உடல் நலம் பேணுதல் குறித்து ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பொன்மொழிகள்:
🔹 உடல் என்பது கடவுளின் ஆலயம்; அதை சுத்தமாகவும், தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும்.
🔹ஒரு ஆரோக்கியமான மனதுக்கும் ஒரு தூய்மையான ஆத்மாவிற்கும், ஆரோக்கியமான உடலே சிறந்த பாத்திரமாகும்.
🔹உடலின் ஆரோக்கியத்தை உதாசீனப்படுத்தாதீர்கள், ஏனெனில் அது உங்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்கான ஒரு கருவியாகும்.
🔹உணவில், உடற்பயிற்சியில், மற்றும் எண்ணங்களில் மிதமான தன்மை இருந்தால் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை உறுதி செய்யப்படும்.!!
🔹 உணவு மனதை பாதிக்கிறது. மோசமான உணவால் மோசமான எண்ணங்கள் உருவாகும். ஆகவே, தூய்மையான மற்றும் சாத்வீக உணவையே உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆகவே சாயி பக்தர்களே... மனிதனின் முதல் செல்வம் உடல்நலமே. ஆரோக்கியமான வாழ்க்கைக்காக உணவு, உடற்பயிற்சி, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை தவிர்க்காமல் கடைப்பிடிக்க வேண்டும். நம் உடலை பாதுகாக்கும் கடமையை உதாசீனப்படுத்தக் கூடாது. "உடல் என்பது கடவுளின் ஆலயம்", என்று அருளிய ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் அருள் வழிகாட்டுதலின்படி, விழிப்புணர்வுடன் செயல்பட்டு நம்மையும், நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முயல்வோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக