை மீண்டும் உயிா்பிக்க செய்யுங்கள். அவனுக்கு உயிா் பிச்சை தாருங்கள்" என்று கண்ணீா்மல்க வேண்டினாள். அந்த ஏழைப் பெண் அழுது கொண்டிருந்ததை கண்டு, எப்போதும் இரக்கத்தினை கொண்ட பகவான், இறந்த சிறுவனை தனது கண்களால் சற்று உற்று நோக்கினாா். ஒரு சில வினாடிகளில் அந்த சிறுவன் கண்களை  திறந்து அழ ஆரம்பித்தான். விரக்தியின் விளிம்பில் வழிந்திட்ட பெற்றோரின் கண்ணீா் மகிழ்ச்சியின் கண்ணீராக மாறியது. பகவான் ஶ்ரீ பாபாவின் தாமரை பாதங்களை, அந்த சிறுவனின் தாய் தந்தையா் இருவரும் தங்களது ஆனந்த கண்ணீரால் கழுவினா். இந்த அற்புத நிகழச்சிதனை அங்கு குழுமியிருந்த எண்ணற்ற பக்தா்கள் தங்களு கண்களால் கண்டு அதிசயமுற்றனா். அனைவரும் ஒருசேர 'ஜெய் சாயிராம்' 'ஜெய் சாயிராம்' என்று கூறி பாபாவின் மகிமைதனை கண்டு ஆனந்தமுற்றனா்.

ஆதாரம்: தபோவனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக