தலைப்பு

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

ஆயிரம் பிறவிகளின் புண்ணியமே நமக்கு இரு அவதாரங்களின் தரிசனம்!

எவ்வாறு இரு அவதாரங்களின் தரிசனமும் அவ்வளவு எளிதாக யாருக்கும் வாய்க்காது எனும் உண்மையை அவர்களே அகம் திறந்து நம்மை உணரச் செய்கிற ஆச்சர்யப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!

வியாழன், 13 பிப்ரவரி, 2025

அதி ருத்ர மஹா யக்ஞம் - பிரசாந்தி நிலையம் பிவ் 14-25 2025

ஸ்ரீ ருத்ரம்:

ரிக், யஜூர், சாம, அதர்வன என வேதங்கள் நான்கு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் யஜூர் வேதம், வழிபாடுகள், வேள்விகள், அவை நடத்தும் முறைகள் ஆகியவை பற்றி விவரிக்கிறது. யஜூர் வேதத்தில் தான் ருத்ரம் என்னும் துதி உள்ளது. ருத்ரம், ருத்ர ஜபம் என்பது சிவ பெருமானுக்குரியது என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் வேதங்களில் ருத்ரத்திற்கு அளவிட முடியாத பல விஷயங்கள் உள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

பிப்ரவரி 4 - இன்று உலக புற்றுநோய் தினம்!!


அனைவருக்கும் சாய்ராம்... 
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை, வாழ்க்கை முறை மாற்றம், மோசமான சூழல் எனப் பல விதமான காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. கேன்சர் எந்த வயதிலானவருக்கும் ஏற்படும் ஆபத்தான நோயாகும், ஆனால் முன்னெச்சரிக்கை எடுத்தால் குணப்படுத்த முடிகிறது. உங்களுக்கும், உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதை அலட்சியமாக விடக்கூடாது. சிறிய அறிகுறிகளையும் கவனித்து உடனே மருத்துவரை அணுகுங்கள். செலவைப் பற்றி யோசிக்காமல், ஆரம்பத்திலேயே தேவையான பரிசோதனைகள், ஸ்கேன் போன்றவற்றை செய்து உறுதி செய்துகொள்ள வேண்டும். நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்தால் சிகிச்சை எளிமையாகவும், செலவு குறைவாகவும் இருக்கும். தாமதித்தால், நோய் மோசமாகி, உயிரிழப்புக்கும் காரணமாகலாம். மருத்துவ சோதனைகளை தவிர்க்காமல், காலதாமதமின்றி செய்வது அனைவருக்கும் பாதுகாப்பான தேர்வாகும். உங்கள் ஆரோக்கியத்திற்காக விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்!