தலைப்பு

திங்கள், 20 ஜூலை, 2026

இன்று (20 ஜூலை 2026) ஶ்ரீ கிருஷ்ணரின் 5253வது அவதார தினமாகும்!

 

இந்த நாளில் தான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்தார் — இந்தக் கணக்குகளின் படி, அது இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 3228 ஆண்டுகளுக்கு முன், ஜூலை 20ஆம் தேதி ஆகும். இதனை நமது இந்திய நாட்காட்டியில் காண்பதென்றால், அது "ஸ்ரீமுக" வருடம், "சிராவண" மாதம், "பகுல" பட்சம், மற்றும் அஷ்டமி திதி ஆகும். அன்று நட்சத்திரம் ரோஹிணி. நேரம் நள்ளிரவுக்குப் பிறகு காலை 3:00 மணி.


இன்றைய தினத்திலிருந்து பின்னோக்கி கணக்கிட்டால், ஶ்ரீ கிருஷ்ணர் தம் மானுட உடலை விட்டு விட்ட நாளை 5078 ஆண்டுகள் முன் எனக் கணிக்கலாம். இதனை சரிபார்க்க வேண்டுமென்றால், முன் கிபி 3102 + கிபி 1976 = 5078 ஆண்டுகள் ஆகின்றன என்பதை காணலாம். அதாவது, கலி யுகம் துவங்கி இதுவரை நாம் 5078 ஆண்டுகள் கடந்து விட்டோம். இதுவே கிருஷ்ணர் தம் மானுட உடலை விட்டு விலகிய நாள், இதுவே கலி யுகத்தின் துவக்க நாள், இதுவே உகாதி என்றும் அழைக்கப்படும் நாள்.

- பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா

ஆதாரம்: Sri Sathya Sai Speaks May 1976, Ooty (Summer Course 1976 - Indian Culture and Spirituality)


குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5078 ஆண்டுகள் என்ற கணக்கு, பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்கள் 1976-ல் ஆற்றிய உரையில் கூறிய அசல் கணக்காகும்.

விளக்கம்: பகவான் பாபா கூறிய காலக்கணக்கின்படி, ஸ்ரீ கிருஷ்ணர் கி.மு. 3228-ல் அவதரித்து 126 ஆண்டுகள் வாழ்ந்து, கி.மு. 3102-ல் தமது மானுட உடலை விட்டு நீங்கினார். இதில் பலருக்கு இயல்பாகவே ஒரு சந்தேகம் எழலாம்: "3228-ல் பிறந்து 126 ஆண்டுகள் வாழ்ந்தால் 3354வர வேண்டாமா?"

அதற்கான விளக்கம் என்னவென்றால், கி.மு. (BCE) காலக்கணக்கில் காலம் முன்னோக்கிச் செல்லும்போது ஆண்டு எண்கள் குறைந்துகொண்டே வரும். எனவே, கணக்கு 3228 + 126 அல்ல; 3228 − 126 = 3102 என்பதே சரியானது.

காலவரிசை:

கி.மு. 3228 (அவதாரம்) → 126 ஆண்டுகள் → கி.மு. 3102 (மானுட உடலை விட்டு நீங்கியது) → கலியுகம் தொடக்கம் எனவே, பகவான் கூறிய கி.மு. 3228 (பிறப்பு), கி.மு. 3102 (மானுட உடலை விட்டு நீங்கியது), 126 ஆண்டு வாழ்நாள், மற்றும் 5078 ஆண்டுகள் என்ற கணக்குகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று முழுமையாகப் பொருந்துகி

ன்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக